Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவை மீட்டெடுப்பது இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்குத் தீர்வாகாது; பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கிறது

கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாடு ஒன்றுக்கு கொண்டு வருவதே முக்கியமானதாகும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நாராயண் திருப்பதி கருத்துத் தெரிவிக்கையில் ”பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுடன் இந்த பிரச்சினை தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்களுடன் பேசி ஒரு தீர்வைக் காணாவிட்டால், இந்தப்பிரச்சினை முடிவடையப் போவதில்லை என்றும் நாராயண் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 1974 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் இடம்பெற்ற போதே கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது எனவும், இதனையடுத்து 14 ஆண்டுகள் ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் பகிர்ந்து கொண்டபோதும், இந்த பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லை என்றும் என்று நாராயண் திருப்பதி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, கச்சத்தீவை மீட்டெடுப்பது மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்காது என்று கடல்சார் மற்றும் ராஜதந்திர நிபுணர்கள் கருத்துரைத்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

உண்மையான பிரச்சனை இந்தியக் கடல் பகுதியில் மீன் வளங்கள் குறைவதன் காரணமாக, இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் கச்சத்தீவின் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, இலங்கையுடன் நீண்டகால குத்தகை அல்லது மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இந்தியா பரிசீலிக்க வேண்டும் என்று நிபுணர்களை சுட்டிக்காட்டி இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/319082

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

உண்மையான பிரச்சனை இந்தியக் கடல் பகுதியில் மீன் வளங்கள் குறைவதன் காரணமாக, இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது

சரியான நிலைப்பாடு ஆனால் வசன அடிப்படையில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் என்பதற்குப் பதிலாக இந்தியக் கடற்கொள்ளையர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

கச்சத்தீவை மீட்பு என்று தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் பேய்காட்டுகின்ற போது பாரதிய ஜனதா கட்சி உண்மையை சொல்லிவிட்டது.

3 hours ago, ஏராளன் said:

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடற்கொள்ளையர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய காட்டாயம் ஒன்றும் இல்லை கொள்ளை அடிக்க வேண்டும் என்ற பேராசை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரிஜினல் தமிழன் டக்ளஸ் தேவானந்தா கடற்தொழில் அமைச்சராக இருந்த போதே தீர்க்கப்படாத பிரச்சனை ஒன்று இருக்குதெண்டால்......பிரச்சனை வேறை எங்கையோ இருக்குது எண்டு அர்த்தம்.

அடுத்தது தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவில்லாத மக்களும் கட்சிகளும் நிறையவே இருக்கின்றனர்/இருக்கின்றன. அவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றார்கள்.எனவே தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீனவர்கள் மீதும் வஞ்சத்தை தீர்க்கும் மனப்பான்மையை நான் தவிர்க்கின்றேன்.

அத்துடன் நாம் எப்படி அவர்கள் மீது வன்மத்தை தெரிவிக்கின்றமோ அதே மாதிரி அவர்களும் வன்மத்தை தீர்ப்பார்கள் என எதிர்பார்க்க வேண்டும்.

அண்மைக்காலத்தில் தமிழகத்திற்கான ஈழத்து சுற்றுலா பயணிகள் இந்திய விமான நிலையங்களில் பட்ட அவலங்களை தேடிப்பிடித்து வாசியுங்கள் .யூ ரியூப்பில் உள்ள காணொளிகளை பார்த்து தெளிவடையுங்கள்.

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அண்மைக்காலத்தில் தமிழகத்திற்கான ஈழத்து சுற்றுலா பயணிகள் இந்திய விமான நிலையங்களில் பட்ட அவலங்களை தேடிப்பிடித்து வாசியுங்கள் .யூ ரியூப்பில் உள்ள காணொளிகளை பார்த்து தெளிவடையுங்கள்.

வாழ்வாதார பிரச்சினையினை எதிர்கொள்ளும் மக்கள் பட்டினியாக இருக்க உல்லாச பிரயாணம் செல்பவர்களின் பிரச்சினை ஒரு பிரச்சினையே இல்லை, ஒரு கட்டத்தின் பின் இந்த பெரிய மீன்பிடி படகுகளுக்கு எதிராக சிறிய மீன்பிடி படகின் மூலம் மீன் பிடியில் ஈடுபடும் தனியார் இலங்கை மீனவர்கள் வறுமையின் அடிமட்டத்திற்கு செல்ல உள்ளார்கள், இதனை காலம் தாழ்த்துவதே தவறு, எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடவில்லை இயற்கை வளங்களை அழிக்கும் இந்த உபகரனங்களை பிடித்து அழித்து விடுவதுடன், மிக அதிக தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதன் மூலம் இயற்கையினை பாதுகாப்பதுடன் எல்லை தாண்டிய பிரச்சினையினை தீர்க்கலாம்.

தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயுறும் வேறல்லவா?

இன்று உலகம் முழுக்க இதே போலத்தான் அந்தந்த மக்களின் வளங்கள் சுறையாடப்பட்டு அவர்கள் வறுமைக்கோட்டிற்கு கிழே செல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு ஆதரவில்லாத மக்கள் நிறையவே இருக்கின்றனர்.☹️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.