Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20250410-WA0066.jpg?resize=750%2C375

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – கள ஆய்வில் ஈடுப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்!

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரி, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ஆகியோர் இணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான கலந்துரையாடலில் ஈடுப்பட்டதோடு, கள விஜயத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.

IMG-20250410-WA0068.jpg?resize=600%2C400

மண்டைத்தீவு பகுதியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அதனுடைய தற்போதைய நிலைமை தொடர்பாகவும் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, இதற்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டது.

வடக்கு பிராந்தியத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான ஆரம்ப திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.

IMG-20250410-WA0069.jpg?resize=600%2C400

இந்த முயற்சியினால் வடக்கு மாகாணத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கப்பெருவதோடு, கிரிக்கெட் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய அவர்கள் மைதானத்தின் கட்டுமானத்திற்காக நிதி உதவி வழங்குமாறு கடந்த வாரம் வருகை தந்த இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

https://athavannews.com/2025/1428183

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா குழுவுக்கு மட்டும் ஒரு தமிழரையும் எடுக்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க  முழுமூச்சுடன் செயற்படும் சனத் ஜயசூரிய 

Published By: VISHNU 16 APR, 2025 | 02:15 AM

image

(ரொபட் அன்டனி)

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நாங்கள் அமைத்தே தீருவோம். இதனை நிர்மாணிப்பதற்கான உதவிகளை  இந்தியாவிடம்  உத்தியோகப்பூர்வமாக கோருவதற்கான கடிதத்தை விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும்  முன்னாள் அணித்தலைவருமான சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாண மக்கள் இவ்வாறு  சர்வதேச கிரிக்கெட் மைதானம்  ஒன்று உருவாக்கப்படுவது தொடர்பில் மிக்க  மகிழ்ச்சியை என்னிடம் தெரிவித்தனர்.  எனவே இதற்காக நாம் சகல முயற்சிகளையும் எடுப்போம் என்றும்  சனத் ஜயசூரிய குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் சர்வதேச  கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பது தொடர்பான நிலைமைகளை ஆராய்வதற்கு   கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.  விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரிகளுடன் இதற்காக  ஒதுக்கப்பட்டுள்ள காணியையும் சனத் ஜயசூரிய பார்வையிட்டார்.

இது தொடர்பில் கேசரியுடன் கருத்து பகிர்கையிலேயே   முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் சனத் ஜயசூரிய  மேற்கண்ட விடயங்களை சுட்டிக்காட்டினார்.

‘‘யாழ்ப்பாணத்துக்கு நான் வியாழக்கிழமை விஜயம் செய்து அங்கு மக்களுடன் கலந்துரையாடினேன்.  யாழ். மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன்  என்னுடன் உரையாடினர். கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். முக்கியமாக யாழில்  அமைக்கப்படவுள்ள  சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில்  யாழ். மக்கள் என்னிடம்  மிக்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விளையாட்டுத்துறை அமைச்சின் பிரதிநிதிகளுடன்  இணைந்து நான் தற்போது இதற்காக  ஒதுக்கப்பட்டுள்ள காணியைப் பார்வையிட்டேன்.  யாழில் நாங்கள்  சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை எப்படியாவது அமைப்போம். இதற்காக முழுமூச்சுடன் செயற்படுவோம்.’’ இவ்வாறு குறிப்பிட்டார்  சனத் ஜயசூரிய.

அண்மையில்  இலங்கைக்கு   இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விஜயம் செய்த போது 96ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் கிண்ணத்தை வெற்றிபெற்ற இலங்கை அணி வீரர்களை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். அந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட சனத் ஜயசூரிய   நெருக்கடி நேரத்தின் போது இந்தியா வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன்  யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தமை  அவதானத்தைப் பெற்றதாக அமைந்தது.

இது தொடர்பில் விரைவில் உத்தியோகப்பூர்வமாக  கடிதமொன்றை    இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளதாக சனத் ஜயசூரிய குறிப்பிட்டார்.

‘‘இந்தியப் பிரதமரை சந்தித்த போது நாங்கள் இந்தக் கோரிக்கையை. வாய்மூலம் விடுத்தோம். ஆனால் அது தொடர்பாக உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை விடுக்கவேண்டியுள்ளது.  எனவே விரைவில்  இதற்கான  உத்தியோகப்பூர்வமான கடிதம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படும்.’’ என்றும் சனத் ஜயசூரிய சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/212064

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

இது தொடர்பில் விரைவில் உத்தியோகப்பூர்வமாக  கடிதமொன்றை    இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளதாக சனத் ஜயசூரிய குறிப்பிட்டார்.

6 hours ago, ஏராளன் said:

இதற்கான  உத்தியோகப்பூர்வமான கடிதம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படும்.’’ என்றும் சனத் ஜயசூரிய சுட்டிக்காட்டினார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.