Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20 AUG, 2025 | 12:54 PM

image

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

யாழ் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கே எதிர்பார்க்கிறோம். முறையான வணிக திட்டமிடல்களின்றி இந்த இலக்கை அடைய முடியாது. யாழ். விமான நிலையத்தை விரிவாக்க காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும் மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என  துறைமுகம்  மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.சிறிதரன் 27 / 2 இன் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது,

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது நாளாந்தம்  இரண்டு விமான சேவைகள் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் இருந்து இடம்பெறுவதுடன், அந்த விமான சேவைகளில் பயணிகள் ஆசன எண்ணிக்கை 70 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஜுலை வரையில் யாழப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்களின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 2020ஆம் ஆண்டில் 140 விமானங்கள், 2021 ம் ஆண்டில்  32 விமானங்கள், 2022ம் ஆண்டில்   383 விமானங்கள்,  2023 ம் ஆண்டில்   864 விமானங்கள், 2024 ம் ஆண்டில்   1156 விமானங்கள் வந்து சென்றுள்ளதுடன், 2025 ஜுலை 31ஆம் ஆண்டு வரையில் 752 விமானங்கள் வருகை தந்துள்ளன.

அத்துடன் இந்த விமானங்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 2020ஆம் ஆண்டில் 3491 பயணிகளும் 2021ஆம் ஆண்டில் 110 பயணிகளும்,  2022ஆம் ஆண்டில் 881 பயணிகளும்,  2023ஆம் ஆண்டில் 29,717 பயணிகளும் 2024ஆம் ஆண்டில் 40,680 பயணிகளும், 2025ஆம் ஆண்டில் ஜுலை வரையில் 31,917 பயணிகளும் இந்த விமானங்களில் பயணித்துள்ளனர்.

இந்த  சிறியளவிலான விமானங்களில் குறிப்பிட்டளவிலான பயணிகள் ஆசனங்கள் இருந்தாலும் குறிப்பிடத்தக்க வசதிகள் வழங்கப்படுகின்றன.

இதேவேளை 2021ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்தினால் லாபம் இருக்கவில்லை. 41 மில்லியன் ரூபா நஷ்டம் இருந்தது. 2022இல் 5 மில்லியன் வருமானம் கிடைத்தாலும் 82 மில்லியன் ரூபா செயற்பாட்டு நஷ்டமாக இருந்தது. 2023ஆம் ஆண்டில் 152 மில்லியன் ரூபா இலாபம் இருந்தது.   

2024இல் 286 மில்லியன் ரூபா வருமானமும், செயற்பாட்டு லாபமாக 76 மில்லியன் ரூபாவும் இருந்தது. அத்துடன் 2025 ஜுலை வரையில் 197 மில்லியன் ரூபா வருமானமும் செயற்பாட்டு லாபமாக 67 மில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளது.

இந்த விமான நிலையத்தில் இலங்கை விமான சேவைகள், விமான நிலையங்கள் நிறுவனத்தை சேர்ந்த 76 பேரும், சுங்கம், வெளிநாட்டு சேவைகள், சுற்றுலாத்துறை, பொலிஸ் உள்ளிட்ட வேறு நிறுவனங்களை சேர்ந்த 182 பேரும் பணியாற்றுகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் பெரியளவிலான விமானங்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டுமாயின் பெரியளவிலான விமான ஓடுபாதை, விமான நுழைவு பகுதி, விமானங்களை நிறுத்தி வைக்கும் பகுதி மற்றும் பயணிகள் பகுதி உள்ளிட்ட நிர்மாணங்களுக்காக வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மேலதிக காணிகளையும் கையகப்படுத்த வேண்டிவரும். இங்கு ஆய்வுகளை நடத்தி அது தொடர்பான அறிக்கைகளை பெற்றே அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். அங்கே தற்போது பயணிகளை வரவேற்க, வழியனுப்ப செல்லும் உறவினர்களுக்காக அங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

அங்கு தற்காலிக டென்ட் ஒன்று அமைக்கப்பட்டிருந்தாலும் நிரந்த நிர்மானமொன்றை வரும் மாதங்களில் அதனை செய்வோம். நிச்சயமாக சர்வதேச விமான நிலையமாக யாழ். விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்  என்ற எண்ணம் எங்களிடம் உள்ளது. அதனை வணிக திட்டங்களுடனேயே செய்ய வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி கூற வேண்டும். கட்டம் கட்டமாக பெரிய விமான நிலையமாக மாற்ற வேண்டும். மத்தள விமான நிலையம் பெரிய விமானங்களை தரையிறக்ககூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. 

