Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Justin said:

ஓம், புலிகள் பற்றிய திரிப்பிற்கு திமுக ஊதுகுழல் ஆதாரமாகக் காட்டியிருக்கும் அனேகமானவை புலிகளின் வெளியீடுகள்.

எனவே "திரிப்பிற்கு ஆதாரமான வெளிப்படுத்தல்களும் திரிப்பே!"  என்று மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்ள வேண்டியது தான்😎!

அதில் ஒன்றுகூட புலிகளின் அதிகாரபூர்வமான வெளியீடல்லவே!

Edited by Eppothum Thamizhan

  • Replies 228
  • Views 9.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாத

  • கிருபன்
    கிருபன்

    2004 இல் சீமான் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழீழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர். அப்போது பெரியாரின் சிந்தனைகளை ஆதரித்தவராகவும் இருந்தார். அரசியலில் ஈடுபடவும் இல்லை. 2004 இல் சீமானின் கட்டுரை எழுத அ

  • இந்த கேள்வியே அபத்தமானது. ஹோமோ சேப்பியன்ஸ் இல் இருந்து பல்லாயிரம் ஆண்டுகால மரபணுத்திரிபுகள்,  பரிணாம வளர்சசி மூலம் பல்வேறு மரபு இனங்கள் உருவாகியுள்ளன. இது  டிஎன்ஏ பரிசோதனைகள் மூலம் தெளிவாக கண்டறியப்பட

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

நான் மாரிதாஸ்சின் யூடுப்பை பார்த்தேன் அவ‌ன் எல்லாத்தையும் வெளிப்ப‌டையாய் போட்டு காட்டுகிறார்...............அவ‌ன் மீது ஏன் இந்த‌ பெரியாரிஸ்சுக‌ள் அவ‌தூறு வ‌ழ‌க்கு போட‌ வில்லை..............அவ‌ன் பேசுவ‌தெல்லாம் ஆதார‌த்தோடு .................அத‌னால் அவ‌னை இவ‌ர்க‌ளால் ஒன்றும் செய்ய‌ முடிய‌ வில்லை.................

உங்களுக்கு உங்களுடைய சிந்தனை முரண் புரிகிறதா? 
ஆதாரம் காட்ட முடியவில்லை. பின்னர் உங்களுடைய குற்றசாட்டை நியாயப்படுத்தவதற்கு அவரை ஏன் கைதுசெய்யவில்லை, இவரை ஏன் கைதுசெய்யவில்லை என்று வருகிறீர்கள். 
மரிதாஸை கைதுசெய்யவில்லை என்றால், அவரின் கருத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது அவரிடமும் ஆதாரம் இல்லாமல் இருக்கலாம் . 
எல்லோருமே எதோ ஒரு யுகத்தின் அடிப்படையில் குற்றசாட்டை அடிக்கிக்கொண்டு போவது தான் இங்கே பிரச்சனை. 
பெரியார் பற்றி எனக்கும் நல்லபிப்பிராயம் இல்லை தான். அதற்காக கண் மூடித்தனமான குற்றசாட்டுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது தானே. 

இந்த திராவிடர் / தமிழர் சண்டையில் இரண்டு பக்கமுமே மனசாட்சியே இல்லாமல் நடந்துகொள்கிறார்கள். 

இனி இந்த திரிக்குள்ள எழுதிப் பயன் இல்லை🙈

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

😂🤣 ஏன் சீமானின் புலிகள் பற்றிய உருட்டைப் புறக்கணித்து விட்டு இதை வாசிக்க வேண்டும்? அத்தோடு சேர்த்து வாசித்தால் தான் கட்டுரையின் நோக்கமே விளங்கும்.

சீமானின் உருட்டுக்கு, "அப்படியாக புலிகள் திராவிடத்தை எதிர்த்தோர் அல்ல!" என்று ஆதாரம் தந்திருக்கிறார்கள்.

ஒரிஜினல் உருட்டல் காரர் சீமானை அப்படியே "இருட்டு பக்றவுண்டில்" தள்ளி விட்டு கட்டுரையாளர் திராவிட பெயின்ற் அடிக்கிறார் என்று நிறுவ இவ்வளவு குத்தி முறிவா ஐயா?

இப்படியெல்லாமா றூம் போட்டு யோசிப்பீங்கள்😂?

வேறொரு திரியை இதற்குள் ஏன் காவுகிறீர்கள்? நாம் கருத்தெழுதுவது இந்தத்திரியின் தலைப்புக்கும் அதிலுள்ள இணைப்புக்கும் மட்டுமே! இதற்குள் ஏன் சீமானின் உருட்டு வரவேண்டும்? எதற்கெடுத்தாலும் வைரவரின் வாகனம்போல் .......

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஊர்க்காவலன் said:

உங்களுக்கு உங்களுடைய சிந்தனை முரண் புரிகிறதா? 
ஆதாரம் காட்ட முடியவில்லை. பின்னர் உங்களுடைய குற்றசாட்டை நியாயப்படுத்தவதற்கு அவரை ஏன் கைதுசெய்யவில்லை, இவரை ஏன் கைதுசெய்யவில்லை என்று வருகிறீர்கள். 
மரிதாஸை கைதுசெய்யவில்லை என்றால், அவரின் கருத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். அல்லது அவரிடமும் ஆதாரம் இல்லாமல் இருக்கலாம் . 
எல்லோருமே எதோ ஒரு யுகத்தின் அடிப்படையில் குற்றசாட்டை அடிக்கிக்கொண்டு போவது தான் இங்கே பிரச்சனை. 
பெரியார் பற்றி எனக்கும் நல்லபிப்பிராயம் இல்லை தான். அதற்காக கண் மூடித்தனமான குற்றசாட்டுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது தானே. 

இந்த திராவிடர் / தமிழர் சண்டையில் இரண்டு பக்கமுமே மனசாட்சியே இல்லாமல் நடந்துகொள்கிறார்கள். 

இனி இந்த திரிக்குள்ள எழுதிப் பயன் இல்லை🙈

இறுதிக் காலத்திலும் திருக்குறளை பழித்தும் பேசிய பெரியார்

இறுதிக் காலத்திலும் திருக்குறளை பழித்துப் பேசிய பெரியார்

 

வாலசா வல்லவனுக்கு மறுப்பு!

( வாலாசா வல்லவன் )

 

திராவிட சொம்பு வாலாசா வல்லவன் அவர்கள் திருக்குறளை பெரியார் மலத்தோடு ஒப்பிட்டதாக சீமான் பேசியுள்ளார். அதற்கு சான்று காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

 

நானும் சான்றோடு ஐயா ஆனைமுத்து தொகுத்த “ஈ.வெரா. சிந்தனை தொகுப்புகள்” நூலிலிருந்து வெளியிட்டேன். அதை மறுக்க முடியாத திராவிட சொம்பு வாலாசா வல்லவன் பெரியார் எழுதியவை முழுமையாக இல்லை என்றார்.

 

நான் முழுமையின் சுருக்கத்தை தெளிவாகவே எழுதியுள்ளேன். பின்வருமாறு:

 

பெரியார் திருக்குறளை மலத்தோடு

ஒப்பிட்டார். ஆதாரம் இதோ….

 

பெரியாரியவாதிகள் பலரும் பெரியார் மலத்தோடு ஒப்பிட்டு கூறியதை மறுத்து வருகின்றனர்.

 

பெரியார் பேசினார் என்பதற்கு ஐயா ஆனைமுத்து தொகுத்த ஈ.வெ.ரா. சிந்தனைகள் , ( தொகுதி 2, பக்கம் 1259 ) புத்தகம் சான்றாக உள்ளது. ஐயா ஆனை முத்து அமைப்பில் இருக்கக்கூடிய தோழர் வாலசா வல்வவன் அவர்களே இதனை மறுப்பதுதான் பெரிய வேடிக்கையாக உள்ளது.

