Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

இவர்களைத்தான் இந்திய ஒன்றியத்தின் பொறிமுறையை வீழ்த்த வந்தவர்கள் பாஜகவை வீழ்த்த வந்தவர்கள் என நீங்கள் எதிர்பார்க்கும் எழுத்தாளர்கள் ரைட்டப் எழுதி கொண்டிருக்கிறார்கள்….

 

நீங்கள் சொல்லியிருக்கும் இந்த அடுக்குகளிற்கு வெளியே யாராவது சிலராவது இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றீர்களா............................ இருக்கின்றார்கள் என்று நான் நினைக்கின்றேன். அவர்களின் கருத்துகளை தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் சொல்லியிருக்கும் பிரமிட் அடுக்கு திமுகவை பொறுத்த அளவில் ஓரளவு சரியென்றாலும், அங்கு ஒரு மன்னர் - சில குறுநில மன்னர்கள் போன்ற ஒரு அமைப்பிலேயெ அது இயங்குகின்றது. டி ஆர் பாலு, நேரு, துரைமுருகன், பொன்முடி இவர்கள் போன்ற சிலர் குறுநில மன்னர்கள். இவர்கள் அவரவர்களின் பிரதேசத்தில் சகல அதிகாரங்களும் கொண்டவர்கள்.

அதிமுகவில் குறுநில மன்னர்கள் கிடையாது. அதிகாரம் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான்.  உதாரணமாக, செப்பரப்பாக்கம் ஏரியைத் திறந்து, அதனால் சென்னை வெள்ளம் வந்தது இந்த குவிந்த அதிகார மைய அமைப்பால் தான்.

திமுகவில் பலரும் நல்லாவே சம்பாதிப்பார்கள். அதிமுகவில் மற்றவர்கள் அவ்வளவாக சம்பாதிக்க முடியாது. சசிகலா குடும்பம் உள்ளே வந்த பின்னர் தான், திமுகவிற்கு நிகராக தமிழ்நாட்டை அதிமுக கொள்ளை அடிக்க ஆரம்பித்தது. அதுவும் ஒரு குடும்பம் மட்டுமே கொள்ளை அடித்தது.

 

 

  • Replies 544
  • Views 26k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

  • விசுகு
    விசுகு

    யாழ் கள உறவுகளே... வணக்கம்  இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏ

  • சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திக

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்போ B ரீமை ஓனரே அழிக்கிறாங்க அப்புடித்தானே.. ?

பி டீமுக்கு அடிக்கடி அடி போடுவது போல் பாவனை செய்தால்தான் A , B டீம்கள் வேறு வேறு என ஒரு தோற்றப்பாட்டை தொடரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொய் பித்தலாட்டக்காரன் செந்தமிழன் சீமான் அண்ணா ஒருபோதும் சந்தோஷைச் சந்திக்கப்போவதில்லை. அண்ணன் வழியில் பொய் பித்தலாட்டத்தில் தம்பிகள் இறங்கிவிட்டார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாலி said:

பொய் பித்தலாட்டக்காரன் செந்தமிழன் சீமான் அண்ணா ஒருபோதும் சந்தோஷைச் சந்திக்கப்போவதில்லை. அண்ணன் வழியில் பொய் பித்தலாட்டத்தில் தம்பிகள் இறங்கிவிட்டார்கள்!

ஆதார‌த்தோடு பேச‌வும்

சீமான் தான் கார்த்திய‌ செல்வ‌னை முத‌ல் தொட‌ர்வு கொண்ட‌வ‌ர்

யார் பின் வாங்கினார்க‌ள் என‌ நாளைக்கு முழு விப‌ர‌த்தோட‌ தெரிய‌ வ‌ரும்......................

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

தமிழ்நாட்டு திமுக/அதிமுக கட்சிகளின் உட்கட்டமைப்பு அடுக்குகளால் ஆனது…

இந்த அடுக்குகளை பொறுத்து அதிகாரமும்,செல்வமும் வேறுபடும்…

இது மேலிருந்து கீழாக பிரமிட் வடிவில் செல்கிறது…

உதாரணத்திற்கு திமுகவை எடுத்து கொள்ளுங்கள்…

இந்த பிரமிட்டின் உச்ச அடுக்கு கருணாநிதியின் குடும்பம்…

அதிகாரத்தின் உச்சத்தையும், செல்வம் ஈட்டுவதற்கான வழியை அதிகம் கொண்ட குடும்பம்…

இந்த கருணாநிதியின் குடும்பம் இந்த உச்ச அடுக்கை இனி வேறு எவருக்கும் விட்டு தராது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது…

• #இது திமுகவின் எல்லா உறுப்பினர்களுக்கும் தெரியுமா?

நன்றாக தெரியும்.அப்படியானால் ஏன் எந்தவித தார்மீக கோபமும் வராமல் தொடர்ந்து கடுமையாக கட்சிக்காக உழைக்கிறார்கள்..?

காரணம் இந்த பிரமிட்டின் ஏதாவது ஒரு அடுக்கில் இருந்தாலே செல்வத்தை ஈட்டுவதற்கான வழியும் அதனோடு அதிகாரத்தை சுவைப்பதற்கான வழியும் இருக்கிறது…

கருணாநிதி குடும்பத்தின் வாரிசு அரசியலை தார்மீக கோபத்துடன் கேள்வி கேட்டால் தூக்கி வீசப்படுவார்கள்…. செல்வத்தை ஈட்டுவதற்கான வழி அடைபடும்...

அதனால் தங்களின் பலத்திற்கு ஏற்ற அடுக்கிலே இருப்பதற்கு முயற்சி செய்கிறார்கள்…

அவர்களின் முயற்சியெல்லாம் எப்படி தனக்கு மேல் இருக்கும் அடுத்த அடுக்கிற்கு போவது என்பதாக இருக்கும்… 

மேல் அடுக்கு என்பது அதிக அதிகாரம் அதிக செல்வம்.:.

கருணாநிதியின் குடும்பத்திற்கு அடுத்த அடுக்கிலே சீனியர் திமுகவினர் வருவார்கள்… இதுதான் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு இத்யாதி , இத்யாதிகளின் அடுக்கு…

இவர்களின் இலக்கு இதே அடுக்கிலே தொடர்ந்து நீடிப்பது... தனது அடுத்த தலைமுறையை இந்த அடுக்கிலே கொண்டு அமர்த்துவது... அதே அதிகாரம் அதே செல்வம்…

இப்படியே இந்த அடுக்குகள் கடைக்கோடி உறுப்பினர் வரை செல்லும்…

இந்த பிரமிட் அடுக்கிலே உள்ள அனைவருமே அல்லது பெரும்பாலோனோர் பயனாளர்கள்தான்…

மேல் அடுக்கு அதிக அதிகாரம், அதிக செல்வம்…
கீழ் அடுக்கு ஒப்பீட்டளவில் குறைவான அதிகாரம் குறைவான செல்வம்… 

கருணாநிதி குடும்பத்தின் அடுக்கு, சீனியர் திமுகவினரின் அடுக்கு என்பது பல ஆயிரக்கணக்கான கோடிகளை செல்வமாக ஈட்டிய அடுக்கு…

இங்கு திமுக என்பது ஒரு நிறுவனம்... பல மில்லியன் உறுப்பினர்களை கொண்ட நிறுவனம்... அந்த நிறுவனத்திற்குள்ளே உள்ள உறுப்பினர்கள் அடுத்த மேல் அடுக்கிற்கு செல்வதற்காக அடித்து பிடித்து உழைப்பார்கள்…காரணம் அனைவரும் பயனாளர்கள்…

இந்த நிறுவனம் தொடர்ந்து லாபகரமாக இயங்குவதற்கான கருத்தியல் முகமூடிதான் திராவிடம், சமூக நீதி இத்யாதி இத்யாதி எல்லாம்…

• #இனி இந்த பிரமிட்டுக்கு வெளியே உள்ள பயனாளர்கள்

இந்த வெளியே உள்ள பயனாளர்கள்தான் நாம் காணும் அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், முற்போக்காளர்கள், கவிஞர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள், தொழில் முனைவோர்கள், நடிகர்கள் இத்யாதி இத்யாதி.

இவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியை திராவிட கருத்தியலோடு இணைத்து புள்ளி விபரங்களை அள்ளி வீசுவார்கள். 

• #இது எல்லாம் அவர்கள் உளப்பூர்வமாக செய்பவைகளா?

இல்லை. இவர்களும் இதை லாப நட்ட கணக்கோடுதான் செய்கிறார்கள்.

இவர்களுக்கு தமது துறைகளில் அவரவர் ஏற்றத்திற்கான வழிகளை, செல்வத்தை பெருப்பிக்கும் வகைகளை, புதிய பதவிகளை, புதிய வாய்ப்புகளை அடைவதுதான் இலக்கு.

இந்த இலக்கை நோக்கி காய் நகர்த்துவதற்கு அவர்கள் கொடுக்கும் உழைப்புதான் சகல வளர்ச்சிகளும் திராவிட கட்சிகளால் மட்டுமே நிகழ்ந்தது என கம்பி கட்டும் கதை சொல்வது எல்லாம். 

அதை தாம் சார்ந்த துறையிற்கே உரித்தான தொழில் நிபுணத்துவத்தோடு மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள்.

• #இந்த அடுக்கை திமுக மட்டும்தானா கொண்டிருக்கிறது?

இல்லை. இதே இடத்தில் அதிமுகவையும் நீங்கள் பொருத்தலாம்... மற்ற சில கட்சிகளையும் பொருத்தலாம்...

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக மட்டுமே தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதால் இவை இரண்டுக்கும் மேலேயுள்ள பந்தி் அதிகமாக பொருந்தும்….

• #இதற்கிடையே இந்திய ஒன்றியத்தின் ஒற்றைமயமாக்கலை எதிர்ப்பது, மாநில சுயாட்சி, ஆரியத்தை எதிர்ப்பது போன்ற கப்சாக்கள்..

நான் கூறிய திமுக, அதிமுக போன்ற நிறுவனமாக இயங்கும் கட்சிகளின் பிரமிட்டுகளின் உயர் அடுக்குகளிலே இருப்பவர்கள் பல ஆயிரம் கோடி செல்வத்தை உடையவர்கள்...

சட்டரீதியாக இத்தனை ஆயிரம் கோடியை உழைப்பதற்கான எந்த பின்னணியும் இல்லாமல் ஈட்டிய செல்வம் அது…

இவர்களைத்தான் இந்திய ஒன்றியத்தின் பொறிமுறையை வீழ்த்த வந்தவர்கள் பாஜகவை வீழ்த்த வந்தவர்கள் என நீங்கள் எதிர்பார்க்கும் எழுத்தாளர்கள் ரைட்டப் எழுதி கொண்டிருக்கிறார்கள்….

 

ஒரே ஒரு கேள்விதான்.

இந்த திமுக, அதிமுக பலமிக்க, பலகோடி பிரமிட் அடுக்கை, நலிந்த நிலையில் உள்ள ஈழத்தமிழர், சீமானிற்காக பகைத்தால் அது அவர்களுக்கு நீண்ட கால நோக்கில் நன்மை தருமா, தீமை தருமா?

பிகு

இந்த ஊழல் பிரமிட் அடுக்கு விசிக, நாதக, பாமக, மதிமுக விலும் உள்ளது.

பாக்கியராஜனுக்கு படி அளக்காமல் சீமானை ஒரு நிமிடம் கூட சந்திக்க முடியாது.

ஏழைக்கேற்ற எள்ளுருண்டை. கட்சியின் அளவுக்கு ஏற்ப ஊழல்-பிரமிட்.

3 hours ago, Nathamuni said:

வந்த படியால் தான், எல்லோரும் கழண்டு கொள்ள, நான் மட்டுமே.... என்ற வீரப் பிரதாபத்தை காணக்கிடைத்தது.

இதை internet possessiveness என்றும் சொல்லுவினம்.

விளங்கினால் சரி. 😂 

தமிழக அரசியல் குப்பைக்குள் மூழ்கி முத்தெடுக்க வாழ்த்துக்கள்.!

வீரபிரதாபத்தை பார்த்ததும் வாலை உருவிகொண்டு களத்தில் குதித்துள்ளீர்போலும் 🤣.

சரி சரி விஜி அண்ணி டேட்ஸ் - விசாரிச்சு கொண்டு வாங்கோ. நானும் பையனும் வெயிட்டிங்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஒரே ஒரு கேள்விதான்.

இந்த திமுக, அதிமுக பலமிக்க, பலகோடி பிரமிட் அடுக்கை, நலிந்த நிலையில் உள்ள ஈழத்தமிழர், சீமானிற்காக பகைத்தால் அது அவர்களுக்கு நீண்ட கால நோக்கில் நன்மை தருமா, தீமை தருமா?

பிகு

இந்த ஊழல் பிரமிட் அடுக்கு விசிக, நாதக, பாமக, மதிமுக விலும் உள்ளது.

பாக்கியராஜனுக்கு படி அளக்காமல் சீமானை ஒரு நிமிடம் கூட சந்திக்க முடியாது.

ஏழைக்கேற்ற எள்ளுருண்டை. கட்சியின் அளவுக்கு ஏற்ப ஊழல்-பிரமிட்.

அடி ம‌ட்ட‌ திமுக்கா தொண்ட‌னால் ஸ்டானில ச‌ந்திக்க‌ முடியுமா

 

சீமானை அடி ம‌ட்ட‌ தொட்ட‌ன் வ‌ரை ச‌ந்திக்க‌லாம் ஒன்னாக‌ நின்று ப‌ட‌ம் எடுக்க‌லாம்................

 

16மாத‌த்துக்கு அண்ண‌ன் சீமானை யாரும் ச‌ந்திக்க‌ முடியாது தேர்த‌ல் வ‌ருவ‌தால் ஒவ்வொரு தொகுதிக்கும் இப்ப‌வே போய் வ‌ர‌ தொட‌ங்கி விட்டார்

 

2026 இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு தான் அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு பிர‌ச்சார‌ம் செய்ய‌ வேண்டிய‌து தான்...........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அவர்கள் இந்த மாதிரி யார் மீதாவது சேறை வாரி இறைக்க வேண்டுமானால், ஸ்டாலினோ, உதயநிதியோ நேரடியாக எதும் சொல்ல மாட்டார்கள்... எதாவது இரண்டாம், மூன்றாம், கடை நிலை ஆட்களிடம் ப்ரொஜெக்டை ஒப்படைத்து விடுவார்கள்…

பேசாமல் சாட்டைய கோத்து உட்டிருக்கலாம்..😂

யோவ் மைன்ட் வாய்ஸ் எண்டு நினைச்சு சத்தமா பேசிட்டிங்கையா🤣.

அங்க இரெண்டாம், மூன்றாம், கடைநிலை பேச்சாளர் எல்லாம் இருக்கிறாங்கையா…இங்க தலைவனே கடைநிலை பேச்சாளந்தான்🤣.

தீப்பொறி ஆறுமுகத்தை தலைவனாக ஒரு கட்சி கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? அப்படித்தான் நாதக. மூன்று அடுக்கு பேச்சையும் அண்ணனே கவர் பண்ணுவார்🤣.

5 minutes ago, வீரப் பையன்26 said:

அடி ம‌ட்ட‌ திமுக்கா தொண்ட‌னால் ஸ்டானில ச‌ந்திக்க‌ முடியுமா

 

சீமானை அடி ம‌ட்ட‌ தொட்ட‌ன் வ‌ரை ச‌ந்திக்க‌லாம் ஒன்னாக‌ நின்று ப‌ட‌ம் எடுக்க‌லாம்................

 

16மாத‌த்துக்கு அண்ண‌ன் சீமானை யாரும் ச‌ந்திக்க‌ முடியாது தேர்த‌ல் வ‌ருவ‌தால் ஒவ்வொரு தொகுதிக்கும் இப்ப‌வே போய் வ‌ர‌ தொட‌ங்கி விட்டார்

 

2026 இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு தான் அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு பிர‌ச்சார‌ம் செய்ய‌ வேண்டிய‌து தான்...........................

👆👇

 

14 minutes ago, goshan_che said:

ஏழைக்கேற்ற எள்ளுருண்டை. கட்சியின் அளவுக்கு ஏற்ப ஊழல்-பிரமிட்.

