Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை !

ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை !

ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை !

ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை !

 
 

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டிரம்ப், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்று அமெரிக்க அரசியலமைப்பின்படி கடந்த 20ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இதன்பின்னர் அவர் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவற்றில், பிறப்பால் அமெரிக்க குடியுரிமை கிடைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையும் ஒன்றாகும்.

டிரம்ப் பிறப்பித்த உத்தரவின்படி, பிப்ரவரி 20ஆம் திகதிக்கு பின்னர் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அமெரிக்க குடியுரிமை கிடையாது என்ற உத்தரவும் அடங்கும். டிரம்பின் குடியுரிமை காலக்கெடு உத்தரவால் தம்பதிகள் பலரும் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த நாளுக்கு முன்னர் குழந்தைகளை பெற்று கொள்ள கர்ப்பிணிகள் முயன்று வருகின்றனர்.

இதற்காக, அமெரிக்காவில் வசிக்கும் தம்பதிகள் வைத்தியர்களை தொடர்பு கொண்டு அந்த நாளுக்கு முன்பு குழந்தை பிறக்கும் வகையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்படி வலியுறுத்தி வருகின்றனர். பலரும் வைத்தியர்களை தொடர்பு கொண்டு முன்பதிவும் செய்து வருகின்றனர்.

பெப்ரவரி 19ஆம் திகதிக்கு பின்னர், அமெரிக்க குடிமக்கள் அல்லாத தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள், இயற்கையாகவே அமெரிக்க குடிமக்கள் ஆவது என்பது இனி முடியாது. இதனால், 8 மாதம் மற்றும் 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் பலரும் வைத்தியர்களை தேடி ஓடுகின்றனர். 7 மாத கர்ப்பிணிகள் கூட இதுபோன்று வருகிறார்கள் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.

இதேபோன்று அமெரிக்க குடியுரிமை அல்லாத பெற்றோரிடம் கிரீன் கார்ட் இல்லாவிட்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அமெரிக்க குடியுரிமை கிடைக்காது. இதனால், கிரீன் கார்ட் பெறுவதற்காகவும், பலரும் வரிசையில் காத்திருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1417973

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

டிரம்ப் பிறப்பித்த உத்தரவின்படி, பிப்ரவரி 20ஆம் திகதிக்கு பின்னர் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அமெரிக்க குடியுரிமை கிடையாது என்ற உத்தரவும் அடங்கும். டிரம்பின் குடியுரிமை காலக்கெடு உத்தரவால் தம்பதிகள் பலரும் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த நாளுக்கு முன்னர் குழந்தைகளை பெற்று கொள்ள கர்ப்பிணிகள் முயன்று வருகின்றனர்

இதற்கு நீதிமன்றம் (சியாற்றல்) தடை விதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை !

ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை !

ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை !

ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை !

 
 

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டிரம்ப், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்று அமெரிக்க அரசியலமைப்பின்படி கடந்த 20ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இதன்பின்னர் அவர் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவற்றில், பிறப்பால் அமெரிக்க குடியுரிமை கிடைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையும் ஒன்றாகும்.

டிரம்ப் பிறப்பித்த உத்தரவின்படி, பிப்ரவரி 20ஆம் திகதிக்கு பின்னர் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அமெரிக்க குடியுரிமை கிடையாது என்ற உத்தரவும் அடங்கும். டிரம்பின் குடியுரிமை காலக்கெடு உத்தரவால் தம்பதிகள் பலரும் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த நாளுக்கு முன்னர் குழந்தைகளை பெற்று கொள்ள கர்ப்பிணிகள் முயன்று வருகின்றனர்.

இதற்காக, அமெரிக்காவில் வசிக்கும் தம்பதிகள் வைத்தியர்களை தொடர்பு கொண்டு அந்த நாளுக்கு முன்பு குழந்தை பிறக்கும் வகையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்படி வலியுறுத்தி வருகின்றனர். பலரும் வைத்தியர்களை தொடர்பு கொண்டு முன்பதிவும் செய்து வருகின்றனர்.

பெப்ரவரி 19ஆம் திகதிக்கு பின்னர், அமெரிக்க குடிமக்கள் அல்லாத தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள், இயற்கையாகவே அமெரிக்க குடிமக்கள் ஆவது என்பது இனி முடியாது. இதனால், 8 மாதம் மற்றும் 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் பலரும் வைத்தியர்களை தேடி ஓடுகின்றனர். 7 மாத கர்ப்பிணிகள் கூட இதுபோன்று வருகிறார்கள் என வைத்தியர்கள் கூறுகின்றனர்.

