Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

121561381_gettyimages-976199210.jpg?resi

அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும் கொள்கை வகுப்பாளராகவும் தத்துவாசிரியராகவும் இறுதி வரை செயற்பட்ட  மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு பிரான்ஸின் தலைநகரான பரீஸில் நினைவுச்  சிலை அமைக்கப்படவுள்ளது.

அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு சிலையை நிறுவும் பணியை பிரான்ஸ் தமிழ் பண்பாட்டு வலயம் கார்த்திகை 27 சங்கம் ஆகிய அமைப்புகள் முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பரீஸின்  புறநகரான மொண்டி பூங்காவில் அன்ரன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு அனுமதியை மொண்டி நகர சபை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான அடிக்கல் கடந்த 12ஆம் திகதி பாரிஸ் புறநகர் பகுதியான மொண்டியில் நாட்டப்பட்டது.

மொண்டி நகர முதல்வர் ஸ்ரீபன் அர்வில் மற்றும் நகர சபை உறுப் பினர்கள் அன்ரன் பாலசிங்கத்தின் சிலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது,

https://athavannews.com/2025/1439315

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்.

இது சம்பந்தமாக வரும் சகல சட்ட, சட்டத்துக்கு புறம்பான எதிர்வினையையும், சட்ட பூர்வமாக எதிர்கொள்ள இப்போதே தயார் நிலையில் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்ரன் பாலசிங்கம் (அன்டன் பாலசிங்கம், Anton Balasingham;

பிறப்பு 4 மார்ச் 1938 மட்டக்களப்பு மறைவு 14 திசம்பர் 2006 லண்டன் இங்கிலாந்து. விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமைக் கொண்டிருந்த இலங்கைத் தமிழராவார்.

அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய புத்தகங்கள்.

சோசலிசத் தமிழீழத்தை நோக்கி ·

பெண் விடுதலையும் விடுதலைப்புலிகளும் ·

போரும் சமாதானமும் ·

மக்கள் திலகமும் மாவீரனும் ·

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் தலைநகரில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு-

16 JUL, 2025 | 11:16 AM

image

பிரான்ஸ் தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான பொன்டியில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

250715_Balasingham_France__1_.jpg

இந்த நிகழ்வில் பொன்டியின் மேயர் ஸ்டீபன் ஹேர்வே கலந்துகொண்டு நினைவுச்சுடரை ஏற்றிவைத்தார்.

250715_Balasingham_France__6_.jpg

தமிழ்மக்களின் இலட்சியத்திற்கு அன்டன் பாலசிங்கம் ஆற்றிய சேவைக்காக அவரின் சிலையை அமைப்பதற்கு பொன்டி நகர பேரவை அனுமதி வழங்கியுள்ளது.பொன்டியில் உள்ள மாநகர பூங்காவில் இந்த சிலைஉருவாகவுள்ளது.

250715_Balasingham_France__4_.jpg

250715_Balasingham_France__7_.jpg

https://www.virakesari.lk/article/220111

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்டன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் பிரான்ஸ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் - முன்னாள் இராணுவ அதிகாரி ஜகத்டயஸ்

Published By: RAJEEBAN

24 JUL, 2025 | 12:39 PM

image

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு பிரான்ஸ் தலைநகரில் இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிரான்ஸ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என முன்னாள் இராணுவ அதிகாரி லெப் ஜெனரல் ஜகத்டயஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தும் விதத்திலான பிரான்சின் செயற்பாடுகளை இலங்கை கடுமையாக எதிர்க்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்து பிரிட்டிஸ் பிரஜையான பாலசிங்கத்தின் நடவடிக்கைகளை பிரித்து பார்க்கமுடியாது, மன்னிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

கனடா இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என தெரிவித்து இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளிற்கு பயணத்தடையை விதித்துள்ளதன் பின்னணிலேயே அன்டன் பாலசிங்கத்திற்கு பிரான்சில் சிலையை நிறுவும் நடவடிக்கைகளை பார்க்கவேண்டும் என ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.

சரியான நிலைப்பாட்டை முன்வைப்பதற்கான ஒருங்கிணைந்த உத்தியில்லாத நிலையில் வெளிநாட்டு அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்புலம்பெயர்ந்தோர் தங்கள் பிரிவினைவாத திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்துவருகின்றனர் என தெரிவித்துள்ள முன்னாள் இராணுவ அதிகாரி ஆனால் இந்த சவாலை எதிர்கொள்வதில் எங்கள் நாடாளுமன்றம் முற்றிலும் அலட்சியமாக உள்ளது, இலங்கைக்கு எதிரான திட்டங்களை எதிர்கொள்ளும் தனது கடப்பாட்டினை அலட்சியம் செய்கின்றது என தெரிவித்துள்ளார்.

அவர்கள் விடுதலைப்புலிகளை பரிசுத்தமானவர்களாக்க பகல் இரவாக அவர்கள் செயற்படுகின்றனர், நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் கொடிகளை ஏற்றுவதும் அவர்களின் சிலைகளை நிறுவுவதும் இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதி என ஜகத்டயஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் சிலை தொடர்பில் எங்களின் தூதரகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து அரசாங்கம் பொதுமக்களிற்கு தெளிவுபடுத்தவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சிலையை நிறுவும் திட்டம் இடம்பெறுகின்ற போதிலும் அரசாங்கமோ எதிர்கட்சியோ இதுவரை இது குறித்து வாய்திறக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/220801

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.