 

“வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம் எல்லாம் போய் விட்டால் நமக்கு எது தான் நூல் என்று கேட்டார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது ? என்று பதில் கூறினேன்.”

 

பெரியாரின் இந்த பேச்சு என்பது திருக்குறளை பெரியார் ஏற்றுக் கொண்ட பின்னர் அவரே கூறிய ஒரு செய்தியாகும். எனவே இதனை கடந்த காலத்தில் அவர் பேசியதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பெரியாரியவாதிகள் வாதிடுகின்றனர்.

 

கடந்த காலத்தில் அவர் பேசியிருந்தாலும் அவரின் உள்ளக்கிடக்கை தானே அதில் வெளிப்படுகிறது. திருக்குறளை ஏற்றுக் கொண்ட பின்னர் அதனை சொல்ல வேண்டிய அவசியமில்லையே? இப்படி பேசியதற்காக துளியுண்டு வருத்தம் கூட அந்த உரையில் தெரிவிக்காதது ஏன்?

 

பரிமேலழகர் உரையை படித்ததால் திருக்குறளை மறுத்து வந்ததாகக் கூறும் பெரியார் பலரின் உரையை படித்த பிறகு தன் நிலையை மாற்றிக் கொண்டதாக தெரிவிக்கிறார். உண்மை அதுவெனில், திருக்குறளை ஆதரிக்கும் நிலைக்கு வந்த பிறகு திரும்பவும் கடுமையாக மறுக்கும் நிலைக்குச் சென்றதேன்?

 

திருக்குறளை மலத்திற்குச் சமமாக நினைக்கும் புத்திதான் திரும்ப திரும்ப அவரின் வாழ்வின் இறுதி காலத்திலும் ஆட்டிப் படைத்திருக்கிறது.

 

இல்லையென்றால் அண்ணா ஆட்சி காலத்தில் கடவுள் படத்தோடு சேர்த்து வள்ளுவர் படத்தை அகற்றச் சொல்லியிருப்பாரா?

 

“நான் ஒருவன் தான் திருக்குறளை எதிர்த்தேன் ” (27.12.1972 கலைமகள் இதழ் பேட்டி)

 

-என்று வாழ்வின் இறுதிக் காலத்தில் கூறுகிறார். பெரியார் இப்படி சவால் விட்டுச் சொல்வதை திறனாய்வு என்று எப்படிச் சொல்ல முடியும்? இது திருக்குறளின் மீதான வன்மத்தை தானே வெளிக் காட்டுகிறது.”

 

இதற்கு மேல் திராவிட சொம்பு வாலாசா வல்லவனுக்கு என்ன பதில் வேண்டும்?

 

பெரியார் (1950க்கு ) முன்பு திருக்குறளை பகுத்தறிவுக்கு ஒவ்வாத நூலாக கருதியதையும் மலத்திற்கு எடுத்துக் காட்டாகக் கூறியதையும் திராவிட சொம்பு வாலாசா வல்லவன் எப்படி கருதுகிறார்?

 

கடந்த காலத்தில் பேசியது தவறு என்று சொல்ல அவரின் முரட்டு பெரியார் பக்தியானது இடம் தரவில்லையோ?

 

அதே கட்டுரையில் , பரிமேலழகர் உரையை தவறு என்று அறிவாளிகள் கூறியதால் திருக்குறளை ஆதரிக்க முன் வந்தேன் என்று கூறும் பெரியார் திருக்குறளின் மேன்மை குறித்து விரிவாகத் தெரிவிக்கிறார்.

 

இதைப் படித்து விட்டு திராவிட சொம்பு வாலாசா வல்லவன் அவர்கள் பெரியார் திருக்குறளை ஆதரித்துப் பேசியதை நான் வெட்டி விட்டதாக ஆதங்கப்படுகிறார்.

 

ஆனால் உண்மை என்னவெனில், திருக்குறள் எதிர்ப்பு – ஆதரவு- எதிர்ப்பு என்று மாறி மாறி நிலைப்பாடு எடுக்கும் பெரியார் குறித்து விமர்சிக்காமல், தனக்குத் தேவையானதை மட்டும் வெட்டி எடுத்துப் பேசுவதுதான் திராவிட சொம்பு வாலசா வல்லவனுடைய வேலையாகும்.

 

கால வரிசைப்படிப் திருக்குறள் குறித்து பெரியார் என்ன பேசினார் என்பதை திராவிட சொம்பு வாலாசா வல்லவன் எழுதத் தயாரா?

 

முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் பெரியார் என்பதுதான் எனது நிலைப்பாடு. இதைச் சொன்னால் வாலாசா வல்லவன் போன்ற பெரியாரின் முரட்டுப் பக்தர்களுக்கு கோபம் வருகிறது.

 

திருக்குறள் மீது எப்போதும் காழ்ப்புணர்ச்சியோடு கருத்து மாறுபாடு கொண்டவர் பெரியார். சில குறள்களில் தனக்கு உடன்பாடு இருப்பதைப் போல காட்டிக் கொள்வார்.

 

ஒரு கால கட்டத்தில் அதன் அடிப்படை கருத்து ‘ஆரிய எதிர்ப்பு’ என்பார். மற்றுமொரு கால கட்டத்தில் அதன் அடிப்படை கருத்து ‘ஆரிய ஆதரவு’ என்பார்.

 

தமிழை எந்தளவுக்குப் பழித்தாரோ அந்த அளவுக்கு திருக்குறளை பழிக்கவும் தயங்கியதில்லை.

 

இவர் 1949இல் சென்னையில் திருக்குறள் மாநாடு நடத்தியதை பெருமை பொங்க பேசுபவர்கள் கடந்த காலத்தில் திருக்குறளை மலத்தோடு ஒப்பிட்டுக் கூறியதைக் கண்டு சினம் கொள்ள மாட்டார்கள்.

 

திருக்குறள் குறித்து பெரியாரின் ஆதரவு நிலைப்பாட்டை முதலில் காண்போம்.

 

14.3.1948 மயிலாப்பூர் திருவள்ளுவர் கழகம் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் மாநாட்டில், “திருக்குறளில் எத்தகைய பகுத்தறிவுக்கு புறம்பான ஆபாசக் கருத்துகளுக்கும் அதில் இடமில்லை என்று கூறியதோடு, திருக்குறள் ஆரிய தர்மத்தை மனு தர்மத்தை அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதை நீங்கள் உணர வேண்டும்”

 

ஈரோட்டில் 23,24.10.1948இல் நடைபெற்ற திராவிடர் கழக 19வது மாநாட்டில், “குறள் ஹிந்து மதக் கண்டன புத்தகம் என்பதையும், அது சர்வ மதத்திலுள்ள சத்துக்களை எல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள மனித தர்ம நூல் என்பதையும் எல்லோரும் உணர வேண்டும்” என்றும் கூறுகிறார்.

 

15.1.1949 சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் திருக்குறள் மாநாடு நடத்தப்பட்டது. அதில், “குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம்” என்றும் பேசினார்.

 

விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனா தாசன் ஆகிய மூன்று பேர் இணைந்து எழுதிய நூலான “ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்” நூலில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

“1949 பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் திருக்குறள் மாநாட்டைப் பெரியார் நடத்தினார். இதற்கு முன்பெல்லாம் அவர் மொத்தத்தில் புலவர்களே மோசம், தமிழ் இலக்கியமே குப்பை, தமிழே காட்டுமிராண்டி மொழி என்றெல்லாம் கருத்துக் கூறியதால் தமிழ்ப்புலவர்கள் மத்தியில் கடும் கோபமும் எதிர்ப்பும் ஏற்பட்டன.

 

அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன் போன்றவர்கள் பெரியாரிடம் “புராணங்களை எதிர்க்கிற வேகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றையும் சேர்த்துத் தாக்கிடுவது முறையல்ல. தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் நாமே பாதுகாப்பு. குறள் உலகப் பொதுமறை என்பதை நாம் உணர்த்த வேண்டும்” என்றெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒதிய பிறகு தாமதித்தேனும் பலன் ஏற்பட்டது. இப்போது பெரியார் தமிழ் இலக்கியங்களையும், புலவர்களையும் தாக்குவதை நிறுத்திக் கொண்டார்.”

