Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்

என் ஆடுகளை வேலியால் எட்டிப்பார்த்த என்னருமைத் தோழனே….

எட்டிப்பார்க்கும் அவசரத்தில் நீ பலதை உன்னிப்பாக கவனிக்கவில்லை.

கவனித்தாயா?

அந்த ஆடுகளுக்கு குறி சுடப்படவில்லை. இந்த பட்டியில் இதற்கு முன் நின்ற அத்தனை ஆடுகளும் பல குறிகளை தாங்கித்தான் நின்றன - அந்த தாடிக்கார மேய்பனின் புத்தகத்தை படித்த பின் தான், குறிகள் ஏதும் என் ஆடுகளுக்கு இடப்படவே இல்லை.

பார்த்தாயா?

ஈசான மூலையில் கறுப்பும் பழுப்புமாய் நின்ற குட்டி ஆடு உன் காமாலை கண்ணுக்கு தெரியவில்லையா?

அதன் அம்மா அப்பாவை நாந்தான் சேர்த்துவைத்தேன். எங்கள் ஆட்டு மந்தையில் அது ஒரு வரலாறு.

பல சம்பவங்களின் பின் நடந்தேறியது.

அங்கேயும் பட்டியின் பழைய கதவுகளை நெட்டித்திறக்க எனக்கு உதவியது அந்த கெட்டிக்கார கிழவனின், வளைந்த கைத்தடிதான்.

ஒ..தோழனே…

அந்த மூலையில் ஒரு மறிக்குட்டி, கிடாய்கள் பலதை மேச்சல் தரை நோக்கி கூட்டி போனதை ஏன் நீ கண்ணுறவில்லை?

உனக்குத்தெரியுமா தோழா?

என் மறிக்குட்டிகள், உன்னை போல் ஓராயிரம் கிடாய்களே ஒரு நேர்கோட்டில், ஒத்தை ரோட்டில் கூட்டிச்செல்லவல்லன.

இந்த ரோட்டும், நான் ஆரம்பித்ததில்லை நண்பா - ஈரோட்டில் ஆரம்பித்தது.

என் காணியின் மூலையில் இருக்கும் வேலாயுத மேடை உன் கண்ணை உறுத்தியது என நினைக்கிறேன்.

புரிந்துகொள் நண்பா…

யார் என்ன சொன்னாலும், நானே சொன்னாலும்…

உன் புத்திக்கு சரி எனப்படுவதை மட்டுமே ஏற்று கொள் என்பதுதான் எங்கள் அரிவரிப்பாடம்.

நாங்கள் தனிமனிதனை தொழுபவர்கள் அல்ல தோழா,

எவர் சொல்லுக்கும் நாம் கட்டுப்பட்டவர்களும் அல்ல.

எம் புத்திக்கு புலப்படுவதையே செய்கிறோம்…

நான் மட்டும் அல்ல, என் ஆடுகளும்.

பட்டியில் இருந்தாலும்….பட்டி நீங்கி பயணம் போனாலும்.

-கோஷான் சே-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

👆இது- வாசுவின் இந்த👇 கவிதைக்கான எதிர்வினை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாசித்தவரையில் எம்மவர்களின் கவிதைகளில் இதுவே மிக சிறந்த கவிதை(நான் கவிதை வாசிப்பது குறைவு)😁, எனக்கு ஒரு சந்தேகம்! கோசான் இது உங்களின் சொந்த கவிதையா?😁

1 hour ago, goshan_che said:

புரிந்துகொள் நண்பா…

யார் என்ன சொன்னாலும், நானே சொன்னாலும்…

உன் புத்திக்கு சரி எனப்படுவதை மட்டுமே ஏற்று கொள் என்பதுதான் எங்கள் அரிவரிப்பாடம்.

நாங்கள் தனிமனிதனை தொழுபவர்கள் அல்ல தோழா,

எவர் சொல்லுக்கும் நாம் கட்டுப்பட்டவர்களும் அல்ல.

எம் புத்திக்கு புலப்படுவதையே செய்கிறோம்…

நான் மட்டும் அல்ல, என் ஆடுகளும்.

பட்டியில் இருந்தாலும்….பட்டி நீங்கி பயணம் போனாலும்.

இந்த கொள்கை விளக்க பகுதி உண்மையில் தேவையற்ற ஒன்று என கருதுகிறேன் (வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்).

