Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீனியம்

----------------------

large.Parthenium.jpg

கள்ளியும் முள்ளும் இருந்த வறண்ட நிலத்தில்

பச்சையாக ஒன்று புதிதாக வந்தது

பார்க்க அழகாகவும்

படபடவென்று வளருதே என்றும்

இன்னும் வளர்த்தனர் 

அதில் இருக்கும் முட்கள்

அவை என்ன முட்கள் 

அவை வளர வளர போய்விடும் என்றனர்

அதை வளர்த்தவர்கள்

கெட்ட வாடை வருகுதே என்றால்

ஆனால் பசுமையாக இருக்குதே 

இது நிலத்தை காக்கும்

ஆடு மாட்டைக் காக்கும் 

இப்படி ஒன்று முன்னர் இருந்ததேயில்லை என்றனர்

நாங்கள் மூக்குகளை பொத்தி விட்டால்

அதன் வாடை அண்டாது என்றும்

சொன்னவர்கள் வாய்களை அடைத்தனர்

கள்ளியும் முள்ளும் 

காணாமல் போனது

பச்சை செடியின் சாதனை ஆனது

பரந்து வளர்ந்த பச்சை செடி

விஷத்தை கொட்டிக் கொட்டி

வறண்ட நிலத்தை இன்னும் கெடுத்து

அருகில் வருபவற்றை முள்ளாலும் கிழித்து

கெட்ட வாடையை பரப்பி

சீரழித்துக் கொண்டே இருக்கின்றது

இதுவரை மூக்குகளை மூடிக் கொண்டு இருந்தவர்கள் 

இனி கண்களையும் மூட வேண்டியது தான்

விஷத்தை முளையிலேயே கிள்ளாமல்

எத்தனை தடவைகள் தான் தவற விடுவது.

 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

விஷத்தை முளையிலேயே கிள்ளாமல்

எத்தனை தடவை தான் தவற விடுவது

இதை அழிப்பதற்கு எவ்வளவு பாடுபடுகிறார்கள்.

தேவையான ஒரு விடயத்தை அழகாக வடித்துள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

பார்த்தீனியம்

----------------------

large.Parthenium.jpg

கள்ளியும் முள்ளும் இருந்த வறண்ட நிலத்தில்

பச்சையாக ஒன்று புதிதாக வந்தது

பார்க்க அழகாகவும்

படபடவென்று வளருதே என்றும்

இன்னும் வளர்த்தனர் 

அதில் இருக்கும் முட்கள்

அவை என்ன முட்கள் 

அவை வளர வளர போய்விடும் என்றனர்

அதை வளர்த்தவர்கள்

கெட்ட வாடை வருகுதே என்றால்

ஆனால் பசுமையாக இருக்குதே 

இது நிலத்தை காக்கும்

ஆடு மாட்டைக் காக்கும் 

இப்படி ஒன்று முன்னர் இருந்ததேயில்லை என்றனர்

நாங்கள் மூக்குகளை பொத்தி விட்டால்

அதன் வாடை அண்டாது என்றும்

சொன்னவர்கள் வாய்களை அடைத்தனர்

கள்ளியும் முள்ளும் 

காணாமல் போனது

பச்சை செடியின் சாதனை ஆனது

பரந்து வளர்ந்த பச்சை செடி

விஷத்தை கொட்டிக் கொட்டி

வறண்ட நிலத்தை இன்னும் கெடுத்து

அருகில் வருபவற்றை முள்ளாலும் அழித்து

கெட்ட வாடையை பரப்பி

சீரழித்துக் கொண்டே இருக்கின்றது

இதுவரை மூக்குகளை மூடிக் கொண்டு இருந்தவர்கள் 

இனி கண்களையும் மூட வேண்டியது தான்

விஷத்தை முளையிலேயே கிள்ளாமல்

எத்தனை தடவை தான் தவற விடுவது.

 

பார்த்தீனியத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று தான் வெளியே தெரிகிறது, ஆனால் வேறெதையோ குறிக்கும் உருவகக் கவிதையெனப் புரிகிறது!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

