Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU    15 JAN, 2025 | 06:41 PM

image

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமோக வரவேற்பளித்தார், மரியாதை வேட்டுக்களுடன் மிகுந்த கௌரவமான முறையில் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, சமூக மற்றும் கைத்தொழில்துறை சார்ந்த  பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி  இதன் போது வலியுறுத்தினார்.

மேலும், சீனாவிற்கு  நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு 15ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல்  சீன மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து  இருதரப்பு அரச தலைவர்களுக்கும் இடையில் சுமூகமான  கலந்துரையாடல் நடைபெற்றதோடு அடுத்து இரு தரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன. 

அத்தோடு நெருங்கிய நட்பு நாடுகள் என்ற வகையில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த சீன  ஜனாதிபதி சீ ஜிங்பிங் , எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, சமூக மற்றும் கைத்தொழில்துறை சார்ந்த  பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இந்த சந்திப்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் அரச தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே. ஜே. பண்டார  ஆகியோரும்  பங்கேற்றனர்.

https://www.virakesari.lk/article/203909

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

Published By: VISHNU    15 JAN, 2025 | 06:41 PM

 

இந்த சந்திப்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் அரச தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே. ஜே. பண்டார  ஆகியோரும்  பங்கேற்றனர்.

https://www.virakesari.lk/article/203909

இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டு போன சந்திரசேகரனை....தாங்கள் சீனாவுக்கு போகும்போது கூட்டிச் செல்லாமல்...யாழில்  மாட்டுப்பொங்கல் பொங்கச்சொல்லி அனுப்பிவிட்டு ..இங்கு இவை கண்மூடிக்கொண்டு சைன் அடிக்கினம்..சுண்ணாம்புக்கல் இளங்குமரனும் .. இராமலிஙக் அண்ணனுடன் பின்னாலை திரியிறார்....எப்படியும் அனுரவின் எண்ணம்...இராமலிங்கம்....இராமலிங்கம்தான்

Edited by alvayan
இடப் பிழை ...யாழில் என்று

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

Published By: VISHNU    15 JAN, 2025 | 06:41 PM

image

சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமோக வரவேற்பளித்தார், மரியாதை வேட்டுக்களுடன் மிகுந்த கௌரவமான முறையில் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, சமூக மற்றும் கைத்தொழில்துறை சார்ந்த  பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

அபிவிருத்தியின் புதிய யுகத்திற்காக இலங்கையுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி  இதன் போது வலியுறுத்தினார்.

மேலும், சீனாவிற்கு  நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு 15ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல்  சீன மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து  இருதரப்பு அரச தலைவர்களுக்கும் இடையில் சுமூகமான  கலந்துரையாடல் நடைபெற்றதோடு அடுத்து இரு தரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன. 

அத்தோடு நெருங்கிய நட்பு நாடுகள் என்ற வகையில் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த சீன  ஜனாதிபதி சீ ஜிங்பிங் , எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, சமூக மற்றும் கைத்தொழில்துறை சார்ந்த  பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.

இந்த சந்திப்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் அரச தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே. ஜே. பண்டார  ஆகியோரும்  பங்கேற்றனர்.

https://www.virakesari.lk/article/203909

சைனாவின் நீண்ட கால கனவு நிறைவேறி விட்டது .

அடுத்தது இலங்கையை 23சீன மகானம்களின் எண்ணிக்கையுடன் 24 ஆவதை இனி யாரும் தடுக்க முடியாது ..😄 

  • கருத்துக்கள உறவுகள்

நிலைமையை உன்னிப்பாக அவதானித்தபின் எதிர்வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இலங்கையை சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் எடுப்பதால் அது இந்து சமுத்திர பொருளாதார மற்றும் பாதுகாப்புக்கு சிக்கல்களை உருவாக்கும் என்பதால் அழகிய இலங்கையை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார். அது இலங்கை தீவு மக்களுக்கு நிலையான சமாதானத்தைக் கண்டடையவும் அதன் பொருளாதார சுபீட்சத்துக்கும் உதவும் என்றும் கூறியுள்ள அவர் இலங்கை மக்கள் அதேயே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் 

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பகிடி said:

நிலைமையை உன்னிப்பாக அவதானித்தபின் எதிர்வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இலங்கையை சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் எடுப்பதால் அது இந்து சமுத்திர பொருளாதார மற்றும் பாதுகாப்புக்கு சிக்கல்களை உருவாக்கும் என்பதால் அழகிய இலங்கையை அமெரிக்காவுடன் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார். அது இலங்கை தீவு மக்களுக்கு நிலையான சமாதானத்தைக் கண்டடையவும் அதன் பொருளாதார சுபீட்சத்துக்கும் உதவும் என்றும் கூறியுள்ள அவர் இலங்கை மக்கள் அதேயே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் 

இன்னுமொரு நாலு நாள்தானே...காத்துகிட்டிருக்கோம்..🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி சீன விஜயம் - நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய முதலீடு

January 16, 2025  12:00 pm

ஜனாதிபதி சீன விஜயம் - நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய முதலீடு

ஹம்பாந்தோட்டை பகுதியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பாக இலங்கையின் எரிசக்தி அமைச்சுக்கும் சீனாவின் சினொபெக் நிறுவனத்திற்கும் இடையே இன்று (16) காலை ஒப்பந்தமொன்று கைச்சாத்தானது.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய முதலீடாக இது கருதப்படுகிறது.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், முன்னணி சர்வதேச பெட்ரோலிய நிறுவனங்களில் ஒன்றான சினொபெக்கினால் 3.7 பில்லியன் டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டில், 200,000 பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமையவுள்ளதோடு, இதில் பெரும்பாலான பகுதியை ஏற்றுமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளன.

இலங்கையில் சீனாவின் இந்த பாரிய முதலீடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதோடு, ஹம்பாந்தோட்டை பகுதியில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதாரத்தையும் வலுப்படுத்தும். இதன் நன்மைகள் விரைவில் முழு இலங்கை மக்களுக்கும் கிடைக்கும் என்றும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இந்த நிகழ்வுகளில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஜென்ஹோன்க், சீனாவுக்கான இலங்கை தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியார் கலந்துகொண்டனர்.

 

https://tamil.adaderana.lk/news.php?nid=198835

  • கருத்துக்கள உறவுகள்

அதோடை யார்யாருக்கெல்லாம் கடந்த காலம்தில் லஞ்சம் கொடுத்தது என்ற லிஸ்ட்டையும் வாங்கி வந்தால் தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றி விடலாம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.