 

(பக். 169)

 

மேற்கண்ட செய்தியின் படி திருக்குறள் மாநாடு அண்ணா, ஈ.வெ.கி.சம்பத், நெடுஞ்செழியன் ஆகியோரின் நிர்பந்தத்தின்படி நடத்தப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு எதிரான பெரியாரிடமே சில ஆண்டுகளாக அதுபற்றி நல்லவிதமாக ஓதி வந்தபடியால் வேறு வழியின்றி திருக்குறள் மாநாடு நடத்த பெரியாரும் ஒப்புக் கொண்டார் என்பதும் விளங்கும்.

 

பரிமேலழகர் உரையை மறுத்து அறிவாளிகள் கூறியதை ஏற்கும் நிலைக்கு தாம் வந்ததாக அவர் வெளியில் சொல்லிக் கொண்டு வந்த நிலையில் மீண்டும் வேதாளம் போல முருங்கை மரம் ஏறி திருக்குறளை தாக்கத் தொடங்கினார்.

 

தமது 90வது பிறந்த நாள் கட்டுரையில் எழுதுகிறார்:

தமிழர்களின் பகுத்தறிவுக்கும், சமுதாயக் கேடு நீக்கலுக்கும் தமிழர்களால், தமிழ்ப்புலவர்களால் போற்றப்படுகிறவர்களில் அய்ந்து பேர்கள் எதிரிகளாவார்கள். அவர்கள் யார் என்றால், 1.வள்ளுவன், 2. தொல்காப்பியன், 3. கம்பன், 4. இளங்கோவன், 5. சேக்கிழார்.

 

இந்த அய்ந்து பேர்களுக்கும் பகுத்தறிவில்லை என்பதோடு இவர்கள் இனஉணர்ச்சி அற்ற இனவிரோதிகளாக ஆகி விட்டார்கள். வள்ளுவன் அறிவைக் கொண்டு ஒரு நூல் (குறள்) எழுதினான் என்பதல்லாமல் அதில் பகுத்தறிவைப் பயன் படுத்தினான் என்று சொல்வதற்கில்லை.

 

அதில் மூடநம்பிக்கை, பெண்ணடிமை, ஆரியம் ஆகியவை நல்லவண்ணம் புகுத்தப் பட்டிருக்கின்றன. குறளுக்கு மதிப்புரை கொடுத்தவர்களில் சிலர் “குறள் வேத, சாஸ்திரங்களின் சாரம்” என்று கூறியிருக்கிறார்கள். குறளை ஊன்றிப் பார்த்தால் அது உண்மை என்று புலப்படும்.

 

….தமிழனுக்கு வேண்டியது மானம், அறிவு, இனஉணர்ச்சி ஆகியவைகளேயாகும். இவற்றிற்கு மேற்சொன்ன திருவள்ளுவன், தொல்காப்பியன், கம்பன், இளங்கோவன், சேக்கிழார் ஆகிய அய்வரும் இவர்களது நூல்களான குறள், தொல்காப்பியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம் ஆகிய அய்ம்பெரும் இலக்கியங்களும் எந்த அளவுக்குப் பயன்படும் என்று சவால் விட்டுக் கேட்கிறேன் அல்லது எந்த இவற்றிற்கு உயிர், செலாவணி, இருக்கும்வரை தமிழனுக்கு மானம், அறிவு, இன உணர்ச்சி ஏற்படமுடியுமா? ஏற்படுத்த முடியுமா? என்று கேட்கிறேன்.

 

(பெரியார், விடுதலை 90 வது பிறந்தநாள் மலர், 17.09.1968)

 

அண்ணாவின் ஆட்சியில் உலகத்தமிழ் மாநாடு நடக்கவிருந்த நேரத்தில் (1968) தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எனும் நூல் பெரியாரால் வெளியிடப்பட்டது. (தற்போது தலைப்பு “தமிழும் தமிழரும்” என்று மாற்றப் பட்டுள்ளது)

 

அதில் திருவள்ளுவர், தொல்காப்பியர், கம்பர் ஆகிய மூவரும் கடுஞ்சொற்ளால் ஏசப்பட்டனர். இம் மூவர்களும் சாதியையும், சாதித் தொழிலையும் ஏற்றுக் கொண்டவர்களே ஆவார்கள் என்றார்.

 

பெரியார் கூறுகிறார்: திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு கூறிச் சென்றார்.”

 

பெரியாருக்கு சாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வரையிலும் திருக்குறளின் மேல் நல்லெண்ணம் பிறக்க வில்லை.

 

27.12.1972இல் ‘கலைமகள்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார்:

 

“குறளை எடுத்துக்குங்க. நான் மட்டும் தான் குறளை கண்டிக்கிறேன்…. நான் குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர் கூட அதை ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்னு கேட்டாரு. குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக்கிட்டாரு. இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தியது குறள். அதை அப்படியே இப்பவும் நாம் ஏத்துக்கணும்னா?”

 

திருக்குறள் மீது பெரியாரின் பார்வை என்பது எப்போதும் முன்னுக்குப் பின் முரண்பாடு கொண்டவை என்பதற்கு மேற்கண்ட அவரது முந்தைய பதிவுகளே அவரைத் தோலுரிக்கும்.

 

திருவள்ளுவருக்கு காவி உடை கட்டி சனாதனவாதியாக சித்தரிக்கும் சங்கிகளின் செயலுக்கும் , ஆரிய ஆதரவு நூல் என்று சொல்லும் பெரியாருக்கும் பெரிய வேறுபாடு இல்லை. திருவள்ளுவரை சங்கிகளின் பக்கம் தள்ளி விடும் வேலையைத் தான் பெரியார் இறுதிக் காலத்தில் செய்துள்ளார் என்பது வெள்ளிடை மலை.

 

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்று கலகக்குரல் எழுப்பியவர் திருவள்ளுவர்.

 

அவர் எழுதிய திருக்குறள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போர்க்களத்தில் இன்றும் தேவைப்படுகிறது என்பதை பெரியாருக்கும், பெரியாருக்கு முட்டுக் கொடுக்கும் திராவிட சொம்பு வாலசா வல்லவன் போன்ற முரட்டுப் பக்தர்களுக்கும் ஓங்கி உரைத்திடுவோம்!

 

– கதிர் நிலவன்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வீரப் பையன்26 said:

திராவிட‌ வ‌ழி வ‌ந்த‌ எம் ஜி ஆருக்கு ஈழ‌ ம‌ண்ணில் சிலை வைத்தார்க‌ள் கார‌ன‌ம் எம் போராட்ட‌த்தை அடி ம‌ன‌தில் இருந்து நேசித்த‌வ‌ர் கோடிக‌ளை அள்ளிக் கொடுத்தார்

இது ஒரு தவறான கருத்து.

77இல், “இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களால் தாக்கப் படுகிறார்களே” என்று ஒரு நிருபர் எம்ஜிஆரைக் கேட்டபோது, “இலங்கையில் எனக்குச் சிங்கள ரசிகர்களும் இருக்கிறார்கள்” என்று சொன்னவர்தான் எம்ஜிஆர்.

கருணாநிதி ரெலோவுக்கு ஆதரவு கொடுத்ததால், எம்ஜிஆர் புலிகளைத் தேர்ந்தெடுத்தார். கோடிகளை அள்ளிக் கொடுத்ததெல்லாம் அவரது வாக்கு அரசிலுக்குத்தான். தன்னை தமிழனாகக் காட்டிக் கொள்ளத்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Eppothum Thamizhan said:

வேறொரு திரியை இதற்குள் ஏன் காவுகிறீர்கள்? நாம் கருத்தெழுதுவது இந்தத்திரியின் தலைப்புக்கும் அதிலுள்ள இணைப்புக்கும் மட்டுமே! இதற்குள் ஏன் சீமானின் உருட்டு வரவேண்டும்? எதற்கெடுத்தாலும் வைரவரின் வாகனம்போல் .......