கடைசியா காலி அம்மாள் எப்ப சந்திச்சவா?

சீமானை விட்டு விலகும் ஒவ்வொருவரும் தவறாமல் சொல்லும் காரணம் பாக்கியராசனை தாண்ட முடியவில்லை என்பதே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழ்நாட்டில் 80 வீதமான எழுத்தாளர்கள் திமுக தானே.. மீதி 20 வீதத்தில்தான் அதிமுக விசிக கம்யூனிஸ்ட் வருவார்கள்.. அப்புறம் அவர்கள் திமுக பக்கமாகத்தானே எழுதிவார்கள்..

தமிழ்நாட்டில் பெரும்பான்மை எழுத்தாளர்கள் திமுகவும் இல்லை கம்யூனிஸ்ட்டும் இல்லை என்று வைத்துக் கொள்வோம்
சீமான் பேசுகின்ற பேச்சுகளுக்கும் அரசியல் ஆரம்பித்த போது பெரியார் வழியில்  என்று இன்று பெரியார் ஒழிப்பே கொள்கை, ஆமைகறி விருநது பொய்கள் பேசும் இவரை அவர்கள் ஆதரித்து எழுதுவார்களா

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

யோவ் மைன்ட் வாய்ஸ் எண்டு நினைச்சு சத்தமா பேசிட்டிங்கையா🤣.

அங்க இரெண்டாம், மூன்றாம், கடைநிலை பேச்சாளர் எல்லாம் இருக்கிறாங்கையா…இங்க தலைவனே கடைநிலை பேச்சாளந்தான்🤣.

தீப்பொறி ஆறுமுகத்தை தலைவனாக ஒரு கட்சி கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? அப்படித்தான் நாதக. மூன்று அடுக்கு பேச்சையும் அண்ணனே கவர் பண்ணுவார்🤣.

திமுக்காவில் துட்டு கிடையாது என்றால் அடுத்த‌ க‌ன‌மே க‌ட்சிய‌ விட்டு கில‌ம்பி விடுவாங்க‌ள்..............எவ‌ள‌வு கால‌ம் காசை கொத்து தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌ போகினம் , ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் மாற்ற‌ம் வ‌ந்தால் சுட‌லை கூப்பில‌ தான் உக்கார‌னும்.........................கேட்டால் திமுக்காவை பிடிக்காது க‌ருணாநிதிய‌ பிடிக்காது

 

ஆனால் முட்டு கொடுப்ப‌தெல்லாம் அவ‌ர்க‌ளுக்கு

பேசாம‌ 200இணைய‌ கூலிக‌ளுட‌ன் மெம்ப‌ர் ஆகினால் நீங்க‌ளும் காசு பார்க்க‌லாம் எல்லோ லொள்................

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வீரப் பையன்26 said:

த‌லைவ‌ரின் உப‌ச‌ரிப்பை ஒருக்கா சொல்லி முடித்து இருந்தால் ஆமைக் க‌றி இட்லி க‌றி விவாத‌ம் வ‌ந்து இருக்காது.................சீமான் சொன்ன‌ சில‌தை நான் இன்றும் ம‌றுக்கிறேன் த‌லைவ‌ர் கூட‌ தான்  நின்று துப்பாக்கியால் சுட்ட‌து ம‌ற்றும் அந்த‌ இட்லி க‌றி விவ‌கார‌ம் அது சீமானின் வெட்டி பேச்சாய் தான் பார்க்கிறேன்

உறவுக்கு சீமான் புழுகி அடிச்சு விட்டிருக்கிறார் என்பது விளங்கியுள்ளது 👍

நான் இவைகளை எல்லாம் இவர் உண்மை என்று நம்பி இருப்பார் என்று நினைத்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

யோவ் மைன்ட் வாய்ஸ் எண்டு நினைச்சு சத்தமா பேசிட்டிங்கையா🤣.

அங்க இரெண்டாம், மூன்றாம், கடைநிலை பேச்சாளர் எல்லாம் இருக்கிறாங்கையா…இங்க தலைவனே கடைநிலை பேச்சாளந்தான்🤣.

தீப்பொறி ஆறுமுகத்தை தலைவனாக ஒரு கட்சி கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? அப்படித்தான் நாதக. மூன்று அடுக்கு பேச்சையும் அண்ணனே கவர் பண்ணுவார்🤣.

👆👇

 

கடைசியா காலி அம்மாள் எப்ப சந்திச்சவா?

சீமானை விட்டு விலகும் ஒவ்வொருவரும் தவறாமல் சொல்லும் காரணம் பாக்கியராசனை தாண்ட முடியவில்லை என்பதே.

அண்ணா பல்கலைக்கழக மாண‌விக்கு ந‌ட‌ந்த‌ கொடுமையின் போது காளிய‌ம்மாள் அண்ண‌ன் சீமானை ச‌ந்திச்சா

 

உங்க‌ளுட‌ன் விவாத‌ம் செய்தால் பையித்திய‌ம் பிடிச்சிடும்

 

காளிய‌ம்மாள் ப‌ற்றி போன‌ வ‌ருட‌த்தில் இருந்து யாழில் ப‌ல‌ அவ‌தூறுக‌ளை ப‌ர‌ப்பி இருக்கிறீங்க‌ள் ஆனால் அதில் ஒன்றில் கூட‌ உண்மை இல்லை

ஏன் உங்க‌ளுக்கு இந்த தேவை இல்லா அவ‌மான‌ம்......................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உறவுக்கு சீமான் புழுகி அடிச்சு விட்டிருக்கிறார் என்பது விளங்கியுள்ளது 👍

நான் இவைகளை எல்லாம் இவர் உண்மை என்று நம்பி இருப்பார் என்று நினைத்தேன்.

ந‌ம்ம‌ அண்ண‌ன் என்றாலும் சில‌ உண்மைக‌ளை வெளிப்ப‌டையாய் எழுதி தான் ஆக‌னும்....................சில‌ருக்கு சுடும் அதை ப‌ற்றி என‌க்கு க‌வ‌லை இல்லை................சீமானுக்கு நான் ஆத‌ர‌வு கொடுக்க‌ முக்கிய கார‌ண‌ம் எங்க‌ட‌ இன‌ அழிப்பை த‌மிழ‌க‌ ம‌க்க‌ளிட்டை கொண்டு சேர்த்த‌வ‌ர் மற்றும் எங்க‌ட‌ த‌மிழ் மொழிக்காக‌ போராடுகிறார்

ம‌ற்ற‌து பிற‌க்கும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு மாவீர‌ர்களின் பெய‌ரை வைக்கிறார்

 

ந‌ல்ல‌த‌ம்பியின் ம‌க‌ளுக்கு (ஈழ‌நிலா ) என‌ பெய‌ர் வைத்தார்

 

இதனால் தான் சீமானை நான் ஆத‌ரிக்கிறேன்.................அடுத்த‌வ‌ர்கள் ஆயிர‌ம் சொல்ல‌ட்டும்

 

ஜ‌ டோன் கெய‌ர்😋........................

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வீரப் பையன்26 said:

அண்ணா பல்கலைக்கழக மாண‌விக்கு ந‌ட‌ந்த‌ கொடுமையின் போது காளிய‌ம்மாள் அண்ண‌ன் சீமானை ச‌ந்திச்சா

 

உங்க‌ளுட‌ன் விவாத‌ம் செய்தால் பையித்திய‌ம் பிடிச்சிடும்

 

காளிய‌ம்மாள் ப‌ற்றி போன‌ வ‌ருட‌த்தில் இருந்து யாழில் ப‌ல‌ அவ‌தூறுக‌ளை ப‌ர‌ப்பி இருக்கிறீங்க‌ள் ஆனால் அதில் ஒன்றில் கூட‌ உண்மை இல்லை

ஏன் உங்க‌ளுக்கு இந்த தேவை இல்லா அவ‌மான‌ம்......................

காளியம்மாளை பிசிறு என தான் ஏசியதை சீமான் மறுத்தாரா?

காளியம்மாள் மட்டும் அல்ல இன்னும் பலர் அதே குற்றசாட்டை வைத்துள்ளனர்.

