Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

08 Apr, 2025 | 03:23 PM

image

"கலிப்சோ" எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட தொடருந்து சேவையானது நானுஓயா மற்றும் தெமோதரை புகையிரத நிலையங்களுக்கு இடையே இன்று (08) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த தொடருந்து அதன் பயணத்தை ஒவ்வொரு  செவ்வாய்க்கிழமையும் காலை 8.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து ஆரம்பிக்கும் என கூறப்படுகிறது.

WhatsApp_Image_2025-04-08_at_1.29.27_PM.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு நானுஓயா புகையிரத நிலைய வளாகத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நானுஓயாவிலிருந்து தெமோதரை நோக்கி  பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியிடமிருந்தும் 10 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படுவதுடன் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா ரயில் பெட்டிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், இந்த ரயில் உணவு, இசை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளது. தற்போது நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மலையக தொடருந்து பாதையின் அதிசயங்களை பார்த்து இரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாகவே இந்த ரயில் சேவையை ஆரம்பித்ததாகவும், தெமோதரை வரை இயங்கும் ரயில் மீண்டும் பண்டாரவளை வரையிலும், பின்னர் தெமோதரையிலிருந்து  பதுளை வரையிலும் இயக்கப்படும் என்றும்  இந்த ரயிலில் பயணித்த ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த தெரிவித்தார். 

மேலும், விரைவில் மேலதிகமாக "கலிப்சோ" ரயில்களை சேவையில் இணைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டார். 

WhatsApp_Image_2025-04-08_at_1.29.20_PM_

WhatsApp_Image_2025-04-08_at_1.29.15_PM.

WhatsApp_Image_2025-04-08_at_1.29.16_PM.

WhatsApp_Image_2025-04-08_at_1.29.17_PM.

WhatsApp_Image_2025-04-08_at_1.29.19_PM.

WhatsApp_Image_2025-04-08_at_1.29.14_PM.

WhatsApp_Image_2025-04-08_at_1.29.20_PM.

WhatsApp_Image_2025-04-08_at_1.29.21_PM.

WhatsApp_Image_2025-04-08_at_1.29.22_PM.

WhatsApp_Image_2025-04-08_at_1.29.23_PM.


‘கலிப்சோ’ ரயில் சேவை நானுஓயாவிலிருந்து ஆரம்பம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

மசாச் தொடரூந்து என்னாச்சு?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

மசாச் தொடரூந்து என்னாச்சு?

அதை இப்ப ஒரு இடத்தில் நிற்பாட்டி கோட்டலாக மாத்தியாச்சு😁

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வாரமொருமுறை மட்டும்?

ஏழு நாள் இரு தடவை என்றாலும் சனம் வரும்.

அப்படி பட்ட ரம்மியமான இடம்.

உலகில் காண வேண்டிய ரயில் பயணங்களில் முதல் 5க்குள் வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலிப்சோ ரயிலின் முதல் நாள் வருமானம் 7 இலட்சம் ரூபா.

10 Apr, 2025 | 04:07 PM

image

நானுஓயா மற்றும் தெமோதரை ரயில் நிலையங்களுக்கு இடையே திறந்தவெளி காட்சிக்கூடங்களைக் கொண்ட “கலிப்சோ" ரயில் சேவையின் முதல் நாளில்  720,000 ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாக ரயில் திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வஜிர பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் தனது முதல் சேவையை செவ்வாய்க்கிழமை (08) காலை நானுஓயாவிலிருந்து தெமோதரை ரயில் நிலையத்துக்கு  ஆரம்பித்தது.

இதன்போது, 172  இருக்கைகள் வெறுமையாக  இருந்ததோடு, 72  பயணிகள் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர்.

அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் 153,000 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டிருக்கும்.

கலிப்சோ ரயில், வழித்தடத்தில் இயற்கை அழகை வெளிப்படுத்தும் வகையில் விசேடமாக  வடிவமைக்கப்பட்டுள்ளது. இது திறந்தவெளி காட்சிக்கூடங்கள்,  உணவு, இசை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வசதிகளைக் கொண்டுள்ளது. 

பயணத்தின் விசேட அம்சமாக சுற்றுலாப் பயணிகள்  உலகப் புகழ்பெற்ற ஒன்பது வளைவுப் பாலத்தின் அழகை அனுபவிக்க நிறுத்தப்படும். 

அத்தோடு, ரயில் பல சுரங்கப்பாதைகள் வழியாகச் செல்லும். இந்த ரயில் பயணம் 4 1/2 மணித்தியாலங்களை கொண்டமைந்துள்ளது.

இந்த ரயில் பயணம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு நானுஓயாவிலிருந்து புறப்பட்டு தெமோதரை ரயில் நிலையத்தை பிற்பகல் 12.25 மணிக்கு சென்றடையும்.

மீண்டும் தெமோதரை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1:15 மணிக்கு புறப்பட்டு நானுஓயாவை மாலை 5:35 மணிக்கு  சென்றடையும்.

நானுஓயாவிலிருந்து தெமோதரை நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியிடமிருந்தும் 10 ஆயிரம் ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது.

கலிப்சோ ரயிலின் முதல் நாள் வருமானம் 7 இலட்சம் ரூபா | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.