😂🤣திரி மாறி வந்து விட்டீர்களா? இந்தத் திரியில் தானே சீமானின் உருட்டைப் பற்றி வந்த கட்டுரை பற்றிப் பேசுக் கொண்டிருக்கிறோம்?

38 minutes ago, Eppothum Thamizhan said:

அதில் ஒன்றுகூட புலிகளின் அதிகாரபூர்வமான வெளியீடல்லவே!

விடுதலைப் புலிகள் யாருடைய அதிகார பூர்வமான பத்திரிகை? சீமான் தமிழ்நாட்டுத் தமிழருக்குத் தான் காதில் பூ வைக்கிறார் என்றால் ஈழத்தவரான உங்களுக்கும் வைத்திருக்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kavi arunasalam said:

இது ஒரு தவறான கருத்து.

77இல், “இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களால் தாக்கப் படுகிறார்களே” என்று ஒரு நிருபர் எம்ஜிஆரைக் கேட்டபோது, “இலங்கையில் எனக்குச் சிங்கள ரசிகர்களும் இருக்கிறார்கள்” என்று சொன்னவர்தான் எம்ஜிஆர்.

கருணாநிதி ரெலோவுக்கு ஆதரவு கொடுத்ததால், எம்ஜிஆர் புலிகளைத் தேர்ந்தெடுத்தார். கோடிகளை அள்ளிக் கொடுத்ததெல்லாம் அவரது வாக்கு அரசிலுக்குத்தான். தன்னை தமிழனாகக் காட்டிக் கொள்ளத்தான். 

அத்துடன் 1981 ஜனவரி மாதம் மதுரை தமிழாராய்சசி மகாநாட்டு இறுதியில் எம்ஜிஆர் இன்பேச்சை கண்டித்து யாழ்பாணம் முழுவதும் எம்ஜிஆர்  அவர்களுன் கொடும்பாவியை எரித்து இளைஞர்கள் போராடியதையும் ஞாபகப்படுத்துகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kavi arunasalam said:

இது ஒரு தவறான கருத்து.

77இல், “இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்களால் தாக்கப் படுகிறார்களே” என்று ஒரு நிருபர் எம்ஜிஆரைக் கேட்டபோது, “இலங்கையில் எனக்குச் சிங்கள ரசிகர்களும் இருக்கிறார்கள்” என்று சொன்னவர்தான் எம்ஜிஆர்.

கருணாநிதி ரெலோவுக்கு ஆதரவு கொடுத்ததால், எம்ஜிஆர் புலிகளைத் தேர்ந்தெடுத்தார். கோடிகளை அள்ளிக் கொடுத்ததெல்லாம் அவரது வாக்கு அரசிலுக்குத்தான். தன்னை தமிழனாகக் காட்டிக் கொள்ளத்தான். 

நீங்க‌ள் ஈழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌த்தில் மின்சார‌ம் தொட்டு ப‌ல‌ வ‌ச‌தி இருந்த‌து உண்மைக‌ளை அறிய‌ தெரிய‌

நாங்க‌ள் வாழ்ந்த‌ கால‌த்தில் மின்சார‌ம் இல்லை சூரிய‌ன் உதிக்கும் போது தான் வெளிச்ச‌த்தை பார்க்க‌ முடியும்

 

த‌லைவ‌ர் எம் ஜீ ஆர‌ ப‌ற்றி ச‌மாதான‌ கால‌த்தில் கொடுத்த‌ பேட்டிய‌ 2002க‌ளில் காணொளி மூல‌ம் பார்த்தேன் த‌லைவ‌ர் எம் ஜீ ஆரை பெருமைப் ப‌டுத்தி தான் சொல்லி இருந்தார்

 

ஆனால் எம் ஜீ ஆர் சொன்ன‌தை இப்ப‌ தான்  உங்க‌ள் மூல‌மாய்  தெரியுது................எம் ஜீ ஆர் பிற‌ப்பின் அடிப்ப‌டையில் அவ‌ர் ஒரு ம‌லையாளி ஆனால் அவ‌ர் செய்த‌ ந‌ல்ல‌துக‌ளை நாம் ஒரு போதும் ம‌ற‌க்க‌ கூடாது🙏👍.........................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் ஈழ‌த்தில் வாழ்ந்த‌ கால‌த்தில் மின்சார‌ம் தொட்டு ப‌ல‌ வ‌ச‌தி இருந்த‌து உண்மைக‌ளை அறிய‌ தெரிய‌

நாங்க‌ள் வாழ்ந்த‌ கால‌த்தில் மின்சார‌ம் இல்லை சூரிய‌ன் உதிக்கும் போது தான் வெளிச்ச‌த்தை பார்க்க‌ முடியும்

 

 

தம்பி, இந்த "மின்சாரமில்லாத ஊரில் வளர்ந்தேன்" என்பது ஊர் விடயங்களை அறியாமல் இருப்பதற்கு வலுவான காரணமாகத் தெரியவில்லை.

நான் கபொத உயர்தரம் பரீட்சை எழுதிய போது யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணை கூட இல்லை, தேங்காயெண்ணையில் மிதக்கும் திரி விளக்குத் தான். கோடு போட்ட பேப்பரில் அச்சாகி வரும் அறிவுக்களஞ்சியம் , வெளிச்சம் எல்லாம் அப்போதும் வெளிவந்து கொண்டிருந்தன. யாழ் நூலகம் 3 இடங்களில் இயங்கியது. 3 இடங்களும் வாசகர்களால் நிரம்பி வழிந்தன.

இப்படியெல்லாம் நாம் உலகை அறிந்து கொண்டிருக்க நீங்கள் வந்து "கரண்ட் இல்லாமையால் விசயம் தெரியவில்லை" என்றால் என்ன கதை அப்பன் இது?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

ஆனால் எம் ஜீ ஆர் சொன்ன‌தை இப்ப‌ தான்  உங்க‌ள் மூல‌மாய்  தெரியுது................எம் ஜீ ஆர் பிற‌ப்பின் அடிப்ப‌டையில் அவ‌ர் ஒரு ம‌லையாளி ஆனால் அவ‌ர் செய்த‌ ந‌ல்ல‌துக‌ளை நாம் ஒரு போதும் ம‌ற‌க்க‌ கூடாது🙏👍.........................

அரசியல் என்பது சந்தர்ப்பத்துக்கு ஏற்றது. எம்ஜிஆர் தனது அரசியலுக்கு விடுதலைப் புலிகளை ஆதரித்தார். அதை கச்சிதமாக தலைவர் பயன்படுத்திக் கொண்டார்.

போராட்டத்தைப் பற்றி எம்ஜிஆர் கேட்டபோது, “நீங்கள் திரையில் செய்த புரட்சியை பிரபாகரன் நிஜத்தில் செய்கிறார்” என்று அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்  ஒரு பெரிய ஜஸ் கட்டியையே எம்ஜிஆர் தலையில் வைத்து தங்களுக்குத் தேவையானதைப் பெற்றுக் கொண்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Eppothum Thamizhan said:

வேறொரு திரியை இதற்குள் ஏன் காவுகிறீர்கள்? நாம் கருத்தெழுதுவது இந்தத்திரியின் தலைப்புக்கும் அதிலுள்ள இணைப்புக்கும் மட்டுமே! இதற்குள் ஏன் சீமானின் உருட்டு வரவேண்டும்? எதற்கெடுத்தாலும் வைரவரின் வாகனம்போல் .......