20 minutes ago, வீரப் பையன்26 said:

திமுக்காவில் துட்டு கிடையாது என்றால் அடுத்த‌ க‌ன‌மே க‌ட்சிய‌ விட்டு கில‌ம்பி விடுவாங்க‌ள்..............எவ‌ள‌வு கால‌ம் காசை கொத்து தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌ போகினம் , ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் மாற்ற‌ம் வ‌ந்தால் சுட‌லை கூப்பில‌ தான் உக்கார‌னும்.........................கேட்டால் திமுக்காவை பிடிக்காது க‌ருணாநிதிய‌ பிடிக்காது

 

ஆனால் முட்டு கொடுப்ப‌தெல்லாம் அவ‌ர்க‌ளுக்கு

பேசாம‌ 200இணைய‌ கூலிக‌ளுட‌ன் மெம்ப‌ர் ஆகினால் நீங்க‌ளும் காசு பார்க்க‌லாம் எல்லோ லொள்................

இதில எங்கே வருகிறது  திமுக முட்டு?

திமுக தலைவர்கள் தாம் கேவலமாக பேசாமல் ஏனையவர்களை இறக்கி விடுவார்கள் என திமுக தலைவர்களை உயர்த்தி பேசியவர் @பாலபத்ர ஓணாண்டி

நீங்கள் அவரைத்தான் திமுக முட்டு என சொல்ல வேண்டும்.

——

நான் சொன்னது எம்ஜிஆர் டபுள் ஆக்டு மாதிரி அண்ணன் டிரிபிள் ஆக்டு கொடுத்து 2ம், 3ம், 4ம் தரபேச்சுகள் அனைத்தையும் ஒரே ஆளாக செய்வார் என்பதையே.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

காளியம்மாளை பிசிறு என தான் ஏசியதை சீமான் மறுத்தாரா?

காளியம்மாள் மட்டும் அல்ல இன்னும் பலர் அதே குற்றசாட்டை வைத்துள்ளனர்.

இதில எங்கே வருகிறது  திமுக முட்டு?

திமுக தலைவர்கள் தாம் கேவலமாக பேசாமல் ஏனையவர்களை இறக்கி விடுவார்கள் என திமுக தலைவர்களை உயர்த்தி பேசியவர் @பாலபத்ர ஓணாண்டி

நீங்கள் அவரைத்தான் திமுக முட்டு என சொல்ல வேண்டும்.

——

நான் சொன்னது எம்ஜிஆர் டபுள் ஆக்டு மாதிரி அண்ணன் டிரிபிள் ஆக்டு கொடுத்து 2ம், 3ம், 4ம் தரபேச்சுகள் அனைத்தையும் ஒரே ஆளாக செய்வார் என்பதையே.

 

அது எப்ப‌வோ முடிஞ்சு போன‌ பிர‌ச்ச‌னை

 

சைக்கோ க‌ருணாநிதி குடும்ப‌த்தை பார்த்து இந்த‌ தொழில் செய்வ‌தும் பார்க்க‌ வேறு தொழில் செய்ய‌லாமே என்று சொன்னார்

நாங்க‌ள் என்ன‌ அதை பிடிச்சு தொங்கி கொண்டா நிக்கிறோம்

சூடு சுர‌னை இல்லாத‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் தான் திமுக்காவில் அதிக‌ம்........................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

அது எப்ப‌வோ முடிஞ்சு போன‌ பிர‌ச்ச‌னை

 

சைக்கோ க‌ருணாநிதி குடும்ப‌த்தை பார்த்து இந்த‌ தொழில் செய்வ‌தும் பார்க்க‌ வேறு தொழில் செய்ய‌லாமே என்று சொன்னார்

நாங்க‌ள் என்ன‌ அதை பிடிச்சு தொங்கி கொண்டா நிக்கிறோம்

சூடு சுர‌னை இல்லாத‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் தான் திமுக்காவில் அதிக‌ம்........................

நான் எழுதியற்கு இது பதிலில்லையே🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வீரபிரதாபத்தை பார்த்ததும் வாலை உருவிகொண்டு களத்தில் குதித்துள்ளீர்போலும் 🤣.

சரி சரி விஜி அண்ணி டேட்ஸ் - விசாரிச்சு கொண்டு வாங்கோ. நானும் பையனும் வெயிட்டிங்.

உங்களை அறியாமல், நீங்கள் செய்து கொண்டிருப்பது ‘cyber bullying’ in big time for dominance!!

உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து வைப்பவர்களை அல்லது வைக்கக் கூடியவர்களை, மூர்க்கமாக தாக்க முணைகிறீர்கள். கருத்தை கருத்தாக எடாமல், தனிமனித தாக்குதலுக்கு நகர்கிறீர்கள்.

இது, ஒரு காத்திரமான கருத்தாடலை தடுத்து, அடுத்தவர்களை, முக்கியமாக வித்தியாசமான கருத்துள்ளவர்களை ஒதுங்கவைக்கிறது.

இதை உங்கள் கருத்துக்கான வெற்றியாக கருதி மார் தட்டுகிறீர்கள்.

நான் விளக்கம் கேட்டது வாலியிடம். அவரும் கண்டு கொள்ளவில்லை, நானும் நகர்ந்து விட்டேன். நீங்கள் இதில் மூக்கை நுளைக்க காரணம்? Big bully, right?

இது தனிப்பட்ட ரீதீயில் உங்களுக்கு நல்லதோ இல்லையோ, களத்துக்கும், சக கருத்தாளருக்கும் நல்லதல்ல.

All the very best mate!

Take care!! 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Nathamuni said:

உங்களை அறியாமல், நீங்கள் செய்து கொண்டிருப்பது ‘cyber bullying’ in big time for dominance!!

உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து வைப்பவர்களை அல்லது வைக்கக் கூடியவர்களை, மூர்க்கமாக தாக்க முணைகிறீர்கள். கருத்தை கருத்தாக எடாமல், தனிமனித தாக்குதலுக்கு நகர்கிறீர்கள்.

இது, ஒரு காத்திரமான கருத்தாடலை தடுத்து, அடுத்தவர்களை, முக்கியமாக வித்தியாசமான கருத்துள்ளவர்களை ஒதுங்கவைக்கிறது.

இதை உங்கள் கருத்துக்கான வெற்றியாக கருதி மார் தட்டுகிறீர்கள்.

நான் விளக்கம் கேட்டது வாலியிடம். அவரும் கண்டு கொள்ளவில்லை, நானும் நகர்ந்து விட்டேன். நீங்கள் இதில் மூக்கை நுளைக்க காரணம்? Big bully, right?

இது தனிப்பட்ட ரீதீயில் உங்களுக்கு நல்லதோ இல்லையோ, களத்துக்கும், சக கருத்தாளருக்கும் நல்லதல்ல.

All the very best mate!

Take care!! 

Love you too Nathams ❤️

நான் பெரிய புள்ளி யும் இல்லை.

bully ம் இல்லை….

வெறும்…

புல்லீங்கோ…..

பிகு

இந்த ஞானம் - பொய் ஐடியை என் ஜாடையில் ஆரம்பித்து பித்தலாட்டம் ஆட முன்னர் வந்திருக்க வேண்டும்.

Better late than never.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரசோதரன் said:

பையன் சார், சீமான் பேசும் தமிழ்த்தேசியம் சரி என்பதும், நித்தியோ அல்லது ஜக்கியோ அல்லது ரஜனிகாந்தோ பேசும் ஆன்மீகம் சரியென்பதிற்கும் வித்தியாசங்கள் கிடையாது. இந்த நால்வரும், இவர்களைப் போன்ற பலரும், வெறும் சுயலாப அடிப்படை ஒன்றில் மட்டுமே சில உயரிய, உணர்ச்சிகரமான விடயங்களை வியாபாரப் பொருட்கள் ஆக்கியுள்ளனர்.

சீமானை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக, நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக, திமுக அப்படிச் செய்ததே, இப்படிச் செய்ததே என்பது ஒரு சரியான ஒப்பீடு இல்லை. இவர் அல்லாவிட்டால் அவர் என்று நாங்கள் இங்கு கருத்தாடவில்லை. மேலும் இவர் அல்லாவிட்டால் அவர் என்று இரண்டே இரண்டு தெரிவுகள் தான் எங்கள் முன் இருக்கின்றது என்றும் இல்லை.

