Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம் ! இன்று தமிழ் இனவாதப் பேச்சுக்களைப் முழங்குபவர்கள் போராட்ட வயதில் இருந்த போது ஒரு துரும்பையும் அசைக்காதவர்கள் !

மே 17 வரை களத்தில் நின்ற, போராளிகளின் தாய், போராளி, ஆற்றல் மிகு பெண் ஆளுமை தமிழ் கவி அம்மா தன் முள்ளிவாய்க்கால் அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம் இது தான் ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ளின் முடிவு................இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் உணர்ச்சி வ‌ச‌ப் ப‌ட்டு திருப்பி அடிப்போம் என்று நிக்கின‌ம்

அறிவாயுத‌ அர‌சிய‌ல் ம‌ற்றும் அகிம்சை இந்த‌ இர‌ண்டையும் தான் த‌மிழ‌ர்க‌ள் கையில் எடுக்க‌னும்.......................

எங்க‌ளுக்கு எங்க‌ட‌ நாடு வேணும் அதில் மாற்றுக் க‌ருத்துக்கு இட‌ம் இல்லை

எங்க‌ட‌ உற‌வுக‌ள் இப்ப‌ தான் புல‌ம்பெய‌ர்ந்த‌ நாடுக‌ளில் அர‌சிய‌லுக்குள் மெது மெதுவாய் கால‌டி எடுத்து வைக்கின‌ம்...............அவ‌ர்க‌ள் சொல்வ‌தையும் அந்த‌ அந்த‌ நாட்டு அர‌சாங்க‌ங்க‌ள் காது கொடுத்து கேட்டே ஆக‌னும்...............................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம் இது தான் ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ளின் முடிவு.

நல்ல முடிவு

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நல்ல முடிவு

சொன்னா ந‌ம்ப‌ மாட்டிங்க‌ள் காலையில் எழுந்த‌தும் ச‌ரியான‌ த‌லையிடி

மீண்டும் ப‌டுத்து தூங்கி விட்டு சோச‌ல் மீடியாக்க‌ளை பார்க்க‌ க‌ண்க‌ள் க‌ல‌ங்கிட்டு................16வ‌ருட‌த்துக்கு முத‌லும் த‌னிமையில் இருந்து க‌ல‌ங்கினேன்......................ஒவ்வொரு வ‌ருட‌மும் அந்த‌ க‌வ‌லை இருந்து கொண்டே தான் இருக்கும்😭........................

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை கடந்து சென்ற, நாம் கடந்து வந்த பெருந்துயரம். மீண்டும் இப்படியோர் காலம் வரக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

எம்மை கடந்து சென்ற, நாம் கடந்து வந்த பெருந்துயரம். மீண்டும் இப்படியோர் காலம் வரக்கூடாது.

👍..............ரிக்ரோக்கில் முக‌ நூலில் இப்ப‌ இருக்கும் எங்க‌ட‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு ஆண்ட‌வ‌ர் ந‌ல்ல‌ புத்திய‌ கொடுக்க‌னும்

கூட‌ 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் சிங்க‌ள‌வ‌ன் கூட‌ சோச‌ல் மீடியாக்க‌ளில் ச‌ண்டை அதிக‌ம் பிடிக்கின‌ம்

ஆண்ட‌வ‌ர் எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறைக்கு ந‌ல்ல‌ புத்திய‌ கொடுக்க‌ட்டும்

மெள‌வுன‌மாய் இருந்து ப‌ல‌தை சாதிச்சு விட்டு போகிர‌ இந்த‌ உல‌கில் , ஆயுத‌த்தால் சிங்க‌ள‌வ‌ர்க‌ளையும் அழிப்போம் என்ப‌து அப‌த்த‌ம்....................

ஈழ‌ம் அடைய‌ எத்த‌னையோ வ‌ழி இருக்கு அந்த‌ வ‌ழியில் சிறிய‌வ‌ர்க‌ள் பெரிய‌வ‌ர்க‌ள் ஒற்றுமையாய் ப‌ய‌ணிக்க‌லாம்...............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

ஆண்ட‌வ‌ர் எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறைக்கு ந‌ல்ல‌ புத்திய‌ கொடுக்க‌ட்டும்

மெள‌வுன‌மாய் இருந்து ப‌ல‌தை சாதிச்சு விட்டு போகிர‌ இந்த‌ உல‌கில் , ஆயுத‌த்தால் சிங்க‌ள‌வ‌ர்க‌ளையும் அழிப்போம் என்ப‌து அப‌த்த‌ம்....................