எனக்கு மிகவும் பிடித்த கவிதையாக உங்களின் இந்த கவிதை உள்ளது, இவ்வாறு எழுதுவதனை தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓணாண்டியின் கவிதையினை இப்போதுதான் வாசித்தேன், இப்போது புரிகிறது உங்கள் கவிதை அந்த கவிதைக்கு பதிலென ஆனால் புலம்பெயர்வு குறியீடு கவிதையின் கருப்பொருளாக அடிமைத்தனம், சமூககட்டுப்பாடு என்பவற்றை குறிப்பால் உணர்தியமையால் இது எமது சமூகத்திற்கான கவிதையாக நான் தவறாக பொருள்விளங்கிவிட்டேன்.

ஓணாண்டியின் கவிதை ஒரு படி மேல்,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, vasee said:

ஓணாண்டியின் கவிதையினை இப்போதுதான் வாசித்தேன், இப்போது புரிகிறது உங்கள் கவிதை அந்த கவிதைக்கு பதிலென ஆனால் புலம்பெயர்வு குறியீடு கவிதையின் கருப்பொருளாக அடிமைத்தனம், சமூககட்டுப்பாடு என்பவற்றை குறிப்பால் உணர்தியமையால் இது எமது சமூகத்திற்கான கவிதையாக நான் தவறாக பொருள்விளங்கிவிட்டேன்.

  1. ஊக்கத்துக்கும், இதை கவிதை என ஏற்றமைக்கும் நன்றி🤣.

  2. ஓம் அந்த கொள்கை விளக்கம் - “ஆடு தானாக பட்டியில் நிற்கிறது என காரணம் சொல்லாதே” என்ற வாசுவின் வரிகளுக்கான விளக்கமே.

  3. நீங்கள் பொருள் விளங்கியதில் தவறேதும் இல்லை.

  4. ஆனால் பெரியாரின் கொள்கைகளை அல்லது அவற்றில் பெரும்பகுதியை ஏற்று கொண்டு, நடைமுறைப்படுத்தும் சாதாரண மக்கள் கோடானு கோடிப்பேர் உள்ளார்கள். ஒரு சில இன்றைய அரசியல்-வியாதிகளின் செயல்பாட்டை வைத்து - ஒரு கொள்கையை மதிப்பிடுவது - கபடத்தனமானது.

15 minutes ago, vasee said:

ஓணாண்டியின் கவிதை ஒரு படி மேல்,

கவிநயத்தில் நிச்சயமாக.

பொருளில்….வாசகர் முடிவுக்கு விடுகிறேன்.

25 minutes ago, vasee said:

கோசான் இது உங்களின் சொந்த கவிதையா?😁

மறந்தே போனேன்…அக்மார்க் சொந்தச் சரக்குத்தான்🤣.

வாசுவின் கவிதையை வாசித்தவுடன் சில பத்து நிமிடங்களில் எழுதியது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அந்த ஆடுகளுக்கு குறி சுடப்படவில்லை. இந்த பட்டியில் இதற்கு முன் நின்ற அத்தனை ஆடுகளும் பல குறிகளை தாங்கித்தான் நின்றன - அந்த தாடிக்கார மேய்பனின் புத்தகத்தை படித்த பின் தான், குறிகள் ஏதும் என் ஆடுகளுக்கு இடப்படவே இல்லை.

ஒருகணம் ஆட்டுக்கும் குறி சுடுகிறார்களா என்று தலையே சுற்றி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒருகணம் ஆட்டுக்கும் குறி சுடுகிறார்களா என்று தலையே சுற்றி விட்டது.

ஆமா எனக்கும்தான்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒருகணம் ஆட்டுக்கும் குறி சுடுகிறார்களா என்று தலையே சுற்றி விட்டது.

கவிதை (?) சொன்னா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது🤣

3 minutes ago, alvayan said:

ஆமா எனக்கும்தான்...

large.IMG_2057.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

புரிந்துகொள் நண்பா…

யார் என்ன சொன்னாலும், நானே சொன்னாலும்…

உன் புத்திக்கு சரி எனப்படுவதை மட்டுமே ஏற்று கொள் என்பதுதான் எங்கள் அரிவரிப்பாடம்.

நாங்கள் தனிமனிதனை தொழுபவர்கள் அல்ல தோழா,

எவர் சொல்லுக்கும் நாம் கட்டுப்பட்டவர்களும் அல்ல.

எம் புத்திக்கு புலப்படுவதையே செய்கிறோம்…

நான் மட்டும் அல்ல, என் ஆடுகளும்.