சீமானின் மேல் இருக்கும் அதே அருவருப்பு தான் கருணாநிதியின் உண்ணாவிரதத்தின் மீதும் இன்றும் இருக்கின்றது.

பிரணாப் முகர்ஜி இறந்த பொழுது, இதே நியூஸ் 18 இல் பிரணாப் முகர்ஜியைப் பற்றி ஒரு தொகுப்பு போட்டார்கள். அந்த தொகுப்பில் பிரணாப் முகர்ஜி எவ்வாறு கருணாநிதியை எங்கள் மக்கள் மீதான் நடவடிக்கைகளுக்கு சம்மதிக்க வைத்தார் என்றும், இது பிரணாப் முகர்ஜியின் ஒரு சாதனை என்றும் சொல்லப்பட்டிருந்தது. இன்று சீமான் மேல் வரும் ஒவ்வாமையும், அருவருப்பும், அன்றே கருணாநிதியின் மீதும், பிரணாப் முகர்ஜியின் மீதும் வந்தது.

நான் சொல்ல வருவது என்னவென்றால், சீமான் பற்றிய குற்றச்சாட்டுகள் வரும் வேளைகளில் எல்லாம், திமுகவையோ, வைக்கோவையோ, வேறு எவரையோ ஒப்பீடாகக் கொண்டு வந்து, அவர்கள் செய்யாததையா சீமான் செய்து விட்டார் என்று கருத்து வைப்பது சரியான நியாயப்படுத்தல் இல்லை என்பதே.

நியூஸ் 18 தாங்கள் இந்த விவாதத்திற்கு எப்போதும் தயார் என்றே இன்றும் அவர்களின் தளத்தில் போட்டிருக்கின்றார்கள்:

https://tamil.news18.com/tamil-nadu/news18-tamil-nadu-ready-to-arrange-debate-between-seeman-and-cameraman-santhosh-nw-azt-ws-b-1712912.html

நியூஸ் 18 திமுகவின் கைகளில் இல்லை. அது அதைவிட உச்சத்தில் இருக்கின்றது. திமுகவால் நியூஸ் 18 ஐ தொடவே முடியாது.

சீமான் எப்படியாகவும் இருக்கட்டும். சரி. நீங்கள் சொல்லுங்கள். இந்தப் 16 வருடத்தில் தேசியத்தலைவரினதும், மாவீரர்களினதும் கனவுக்காக என்ன செய்தீர்கள். செய்யவில்லை என்றால் மூடிட்டு போவது தான் தங்களுக்குச் சரியாக இருக்கும். இந்தப் 16 வருடமும் சீமானோ, நாம் தமிழரோ புலிகள் பெயர் சொல்லாமல் எந்திரிக்கவில்லை. ஏதோ இன்று வரை புலிகளின் பெயரை தியாகத்தை அடுத்த தலைமுறைக்குக் காவிச் சொல்வது அவர்கள் தான். உங்களால் செய்ய முடியாத ஒன்றை மற்றவர்கள் செய்தால் குழப்பாமல் இருங்கள். அவ்வளவு தான் 

 

10 hours ago, goshan_che said:

அப்படி இல்லை பையா…

விஜி அண்ணியா, நாதமா என போட்டி வைத்தால் நான் எப்போதும் நாதம் பக்கம்தான்.

நாதத்தின் நம்பகதன்மை அவரின் சுஜ ஆக்கங்களை வைத்தே எல்லாரும் தெரிந்து கொண்டதுதான்.

அதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை.

இந்த கேப்பில் விஜி அண்ணி சொல்லும் சம்பவங்கள் ஏதோ ஒரு இடத்தில் நடந்தது என்பதுதான் இந்த கயவர்கள் சொல்வது.

அதைதான் நாதத்தை தீர விசாரிக்க instructions கொடுத்துள்ளேன். அவரும் கிளம்பி போய்ட்டார்.

விஜய லட்சுமியும் சீமானும் 2008ம் காலப்பகுதியில் ஆக வாழ்ந்தார்கள். பின்னாடி அந்த வாழ்க்கை சரி வரவில்லை என்று பிரிந்து போய் விட்டார்கள்.  அதில் உங்களுக்கு ஏதும் பிரச்சனை உள்ளதா?  

ராமசாமி  மணியம்மையைத் திருமணம் செய்தபோது இருந்த நியாயங்களை விடச் சீமான் விஜயலட்சுமி கூட வாழ்ந்ததில் நிறைய உண்டு. அதனால் நீங்கள் வருந்த வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தூயவன் said:

சீமான் எப்படியாகவும் இருக்கட்டும். சரி. நீங்கள் சொல்லுங்கள். இந்தப் 16 வருடத்தில் தேசியத்தலைவரினதும், மாவீரர்களினதும் கனவுக்காக என்ன செய்தீர்கள். செய்யவில்லை என்றால் மூடிட்டு போவது தான் தங்களுக்குச் சரியாக இருக்கும். இந்தப் 16 வருடமும் சீமானோ, நாம் தமிழரோ புலிகள் பெயர் சொல்லாமல் எந்திரிக்கவில்லை. ஏதோ இன்று வரை புலிகளின் பெயரை தியாகத்தை அடுத்த தலைமுறைக்குக் காவிச் சொல்வது அவர்கள் தான். உங்களால் செய்ய முடியாத ஒன்றை மற்றவர்கள் செய்தால் குழப்பாமல் இருங்கள். அவ்வளவு தான் 

🤣..............

என்ன தூயவன் இது........ எந்த விடயத்தில் கருத்துகள் எழுதுவது என்றாலும், எனக்கு அதில் என்ன தகுதி இருக்கின்றது என்று சொல்லிய பின்பே தான் எழுத வேண்டுமா....

உங்களுக்கென்று சில நியாயங்கள் இருப்பது போலவே எனக்கென்றும் சில நியாயங்கள் இருக்கின்றன. 

நீங்கள் உங்களின் பாதையில், நான் என் பாதையில். ஆனால், எந்நிலையிலும் அடிப்படை நாகரிகம் இல்லாத ஒரு சொல் கூட என்னிடமிருந்து வரப் போவதில்லை.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை சீமான் சந்தித்ததும், ஆயுதப் பயிற்சி பெற்றதும் உண்மையா?சம்பந்தப்பட்டவர்கள் கூறுவது என்ன?

சீமான் - பிரபாகரன் சந்திப்பு உண்மையா?

பட மூலாதாரம்,TWITTER

படக்குறிப்பு, சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 28 ஜனவரி 2025, 04:54 GMT
    புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்தாரா, புகைப்படம் எடுக்கப்பட்டதா என்பதெல்லாம் குறித்த விவாதங்கள் தமிழக அரசியல் களத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில நாட்களாக பெரியார் மீது தொடர் விமர்சனங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பல வருடங்களுக்கு முன்பாக அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தது தொடர்பான விவாதங்களும் எழ ஆரம்பித்திருக்கின்றன.

கடந்த ஜனவரி 19ஆம் தேதியன்று திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் என்பவர், தன்னுடைய X பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவில், "இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்" என்று குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் ஊடகங்களுக்கும் இது தொடர்பாக பேட்டியளித்தார் ராஜ்குமார். அந்தப் பேட்டிகளில் சீமானுக்கு பரிசளிப்பதற்காக இதுபோன்ற ஒரு படத்தை உருவாக்கித் தரும்படி ஒருவர் கேட்டதாகவும் அதற்காகவே அப்படி ஒரு படம் உருவாக்கப்பட்டதாகவும், உண்மையில் அப்படி ஒரு படம் எடுக்கப்படவே இல்லையன்றும் அவர் தெரிவித்தார்.

பிரபாகரனின் அண்ணன் மகன் கருத்து

அதற்கடுத்ததாக, பிரபாகரனின் அண்ணன் மகனான கார்த்திக் மனோகரன், சீமான் கூற்றுகளை மறுத்து தொலைக்காட்சி பேட்டி ஒன்றை அளித்தார்.