சிறந்த கருத்து! 👍 நன்றி வீரப்பையன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கவி, நிலாந்தன் போன்றவர்களிடம் எனக்கு நன்மதிப்பு இல்லை. அவர்கள் இயக்கத்தோடு இருக்கும் வரை பிரசார பீரங்கிகளாகவும், ஊதுகுழலாகவும் இருந்தவர்கள்( 2009 முன்னைய காணொளிகளையும், அச்சு ஊடகங்களை பார்த்தால் தெரியும்) , போர் முடிந்த பின்னர் புதுவை இரத்தனதுரை, பாலகுமார் போன்றவர்கள் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டும், இன்னும் பலர் ஆயுத ஏந்தாமல் இயக்கத்தில் இருந்தவர்கள் பல ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள் (கண்ணதாசன் சேர் - சிறுவயதில் நான் அவரிடம் மிருதங்கம் பழகியிருக்கின்றேன், மிகவும் இனிமையானவர்), ஆனால் இவர்கள் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பயணம் செய்து 180 பாகை திரும்பி கருத்து சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள், இதைத்தான் சாத்தன் வேதம் ஓதுவது என்பதா?

Edited by zuma

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

தமிழ்க்கவி, நிலாந்தன் போன்றவர்களிடம் எனக்கு நன்மதிப்பு இல்லை. அவர்கள் இயக்கத்தோடு இருக்கும் வரை பிரசார பீரங்கிகளாகவும், ஊதுகுழலாகவும் இருந்தவர்கள்( 2009 முன்னைய காணொளிகளையும், அச்சு ஊடகங்களை பார்த்தால் தெரியும்) , போர் முடிந்த பின்னர் புதுவை இரத்தனதுரை, பாலகுமார் போன்றவர்கள் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டும், இன்னும் பலர் ஆயுத ஏந்தாமல் இயக்கத்தில் இருந்தவர்கள் பல ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள் (கண்ணதாசன் சேர் - சிறுவயதில் நான் அவரிடம் மிருதங்கம் பழகியிருக்கின்றேன், மிகவும் இனிமையானவர்), ஆனால் இவர்கள் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பயணம் செய்து 180 பாகை திரும்பி கருத்து சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள், இதைத்தான் சாத்தன் வேதம் ஓதுவது என்பதா?

நீங்கள் கூறியது போல் தமிழ்கவி ஆழமான அரசியல் பார்வை கொண்டவரல்ல. அவர் புலிகளுடன் இருந்த போது கூட ஒரு கவிஞராக சாமான்ய மக்களிடையே போர்பரணியை ஊக்குவிக்கும் கலை நிகழ்வுகளை ஒருங்கு செய்யும் ஒருவராகவே இருந்தவர். பழைய ஒளிவீச்சு வீடியோகளைப் பார்ததால் இதைத் தெரிந்து கொள்ள முடியும் தனது பிள்ளைகளையும் மாவீரர் ஆக்கியவர். சாமான்ய மக்களுடன் வாழ்ந்தவர். அவரது அரசியல் கருத்துக்களில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், ஒரு சாதாரண மக்களின் குரலாக யுத்த இறுதி நாட்களில் நடந்த பல உண்மைகள் அவரின் செவ்வியில் இருப்பதை மறுக்க முடியாது. அதில் பலருக்கு உவப்பில்லாத அவர்கள் மறைக்க விரும்பும் உண்மைகள் இருக்கின்றன. தமிழ் மக்கள் அரசியல் விடுதலை அடைய அவர்கள் அரசியல் செய்ய வேண்டும். உண்மைகளை மறைத்து காவியம் எழுதி அதை அடுத்த சந்ததிக்கு கடத்தினால் மீண்டும் இதே கசப்பான அனுபவங்களே ஏற்படும்

நிலாந்தன் அப்படிப்பட்டவர் அல்ல. வன்னியில் இருந்தபோது பல அரசியல் ஆய்வுகளை வெளியிட்டவர். சர்வதேச அரசியல் நிலை பற்றி அறிந்தவர். அப்போது புலிகளின் அரசியல் தவறுகளை விமர்சித்து அதை அவர்களுக்கு எடுத்து கூறாமல், அவர்களை தவறாக வழிநடத்தியவர். அதன் மூலம் நடந்த பேரழிவுக்கு பொறுப்பு கூற வேண்டியவர். இன்றும் கூட அந்த குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் நடைமுறை அரசியலுக்கு அப்பால் மக்களை கற்பனாவாதத்திற்குள் வைத்திருக்கும் அரசியல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வீரப் பையன்26 said:

👍..............ரிக்ரோக்கில் முக‌ நூலில் இப்ப‌ இருக்கும் எங்க‌ட‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு ஆண்ட‌வ‌ர் ந‌ல்ல‌ புத்திய‌ கொடுக்க‌னும்