இதேபோன்று அமெரிக்க குடியுரிமை அல்லாத பெற்றோரிடம் கிரீன் கார்ட் இல்லாவிட்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அமெரிக்க குடியுரிமை கிடைக்காது. இதனால், கிரீன் கார்ட் பெறுவதற்காகவும், பலரும் வரிசையில் காத்திருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1417973

இப்படி ஒரு தலைவர் ...ஐனதிபதி   வெளிநாட்டு மக்கள் உள்நாட்டு மக்கள்   என்று மக்களை பிரித்து சட்டங்களை கொண்டு வருவரரயின்.   அவரிடம்  நாட்டை முன்னேற்ற திட்டங்கள் இல்லை என்பது தான் கருத்து  

வேலைக்கு ஆட்கள் இல்லை என்றவுடன்   கீரின்  காட் .  என்ற திட்டங்கள் கொண்டுவந்து அமுல் செய்வது     கொஞ்சம் முன்னேற்றம் அடைந்த பின்னர்   அல்லது  இந்த வெளிநாட்டு மக்கள் செழிப்பாக.  வாழ்ந்தால்    ....வெளிநாட்டு மக்களை வெளியேற்ற.  கீளின்.     காட்.  திட்டங்கள் கொண்டு வருவது   

உலகமெங்கிலும் ஒரே நாணயம் இருந்தால்    அமெரிக்காவுக்கு எவனாவது வருவனா. ..????? 🤣🤣🤣 தமிழ்சிறி 

  • கருத்துக்கள உறவுகள்

சிகப்பு இந்தியர்கள் என அழைக்கப்படுபவர்கள்தான் அமெரிக்க நாட்டின் பூர்வீகக் குடிகள். இவர்கள் சுமார் 30,000 ஆண்டுகளுக்கு முன் வட ஆசியாவிலிருந்து கால்நடையாக கனடா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா வந்து சேர்ந்தார்கள்.

 இவர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தனர். ஒரு சமயம் சுமார் ஏழரை கோடி மக்கள் இருந்தனர் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். 2000 வகை மொழிகளில் இவர்கள் பேசினார்கள் என்றும் ஆதாரங்கள் உள்ளன.

 இவர்களிடம் கலைகள், அரசியல், சமூகக் கட்டுமானங்கள், கணிதம், தொழில், விவசாயம், எழுதுதல் மற்றும் பலவிதமான மதநம்பிக்கைகள் பரவலாக இருந்தன.

 நெருப்பின் பயனை நன்கு உணர்ந்தவர்கள். ஆடைகள் தயாரித்துக் கொள்ளவும் குடியிருக்க இடம் உண்டாக்கிக் கொள்ளவும் தெரிந்தவர்கள்.

 நம் இந்திய நாட்டைத் தேடி அலைந்த ஐரோப்பியர்கள் வழிதவறி அமெரிக்காவில் வந்திறங்கினார்கள். அமெரிக்காவை இந்தியா எனத் தவறாக நினைத்துக் கொண்ட அவர்கள், அங்கு வசித்து வந்த பூர்வீகக் குடிமக்களை இந்தியர்கள் என அழைத்தார்கள். இந்த மக்கள் முகத்தில் செந்நிற சாயத்தைப் பூசியிருந்ததால் இவர்களைச் செவ்விந்தியர்கள் என்று பெயர் சூட்டி அழைத்தனர்.

 ஐரோப்பாவில் இருந்து தங்கம், வெள்ளி செல்வங்களைத் தேடி வந்தவர்கள் துப்பாக்கி, பீரங்கி போன்ற ஆயுதங்களையும் வேட்டை நாய்களையும் கொண்டு வந்து, எதிர்ப்பு காட்டிய பூர்வீக மக்கள் மீது பிரயோகம் செய்து அழிக்க முற்பட்டனர். மேலும், பெரியம்மை, காலரா போன்ற கொடிய நோய்க்கிருமிகளைக் கொண்டுவந்து நோயைப் பரப்பினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பூர்விக செவ்விந்தியர்கள் பலர் மாண்டு போனார்கள்.

 இவ்வாறு இறந்துபோன மக்களின் எண்ணிக்கை சுமார் 5 கோடி என்று கருதப்படுகிறது.

 இவ்வாறு அழிந்து போனவர்கள் நீங்கலாக நாளது தேதியில் சுமார் 2,50,000 பூர்வீகக் குடிமக்கள் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்குப் பல ஆண்டுகளாக சம உரிமையும் சுதந்திரமும் வழங்கப்படாமல் இருந்தது.

 தற்போது இவர்கள் சுதந்திரமாக வாழ்ந்து வந்தாலும் இவர்களுக்கென்று தனி உரிமைகள், சலுகைகள் மற்றும் முக்கியத்துவம் ஏதும் கிடையாது.

ஜோசப் ராஜபாதர்7

தினமணி ஆனி 22. 2012

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.