Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2025 at 18:33, goshan_che said:

ஒரு கேள்வி கேட்கலாமா?

அமிர்தலிங்கத்தை இன்றுவரை நினைவுகூர்கிறார்கள்.

ஒரு பதில் சொல்லலாமா. 😂

அமிர்தலிங்கத்தை நினைவு கூர... சுமந்திரனின் தமிழரசு கட்சியும் மறந்து விட்டது என்பதே உண்மை.

ஆக, முன்னாள் ஒட்டுக் குழு... புளட் மட்டுமே, அமிர்தலிங்கத்தை நினைவு கூர்ந்தது.

சும்மா... சகட்டு மேனிக்கு, பொய்க் கதைகளை அவிட்டு விட்டுக் கொண்டு இருக்கப் படாது.

கேட்கிறவன் கேனையன் என்றால்... எருமை ஏரோப்பிளேன் ஓடுமாம்.

வரலாற்றின் குப்பைத் தொட்டியில்... சம்பந்தருடன், அமிர்தலிங்கமும் போய் விட்டார் என்பதே கள நிலைமை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

ஒரு பதில் சொல்லலாமா. 😂

அமிர்தலிங்கத்தை நினைவு கூர... சுமந்திரனின் தமிழரசு கட்சியும் மறந்து விட்டது என்பதே உண்மை.

ஆக, முன்னாள் ஒட்டுக் குழு... புளட் மட்டுமே, அமிர்தலிங்கத்தை நினைவு கூர்ந்தது.

சும்மா... சகட்டு மேனிக்கு, பொய்க் கதைகளை அவிட்டு விட்டுக் கொண்டு இருக்கப் படாது.

கேட்கிறவன் கேனையன் என்றால்... எருமை ஏரோப்பிளேன் ஓடுமாம்.

வரலாற்றின் குப்பைத் தொட்டியில்... சம்பந்தருடன், அமிர்தலிங்கமும் போய் விட்டார் என்பதே கள நிலைமை.

யாழ். நகரில் அமிர்தலிங்கத்தின் ந...
No image preview

யாழ். நகரில் அமிர்தலிங்கத்தின் நினைவுப் பேருரை நிகழ்வு

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 96 ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கி...

👆இது 2023 இல்.

👇 இது 2 நாள் முன்பு

Tamilwin
No image preview

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!...

இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 36...
  • கருத்துக்கள உறவுகள்

பிகு

  1. அமிர்தலிங்கம் இருந்த கட்சி - அதுவே நினைவு தினம் அனுஸ்டிக்கும் நிலைக்கு வந்து விட்டது - ஆகவே அமிரை நினைவு கொள்ள முடியாமல் போய் இருக்கலாம், ஆனால் அவரின் கட்சிக்கு அப்பாலும் 35 ஆண்டுகளாக அமிர் நினைவுகூரப்படுகிறார் என்பதே உண்மை.

  2. அமிர் வரலாறின் குப்பை தொட்டிக்கு உரியவர் என்பதே என் நிலைப்பாடும்.

  3. ஆனால் லைன்சன்ஸ் எடுக்காமல் ஏரோபிளேன் ஓட்டினாலும், உண்மை ஒன்றுதான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அமிர் வரலாறின் குப்பை தொட்டிக்கு உரியவர் என்பதே என் நிலைப்பாடும்

அமிர்தலிங்கம் வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் போகவேண்டியவர் என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

அமிர்தலிங்கம் வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் போகவேண்டியவர் என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்?

  1. எந்த வித முன் ஆயத்தமும், சரிவருமா, ஏது நிலை என்ன என்ற ஆராய்ச்சியும் செய்யாமல், இந்தியாவின் கருத்து என்ன என அறியாமல், தனி நாட்டு கொள்கையை முன் வைத்து, மக்களை அதன்பால் ஒன்றிணைத்தது.

  2. இதன்பால் இளைஞர்களை ஒருங்கிணைத்தது. போகாத ஊருக்கு வழிகாட்டி உசுப்பேத்தியது.