அடிக்கடி எதிர் கருத்தாளரை  வைரவரின் வாகனம் என்று கூறுகின்றீர்கள். வைரவரின் வாகனம் என்ன?  BMW? Mercedes? Porche? Jaguar? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

தம்பி, இந்த "மின்சாரமில்லாத ஊரில் வளர்ந்தேன்" என்பது ஊர் விடயங்களை அறியாமல் இருப்பதற்கு வலுவான காரணமாகத் தெரியவில்லை.

நான் கபொத உயர்தரம் பரீட்சை எழுதிய போது யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணை கூட இல்லை, தேங்காயெண்ணையில் மிதக்கும் திரி விளக்குத் தான். கோடு போட்ட பேப்பரில் அச்சாகி வரும் அறிவுக்களஞ்சியம் , வெளிச்சம் எல்லாம் அப்போதும் வெளிவந்து கொண்டிருந்தன. யாழ் நூலகம் 3 இடங்களில் இயங்கியது. 3 இடங்களும் வாசகர்களால் நிரம்பி வழிந்தன.

இப்படியெல்லாம் நாம் உலகை அறிந்து கொண்டிருக்க நீங்கள் வந்து "கரண்ட் இல்லாமையால் விசயம் தெரியவில்லை" என்றால் என்ன கதை அப்பன் இது?

குண்டு ச‌த்த‌ம் ஒரு புற‌ம்

பாட‌சாலைக‌ள் பூட்ட‌ப் ப‌ட்டு விட்ட‌து.............எங்க‌ளின் ஊரில் நூல‌க‌ம் இல்லை..................யாழ்ப்பாண‌த்தில் இருந்த‌ கால‌த்தில் தின‌மும் பேப்ப‌ர் ப‌டிக்கும் வ‌ச‌தி இருந்த‌து அத‌ன் மூல‌ம் நாட்டு ந‌ட‌ப்புக‌ளை தெரிந்து கொள்ள‌க் கூடிய‌தாக‌ இருந்த‌து

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ விடுதலை போராட்ட இயக்கங்கள் அனைத்தும் "தமிழ் ஈழ" என்ற பெயருடன் தான் ஆரம்பித்து இயங்கினார்கள் தவிர திராவிட ஈழ விடுதலை புலிகள் என்றோ.. திராவிட மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்றோ திராவிட ஈழ விடுதலை இயக்கம் என்றோ ஆரம்பித்து செயல் படவில்லையே ஏன்? 

Just wondering!! 😏

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Sasi_varnam said:

ஈழ விடுதலை போராட்ட இயக்கங்கள் அனைத்தும் "தமிழ் ஈழ" என்ற பெயருடன் தான் ஆரம்பித்து இயங்கினார்கள் தவிர திராவிட ஈழ விடுதலை புலிகள் என்றோ.. திராவிட மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்றோ திராவிட ஈழ விடுதலை இயக்கம் என்றோ ஆரம்பித்து செயல் படவில்லையே ஏன்? 

Just wondering!! 😏

ஏனெனில் அவர்கள் அனைவரும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள். திராவிட மக்களின் விடுதலைக்காகப் போராடவில்லை.

இதில் உங்களுக்கே குழப்பம் இருந்தால், தமிழ் நாட்டில் 35 இலட்சம் பேர் சீமான் வாக்காளர்களாக இருப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை😂!

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Justin said:

ஏனெனில் அவர்கள் அனைவரும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள். திராவிட மக்களின் விடுதலைக்காகப் போராடவில்லை.

இதில் உங்களுக்கே குழப்பம் இருந்தால், தமிழ் நாட்டில் 35 இலட்சம் பேர் சீமான் வாக்காளர்களாக இருப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை😂!

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய  விடயம் என்னவென்றால், சமூக நீதி என்ற அடித்தளத்தில் இயங்கிய பெரியாரிஸ்டுகளோ திராவிட கருத்தியலோ என்றுமே தமிழ் தேசியத்துடன் முரண்படவில்லை.   இணைந்தே பயணித்துள்ளன. இன்னும் சொல்லப்போனால், ஈழத்தமிழர்களுக்கு நீண்ட கால உதவிகளையும் பாரிய ரிஸ்க எடுத்து  அவர்கள் செய்துள்ளார்கள். அவ்வாறு இணைந்து பயணிக்காமல் எதிரிகளாக  இருந்திருந்தால் 1982 மே மாதத்திலேயே பிரபாகனும்  மகேஸ்வரனும் இலங்கை அரசுடம் ஒப்படைக்கப்டிருப்பார்கள்.  

தனது அயோக்கிய இனவாத அரசியலுக்காக இவ்விரண்டையும் எதிரிகளாக காட்ட  சீமான் என்ற பொய்யன் கூறும் அயோக்கியத்தனமான உருட்டுக்களை மறுதலித்து உண்மை வரலாற்றை வெளிக்கொண்டு வரவே இங்கு   விவாதிக்கப்படுகிறது. தமக்கு பல உதவிகளை செய்த வரலாற்றை மறந்து அவர்களை எல்லாம் துரோகிகளாக காட்ட முற்படும் நன்றி கெட்ட புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சிலரது  தமது அரசியல் வியாபாரத்திற்காகவும் மீண்டும் மக்களிடம் பணவேட்டையாடவும் சீமான் என்ற ஆசாமி இவர்களுக்கு தேவைப்படுகிறார்.  

கடந்த 15 வருடங்களாக குடித்துவிட்டு  மேடையில் காட்டு கத்து கத்தியதை தவிர சீமான் எதையும் ஈழத்தமிழர்களுக்காக செய்யவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஏனெனில் அவர்கள் அனைவரும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடினார்கள். திராவிட மக்களின் விடுதலைக்காகப் போராடவில்லை.

இதில் உங்களுக்கே குழப்பம் இருந்தால், தமிழ் நாட்டில் 35 இலட்சம் பேர் சீமான் வாக்காளர்களாக இருப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை😂!

என்னுடைய கேள்வி மிகவும் சாதாரணமானது. நான் நாறிய இந்திய அரசியல் சாக்கடையில் இருந்து  பதில் தேடவில்லை. இயல்பாக எம்மவர்கள் ஏன் அப்படி அடையாளப்படுத்த முனையவில்லை என்றே கேட்டேன். கட்டுரையில் ஜெயவர்த்தனா நம்மை திராவிடர் என்றும் அவர்களை ஆரியர் என்றும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Sasi_varnam said:

என்னுடைய கேள்வி மிகவும் சாதாரணமானது. நான் நாறிய இந்திய அரசியல் சாக்கடையில் இருந்து  பதில் தேடவில்லை. இயல்பாக எம்மவர்கள் ஏன் அப்படி அடையாளப்படுத்த முனையவில்லை என்றே கேட்டேன். கட்டுரையில் ஜெயவர்த்தனா நம்மை திராவிடர் என்றும் அவர்களை ஆரியர் என்றும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். 

"பிரபாகரன் தான் ‘திராவிட’ மாயையை உடைத்தார்.."

👆 எல்லா சீமான் ஆதரவாளர்கள் போலவே நீங்களும் கட்டுரையின் முதல் இரு வரிகளை வாசிக்காமல் வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

 ஈழப் போராட்டத்தில் திராவிடப் பாரம்பரியத்தில் வந்த (அதே போல கம்யூனிசம், மாவோயிசம், ரிரோயிசம் வழி வந்த) நல்ல அம்சங்கள் ஒரு package ஆக உள்ளீர்க்கப் பட்டிருந்தன. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் "திராவிடத்தை நிராகரிப்போம்" என்று திரைமறைவில் கூட சொல்லப் பட்டதாக பதிவுகள் இல்லை!

இதற்கான பதிலைத் தேட நீங்கள் கட்டுரையில் இருக்கும் மேற்கோள்களை வாசித்தால் போதும், எந்த சாக்கடையிலும் முங்கி முத்தெடுக்கத் தேவையில்லை.