பார்த்தீனியம்

----------------------

large.Parthenium.jpg

கள்ளியும் முள்ளும் இருந்த வறண்ட நிலத்தில்

பச்சையாக ஒன்று புதிதாக வந்தது

பார்க்க அழகாகவும்

படபடவென்று வளருதே என்றும்

இன்னும் வளர்த்தனர் 

அதில் இருக்கும் முட்கள்

அவை என்ன முட்கள் 

அவை வளர வளர போய்விடும் என்றனர்

அதை வளர்த்தவர்கள்

கெட்ட வாடை வருகுதே என்றால்

ஆனால் பசுமையாக இருக்குதே 

இது நிலத்தை காக்கும்

ஆடு மாட்டைக் காக்கும் 

இப்படி ஒன்று முன்னர் இருந்ததேயில்லை என்றனர்

நாங்கள் மூக்குகளை பொத்தி விட்டால்

அதன் வாடை அண்டாது என்றும்

சொன்னவர்கள் வாய்களை அடைத்தனர்

கள்ளியும் முள்ளும் 

காணாமல் போனது

பச்சை செடியின் சாதனை ஆனது

பரந்து வளர்ந்த பச்சை செடி

விஷத்தை கொட்டிக் கொட்டி

வறண்ட நிலத்தை இன்னும் கெடுத்து

அருகில் வருபவற்றை முள்ளாலும் கிழித்து

கெட்ட வாடையை பரப்பி

சீரழித்துக் கொண்டே இருக்கின்றது

இதுவரை மூக்குகளை மூடிக் கொண்டு இருந்தவர்கள் 

இனி கண்களையும் மூட வேண்டியது தான்

விஷத்தை முளையிலேயே கிள்ளாமல்

எத்தனை தடவைகள் தான் தவற விடுவது.

 

சீ…பார்தீனிய விசம் பற்றிய கவிதை அருமை….

பூச்சி மருந்தைக்கூட இனிக்க இனிக்க பருக்குவது எல்லாம் வேற நிலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஊரில் இருக்கும் வரைக்கும் இந்த அபாயகரமான செடியைப்பற்றி கேள்விப்படவேயில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இதை அழிப்பதற்கு எவ்வளவு பாடுபடுகிறார்கள்.

தேவையான ஒரு விடயத்தை அழகாக வடித்துள்ளீர்கள்.

பார்த்தீனியம் பற்றி சிறு வயதில் ஒரு கட்டுரையை எங்கேயோ வாசித்திருந்தேன். இந்தப் பெயரே புதுமையாக இருந்தது, அப்படியே மனதில் அது ஒட்டியும் விட்டது. பின்னர் தான் இந்தச் செடியை/களையை அதன் பெயருடன் சேர்த்து அடையாளம் கண்டுகொண்டேன்.

இந்த ஆக்கத்தில் இன்றைய உலகில் இருக்கும் சில அரசியல்வாதிகளை பார்த்தீனியங்களாக உருமாற்றி விட்டுள்ளேன்.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பார்த்தீனியத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று தான் வெளியே தெரிகிறது, ஆனால் வேறெதையோ குறிக்கும் உருவகக் கவிதையெனப் புரிகிறது!

👍...........

இன்று ஓணாண்டியார் விஷச்செடி என்று ஒரு திரி ஆரம்பித்திருந்தார். அந்த திரியின் தொடர்ச்சி இது.............

37 minutes ago, goshan_che said:

சீ…பார்தீனிய விசம் பற்றிய கவிதை அருமை….

பூச்சி மருந்தைக்கூட இனிக்க இனிக்க பருக்குவது எல்லாம் வேற நிலை.

சீ. பார்த்தீனியம்

அ. பார்த்தீனியம்

T. பார்த்தீனியம் என்று என்னை/எங்களைச் சுற்றி மூன்று இருக்கின்றன.................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

சீ. பார்த்தீனியம்

அ. பார்த்தீனியம்

T. பார்த்தீனியம் என்று என்னை/எங்களைச் சுற்றி மூன்று இருக்கின்றன.................🤣

உயிரியல் பெயரீட்டு முறையின் தந்தையான கார்லோஸ் லினயஸ் கூட இப்படி இனிசிசல் போட்டு பார்தீனியத்தை வகைபசுத்தவில்லை.

முன்பு யாழ் நகரில் ஆரிய குளத்தில் மண்டி கிடந்தது…இப்போ திராவிட குள(ல)தில் பரவ முயல்கிறது.

பிகு

எங்கள் வீட்டில் பார்த்தீனியத்தை இனம் கண்டு வெட்டி விட துடிப்போர் கூட, பக்கத்து வீட்டு பார்தீனியத்தை நீர் ஊற்றி வளர்பதையும் காண்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

புறவயமாக இது அ வைக் குறித்தாலும், அகவயமாகநமக்குள்ளே வளரும் பற்பல பார்த்தீனியங்களையும் யோசிக்கிறேன். சிறப்பான பல பரிமாணங்களைத் தரக்கூடிய கவிதை @ரசோதரன் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்தீனியம் அழிக்கமுடியாததொன்றல்ல ஆனால் சிலருக்கு அது இருப்பது அவசியமாய் இருக்கிறது , அதனால் அதுவும் தன்பாட்டுக்கு வளர்ந்து கொண்டிருக்கு .......... ! 😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, villavan said:

புறவயமாக இது அ வைக் குறித்தாலும், அகவயமாகநமக்குள்ளே வளரும் பற்பல பார்த்தீனியங்களையும் யோசிக்கிறேன். சிறப்பான பல பரிமாணங்களைத் தரக்கூடிய கவிதை @ரசோதரன் அண்ணை.