அந்தப் பேட்டியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்து சீமானிடம் பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, அவர் மிகுந்த கோபத்துடன் பதிலளித்தது, சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திரைப்பட ஒளிப்பதிவாளரான சந்தோஷ் என்பவர், இரு நாட்களுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மை என்று குறிப்பிட்ட அவர், அது தொடர்பாக சீமான் தெரிவிக்கும் பிற கருத்துகள், தகவல்கள் பொய்யானவை எனத் தெரிவித்தார்.

அதிநவீன துப்பாக்கியுடன் சீமான் இருக்கும் புகைப்படம், 'எல்லாளன்' என்ற திரைப்பட படப்பிடிப்பின் நடுவே எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பேட்டி வெளியான பிறகு, சமூக வலைதளங்களில் சீமான் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் கடுமையாக மோதி வருகின்றனர்.

சீமான் - பிரபாகரன் சந்திப்பு உண்மையா?

பட மூலாதாரம்,SOCIAL MEDIA

படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குள்ளாகும் புகைப்படங்களில் ஒன்று

"அது வெறும் 12 நிமிட சந்திப்பே"

சீமான் அளித்த பல ஊடக பேட்டிகளிலும் மேடைப் பேச்சுகளிலும் பிரபாகரனை தான் சந்தித்த போது நடந்தது என்று கூறி பல தகவல்களை வெளியிட்டுவந்தார்.

குறிப்பாக, தான் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் பிரபாகரன் நீண்ட நேரம் தன்னுடன் பேசியதாகவும் அவர் தெரிவித்துவந்தார். குறிப்பாக தனக்கு அங்கு அளிக்கப்பட்ட உணவு குறித்து விரிவாகப் பேசிவந்தார் சீமான். இந்தத் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து அவருடைய எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்தனர்.

தற்போது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் தெரிவிக்கும் தகவல்கள் உண்மை என்கிறார் புலிகளுக்கு நெருக்கமானவராக இருந்தவர்களில் ஒருவராக கருதப்படும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி.

"மொத்தமே 12 நிமிடங்கள்தான் பிரபாகரனை சீமான் சந்தித்தார்" என்கிறார் கொளத்தூர் மணி.

"ஆவணப் படம் ஒன்றை இயக்குவதற்கு சரியான ஆட்கள் தேவை என புலிகள் கேட்டுவந்தனர். சீமான் பெயர் உட்பட பலரது பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை விசிகவின் வன்னிஅரசு கொடுத்தார். என்னிடமும் சீமானைப் பற்றிக் கேட்டார்கள். நானும் அவரைப் பரிந்துரைத்தேன். இப்படித்தான் 2008ஆம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கைக்குச் சென்றார் சீமான். விமானம் மூலம்தான் அவர் அங்கே சென்றார்.

ஆனால், அந்த ஆவணப் படத்தை இயக்க இவரைப் பயன்படுத்தவில்லை. அங்கு போய்ச் சேர்ந்த சில நாட்களிலேயே பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. மொத்தம் 12 - 13 நிமிடங்கள் அவர் பிரபாகரனுடன் இருந்தார். பிரபாகரனைச் சந்திக்கச் செல்லும் போது log - Book ஒன்றில் செல்லும் நேரத்தையும் திரும்பி வரும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும். அதை வைத்தே இந்தத் தகவலைச் சொல்கிறேன்.

அங்கிருந்த காலகட்டத்தில், புலிகள் குறித்து மற்றவர்கள் பேசுவது, திரும்பி வந்த பிறகு புலிகளுடன் பழகியவர்கள் சொல்வதை வைத்து, அந்த சம்பவங்கள் தனக்கு நடந்ததாகச் சொல்ல ஆரம்பித்தார் சீமான்" என்கிறார் கொளத்தூர் மணி.

சீமான் - பிரபாகரன் சந்திப்பு உண்மையா?

பட மூலாதாரம்,VANNI ARASU / FACEBOOK

படக்குறிப்பு, "தமிழ்நாட்டில் எந்த இயக்குநரை இதனைச் செய்யச் சொல்லலாம் எனக் கேட்டார்கள். அப்போது நான் புகழேந்தி, ஜான் மகேந்திரன், சீமான் என ஒரு சிறிய பட்டியலைத் தந்தேன்"

ஆவணப் படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பையும் இழந்தார் சீமான்

தான்தான் சீமானின் பெயரை விடுதலைப் புலிகளுக்குப் பரிந்துரைத்தாகச் சொல்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு. "2005, 2007, 2008 என மூன்று முறை அங்கே சென்றேன். 2005-ஆம் ஆண்டில் செல்லும் போது தமிழீழ தொலைக்காட்சிக்காக சில கருவிகளையும் பிரபாகரன் கேட்டதால் சில பறைகளையும் வாங்கிக்கொண்டு சென்றேன். அந்தத் தருணத்தில் ஒரு ஆவணப் படத்தை இயக்குவதற்கான ஏற்பாடுகளை புலிகள் செய்து கொண்டிருந்தார்கள்.

தமிழ்நாட்டில் எந்த இயக்குநரை இதனைச் செய்யச் சொல்லலாம் எனக் கேட்டார்கள். அப்போது நான் புகழேந்தி, ஜான் மகேந்திரன், சீமான் என ஒரு சிறிய பட்டியலைத் தந்தேன். இதற்குப் பிறகு 2008ஆம் ஆண்டு பிப்ரவரியில் சீமான் அங்கு சென்றார். ஆனால், அவர் அந்த ஆவணப் படத்தை இயக்கத் தேர்வாகவில்லை. திரைப்பட இயக்குநர் பயிற்சிக்கும் இவர் தேர்வாகவில்லை. பிரபாகரனை சில நிமிடங்கள் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

அந்தத் தருணத்தில் பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் குடும்பத்தோடு சந்தித்ததாகச் சொல்கிறார் சீமான். அப்படி நடந்திருக்க வாய்ப்பேயில்லை" என்கிறார் வன்னியரசு.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் புறந்தள்ளுகிறது நாம் தமிழர் கட்சி. இந்த விஷயங்களை வைத்தெல்லாம் நாம் தமிழர் கட்சியை வீழ்த்த முடியாது என்கிறார் அக்கட்சியின் சர்வதேச செய்தித் தொடர்பாளரான சே. பாக்கியராசன்.

"இப்போது சீமான் பெரியாரைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதனால், பிரபாகரனை வைத்துத்தானே அரசியல் செய்கிறீர்கள், அதைக் காலி செய்கிறோம் என இந்த ஆட்டத்தைத் துவங்கியிருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் வைத்து நாம் தமிழர் கட்சியை வீழ்த்த முடியாது. சந்தோஷ், ராஜ்குமார் போன்றவர்கள் சொல்வது எதுவும் உண்மையில்லை. ஆனால், இதனால் சில நல்ல விஷயங்களும் நடக்க ஆம்பித்திருக்கின்றன.

புலிகள் இயக்கத்தில் இருந்துவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் இதுவரை அமைதியாக இருந்தார்கள். ஆனால் சந்தோஷ் பேசியது அவர்களை ஆத்திரப்படுத்தியிருக்கிறது. அவருக்கு எல்லாம் தெரியும் என்பதைப் போலவும் சீமானைப் பற்றி பிரபாகரனுக்கு எதுவும் தெரியாது என்பதைப் போலவும் பேசுகிறார் அவர். அதனால், அவர்கள் தற்போது பேச முன்வருகிறார்கள். நாங்கள்தான் இப்போது வேண்டாம் என சொல்லி வைத்திருக்கிறோம்" என்கிறார் பாக்கியராசன்.

நாம் தமிழர் கட்சியின் அடிப்படை, சீமான் பிரபாகரனைச் சந்தித்ததும் அது தொடர்பான புகைப்படமும்தான் என பெரியாரியவாதிகள் நினைத்து, அதனைக் காலிசெய்ய நினைக்கிறார்கள். ஆனால், துவக்கத்தில் வேண்டுமானால் அப்படியிருந்திருக்கலாம். நாம் தமிழர் கட்சி அதனைக் கடந்துவந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை வைத்து சீமானையோ, எங்களையோ எரிச்சல்படுத்தலாம், வேறு எதுவும் நடக்கப்போவதில்லை என்கிறார் பாக்கியராசன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

Love you too Nathams ❤️

நான் பெரிய புள்ளி யும் இல்லை.

bully ம் இல்லை….

