Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் கல்வித் துறை பின்னடைய நிர்வாக பிரச்சனையே காரணம்!

adminAugust 4, 2025

Harini-1.jpeg?fit=700%2C393&ssl=1

வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணமாக இருப்பதாக தெரிவித்த, பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருப்பதாகவும் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு நேற்று (03.08.25) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட கல்விசார் திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

ஆசிரியர்கள், அதிபர்கள் பற்றாக்குறை அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், அதிபர் தொழிற்சங்கங்கள், கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் பாடசாலை மட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் சிலரும் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

இக்கருத்துக்களை செவிமடுத்த பிரதமர் கருத்து தெரிவித்த போது,

“ஆசிரியர் நியமனங்கள் கடந்த ஐந்து வருடங்களாக வழங்கப்பட முடியாமல் இருப்பதற்கு அபிவிருத்தி உத்தியோதர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவ் வழக்கு விசாரணையில் இருப்பதே காரணம். விரைவில் இதற்கான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகின்றேன். அதன் பின்னர் ஆசிரியர் நியமனங்களை வழங்கவுள்ளோம். 2

“கல்வி மாணவர்களுக்கானது. அதனை நாம் சரியாக வழங்க வேண்டும். 50 மாணவர்களுக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக கவனம் செலுத்தப்படும். வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணம். விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2025/218785/

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சனையே காரணம்.

உலகில் அறிவு பெற்ற இனத்திற்குள் தமிழினமும் உள்ளது. அதனால்தான் ஐரோப்பியர்கள் இலங்கை மக்களை அடிமைகளாக ஆண்ட காலத்திலும் தமிழர்களைத் தேர்ந்தெடுத்து பதவிகள் கொடுத்து தங்கள் நிர்வாகத்திற்கு வலுச்சேர்த்தார்கள். பிரிட்டன் மகாராணிக்கு கணிதபாடத்தில் ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்க்க உதவியவர் அடங்காமுன்னணி சுந்தரலிங்கம் என்ற திருகோணமலை சேர்ந்த ஒரு தமிழர். முப்பத்து வருடங்களாக நீதி வழுவாத ஒரு அரசாட்சியை இலங்கையில் நடாத்திக் காட்டியவர் மேதகு பிரபாகரன் என்ற இன்னொரு தமிழர்.

தமிழர்களுக்குப் பதவிகள் கிடைப்பதைக் கண்ட அங்கு வாழும் சற்று அறிவுள்ள சிங்கள இனத்தவர்களும் தங்கள் மக்களின் அறிவை வளர்ப்பதற்கு உரிய வழிமுறைகளைத் தேடுவதை விட்டு தமிழர்கள்மேல் பொறாமை கொண்டுள்ளனர். இலங்கை சுதந்திரம் அடைந்தபின்பும் பெரும் பான்மை என்னும் பலம்கொண்டு அரசை சிங்களம் கைபற்றியபோதும் தன் இனத்தவரை அறிவைப் பெறுவதற்குரிய வழியில் வளர்க்காது தமிழினத்தையும் அவர்கள் அறிவையும் அழிக்கும் வழியிலேயே வளர்த்தது.

தமிழரின் நூலகத்தை அழித்தது, சிங்களம் மட்டும் என்றும், தரப்படுத்தல் என்றும், இனக்கலவரம் என்றும் தமிழரை அழித்து அவர்கள் அறிவையும் அழிக்க இன்னமும் முயன்றும் வருகிறது. இவற்றை எல்லாம் செய்துகொண்டு தற்போது தமிழர் கல்விநிலமை பின்தங்கிவிட்டதாக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. இலங்கையில் தமிழரை அழிக்கலாம் ஆனால் தமிழர் அறிவை அழிக்க முடியாது. அதன் வேர்கள் இன்று உலகநாடுகளெல்லாம் பரந்தோடித் துளிர்விட்டு அந்த நாடுகளையும் முன்னேற்ற துடிக்கிறது. அந்நாடுகளும் தமிழருக்கு உயர்பதவிகள் கொடுத்து அழகுபார்க்கிறது. இதனால் சிங்களம் மேலும் மனம் புழுங்குகிறதே தவிர தன் குறை உணர்ந்து திருந்த முயல்வதாகத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டு மொத்த இலங்கையே பின்னடைவை சந்திக்க நிர்வாக பிரச்சனையே காரணம் என எப்போது ஏற்றுக்கொள்வார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, நியாயம் said:

ஒட்டு மொத்த இலங்கையே பின்னடைவை சந்திக்க நிர்வாக பிரச்சனையே காரணம் என எப்போது ஏற்றுக்கொள்வார்கள்?

எப்போது சிங்களரின் ஆட்சி இலங்கையில் மாறுகிறதோ அப்போது காரணம் நாங்களே என ஏற்றுக்கொள்வார்கள்……..

மாற்றம் ஒன்றே மாறாதது.

இலங்கையின் தென்பகுதி குமரிக் கண்டத்துடன் இணைந்து கொள்ளும் என்ற செய்திகளும் பரவலாக வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid05T8HEpVbVkwY6XCvdX9Qi7jaudn62heNv5Lyg81quTffnC9CZvsCHSBSSaPazq2ml&id=100030148033723&mibextid=wwXIfr

மேலே உள்ள சுட்டியை அழுத்தி பார்த்தால் உண்மை புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

526809232_4055117038063594_8464153220901

🎶 🎵 🎵 🎵 சின்னத் தம்பி...சின்னத் தம்பி.... நித்திரையோ... நித்திரையோ.... 🎵 🎵 🎵

மணி அடிக்கிறது, எழும்புங்கோ... எழும்புங்கோ... 🎶 🎵 🎵 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

527353497_4055340911374540_6592689178503

  • கருத்துக்கள உறவுகள்

528806018_1171440811685958_5433346338167

யாழில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற வடக்கின் கல்வி அதிகாரிகளுடனான வடக்கின் கல்வி நிலை பற்றிய கலந்துரையாடல்.

வடக்கு மாகாண கல்வியை எவ்வாறு முன்னேற்றுவது என்பது தொடர்பில் பிரதமர் கலந்துகொண்ட கலந்துரையாடலில் வடக்கு அதிகாரிகள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் வடக்கு மாகாணம் பின் தள்ளப்பட்டமை தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில் சில கல்வி உயர் அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் பிரதமர் வடக்கு கல்வி நிலை பின்னோக்கி செல்வதற்கு அதிகாரிகளின் அசம்பந்தப் போக்கே காரணம் என குறிப்பிட்ட நிலையில் அதிகாரிகள் இவ்வாறு நித்திரை செய்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம்.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஊரில் இருந்த காலங்களில் ஆசிரியர்களும்,பெற்றோர்களும் மாணவர்களும் கல்விக்கு தன்னிச்சையாக முயற்சி செய்து படிப்பித்து/ படித்து முன்னேறினார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.