Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோழையாக நீ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே புலத்தை பொறுத்தவரை இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்று தான் கூறமுடியும் உதாரணதிற்கு என்னை எடுத்து கொள்ளுங்கோ இங்கே படிக்கிறேன் படித்து முடித்து நல்ல வேலை கிடைக்கும் அதற்கு பின்னர் ஒரு வீட்டை வாங்குவன் நல்லதொரு வாகனத்தை வாங்குவன் இதை எல்லாம் ஒரு 26 வயசிற்குள்ள செய்து முடித்திடுவன் அதே போல் தான் இங்கே இருக்கும் பெண்ணும் செய்வா இப்படியான நிலையில் "சீதனம்" என்ற பிரச்சினை வருவதில்லை என்றே சொல்லலாம்!!

உங்கட தன்னம்பிக்கையைப் பாராட்டலாம். ஆனால் புகலிடத்தில வீடோ வாகனமோ.. ஒரு "நல்ல வேலைல" இருந்து சுதந்திரமா வாங்கிப் போட முடியாது என்றதை ஒப்புக் கொள்ள வேண்டும். நீங்கள் வாங்கப் போறது நீண்ட கால கடனடிப்படையில். அப்படி வாங்கும் போது தினமும் உழைச்சே ஆகனும் என்ற நிலைக்குள்ள உங்களை தள்ளிவிடுறீங்க. ஒரு நாள் வேலைக்குப் போகல்லைன்னாக் கூட கடன் கழுத்தைத் திருகும் நிலை உருவாகிடும். அப்படியான கட்டமைப்புத்தான் புகலிடத்தில்.

ஊரில அப்படியல்ல. ஊரில வீடு வளவு காணி பூமி சொந்தமா இருக்கும். உழைக்கிறது மிச்சமா இருக்கும். ஊரில "நல்ல வேலை" என்றதில அர்த்தம் இருக்கு. புகலிடத்தில "நல்ல வேலை" என்றால் அறவிடப்படும் வரியும் "நல்லா" இருக்கும்.

எனி நல்ல வேலைல உள்ளவை ஆடம்பரமா வேற வாழ விரும்புவினம். அதுதான் புகலிடத்தில் பொருளாதார நிறுவமைப்பின் இலக்கே. உழைக்கிறதை செலவழிக்கும் வகையில் தான் புகலிடத்தில் பொருளாதார கட்டமைப்பு வலை மக்களை நோக்கி விரிக்கப்பட்டிருக்கு. அதில் அறிந்தும் தவிர்க்க முடியாமல் மக்கள் சிக்கித் தவிக்கிறதை நீங்கள் சின்னப்பிள்ளை இன்னும் காணேல்லப் போல. அனுபவிக்கேக்க புரியும் ராசா.. கொஞ்சம் பொறுங்கோ..! யுனில இருக்கேக்க வெளி உலகம் சொர்க்கமாத்தான் தெரியும். சுப்பர் சுப்பர் கனவுகள் சுதந்திரமா சுழன்றடிக்கும். வெளில வாங்க நிஜ உலகைக் காண்பீங்க..! :)

சீதனம் என்பது ஊரில பெண்ணின் பொருளாதார நிலையை மையப்படுத்திதான் கொடுக்கிறது. அவா நல்ல வேலையில இருந்தாலும் கொடுப்பினம். வீடு வளவை கொடுப்பினம். காரணம் இளம் சோடிகளின் தலையில பெரிய சுமையை தூக்கி வைச்சு அதுகளின்ர வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே சுமைகளை கூட்டி வாழ்க்கையில் விரக்தி ஏற்படுபதைத் தவிர்க்க.

ஆனால் புகலிடத்தில் எத்தினை இளம் சோடிகள் செலவுக்கு ஏற்ப போதிய வருமானமின்றி கிறடிட் காட்டுக்க மாட்டுப்பட்டு.. விவாகரத்துக்களை வரை போகினம். சும்மா ராசா.. புகலிடத்தைப் பற்றி பெரிசா படம் காட்டுறதை தவிர்த்து நடைமுறை யதார்த்தங்களைச் சொல்லுங்கோ. அப்பதான் தாயக மக்கள் புகலிடத்துக்கு வரேக்க அதற்கேற்ப தயாரிப்புக்களை செய்வினம். இங்க பல கனவோட சீதனமில்லாமல் மாப்பிள்ளை கிடைக்குது என்று கட்டி வந்து, சுப்பர் மார்க்கட்டையும் மக்டொனால்டுகளையும் மலிவு விலைக்கடைகளையும் நம்பி எத்தனை குடும்பங்கள் வாழுது.