ஆனால், இப்படிச் செய்ய சீமான் விசிறிகளுக்கு முடியாதென்பதும் புரிகிறது. ஆதாரம் இல்லாமல் சொல்வது "சத்தியம்", மீறி ஆதாரம் யாரும் காட்டினால் அது "கக்கா" என்று கடந்து போவதே தீவிர சீமானிசம்😎!

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் நாறிய என்று எழுதியது  "சீமானிசம்".. "சாமானிசம்" எல்லாத்தையும் தான். சக கருத்தாளர்களை ஒரு "பக்கட்டுக்குள்" Bucket போட்டு வாதாட வராதீர்கள். படித்த உங்களுக்கு அழகல்ல. I don't give a flying F about Seeman or Periyaar.  Thank You!! 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Sasi_varnam said:

நான் நாறிய என்று எழுதியது  "சீமானிசம்".. "சாமானிசம்" எல்லாத்தையும் தான். சக கருத்தாளர்களை ஒரு "பக்கட்டுக்குள்" Bucket போட்டு வாதாட வராதீர்கள். படித்த உங்களுக்கு அழகல்ல. I don't give a flying F about Seeman or Periyaar.  Thank You!! 

ம்ம்..நீங்கள் சீமான் ஆதரவாளர் இல்லாமல் இரு தரப்பையும் சாடும் ஒருவரென்றால் இந்த "பறக்கும் வசவு" 😂வந்திருக்காது என ஊகிக்கிறேன்.

உங்கள் கேள்வி (பதில் எதிர்பார்க்காத rhetoric கேள்வி) யின் அர்த்தமே "இந்தக் கட்டுரையில் இருப்பது நம்ப இயலாத விடயம்" என்று சுட்டிக் காட்டும் நோக்கமுடையதாகத் தான் எனக்கு விளங்கியது. என் படிப்பு என் மூளையை மழுங்கடித்து விட்டதால் இருக்கலாம், இனிப் "படிக்காமல்" இருக்க முயற்சிக்கிறேன்!😂

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாதையைக் காப்பாற்றும் முகமாக பீஷ்மரின் பின்னால் ஓடிய அன்றைய பாரததேச அரசர்களில் ஒரு அரசன் திராவிட அரசன் என்று வாசித்ததாக ஞாபகம். பீஷ்மரின் அம்பு பட்டு ஒரு ஓரமாக இவர் விழுந்தார் என்றும் ஞாபகம்.

இதற்கு முன்னரேயே இன்னொரு அரசனின், சித்ராங்கதன், தேவைகளுக்காக ஆண்கள் பல இடங்களில் இருந்தும் அவருடைய அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் வருகின்றது. பழுப்பு நிறத்தில் இருந்த யவனர்களும், கருமையான நிறத்தில் இருந்த திராவிடர்களும் கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் அங்கே இருந்தது என்று நினைக்கின்றேன்.

மேலே ஆரியம், கீழே திராவிடம் என்று தான் ஆரியர்களின் வருகையின் பின்னர் பாரததேசம் இருந்தது போல.

ஆரியத்தையும், அதன் ஊடகமான பிராமணியத்தையும், தேவபாசை என்று அவர்களே சொல்லிக் கொள்ளும் சமஸ்கிருதத்தையும், ஆட்சி மொழி என்று சொல்லிக் கொள்ளும் ஹிந்தி மொழியையும் ஒரே குடையின் கீழ் நின்று எதிர்த்துப் போராடுவோம் என்று தென்னிந்திய மக்களை ஒற்றுமைப்படுத்த இதே கருதுகோளை பின்னாட்களில் சிலர் கையில் எடுத்தனர். அதில் ஒருவர் பெரியார்.

ஆனாலும், தமிழர்கள் தவிர மற்ற தென்னிந்தியர்கள் ஏன் இந்த திராவிட ஒற்றுமையை முன்வைப்பதில்லை என்ற கேள்வி சரியானதே. திராவிட மொழிகளின் மூலமொழி தமிழ் என்றும், தமிழில் இருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வந்தன என்றும், தமிழர்கள் ஒரு முன்னோடிகள் என்றும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் விடயங்களை வேறு எந்த தென்னிந்திய மக்களும் ஏற்கத் தயாராகவில்லை. இது அவர்களை காயப்படுத்துகின்றது, அந்நியப்படுத்துகின்றது. சமஸ்கிருதம் தான் ஆதிமொழி என்பது எப்படி எங்களை வட இந்திய மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றதோ, அது போலவே தான் தமிழ் மொழி தான் ஆதிமொழி என்பதும் மற்றைய தென்னிந்திய மக்களை அந்நியப்படுத்துகின்றது. அதனால் தான் அவர்கள் திராவிடம் என்னும் குடையின் கீழ் வருவதில்லை.

இதை விட்டு விட்டால், தமிழ்நாட்டில் எல்லா அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், மிகச் சாதாரண அரசியல் செய்பவர்களே. சிலர் திராவிடம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். இன்னும் சிலர் தமிழ் தேசியம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். தங்களினதும், தங்கள் குடும்பங்களின் நலன்களையும் தவிர, இவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு திராவிடம் மீதோ அல்லது தமிழ் மீதோ எந்தப் பற்றும் அறவே கிடையாது. சீமானுக்கும் பற்றில்லை, உதயநிதிக்கும் பற்றில்லை, விஜய்க்கும் பற்றில்லை...........................

சீமானின் அரசியல் பரபரப்பு சார்ந்தது. ஈழத்து மருத்துவரின் அரசியலும் அதுவே. ஆனால் இவை பொருளற்றவை.

திமுகவிற்கு அவர்களின் கொள்கைத் தலைவரை சீமான் எப்படி இப்படிச் சொல்லலாம் என்பது ஒரு தன்மானப் பிரச்சனை. அதனால் திமுகவினர் சில நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றனர். அதில் ஒன்று தான் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை.

ஈழத்தில் எங்களுக்கு தமிழர் என்னும் அடையாளமே எங்களின் நோக்கத்திற்கு, எங்கள் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு, போதுமானதாக இருந்தது. நாங்கள் திராவிடம் என்பதையும், தமிழ் தேசியம் என்பதையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் நலன்களுக்கு ஏற்ப ஆக்கிக் கொண்டதைப் போல ஆக்கவும் இல்லை, அதற்கான தேவைகளும் எங்களுக்கு இருக்கவில்லை. நாங்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாறவும் இல்லை.    

 

 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

ஈழ விடுதலை போராட்ட இயக்கங்கள் அனைத்தும் "தமிழ் ஈழ" என்ற பெயருடன் தான் ஆரம்பித்து இயங்கினார்கள் தவிர திராவிட ஈழ விடுதலை புலிகள் என்றோ.. திராவிட மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்றோ திராவிட ஈழ விடுதலை இயக்கம் என்றோ ஆரம்பித்து செயல் படவில்லையே ஏன்? 

Just wondering!! 😏

 

இதன் அர்த்தத்தை அவர்கள் எல்லோருமே தம்மை ஈழத்தமிழர்களாகவே அடையாளப்படுத்தினார்களே அல்லாமல் திராவிடராக அடையாளப்படுத்தவில்லை என எடுக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நியாயம் said:

 

இதன் அர்த்தத்தை அவர்கள் எல்லோருமே தம்மை ஈழத்தமிழர்களாகவே அடையாளப்படுத்தினார்களே அல்லாமல் திராவிடராக அடையாளப்படுத்தவில்லை என எடுக்கலாமா?

அரசியல் பாமரன் எனக்கு அப்படித்தான் படுகிறது. அதனாலேயே நான் அந்த கருத்தை கேள்வியாக வைத்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரசோதரன் said:

திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாதையைக் காப்பாற்றும் முகமாக பீஷ்மரின் பின்னால் ஓடிய அன்றைய பாரததேச அரசர்களில் ஒரு அரசன் திராவிட அரசன் என்று வாசித்ததாக ஞாபகம். பீஷ்மரின் அம்பு பட்டு ஒரு ஓரமாக இவர் விழுந்தார் என்றும் ஞாபகம்.