🙏.........

நல்ல நெகிழ்வான தலைப்பும், அடக்கமும் தான், வில்லவன்...............

7 hours ago, suvy said:

பார்த்தீனியம் அழிக்கமுடியாததொன்றல்ல ஆனால் சிலருக்கு அது இருப்பது அவசியமாய் இருக்கிறது , அதனால் அதுவும் தன்பாட்டுக்கு வளர்ந்து கொண்டிருக்கு .......... ! 😁

🤣...............

அந்த இடமே சிதைந்து அழிந்து போகட்டும் என்ற நோக்கம் சிலருக்கு இருக்கும் போல, சுவி ஐயா.......

இந்த பார்த்தீனியம் இந்திய படையால் அல்லவா யாழ்ப்பாணம் மற்றும் தமிழ் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டது?

ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி 'பார்த்தீனியம்' என்ற நாவலை, இந்திய படையின் வருகையையும், அவர்களின் அட்டூழியங்களையும் பின்புலத்தில் வைத்து படைத்துள்ளார். ஈழத்தமில் இலக்கியத்தில் பார்த்தீனியம் நாவலும் ஒரு சிறு வரலாற்று ஆவணம்.

தமிழ்நதி மிகச் சிறந்த ஈழத்து படைப்பாளிகளில் ஒருவர். அண்மையிலும் தங்க மயில்வாகனம் எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இந்த பார்த்தீனியம் இந்திய படையால் அல்லவா யாழ்ப்பாணம் மற்றும் தமிழ் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டது?

ஈழத்து எழுத்தாளர் தமிழ்நதி 'பார்த்தீனியம்' என்ற நாவலை, இந்திய படையின் வருகையையும், அவர்களின் அட்டூழியங்களையும் பின்புலத்தில் வைத்து படைத்துள்ளார். ஈழத்தமில் இலக்கியத்தில் பார்த்தீனியம் நாவலும் ஒரு சிறு வரலாற்று ஆவணம்.

தமிழ்நதி மிகச் சிறந்த ஈழத்து படைப்பாளிகளில் ஒருவர். அண்மையிலும் தங்க மயில்வாகனம் எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்

இந்த தகவல்களை நான் முன்னர் அறிந்திருக்கவில்லை, நிழலி.................👍.

2016ம் ஆண்டே தமிழ்நதி இந்த நாவலை வெளியிட்டு விட்டார் என்று இருக்கின்றது. ஆனாலும், இன்று தான் அவரையும், அவரின் எழுத்துகள் பற்றியும் கேள்விப்படுகின்றேன்........ தமிழ்நாடு என்னை/எங்களை முழுங்கிவிட்டது...............🤣.

1 minute ago, ரசோதரன் said:

இந்த தகவல்களை நான் முன்னர் அறிந்திருக்கவில்லை, நிழலி.................👍.

2016ம் ஆண்டே தமிழ்நதி இந்த நாவலை வெளியிட்டு விட்டார் என்று இருக்கின்றது. ஆனாலும், இன்று தான் அவரையும், அவரின் எழுத்துகள் பற்றியும் கேள்விப்படுகின்றேன்........ தமிழ்நாடு என்னை/எங்களை முழுங்கிவிட்டது...............🤣.

அவரின் எழுத்தினூடக முதலில் அறிமுகமாகி, இப்போது ஒரு நல்ல நண்பியாகவும் உள்ளார் எனக்கு. அவர் முகனூலில் எழுதும் எழுத்துகள் / குறிப்புகள் கூட அருமையாக இருக்கும்.

நான் விரும்பி வாசிக்கும் நாவல்களில் / சிறுகதைகளில் பல ஈழத்து மற்றும் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புகளும் அடங்கும். யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதும் யதார்த்தனின் நாவலான 'நகுலாத்தை' தான் நான் வாசித்த அனைத்து நாவல்களிலும் மிகவும் பிடித்த நாவல். முடிந்தால் வாசியுங்கள் அதை. எம் மண்ணில் இருக்கும் குல தெய்வ / பெண் தெய்வ வழிபாடு, வன்னி மண்ணில் புதைந்து கிடக்கும் ஆயிரமாயிரம் கதைகளில் சில, இறுதிப் போர் போன்றவற்றின் பின்னனியில் எழுதப்பட்ட நாவல் அது. யாழிலும் அது பற்றிய குறிப்பை எழுதியிருந்தேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.