கூட‌ 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் சிங்க‌ள‌வ‌ன் கூட‌ சோச‌ல் மீடியாக்க‌ளில் ச‌ண்டை அதிக‌ம் பிடிக்கின‌ம்

ஆண்ட‌வ‌ர் எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறைக்கு ந‌ல்ல‌ புத்திய‌ கொடுக்க‌ட்டும்

மெள‌வுன‌மாய் இருந்து ப‌ல‌தை சாதிச்சு விட்டு போகிர‌ இந்த‌ உல‌கில் , ஆயுத‌த்தால் சிங்க‌ள‌வ‌ர்க‌ளையும் அழிப்போம் என்ப‌து அப‌த்த‌ம்....................

ஈழ‌ம் அடைய‌ எத்த‌னையோ வ‌ழி இருக்கு அந்த‌ வ‌ழியில் சிறிய‌வ‌ர்க‌ள் பெரிய‌வ‌ர்க‌ள் ஒற்றுமையாய் ப‌ய‌ணிக்க‌லாம்...............................

சமூக ஊடகங்களில் யாரும் எதையும் கூறிவிட்டு செல்லலாம். கள யதார்த்தம் ஒன்று உண்டு அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நியாயம் said:

சமூக ஊடகங்களில் யாரும் எதையும் கூறிவிட்டு செல்லலாம். கள யதார்த்தம் ஒன்று உண்டு அல்லவா?

👍...............

உண்மை தான் அண்ணா

அதே போல் சிங்க‌ள‌ ஓனாய்க‌ளும் சோச‌ல் மிடியாக்க‌ளில் அட‌க்கி வாசிக்க‌னும்.....................த‌ங்க‌ட‌ இராணுவ‌ம் புலிக‌ளை வென்ற‌ நாளாம் அவ‌னின் இன‌வாத‌ பேச்சை நீங்க‌ள் கேட்டால் கூட‌ க‌வ‌லைப் ப‌டுவிங்க‌ள்

இள‌ம் பிள்ளைக‌ள் சில‌ர் உண்மையை எழுதுகின‌ம் உல‌கை கூட்டி வ‌ந்து அழித்து விட்டு இதில் வீர‌ வ‌ச‌ன‌மா என்று

அதே போல் சில‌ர் உங்க‌ளையும் ஒரு நாள் அழிப்போம் என‌ எதிர் க‌ருத்துக‌ளை முன் வைக்கின‌ம்..................

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்கவி அம்மையார்

3 hours ago, island said:

தனது பிள்ளைகளையும் மாவீரர் ஆக்கியவர்.

🙏

நிலாந்தன்

3 hours ago, island said:

அப்போது புலிகளின் அரசியல் தவறுகளை விமர்சித்து அதை அவர்களுக்கு எடுத்து கூறாமல், அவர்களை தவறாக வழிநடத்தியவர்.

உங்கள் ஒப்பீடு மூலம் பலதை அறிந்து கொள்ள முடிந்தது

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

நீங்கள் கூறியது போல் தமிழ்கவி ஆழமான அரசியல் பார்வை கொண்டவரல்ல. அவர் புலிகளுடன் இருந்த போது கூட ஒரு கவிஞராக சாமான்ய மக்களிடையே போர்பரணியை ஊக்குவிக்கும் கலை நிகழ்வுகளை ஒருங்கு செய்யும் ஒருவராகவே இருந்தவர். பழைய ஒளிவீச்சு வீடியோகளைப் பார்ததால் இதைத் தெரிந்து கொள்ள முடியும் தனது பிள்ளைகளையும் மாவீரர் ஆக்கியவர். சாமான்ய மக்களுடன் வாழ்ந்தவர். அவரது அரசியல் கருத்துக்களில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், ஒரு சாதாரண மக்களின் குரலாக யுத்த இறுதி நாட்களில் நடந்த பல உண்மைகள் அவரின் செவ்வியில் இருப்பதை மறுக்க முடியாது. அதில் பலருக்கு உவப்பில்லாத அவர்கள் மறைக்க விரும்பும் உண்மைகள் இருக்கின்றன. தமிழ் மக்கள் அரசியல் விடுதலை அடைய அவர்கள் அரசியல் செய்ய வேண்டும். உண்மைகளை மறைத்து காவியம் எழுதி அதை அடுத்த சந்ததிக்கு கடத்தினால் மீண்டும் இதே கசப்பான அனுபவங்களே ஏற்படும்