வெறும்…

புல்லீங்கோ…..

பிகு

இந்த ஞானம் - பொய் ஐடியை என் ஜாடையில் ஆரம்பித்து பித்தலாட்டம் ஆட முன்னர் வந்திருக்க வேண்டும்.

Better late than never.

அடம் பிடியாமல்....

அடுத்தவர்களையும் கருத்தாட விடுங்கோ! தரமான விவாதம் முக்கியம். 

எனது ஐடியில் வரவே நேரமில்லை. வேறு ஐடி என்று கதை அளக்காமல்... 

அமைதி.... அமைதி.... கொஞ்சம் அமைதி!!

🙏

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு த‌னி மனித‌னை 10 கோமாளிக‌ள் சேர்ந்து அடிக்கும் போது தெரியுது 

அந்த‌ ஒருத‌ன் சொல்வ‌தில் ப‌ல‌ உண்மைக‌ள் இருக்கு என்று

 

இந்த‌ வ‌ன்னி அர‌சு இப்போது வேறு கூட்ட‌னியில் இருந்து இருந்தால் வாயை மூடி விட்டு க‌ம்ம‌ன்ன‌ இருந்து இருக்கும்.............................

  • கருத்துக்கள உறவுகள்

@ரசோதரன்

வணக்கம். வார இறுதியில் ஒரு பயண ஏற்பாடு. அது வரை உங்களுடன் அடுத்தவர்இடையூறில்லாத ஒரு கருத்தாடல்.

உங்கள் தமிழக அரசியல் குறித்த பார்வையில் ஒரு குழப்பம் இருப்பதாக கருதுகிறேன்.

நீங்கள் தமிழக அரசியலை, ஈழ அரசியல் ஊடாக பார்க்கிறீர்கள் என்று நிணைக்கிறேன், சரியா?

எனக்கும் அதே குழப்பம் இருந்தது. தமிழக அரசியலை தனித்தே அதன் போக்கில் மட்டும் பார்தால் சில பரிமாணங்கள் புரியும்.

15ம் நூறாண்டு வரை யாழ்ப்பாண தமிழ் அரசின் மீதான சிங்கள சீண்டல்களுக்கு, பாதுகாப்பரணாக தமிழகமே இருந்து வந்தது வரலாறு.

இந்த அரண் காரணமாகவே, ஈழத்தமிழர், அநுராதபுரம், பொலநறுவை, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு எங்கும் பரவி இருந்தனர்.

15ம் நூறாண்டு இறுதியில் சேர நாட்டுக்கு போர்த்துக்கேயர்கள் வந்தார்கள். மத்தியகாலப்பகுதி சிலுவை யுத்தத்தால் இஸ்லாமியர் மீது கடுப்புடன் வந்த பறங்கியர்களுக்கு, எதிரிக்கு எதிரி என்ற வகையில் நண்பராயினர் விஜய நகரப் பேரரசினர்.

வடக்கே, முகாலய இஸ்லாமிய  படையெடுப்புக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பறங்கிய ஆயுதங்கள் கை கொடுக்க, அவர்கள் செய்த வேலை இன்றளவும் பாக்கு நீரீணையின் இருபக்கமும் வாழும் தமிழர்களை பாதிக்கின்றது.

தமது பேரரசிணைப் பலப்படுத்த தமிழரின் தென்பகுதியை கைப்பற்றிக் கொண்டனர். அத்துடன் சேர, சோழ, பாண்டிய அரசுகள் முடிவுக்கு வந்தன.

தெலுங்கினை தாய் மொழியாகக் கொண்ட அவர்களுடன், நல்லுறவைப் பேணி, தென் கரையோரப் பகுதியில் வியாபார முகவங்களை அமைத்துக் கொண்ட போர்த்துக்கேயர்கள், அங்கிருந்து, யாழ் ராசதானியை பிடித்த போது தமிழக உதவி கிடைக்கவில்லை. காரணம் வெள்ளிடை மலை.

இறுதி யுத்த காலப் பகுதியில் உதவிகளை தடுத்து, உண்ணாவிரத நாடகமாடியது ஏன் என்பதும் புரியாததல்ல.

இன்றும் விஜய நகர வழித்தோன்றல் ஆட்சியே தமிழகத்தில் தொடர்கிறது. கேரளமும், கர்நாடகாவும் தப்பித்தன.

தமிழகமும், தமிழ் ஈழமும் மாட்டிக் கொண்டன.

ஈழத்தமிழ் தேசிய எழுச்சியின் வீழ்ச்சிக்கும் அதுவே காரணம் என பிரபாகரன் நிணைத்திருப்பார்.

அவரது தேடல், இன்றைய தமிழக தமிழ் தேசிய எழுச்சி என்பது எனது பார்வை.

அது போலவே, ஈழத்தமிழன் விடுதலை சாவி, தமிழக தமிழ் தேசிய எழுச்சியின் வெற்றியில் மட்டுமே தங்கியுள்ளது என்பது பிரபாகரனின் பட்டறிவு.

அது நடக்காவிடில், 520 வருடமாக தொடரும், ஈழத்தமிழர் அவலத்துக்கு முடிவு இல்லை.

இந்த திராவிடர்கள், தமிழர் மத்தியில் சாதியவாதத்தை மூலதனமாக வைத்து, ஆட்சி செய்கிறார்கள். காமராஜருக்கு பின்னர் ஆண்ட எவருமே தமிழர் இல்லை என்பது தமிழ் தேசியர் கருத்து. (எடப்பாடி ஒரு விபத்து)

ஆகவே, வேறு நாட்டவராயினும், சாதியத்துக்கு அப்பால் நின்று போராட்டத்தை நடாத்திய தமிழர் பிரபாகரணை தலைவராக காட்டி தமிழ் தேசியம் செல்கிறது. அதன்காரணமாக வழமையான சாதிய வகைப்படுத்தல் செய்ய முடியாமல் திராவிடம் தடுமாறுகிறது.

பிரபாகரனை தமிழகத்துக்கு கொண்டு செல்வதை விரும்பாதோரை வகைப்படுத்தலாம்.

ஒன்று அவரில் உண்மையான கரிசணை கொண்டவர்கள். இன்னுமொரு வகை வேறு இயக்கங்களை சேர்ந்த முன்னாள் போராளிகள்.

விமானப் பயணம் செய்யும் போது, கவனித்திருப்போம். ஒக்சிஜன் மாஸ்க் போட வேண்டிய நிலை வந்தால், முதலில் பெரியவர்கள் போட்டே, பிள்ளைகளுக்கு போட சொல்வார்கள்.

ஆகவே, எமது விடிவு, தமிழக தமிழ்த் தேசியத்தின்வெற்றியுடன் பின்னிப் பிணைந்தது.

வன்னி நிதர்சனம் ரிவியில், இன்றும் வாழும் பத்திரிகையாளர், திருநாவுக்கரசு, பிரபாகரன் இருக்கும் போதே சொன்னார்: எமது போராட்டத்தின் சாவி தமிழகத்தில் உள்ளது என்று.

தமிழ் தேசியம் வென்றாலே, அந்த சாவியின் துரு நீங்கும்.

இது குறித்த உங்கள் பார்வையை தாருங்கள்!

 

 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

@ரசோதரன்

வணக்கம். வார இறுதியில் ஒரு பயண ஏற்பாடு. அது வரை உங்களுடன் அடுத்தவர்இடையூறில்லாத ஒரு கருத்தாடல்.

உங்கள் தமிழக அரசியல் குறித்த பார்வையில் ஒரு குழப்பம் இருப்பதாக கருதுகிறேன்.

நீங்கள் தமிழக அரசியலை, ஈழ அரசியல் ஊடாக பார்க்கிறீர்கள் என்று நிணைக்கிறேன், சரியா?

எனக்கும் அதே குழப்பம் இருந்தது. தமிழக அரசியலை தனித்தே அதன் போக்கில் மட்டும் பார்தால் சில பரிமாணங்கள் புரியும்.

15ம் நூறாண்டு வரை யாழ்ப்பாண தமிழ் அரசின் மீதான சிங்கள சீண்டல்களுக்கு, பாதுகாப்பரணாக தமிழகமே இருந்து வந்தது வரலாறு.