  3. இந்தியா அது சரிவராது என உணர்த்திய பின்னும், அதை உணர்ந்த பின்னும், உடனடியாக மக்களிடம் திரும்பி அதை வெளிப்படையாக சொல்லி, தனி நாட்டு கோரிக்கையை கைவிடுகிறோம், ஏன் கைவிடுகிறோம் என்பதை விளக்கி, அந்த அடிப்படையில் வாங்கிய பா ஊ கதிரைகளை இராஜினாமா செய்திருக்க வேண்டும். செய்யவில்லை. மாறாக கொழும்பிலும், சென்னையிலும் போய் ஒழிந்து கொண்டார்.

  4. தனிநாட்டு கோரிக்கையே நடைமுறை சாத்தியமில்லை என தெரிந்துகொண்டு, அதை விட சாத்கியமில்லாத ஆயுத போராட்டம் மூலம் அதை அடையும் ஆரம்ப முயற்சிகளை உருவேற்றி, உசுப்பேற்றி வளர்த்தார்.

  5. மாற்று அரசியல்வாதிகளை துரோகிகள் என பட்டியல் இட்டு, அரசியல் கொலை கலாச்சாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டார். அரசியல் கொலைகளை செய்தவர்களுடன் தொடர்பில் இருந்தார் ஈற்றில் அவரும் அதற்கே பலியானார்.

  6. விடுதலை இயக்கங்களை போராளிகளை தன் அரசியல் இலாபத்துக்கான பீரங்கி சக்கைகள் cannon fodder போல் பாவிக்க முனைந்தார். இயகக்க்கள் இடையே சைக்கிள் ஓடினார்.

  7. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அநியாயங்களை அடியோடு மறுத்து வெள்ளை அடித்தார்.

  8. தன் மனைவி, பிள்ளைகளை அரசியல், போராட்ட-இராணுவ பதவிகளில் போட்டு ஒரு வாரிசு அரசியலை ஆரம்பித்தார்.

  9. தனிபட்ட காரணம், பதவிக்காக இராஜதுரையை அவரின் ஊரிலேயே தோற்கடிக்க முனைந்து, அவரின் வெளியேற்றம் மூலம் வடக்கு-கிழக்கு பிரிவினைவாதத்தை கூர்மைபடுத்தினார்.

  10. சம்பந்தர் செய்த நாச அரசியலை போல 10 மடங்கு செய்தவர் அமிர்.

  11. ஆனால் சுட்டு கொல்லபட வேண்டியவர் அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராவணனுக்கு சிலை...

பண்டாரவன்னியனுக்கு சிலை..

எல்ளானனுக்கு சிலை...

சங்கிலியனுக்கு சிலை...

சிவகுமாரனுக்கு சிலை....

தலைவர் பிரபாகரனுக்கு சிலை...

தந்தை செல்வாவுக்கும் சிலை வைக்கலாம்.

ஏனென்றால் தமிழர்களுக்காக சாதித்து உயிர்த்தியாகம் செய்தவர்கள்.

அமிர்தலிங்கத்துக்கு சிலை வைத்து பூஜிப்பது இயற்கையின் நிஜதிக்கு செய்யும் துரோகம்.

அமிர்தலிங்கம் செய்ததையே சம்பந்தனும் செய்ய முயன்றார். அதன் பலன்களை சம்பந்தனின் வாரிசு சுமந்திரன் அறிவார். சிலுவை கூட வைக்க மாட்டார்கள்.😂

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, goshan_che said:

தனிபட்ட காரணம், பதவிக்காக இராஜதுரையை அவரின் ஊரிலேயே தோற்கடிக்க முனைந்து, அவரின் வெளியேற்றம் மூலம் வடக்கு-கிழக்கு பிரிவினைவாதத்தை கூர்மைபடுத்தினார்.

இது தான் ஈழ தமிழின வரலாற்று தவறு.

தனது தனிப்பட்ட விரோதத்திற்காக இனத்திற்குள்ளையே கூறு போட நினைத்தவர். கிழக்கு மாகாணத்தில் தமிழினத்தை கூறு போட்ட காரண கர்த்தா அமிர்தலிங்கம். அதன் வடு இன்று வரை அல்ல என்றும் தொடரும்.

அமிர்தலிங்கத்தின் மேடை பேச்சுக்களை வடக்கிலும் கிழக்கிலும் கேட்டவன்.அதன் பாகுபாடுகளை அறிந்தவன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.