சுயவிமர்சனம் அற்ற விமர்சனம் என்பது அண்ணாந்து பார்த்து துப்புவது போன்றதாகும், அதற்காக புலிகள்/ கடும் தமிழ் தேசிய வாதிகள் விமர்சனத்துக்கு அப்பால் பட்டவர்கள் அல்ல. தமிழ்க்கவி அவர்கள் காட்டய ஆள் சேர்ப்பில் முன்னறின்று செயற்பட்டவர் மட்டுமன்றி அதனை நியாயப்படுத்தியவரும் ஆவார். எனக்கு என்னவே தமிழ்க்கவி அவர்கள் தற்போதும் வேறுஒருவரின் நிழ்ச்சி நிரலுக்கு தான் செயற்படுகின்றார் போல் உள்ளது, காலம் தான் பதில் செல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, zuma said:

சுயவிமர்சனம் அற்ற விமர்சனம் என்பது அண்ணாந்து பார்த்து துப்புவது போன்றதாகும், அதற்காக புலிகள்/ கடும் தமிழ் தேசிய வாதிகள் விமர்சனத்துக்கு அப்பால் பட்டவர்கள் அல்ல. தமிழ்க்கவி அவர்கள் காட்டய ஆள் சேர்ப்பில் முன்னறின்று செயற்பட்டவர் மட்டுமன்றி அதனை நியாயப்படுத்தியவரும் ஆவார். எனக்கு என்னவே தமிழ்க்கவி அவர்கள் தற்போதும் வேறுஒருவரின் நிழ்ச்சி நிரலுக்கு தான் செயற்படுகின்றார் போல் உள்ளது, காலம் தான் பதில் செல்லும்.

ஒரு பெரும் சோகமான நாளில் ஒரு இனமே கதறி அழுது கண்ணீர் விட்டபடி அஞ்சலிக்கும் நேரத்தில் தமது வக்கிர புத்தியை அதிலும் காட்டி சொறிந்து கொள்ளும் மனிதம் செத்தவர்கள் மட்டுமே இன்றைய நாளில் இதை பேசும் கல்மனக்காரர்கள். 😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, zuma said:

தமிழ்க்கவி, நிலாந்தன் போன்றவர்களிடம் எனக்கு நன்மதிப்பு இல்லை.

நீங்கள் சொல்வது சரியே. எனக்கும் இவர்களை பிடிப்பதில்லை. சில வேளைகளில் இவர்கள் வியாபாரிகளாக மாறிவிட்டார்களோ என நினைப்பதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

நீங்கள் கூறியது போல் தமிழ்கவி ஆழமான அரசியல் பார்வை கொண்டவரல்ல. அவர் புலிகளுடன் இருந்த போது கூட ஒரு கவிஞராக சாமான்ய மக்களிடையே போர்பரணியை ஊக்குவிக்கும் கலை நிகழ்வுகளை ஒருங்கு செய்யும் ஒருவராகவே இருந்தவர். பழைய ஒளிவீச்சு வீடியோகளைப் பார்ததால் இதைத் தெரிந்து கொள்ள முடியும் தனது பிள்ளைகளையும் மாவீரர் ஆக்கியவர். சாமான்ய மக்களுடன் வாழ்ந்தவர். அவரது அரசியல் கருத்துக்களில் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், ஒரு சாதாரண மக்களின் குரலாக யுத்த இறுதி நாட்களில் நடந்த பல உண்மைகள் அவரின் செவ்வியில் இருப்பதை மறுக்க முடியாது. அதில் பலருக்கு உவப்பில்லாத அவர்கள் மறைக்க விரும்பும் உண்மைகள் இருக்கின்றன. தமிழ் மக்கள் அரசியல் விடுதலை அடைய அவர்கள் அரசியல் செய்ய வேண்டும். உண்மைகளை மறைத்து காவியம் எழுதி அதை அடுத்த சந்ததிக்கு கடத்தினால் மீண்டும் இதே கசப்பான அனுபவங்களே ஏற்படும்

நிலாந்தன் அப்படிப்பட்டவர் அல்ல. வன்னியில் இருந்தபோது பல அரசியல் ஆய்வுகளை வெளியிட்டவர். சர்வதேச அரசியல் நிலை பற்றி அறிந்தவர். அப்போது புலிகளின் அரசியல் தவறுகளை விமர்சித்து அதை அவர்களுக்கு எடுத்து கூறாமல், அவர்களை தவறாக வழிநடத்தியவர். அதன் மூலம் நடந்த பேரழிவுக்கு பொறுப்பு கூற வேண்டியவர். இன்றும் கூட அந்த குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் நடைமுறை அரசியலுக்கு அப்பால் மக்களை கற்பனாவாதத்திற்குள் வைத்திருக்கும் அரசியல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்.

குற்றவுணர்வோ மனச்சாட்சி உறுத்தலோ வெட்கமோ இல்லாதவர் நிலாந்தன் மாஸ்டர்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.