👌 சிறப்பு

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் . ........ ஆட்டுக்காரனின் பிரலாபம் நியாயமானதே ...... ஆனாலும் காலமும், தலைமுறைகளும் அதை அடியோடு மாற்றிவிடும் மறக்கடித்தும் விடும், விட்டுகொண்டிருக்கின்றது . ........ இன்பமும் நிதியும் சேர்ந்து வரும் காலத்தில் ஆட்டுக்காரனையும் யார் நினைவில் வைத்திருப்பர் . ..........! 😁

கவிதைக்கு கவிதை நன்று கோஷான் .........!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கவிதை ஓணாண்டியின் கவிதை இவை இரண்டும் பேசும் அரசியலை தள்ளிவிட்டு பார்த்தால் இரண்டும் மிக சிறந்த கவிதைகள்.

இரு கவிதைகளும் அனத்து பொதுவான பிரச்சினயுடனும் ஒத்து போகிறது (அதுவே ஒரு சிற்ந்த இலக்கியத்திற்கான அடையாளமாக நான் கருதுகிறேன்).

On 22/2/2025 at 10:05, goshan_che said:

ஓம் அந்த கொள்கை விளக்கம் - “ஆடு தானாக பட்டியில் நிற்கிறது என காரணம் சொல்லாதே” என்ற வாசுவின் வரிகளுக்கான விளக்கமே.

அந்த கொள்கை விளக்க பகுதியினை எடுத்துவிட்டு அந்த அரசியலையும் தள்ளி வைத்துவிட்டு வாசித்து பாருங்கள் கவிதை சிறப்பாக இருப்பது போல் தோன்றும், வாசகரராக அதனையே நான் விரும்புகிறேன், ஆனால் அனைத்து வாசகர்களாலும் கவிதையினை புரிந்து கொள்ள முடியாது என்பது நியாயமே அதனால் அந்த கொள்கை விளக்க பகுதி தேவைதானோ என தற்போது கருதுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2025 at 09:41, suvy said:

உண்மைதான் . ........ ஆட்டுக்காரனின் பிரலாபம் நியாயமானதே ...... ஆனாலும் காலமும், தலைமுறைகளும் அதை அடியோடு மாற்றிவிடும் மறக்கடித்தும் விடும், விட்டுகொண்டிருக்கின்றது . ........ இன்பமும் நிதியும் சேர்ந்து வரும் காலத்தில் ஆட்டுக்காரனையும் யார் நினைவில் வைத்திருப்பர் . ..........! 😁

கவிதைக்கு கவிதை நன்று கோஷான் .........!

வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்?

மாபெரும் வீரர் (தலைவர்), மானம் காத்தோர் (பெரியார்) சரித்திரம் தனிலே நிற்கின்றார்❤️.

On 22/2/2025 at 00:31, விளங்க நினைப்பவன் said:

👌 சிறப்பு

நன்றி

2 hours ago, vasee said:

இந்த கவிதை ஓணாண்டியின் கவிதை இவை இரண்டும் பேசும் அரசியலை தள்ளிவிட்டு பார்த்தால் இரண்டும் மிக சிறந்த கவிதைகள்.

இரு கவிதைகளும் அனத்து பொதுவான பிரச்சினயுடனும் ஒத்து போகிறது (அதுவே ஒரு சிற்ந்த இலக்கியத்திற்கான அடையாளமாக நான் கருதுகிறேன்).

அந்த கொள்கை விளக்க பகுதியினை எடுத்துவிட்டு அந்த அரசியலையும் தள்ளி வைத்துவிட்டு வாசித்து பாருங்கள் கவிதை சிறப்பாக இருப்பது போல் தோன்றும், வாசகரராக அதனையே நான் விரும்புகிறேன், ஆனால் அனைத்து வாசகர்களாலும் கவிதையினை புரிந்து கொள்ள முடியாது என்பது நியாயமே அதனால் அந்த கொள்கை விளக்க பகுதி தேவைதானோ என தற்போது கருதுகிறேன்.

நன்றி. சூழமைவு இல்லாமலும் பார்க்கலாம் என்பதில் உடன்பாடே.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2025 at 00:18, ஈழப்பிரியன் said:

ஒருகணம் ஆட்டுக்கும் குறி சுடுகிறார்களா என்று தலையே சுற்றி விட்டது.

நானும் கேள்விப்பட்டதில்லைப் பிரியரே! ஆனால் ஆட்டையே சுட்டுத்தர “கொன்றால் பாவம் தின்றால் போகும்” என்ற பழமொழிக்கிணங்க, நானும் தின்றதுண்டு.😛

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.