இதற்கு முன்னரேயே இன்னொரு அரசனின், சித்ராங்கதன், தேவைகளுக்காக ஆண்கள் பல இடங்களில் இருந்தும் அவருடைய அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் வருகின்றது. பழுப்பு நிறத்தில் இருந்த யவனர்களும், கருமையான நிறத்தில் இருந்த திராவிடர்களும் கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் அங்கே இருந்தது என்று நினைக்கின்றேன்.

மேலே ஆரியம், கீழே திராவிடம் என்று தான் ஆரியர்களின் வருகையின் பின்னர் பாரததேசம் இருந்தது போல.

ஆரியத்தையும், அதன் ஊடகமான பிராமணியத்தையும், தேவபாசை என்று அவர்களே சொல்லிக் கொள்ளும் சமஸ்கிருதத்தையும், ஆட்சி மொழி என்று சொல்லிக் கொள்ளும் ஹிந்தி மொழியையும் ஒரே குடையின் கீழ் நின்று எதிர்த்துப் போராடுவோம் என்று தென்னிந்திய மக்களை ஒற்றுமைப்படுத்த இதே கருதுகோளை பின்னாட்களில் சிலர் கையில் எடுத்தனர். அதில் ஒருவர் பெரியார்.

ஆனாலும், தமிழர்கள் தவிர மற்ற தென்னிந்தியர்கள் ஏன் இந்த திராவிட ஒற்றுமையை முன்வைப்பதில்லை என்ற கேள்வி சரியானதே. திராவிட மொழிகளின் மூலமொழி தமிழ் என்றும், தமிழில் இருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வந்தன என்றும், தமிழர்கள் ஒரு முன்னோடிகள் என்றும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் விடயங்களை வேறு எந்த தென்னிந்திய மக்களும் ஏற்கத் தயாராகவில்லை. இது அவர்களை காயப்படுத்துகின்றது, அந்நியப்படுத்துகின்றது. சமஸ்கிருதம் தான் ஆதிமொழி என்பது எப்படி எங்களை வட இந்திய மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றதோ, அது போலவே தான் தமிழ் மொழி தான் ஆதிமொழி என்பதும் மற்றைய தென்னிந்திய மக்களை அந்நியப்படுத்துகின்றது. அதனால் தான் அவர்கள் திராவிடம் என்னும் குடையின் கீழ் வருவதில்லை.

இதை விட்டு விட்டால், தமிழ்நாட்டில் எல்லா அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், மிகச் சாதாரண அரசியல் செய்பவர்களே. சிலர் திராவிடம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். இன்னும் சிலர் தமிழ் தேசியம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். தங்களினதும், தங்கள் குடும்பங்களின் நலன்களையும் தவிர, இவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு திராவிடம் மீதோ அல்லது தமிழ் மீதோ எந்தப் பற்றும் அறவே கிடையாது. சீமானுக்கும் பற்றில்லை, உதயநிதிக்கும் பற்றில்லை, விஜய்க்கும் பற்றில்லை...........................

சீமானின் அரசியல் பரபரப்பு சார்ந்தது. ஈழத்து மருத்துவரின் அரசியலும் அதுவே. ஆனால் இவை பொருளற்றவை.

திமுகவிற்கு அவர்களின் கொள்கைத் தலைவரை சீமான் எப்படி இப்படிச் சொல்லலாம் என்பது ஒரு தன்மானப் பிரச்சனை. அதனால் திமுகவினர் சில நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றனர். அதில் ஒன்று தான் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை.

ஈழத்தில் எங்களுக்கு தமிழர் என்னும் அடையாளமே எங்களின் நோக்கத்திற்கு, எங்கள் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு, போதுமானதாக இருந்தது. நாங்கள் திராவிடம் என்பதையும், தமிழ் தேசியம் என்பதையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் நலன்களுக்கு ஏற்ப ஆக்கிக் கொண்டதைப் போல ஆக்கவும் இல்லை, அதற்கான தேவைகளும் எங்களுக்கு இருக்கவில்லை. நாங்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாறவும் இல்லை.    

 

 

உங்களைப் போலவும் கோசான் போலவும் "தெளிந்த தண்ணீர்" மாதிரி எப்படி எழுதுவது என்று யோசிக்கிறேன், முயற்சிக்க வேண்டும். அருமையான விளக்கம்👍.

ஒரு இனக்குழு தன் அடையாளத்தை சில சமயங்களில் வரித்துக் கொள்வதும், சில சமயங்களில் தூர வைப்பதும் எல்லா இடங்களிலும் சாதாரணமாக நிகழ்வது தான். இது கிடைக்கும் சாதக, பாதகங்களைப் பற்றிய முடிவு.

உக்ரைனியர்களும், ரஷ்யர்களும் சிலாவியர்கள் (Slavs) என்ற பாரம்பரிய இன அடையாளம் உடையோர், ஆனால் உக்ரைனியர்கள் இந்த சிலாவிய அடையாளைத்தை அடக்கி, உக்ரைனிய அடையாளத்தை இன்று முன்னிறுத்த ரஷ்யாவின் மேலாண்மை அரசியல் காரணம்.

மறு பக்கம், சேர்பியர்கள், ரஷ்யாவின் உதவியைப் பெறுவதற்காக தாம் சிலாவியர் என்பதை முன்னிறுத்துவர். சேர்பியர்களுக்கு அருகில் வாழும் குரோசியர்களும் சிலாவிக் மக்களே. ஆனால், அவர்கள் "கத்தோலிக்க" அடையாளத்தையே முன்னிறுத்தியிருக்கின்றனர், சிலாவிய அடையாளத்தை அல்ல. இப்படிப் பல உதாரணங்கள்.

திராவிட அடையாளத்தை வசவுகளோடு தூக்கியெறிவதால் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நன்மை நிகழும் என்று திராவிட எதிர்ப்பாளர்களால் இது வரை நிறுவ முடியவில்லை.

நான் நினைக்கிறேன் இது வெறும் சீமான் பின்னால் செல்லும் செம்மறி ஆட்டுப் போக்கு, கருணாநிதி மீதான கோபம் என்பன சார்ந்து வரும் திராவிட எதிர்ப்பே. தேவையில்லாத ஆணி!

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ரசோதரன் said:

திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாதையைக் காப்பாற்றும் முகமாக பீஷ்மரின் பின்னால் ஓடிய அன்றைய பாரததேச அரசர்களில் ஒரு அரசன் திராவிட அரசன் என்று வாசித்ததாக ஞாபகம். பீஷ்மரின் அம்பு பட்டு ஒரு ஓரமாக இவர் விழுந்தார் என்றும் ஞாபகம்.

இதற்கு முன்னரேயே இன்னொரு அரசனின், சித்ராங்கதன், தேவைகளுக்காக ஆண்கள் பல இடங்களில் இருந்தும் அவருடைய அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் வருகின்றது. பழுப்பு நிறத்தில் இருந்த யவனர்களும், கருமையான நிறத்தில் இருந்த திராவிடர்களும் கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் அங்கே இருந்தது என்று நினைக்கின்றேன்.

மேலே ஆரியம், கீழே திராவிடம் என்று தான் ஆரியர்களின் வருகையின் பின்னர் பாரததேசம் இருந்தது போல.

ஆரியத்தையும், அதன் ஊடகமான பிராமணியத்தையும், தேவபாசை என்று அவர்களே சொல்லிக் கொள்ளும் சமஸ்கிருதத்தையும், ஆட்சி மொழி என்று சொல்லிக் கொள்ளும் ஹிந்தி மொழியையும் ஒரே குடையின் கீழ் நின்று எதிர்த்துப் போராடுவோம் என்று தென்னிந்திய மக்களை ஒற்றுமைப்படுத்த இதே கருதுகோளை பின்னாட்களில் சிலர் கையில் எடுத்தனர். அதில் ஒருவர் பெரியார்.