அதனை போன்று யாழ். விமான நிலையத்தையும் அமைக்க வேண்டும். ஆனால் முறையான வணிக திட்டமிடல்கள் இன்றி அதனை செய்தால் அது தோல்வியடையும். இதனால் கட்டம் கட்டமாக நாங்கள் அதனை அபிவிருத்தி செய்வோம். நல்ல நிலைக்கு தற்போது விமான நிலையம் செல்கின்றது. 

இந்நிலையில் யாழ். விமான நிலையத்தை விரிவாக்குவது தொடர்பில் காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. ஆனால் தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும், இதனை மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/222928

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

20 AUG, 2025 | 12:54 PM

image

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

யாழ் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கே எதிர்பார்க்கிறோம். முறையான வணிக திட்டமிடல்களின்றி இந்த இலக்கை அடைய முடியாது. யாழ். விமான நிலையத்தை விரிவாக்க காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும் மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என  துறைமுகம்  மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  எஸ்.சிறிதரன் 27 / 2 இன் கீழ் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் பதிலளித்ததாவது,

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தற்போது நாளாந்தம்  இரண்டு விமான சேவைகள் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் இருந்து இடம்பெறுவதுடன், அந்த விமான சேவைகளில் பயணிகள் ஆசன எண்ணிக்கை 70 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு தொடக்கம் 2025 ஜுலை வரையில் யாழப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த விமானங்களின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 2020ஆம் ஆண்டில் 140 விமானங்கள், 2021 ம் ஆண்டில்  32 விமானங்கள், 2022ம் ஆண்டில்   383 விமானங்கள்,  2023 ம் ஆண்டில்   864 விமானங்கள், 2024 ம் ஆண்டில்   1156 விமானங்கள் வந்து சென்றுள்ளதுடன், 2025 ஜுலை 31ஆம் ஆண்டு வரையில் 752 விமானங்கள் வருகை தந்துள்ளன.

அத்துடன் இந்த விமானங்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை தொடர்பில் கூறுவதாயின் 2020ஆம் ஆண்டில் 3491 பயணிகளும் 2021ஆம் ஆண்டில் 110 பயணிகளும்,  2022ஆம் ஆண்டில் 881 பயணிகளும்,  2023ஆம் ஆண்டில் 29,717 பயணிகளும் 2024ஆம் ஆண்டில் 40,680 பயணிகளும், 2025ஆம் ஆண்டில் ஜுலை வரையில் 31,917 பயணிகளும் இந்த விமானங்களில் பயணித்துள்ளனர்.

இந்த  சிறியளவிலான விமானங்களில் குறிப்பிட்டளவிலான பயணிகள் ஆசனங்கள் இருந்தாலும் குறிப்பிடத்தக்க வசதிகள் வழங்கப்படுகின்றன.

இதேவேளை 2021ஆம் ஆண்டில் இந்த விமான நிலையத்தினால் லாபம் இருக்கவில்லை. 41 மில்லியன் ரூபா நஷ்டம் இருந்தது. 2022இல் 5 மில்லியன் வருமானம் கிடைத்தாலும் 82 மில்லியன் ரூபா செயற்பாட்டு நஷ்டமாக இருந்தது. 2023ஆம் ஆண்டில் 152 மில்லியன் ரூபா இலாபம் இருந்தது.   

2024இல் 286 மில்லியன் ரூபா வருமானமும், செயற்பாட்டு லாபமாக 76 மில்லியன் ரூபாவும் இருந்தது. அத்துடன் 2025 ஜுலை வரையில் 197 மில்லியன் ரூபா வருமானமும் செயற்பாட்டு லாபமாக 67 மில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளது.