எத்தனை பேர் தகுந்த வருமானமின்றி அரச பணத்தில அரச வீடுகளில வாழினம். ஊரில இருக்கிறவங்க காலப்போக்கில சுதந்திர வாழ்க்கைக்குள்ள வாறாங்க. புகலிடத்தில உள்ளவை காலப்போக்கில கடன் வாழ்க்கைக்குள்ள வாறாங்க. அவங்க கடன் அவங்க பென்சன் வாங்கேக்கதான் தீரும். அதுக்குப் பிறகு.. என்னத்தை வாழ்ந்து...???! இதுதான் புகலிட வாழ்க்கை. சுமைகள் கூடிய வாழ்க்கை..! ஊரில சுமைகள் குறைந்த வாழ்க்கை. அதற்கு சீதனமும் ஒரு வகையில உதவுது பெண்களைப் பொறுத்தவரை. :)

Edited by nedukkalapoovan

உங்கட தன்னம்பிக்கையைப் பாராட்டலாம். ஆனால் புகலிடத்தில வீடோ வாகனமோ.. ஒரு "நல்ல வேலைல" இருந்து சுதந்திரமா வாங்கிப் போட முடியாது என்றதை ஒப்புக் கொள்ள வேண்டும். நீங்கள் வாங்கப் போறது நீண்ட கால கடனடிப்படையில். அப்படி வாங்கும் போது தினமும் உழைச்சே ஆகனும் என்ற நிலைக்குள்ள உங்களை தள்ளிவிடுறீங்க. ஒரு நாள் வேலைக்குப் போகல்லைன்னாக் கூட கடன் கழுத்தைத் திருகும் நிலை உருவாகிடும். அப்படியான கட்டமைப்புத்தான் புகலிடத்தில்.

ஊரில அப்படியல்ல. ஊரில வீடு வளவு காணி பூமி சொந்தமா இருக்கும். உழைக்கிறது மிச்சமா இருக்கும். ஊரில "நல்ல வேலை" என்றதில அர்த்தம் இருக்கு. புகலிடத்தில "நல்ல வேலை" என்றால் அறவிடப்படும் வரியும் "நல்லா" இருக்கும்.

எனி நல்ல வேலைல உள்ளவை ஆடம்பரமா வேற வாழ விரும்புவினம். அதுதான் புகலிடத்தில் பொருளாதார நிறுவமைப்பின் இலக்கே. உழைக்கிறதை செலவழிக்கும் வகையில் தான் புகலிடத்தில் பொருளாதார கட்டமைப்பு வலை மக்களை நோக்கி விரிக்கப்பட்டிருக்கு. அதில் அறிந்தும் தவிர்க்க முடியாமல் மக்கள் சிக்கித் தவிக்கிறதை நீங்கள் சின்னப்பிள்ளை இன்னும் காணேல்லப் போல. அனுபவிக்கேக்க புரியும் ராசா.. கொஞ்சம் பொறுங்கோ..! யுனில இருக்கேக்க வெளி உலகம் சொர்க்கமாத்தான் தெரியும். சுப்பர் சுப்பர் கனவுகள் சுதந்திரமா சுழன்றடிக்கும். வெளில வாங்க நிஜ உலகைக் காண்பீங்க..!

சீதனம் என்பது ஊரில பெண்ணின் பொருளாதார நிலையை மையப்படுத்திதான் கொடுக்கிறது. அவா நல்ல வேலையில இருந்தாலும் கொடுப்பினம். வீடு வளவை கொடுப்பினம். காரணம் இளம் சோடிகளின் தலையில பெரிய சுமையை தூக்கி வைச்சு அதுகளின்ர வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே சுமைகளை கூட்டி வாழ்க்கையில் விரக்தி ஏற்படுபதைத் தவிர்க்க.