ஆனாலும், தமிழர்கள் தவிர மற்ற தென்னிந்தியர்கள் ஏன் இந்த திராவிட ஒற்றுமையை முன்வைப்பதில்லை என்ற கேள்வி சரியானதே. திராவிட மொழிகளின் மூலமொழி தமிழ் என்றும், தமிழில் இருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வந்தன என்றும், தமிழர்கள் ஒரு முன்னோடிகள் என்றும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் விடயங்களை வேறு எந்த தென்னிந்திய மக்களும் ஏற்கத் தயாராகவில்லை. இது அவர்களை காயப்படுத்துகின்றது, அந்நியப்படுத்துகின்றது. சமஸ்கிருதம் தான் ஆதிமொழி என்பது எப்படி எங்களை வட இந்திய மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றதோ, அது போலவே தான் தமிழ் மொழி தான் ஆதிமொழி என்பதும் மற்றைய தென்னிந்திய மக்களை அந்நியப்படுத்துகின்றது. அதனால் தான் அவர்கள் திராவிடம் என்னும் குடையின் கீழ் வருவதில்லை.

இதை விட்டு விட்டால், தமிழ்நாட்டில் எல்லா அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், மிகச் சாதாரண அரசியல் செய்பவர்களே. சிலர் திராவிடம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். இன்னும் சிலர் தமிழ் தேசியம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். தங்களினதும், தங்கள் குடும்பங்களின் நலன்களையும் தவிர, இவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு திராவிடம் மீதோ அல்லது தமிழ் மீதோ எந்தப் பற்றும் அறவே கிடையாது. சீமானுக்கும் பற்றில்லை, உதயநிதிக்கும் பற்றில்லை, விஜய்க்கும் பற்றில்லை...........................

சீமானின் அரசியல் பரபரப்பு சார்ந்தது. ஈழத்து மருத்துவரின் அரசியலும் அதுவே. ஆனால் இவை பொருளற்றவை.

திமுகவிற்கு அவர்களின் கொள்கைத் தலைவரை சீமான் எப்படி இப்படிச் சொல்லலாம் என்பது ஒரு தன்மானப் பிரச்சனை. அதனால் திமுகவினர் சில நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றனர். அதில் ஒன்று தான் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை.

ஈழத்தில் எங்களுக்கு தமிழர் என்னும் அடையாளமே எங்களின் நோக்கத்திற்கு, எங்கள் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு, போதுமானதாக இருந்தது. நாங்கள் திராவிடம் என்பதையும், தமிழ் தேசியம் என்பதையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் நலன்களுக்கு ஏற்ப ஆக்கிக் கொண்டதைப் போல ஆக்கவும் இல்லை, அதற்கான தேவைகளும் எங்களுக்கு இருக்கவில்லை. நாங்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாறவும் இல்லை.    

 

 

நன்றி ரசோதரன் உங்களை போல விரிவாக பந்தியை எழுதவில்லை. ஆனாலும் நீங்கள் எழுதிய அடிப்படை புரிதல் இருந்தது. தேவையில்லாத ஆணிகளை தேடித் தேடி சரிநிகர் பார்க்கும் தேவையில் நான் இல்லை. நமது தலைவர்கள் சொல்லிச் சென்ற தத்துவங்கள் கொள்கைகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. சிவனே என்று அதை கவனிக்கலாம் என்பதையே உள்ளுணர்வு சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாதையைக் காப்பாற்றும் முகமாக பீஷ்மரின் பின்னால் ஓடிய அன்றைய பாரததேச அரசர்களில் ஒரு அரசன் திராவிட அரசன் என்று வாசித்ததாக ஞாபகம். பீஷ்மரின் அம்பு பட்டு ஒரு ஓரமாக இவர் விழுந்தார் என்றும் ஞாபகம்.

இதற்கு முன்னரேயே இன்னொரு அரசனின், சித்ராங்கதன், தேவைகளுக்காக ஆண்கள் பல இடங்களில் இருந்தும் அவருடைய அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் வருகின்றது. பழுப்பு நிறத்தில் இருந்த யவனர்களும், கருமையான நிறத்தில் இருந்த திராவிடர்களும் கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் அங்கே இருந்தது என்று நினைக்கின்றேன்.

மேலே ஆரியம், கீழே திராவிடம் என்று தான் ஆரியர்களின் வருகையின் பின்னர் பாரததேசம் இருந்தது போல.

ஆரியத்தையும், அதன் ஊடகமான பிராமணியத்தையும், தேவபாசை என்று அவர்களே சொல்லிக் கொள்ளும் சமஸ்கிருதத்தையும், ஆட்சி மொழி என்று சொல்லிக் கொள்ளும் ஹிந்தி மொழியையும் ஒரே குடையின் கீழ் நின்று எதிர்த்துப் போராடுவோம் என்று தென்னிந்திய மக்களை ஒற்றுமைப்படுத்த இதே கருதுகோளை பின்னாட்களில் சிலர் கையில் எடுத்தனர். அதில் ஒருவர் பெரியார்.

ஆனாலும், தமிழர்கள் தவிர மற்ற தென்னிந்தியர்கள் ஏன் இந்த திராவிட ஒற்றுமையை முன்வைப்பதில்லை என்ற கேள்வி சரியானதே. திராவிட மொழிகளின் மூலமொழி தமிழ் என்றும், தமிழில் இருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வந்தன என்றும், தமிழர்கள் ஒரு முன்னோடிகள் என்றும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் விடயங்களை வேறு எந்த தென்னிந்திய மக்களும் ஏற்கத் தயாராகவில்லை. இது அவர்களை காயப்படுத்துகின்றது, அந்நியப்படுத்துகின்றது. சமஸ்கிருதம் தான் ஆதிமொழி என்பது எப்படி எங்களை வட இந்திய மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றதோ, அது போலவே தான் தமிழ் மொழி தான் ஆதிமொழி என்பதும் மற்றைய தென்னிந்திய மக்களை அந்நியப்படுத்துகின்றது. அதனால் தான் அவர்கள் திராவிடம் என்னும் குடையின் கீழ் வருவதில்லை.

இதை விட்டு விட்டால், தமிழ்நாட்டில் எல்லா அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், மிகச் சாதாரண அரசியல் செய்பவர்களே. சிலர் திராவிடம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். இன்னும் சிலர் தமிழ் தேசியம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். தங்களினதும், தங்கள் குடும்பங்களின் நலன்களையும் தவிர, இவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு திராவிடம் மீதோ அல்லது தமிழ் மீதோ எந்தப் பற்றும் அறவே கிடையாது. சீமானுக்கும் பற்றில்லை, உதயநிதிக்கும் பற்றில்லை, விஜய்க்கும் பற்றில்லை...........................

சீமானின் அரசியல் பரபரப்பு சார்ந்தது. ஈழத்து மருத்துவரின் அரசியலும் அதுவே. ஆனால் இவை பொருளற்றவை.

திமுகவிற்கு அவர்களின் கொள்கைத் தலைவரை சீமான் எப்படி இப்படிச் சொல்லலாம் என்பது ஒரு தன்மானப் பிரச்சனை. அதனால் திமுகவினர் சில நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றனர். அதில் ஒன்று தான் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை.

ஈழத்தில் எங்களுக்கு தமிழர் என்னும் அடையாளமே எங்களின் நோக்கத்திற்கு, எங்கள் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு, போதுமானதாக இருந்தது. நாங்கள் திராவிடம் என்பதையும், தமிழ் தேசியம் என்பதையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் நலன்களுக்கு ஏற்ப ஆக்கிக் கொண்டதைப் போல ஆக்கவும் இல்லை, அதற்கான தேவைகளும் எங்களுக்கு இருக்கவில்லை. நாங்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாறவும் இல்லை.    

 

 

மிக‌ அருமை குருநாதா🙏👍....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.