இந்த அரண் காரணமாகவே, ஈழத்தமிழர், அநுராதபுரம், பொலநறுவை, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு எங்கும் பரவி இருந்தனர்.

15ம் நூறாண்டு இறுதியில் சேர நாட்டுக்கு போர்த்துக்கேயர்கள் வந்தார்கள். மத்தியகாலப்பகுதி சிலுவை யுத்தத்தால் இஸ்லாமியர் மீது கடுப்புடன் வந்த பறங்கியர்களுக்கு, எதிரிக்கு எதிரி என்ற வகையில் நண்பராயினர் விஜய நகரப் பேரரசினர்.

வடக்கே, முகாலய இஸ்லாமிய  படையெடுப்புக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பறங்கிய ஆயுதங்கள் கை கொடுக்க, அவர்கள் செய்த வேலை இன்றளவும் பாக்கு நீரீணையின் இருபக்கமும் வாழும் தமிழர்களை பாதிக்கின்றது.

தமது பேரரசிணைப் பலப்படுத்த தமிழரின் தென்பகுதியை கைப்பற்றிக் கொண்டனர். அத்துடன் சேர, சோழ, பாண்டிய அரசுகள் முடிவுக்கு வந்தன.

தெலுங்கினை தாய் மொழியாகக் கொண்ட அவர்களுடன், நல்லுறவைப் பேணி, தென் கரையோரப் பகுதியில் வியாபார முகவங்களை அமைத்துக் கொண்ட போர்த்துக்கேயர்கள், அங்கிருந்து, யாழ் ராசதானியை பிடித்த போது தமிழக உதவி கிடைக்கவில்லை. காரணம் வெள்ளிடை மலை.

இறுதி யுத்த காலப் பகுதியில் உதவிகளை தடுத்து, உண்ணாவிரத நாடகமாடியது ஏன் என்பதும் புரியாததல்ல.

இன்றும் விஜய நகர வழித்தோன்றல் ஆட்சியே தமிழகத்தில் தொடர்கிறது. கேரளமும், கர்நாடகாவும் தப்பித்தன.

தமிழகமும், தமிழ் ஈழமும் மாட்டிக் கொண்டன.

ஈழத்தமிழ் தேசிய எழுச்சியின் வீழ்ச்சிக்கும் அதுவே காரணம் என பிரபாகரன் நிணைத்திருப்பார்.

அவரது தேடல், இன்றைய தமிழக தமிழ் தேசிய எழுச்சி என்பது எனது பார்வை.

அது போலவே, ஈழத்தமிழன் விடுதலை சாவி, தமிழக தமிழ் தேசிய எழுச்சியின் வெற்றியில் மட்டுமே தங்கியுள்ளது என்பது பிரபாகரனின் பட்டறிவு.

அது நடக்காவிடில், 520 வருடமாக தொடரும், ஈழத்தமிழர் அவலத்துக்கு முடிவு இல்லை.

இந்த திராவிடர்கள், தமிழர் மத்தியில் சாதியவாதத்தை மூலதனமாக வைத்து, ஆட்சி செய்கிறார்கள். காமராஜருக்கு பின்னர் ஆண்ட எவருமே தமிழர் இல்லை என்பது தமிழ் தேசியர் கருத்து. (எடப்பாடி ஒரு விபத்து)

ஆகவே, வேறு நாட்டவராயினும், சாதியத்துக்கு அப்பால் நின்று போராட்டத்தை நடாத்திய தமிழர் பிரபாகரணை தலைவராக காட்டி தமிழ் தேசியம் செல்கிறது. அதன்காரணமாக வழமையான சாதிய வகைப்படுத்தல் செய்ய முடியாமல் திராவிடம் தடுமாறுகிறது.

பிரபாகரனை தமிழகத்துக்கு கொண்டு செல்வதை விரும்பாதோரை வகைப்படுத்தலாம்.

ஒன்று அவரில் உண்மையான கரிசணை கொண்டவர்கள். இன்னுமொரு வகை வேறு இயக்கங்களை சேர்ந்த முன்னாள் போராளிகள்.

விமானப் பயணம் செய்யும் போது, கவனித்திருப்போம். ஒக்சிஜன் மாஸ்க் போட வேண்டிய நிலை வந்தால், முதலில் பெரியவர்கள் போட்டே, பிள்ளைகளுக்கு போட சொல்வார்கள்.

ஆகவே, எமது விடிவு, தமிழக தமிழ்த் தேசியத்தின்வெற்றியுடன் பின்னிப் பிணைந்தது.

இது குறித்த உங்கள் பார்வையை தாருங்கள்!

 

 

 

இது செல்வநாயகம். செல்வ-நாயக்கர் என்ற ரீதியில் யாழில் எழுதப்பட்டு, முன்பே கேலிக்கு உள்ளான ஒரு வரலாற்று புனைவு.

இந்த புனைவு சல்லி சல்லியாக உடைக்கப்ப்ட்ட திரி பழைய யாழில் உள்ளது. 

விரும்பியோர் தேடி வாசிக்கவும்.

3 hours ago, Nathamuni said:

அடம் பிடியாமல்....

அடுத்தவர்களையும் கருத்தாட விடுங்கோ! தரமான விவாதம் முக்கியம். 

எனது ஐடியில் வரவே நேரமில்லை. வேறு ஐடி என்று கதை அளக்காமல்... 

அமைதி.... அமைதி.... கொஞ்சம் அமைதி!!

🙏

👆 அமைதி போதுமா 🤣

@தூயவன்

தெலுங்கு நடிகரை அவதாரில் வைத்திருக்கும் நீங்களா இப்படி கேட்பது.

சரி - நாம் 16 வருடமாக ஒன்றும் கிழிக்கவில்லை, நீங்கள்?

நாமாவது யாழில் எழுதினோம்.

2009 க்கு முன் நீட்டி முழக்கிய நீங்கள்?

2009 இல் யாழை மூடி விட்டு படுத்தவர் இப்பதான் தூக்கம் கலைகிறதா?

4 hours ago, தூயவன் said:

விஜய லட்சுமியும் சீமானும் 2008ம் காலப்பகுதியில் ஆக வாழ்ந்தார்கள். பின்னாடி அந்த வாழ்க்கை சரி வரவில்லை என்று பிரிந்து போய் விட்டார்கள்.  அதில் உங்களுக்கு ஏதும் பிரச்சனை உள்ளதா?  

இதில் என்ன பிரச்சனை என நீங்கள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்த போது யாழில் பல திரிகள் ஓடின.

அதில் என்ன்கருத்தும் உள்ளது.

தேடி வாசிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது செல்வநாயகம். செல்வ-நாயக்கர் என்ற ரீதியில் யாழில் எழுதப்பட்டு, முன்பே கேலிக்கு உள்ளான ஒரு வரலாற்று புனைவு.

இந்த புனைவு சல்லி சல்லியாக உடைக்கப்ப்ட்ட திரி பழைய யாழில் உள்ளது. 

விரும்பியோர் தேடி வாசிக்கவும்.

👆 அமைதி போதுமா 🤣

@தூயவன்

தெலுங்கு நடிகரை அவதாரில் வைத்திருக்கும் நீங்களா இப்படி கேட்பது.

சரி - நாம் 16 வருடமாக ஒன்றும் கிழிக்கவில்லை, நீங்கள்?

நாமாவது யாழில் எழுதினோம்.

2009 க்கு முன் நீட்டி முழக்கிய நீங்கள்?

2009 இல் யாழை மூடி விட்டு படுத்தவர் இப்பதான் தூக்கம் கலைகிறதா?

இதில் என்ன பிரச்சனை என நீங்கள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்த போது யாழில் பல திரிகள் ஓடின.

அதில் என்ன்கருத்தும் உள்ளது.

தேடி வாசிக்கவும்.

சுத்தம்.

மூக்கை நுளையாமல் இருக்கமுடியாத நிலை!!

அவசர உதவி உங்களுக்கு தேவை!!🤗
 

தயவுடன், ஓரமாக நின்று அடுத்தவர்களை கருத்தாட விடுங்கள்.

Edited by Nathamuni

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.