ஆனால் புகலிடத்தில் எத்தினை இளம் சோடிகள் செலவுக்கு ஏற்ப போதிய வருமானமின்றி கிறடிட் காட்டுக்க மாட்டுப்பட்டு.. விவாகரத்துக்களை வரை போகினம். சும்மா ராசா.. புகலிடத்தைப் பற்றி பெரிசா படம் காட்டுறதை தவிர்த்து நடைமுறை யதார்த்தங்களைச் சொல்லுங்கோ. அப்பதான் தாயக மக்கள் புகலிடத்துக்கு வரேக்க அதற்கேற்ப தயாரிப்புக்களை செய்வினம். இங்க பல கனவோட சீதனமில்லாமல் மாப்பிள்ளை கிடைக்குது என்று கட்டி வந்து, சுப்பர் மார்க்கட்டையும் மக்டொனால்டுகளையும் மலிவு விலைக்கடைகளையும் நம்பி எத்தனை குடும்பங்கள் வாழுது.

எத்தனை பேர் தகுந்த வருமானமின்றி அரச பணத்தில அரச வீடுகளில வாழினம். ஊரில இருக்கிறவங்க காலப்போக்கில சுதந்திர வாழ்க்கைக்குள்ள வாறாங்க. புகலிடத்தில உள்ளவை காலப்போக்கில கடன் வாழ்க்கைக்குள்ள வாறாங்க. அவங்க கடன் அவங்க பென்சன் வாங்கேக்கதான் தீரும். அதுக்குப் பிறகு.. என்னத்தை வாழ்ந்து...???! இதுதான் புகலிட வாழ்க்கை. சுமைகள் கூடிய வாழ்க்கை..! ஊரில சுமைகள் குறைந்த வாழ்க்கை. அதற்கு சீதனமும் ஒரு வகையில உதவுது பெண்களைப் பொறுத்தவரை.

தாத்தா என்னை பாராட்டியதிற்கு மிக்க நன்றி :( !!வீடு வாங்குவது பெரிய விசயம் அல்ல "லோனில்" லட்டி கொண்டு இருக்க வேண்டும் வாகனம் சொந்த காசில் வாங்கலாம் தானே தாத்தா அதில ஒரு பெரிய பிரச்சினை இருப்பது போல எனக்கு தெரியவில்லை :) !!ஏன் தாத்தா வருவாயிற்கு மேல ஆசைபட்டு வாங்காம எங்கள் வருவாயிற்கு ஏற்ற மாதிரி கடனைடிப்படையில் வாங்கினா ஒரு பிரச்சினையும் இல்லை என்பது உங்களுக்கு தெரியாததா!!இந்த கட்டமைப்பில் பல நன்மைகளும் தீமைகளும் இருகிறது ஏன் நாம் நல்ல பக்கத்தை பார்க்க கூடாது தாத்தா!! :)

ஊரில காணி எல்லாம் சொந்தமாக இருக்கும் என்பது சரி ஒத்து கொள்கிறேன் அதே போல் புலத்தில் எங்களிடம் சொந்தமாக (கடன் அடிபடையில்" வாங்கினாலும் எமக்கு என்று வருகிறது ஆனா அங்கே தாத்தாவின் அல்லது அப்பாவின் சொத்தை அல்லவா எம் சொத்து என்று சொல்கிறோம் இது வெட்கமான செயற்பாடு இல்லையா :) மற்றையவர்களை பற்றி தெரியாது என்னால் அப்படி இருக்க முடியாது தாத்தா!!புகலிடத்தில வரியை அறவிடாலும் தாத்தா வயசு போன காலத்தில (உங்களை மாதிரி வயசு வந்த சமயம்) எவ்வளவு உதவிகளை அரசு செய்கிறது ஊரில மகன் பார்ப்பானா என்று ஏங்கி கொண்டு இருக்க வேண்டும் :) இங்கே அந்த பிரச்சினை இருக்கா ஏனைய நாடுகளை பற்றி தெரியாது மெடிகல் இலவசமாக அனைத்து மக்களிற்கும் கொடுக்கிறார்கள் இங்கே ஆகவே வரியை பற்றி பெரிதாக கதைப்பது பிரயோசனமற்றது தாத்தா!! :)

