Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1358211.jpg?resize=750%2C375&ssl=1

டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய சிங்கப்பூர் ஊழியர்!

ஊழியர் ஒருவர் டிஷ்யூ பேப்பரில் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து சிங்கப்பூர் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை தனது ‘லிங்ட்இன்’(LINKEDIN) பக்கத்தில் பதிவிட்டு, ஊழியர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

singapore-employee-s-toilet-paper-resign

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை பொறுத்தவரை, அவர்களுக்கான மரியாதையும், வேலைவாய்ப்பும், அதற்கான சம்பளமும் மிக அத்தியாவசியமாக இருக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக, ஊழியர்கள் தங்களது பணியை இராஜினாமா செய்வது வழக்கமானதொன்று.

வைரலாகி வரும் அந்த ராஜினாமா கடிதத்தில், “நான் தேவைப்படும்போது பயன்படுத்தப்படும் கழிப்பறை காகிதத்தைப் போல உணர்ந்தேன், எந்தவொரு இரண்டாம்பட்ச சிந்தனையைக் கூட இல்லாமல் தூக்கி எறியப்பட்டேன்” என கவலையுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும், “இந்த நிறுவனம் என்னை எவ்வாறு நடத்தியது என்பதற்கான அடையாளமாக தான், இந்த வகையான காகிதத்தை எனது இராஜினாமா கடிதத்தை எழுத தேர்ந்தெடுத்துள்ளேன்” என்று எழுதப்பட்டிருந்தது.

இது தொடர்பான பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த ஊழியருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை எப்படி நடத்த வேண்டும் என தொழிலதிபர் ஆஞ்சிலா யோஹ் கருத்து தெரிவித்துள்ளார். “உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை நல்ல செயல்களுக்காக பாராட்ட வேண்டும். அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்தாலும் கூட, மனக்கசப்புடன் வெளியே செல்லக் கூடாது, நன்றி உணர்வுடன் வெளியேற வேண்டும். பாராட்டு என்பது ஒருவரை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமல்ல. ஒரு நபர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்பதற்கான பிரதிபலிப்பு, அடையாளம். ஒருவரை பாராட்டுவதில் சிறிய தடுமாற்றம் ஏற்பட்டால் கூட, அது அவருக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன” எனப் பதிவிட்டுள்ளார்.

Untitled-design-64-1744707333884.jpg?res

https://athavannews.com/2025/1428517

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு நேர்த்தி, பாதணியால் உரசுவதுபோல் இருக்கு ......... ஆனால் எளிமையாயும் இருக்கு .......... !

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிலடி .அவரை பணிக்கமர்த்தி பயன்படுத்திவிட்டு விலக்குகிறார்கள். Use and threw

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.