தாத்தா கிரடிட் கார்ட்டில மாட்டு பட்டு தவிர்கிறது எல்லாம் திருமணம் முடிந்து வாழ்கையின் நடுபகுதியிலே வாறவை சரியா அவர்களின் பிள்ளைகளை எடுத்து கொண்டா இந்த பிரச்சினையை காணவே மாட்டீங்க அப்படி நடந்தா வெகு சொற்பமே தாத்தா!!தாத்தா படம் எல்லாம் காட்டவில்லை எல்லாவற்றையும் நன்கு அநுபவித்து கொண்டு புகலிடத்தை குறை சொல்வது என்னால் முடியாது!!அதோட தாத்தா மக்டோனால்ஸ்சில் வேலை செய்வது ஒன்றும் தரகுறைவு இல்லையே அங்கே வேலை செய்தும் சந்தோசமாக வாழமுடியும் இங்கே ஆனா இதை மாதிரி ஊரில மக்டோனால்சில் வேலை செய்து காப்பாற்றமுடியுமா :) !!

ஊரில இருகிறவை காலபோக்கிறு சுகந்திர வாழ்க்கை வாழவில்லை தங்களை ஏமாற்றி கொண்டு வாழ்கையை கழிக்கீனம் என்றே சொல்லலாம் ஆனா இங்கே உள்ளவர்கள் நன்கு வாழ்க்கையை அநுபவிக்கிறார்கள் என்றே சொல்லலாம் :) !!ஊரை பொறுத்தவரை சுமை குறைந்த மாதிரி நடித்து தம் வாழ்க்கையை கொண்டு செல்லும் ஒரு வாழ்க்கை முறை இங்கே நடிக்கவில்லை அநுபவிக்கிறார்கள் வாழ்க்கையை அதில் சீதனம் என்பது பொருட்டல்ல!!சீதனம் ஊரில பெண்களை உதவில்லை இன்னும் அவர்களை மேலே உயரவிடாம தவிர்க்க ஊரில் உள்ள பெருசுகள் பின்பற்றும் ஒரு வகை தந்திரோபாயம் தாத்தா!! :(

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"வாழ்க்கையை அநுபவிக்க வேண்டும் ஒழிய நடித்து வாழ்க்கையை கொன்டு செல்ல கூடாது"

Edited by Jamuna

அட...இப்படி ஒருவிடையம் இருக்கு என்பதை மறந்து கட்டியாச்சு...... என்ன மாதிரி கட்டினாப்பிறகும் வாங்கலாமோ....??? யாராவது ஐடியாச் சொல்லுங்கப்பா...? :)

  • கருத்துக்கள உறவுகள்

அட...இப்படி ஒருவிடையம் இருக்கு என்பதை மறந்து கட்டியாச்சு...... என்ன மாதிரி கட்டினாப்பிறகும் வாங்கலாமோ....??? யாராவது ஐடியாச் சொல்லுங்கப்பா...? <_<

நானும் அதைத்தான் யோசிச்சு கொண்டு இருக்கிறேன்... ஏதாவது ஜடியா கிடைச்சால் எனக்கும் சொல்லுங்கோ.... :lol:

நிச்சயமாக ஆண் மட்டும் வாங்க மாட்டேன் என்று உறுதியாக இருந்தால் 70% குறையும், உங்களுக்கு இதை எதிர்த்து நிக்க சக்தியில்லையா??ஏன் உங்களுக்கு சுய புத்தியில்லையா, ??

நன்றி

சுய புத்தியுடன் இலக்கியன் எழுதிக் கொள்ளவது என்னவெனில் :lol:

100 பவுனில தாலி கட்ட மாப்பிளை எங்கே போவது <_<:D

  • தொடங்கியவர்

சுய புத்தியுடன் இலக்கியன் எழுதிக் கொள்ளவது என்னவெனில் :lol:

100 பவுனில தாலி கட்ட மாப்பிளை எங்கே போவது <_<:D

100 பவுனில் நிச்சயமாக இந்த புது சமூதாயம் எதிர்பார்க்காது!!

நீங்கள் இந்த கிலட்டு சமூதாயத்துக்குள் இருந்து வேளியே வாருங்கள்!!

இப்படியே எத்தனை வருடங்களுக்கு கதைத்து நல்ல விடயங்களை முன்னேடுக்க தடையாக இருக்க பேறீங்கள்??

இப்படி சொல்லுவதுக்கு மூதியேறே என்னை மன்னித்து விடுங்கள்!!

Edited by இனியவள்

  • கருத்துக்கள உறவுகள்

இனியவள் நீங்கள் வழமையாக எல்லோரும் செய்வது போல முதியோர்கள் மீது குற்றம் காட்டிவிட்டு தப்பிக்க முனைகிறீர்கள்.

புலம்பெயர்ந்த இடங்களில் பெரும்பாலான தமிழர்களின் விசேட நிகழ்வுகளின் போது இளம் பெண்கள் அணிந்திருக்கும் நகைகளின் அளவு ஊரில வயதானவங்க அணிந்ததைக் காட்டிலும் பல மடங்கு அதிகம்.

நீங்கள் புகலிடத்தில எங்கையோ தமிழர்கள் அல்லாத இடத்தில வாழுறீங்க போல...!! அல்லது உண்மையை மறைச்சு வயதானவங்க மீது குற்றத்தை சுமத்திட்டு தப்பிக்க முனையுறீங்க...!

கீழிரண்டு படங்களையும் பாருங்க.. சில இளம் பெண்களின் கழுத்துகளை அழங்கரிப்பவையை..???!

http://www.venkateswara.org.uk/photos/part...IMG_4208001.jpg

http://www.venkateswara.org.uk/photos/part...IMG_4215001.jpg

இவை சும்மா சாம்பிள்.. இதை விட மோசமா அணிந்து கொண்டு வருவதை வருடா வருடம் கோவில் திருவிழாக்களில் காணலாம்..! வயதானவங்களை நோக்கி வெளில வா என்று கூவிறதை விட்டிட்டு.. இந்த இளசுகளை நோக்கிக் கூவுங்க. பெண்களே பெண்களை நோக்கி.. வருகினமோ பாப்பம். <_<:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் நெடுக்காலை போவான்!

100 பவுனில் நிச்சயமாக இந்த புது சமூதாயம் எதிர்பார்க்காது!!

நீங்கள் இந்த கிலட்டு சமூதாயத்துக்குள் இருந்து வேளியே வாருங்கள்!!

இப்படியே எத்தனை வருடங்களுக்கு கதைத்து நல்ல விடயங்களை முன்னேடுக்க தடையாக இருக்க பேறீங்கள்??

இப்படி சொல்லுவதுக்கு மூதியேறே என்னை மன்னித்து விடுங்கள்!!

இனியவள் உங்கள் கோபம் ஆண்வர்க்கம் மீது மட்டும் ஏற்படுத்துவது நியாயமானதாக படவில்லை நிதானமாக சிந்தித்தால் புரிந்து கொள்ள முடியும். ஒரு கை மட்டும் தட்டுவதால் ஓசை வராது இரண்டு கைகளும் தட்டப்பட வேண்டும் .

எனக்கும் சீதனம் இதில் நம்பிக்கையில்லை. இனியவளின் கோபம் இப்போது புரிகிறது இப்போது புலம் பெயர் நாட்டில் மணமகளின் வயதுக்கு தாலி கட்டுகினமாம். அதுதான் புது நாகரீகமாம் :unsure::blink:

  • தொடங்கியவர்

இனியவள் உங்கள் கோபம் ஆண்வர்க்கம் மீது மட்டும் ஏற்படுத்துவது நியாயமானதாக படவில்லை நிதானமாக சிந்தித்தால் புரிந்து கொள்ள முடியும். ஒரு கை மட்டும் தட்டுவதால் ஓசை வராது இரண்டு கைகளும் தட்டப்பட வேண்டும் .

என் கோபம் ஆண்வர்க்கம் மீது இல்லை என்று பிறிந்து கொண்ட உங்களுக்கு எனது நன்றிகள்!!

நீங்கள் அனைவரும் நல்லவர்கள், வள்ளவர்கள்... இப்ப சந்தேசமா ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.