இந்த விமான நிலையத்தில் இலங்கை விமான சேவைகள், விமான நிலையங்கள் நிறுவனத்தை சேர்ந்த 76 பேரும், சுங்கம், வெளிநாட்டு சேவைகள், சுற்றுலாத்துறை, பொலிஸ் உள்ளிட்ட வேறு நிறுவனங்களை சேர்ந்த 182 பேரும் பணியாற்றுகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் பெரியளவிலான விமானங்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டுமாயின் பெரியளவிலான விமான ஓடுபாதை, விமான நுழைவு பகுதி, விமானங்களை நிறுத்தி வைக்கும் பகுதி மற்றும் பயணிகள் பகுதி உள்ளிட்ட நிர்மாணங்களுக்காக வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

மேலதிக காணிகளையும் கையகப்படுத்த வேண்டிவரும். இங்கு ஆய்வுகளை நடத்தி அது தொடர்பான அறிக்கைகளை பெற்றே அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். அங்கே தற்போது பயணிகளை வரவேற்க, வழியனுப்ப செல்லும் உறவினர்களுக்காக அங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

அங்கு தற்காலிக டென்ட் ஒன்று அமைக்கப்பட்டிருந்தாலும் நிரந்த நிர்மானமொன்றை வரும் மாதங்களில் அதனை செய்வோம். நிச்சயமாக சர்வதேச விமான நிலையமாக யாழ். விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்  என்ற எண்ணம் எங்களிடம் உள்ளது. அதனை வணிக திட்டங்களுடனேயே செய்ய வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். இந்த விடயத்தில் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி கூற வேண்டும். கட்டம் கட்டமாக பெரிய விமான நிலையமாக மாற்ற வேண்டும். மத்தள விமான நிலையம் பெரிய விமானங்களை தரையிறக்ககூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது. 

அதனை போன்று யாழ். விமான நிலையத்தையும் அமைக்க வேண்டும். ஆனால் முறையான வணிக திட்டமிடல்கள் இன்றி அதனை செய்தால் அது தோல்வியடையும். இதனால் கட்டம் கட்டமாக நாங்கள் அதனை அபிவிருத்தி செய்வோம். நல்ல நிலைக்கு தற்போது விமான நிலையம் செல்கின்றது. 

இந்நிலையில் யாழ். விமான நிலையத்தை விரிவாக்குவது தொடர்பில் காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் ஆராயப்படுகின்றது. ஆனால் தற்போதுள்ள விரிவாக்கத்திற்கு புதிதாக காணிகள் அவசியமில்லை என்றாலும், இதனை மேலும் விரிவு செய்ய வேண்டுமாயின் காணிகள் பெற்றுக்கொள்ள வேண்டிவரும். எவ்வாறாயினும் இதனை இன்னுமொரு மத்தளை விமான நிலையம் போன்று அல்லாமல் வெற்றியளிக்கக்கூடிய விமான நிலையமாக மாற்றியமைக்கவே எதிர்பார்க்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/222928

சர்வதேச விமானநிலையம் எப்பவருமோ தெரியாது....இனி உங்கள் காணிகள் விடமுடியாது..என்பதே என் கருத்து..

  • கருத்துக்கள உறவுகள்

விமான நிலையத்திற்கு செல்லும் போது பார்த்தேன் எம் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் வாழை தோட்டம் செய்கின்றனர், பார்க்கவே மனம் கொதித்தது அதை பார்க்கும் அந்த காணியின் சொந்த காரனுக்கு எவ்வளவு வயிறு எரியும்

விமான நிலையத்தில் சொல்லிக்கொள்ளும்படியா வசதிகள் எதுவுமே இல்லை, சுங்கம் என்று பேருக்கு 2 மேசையை வைத்துக்கொண்டு நிற்கிறார்கள் , ஆனால் விமானங்கள் நிரம்பியபடியே தான் பயணிக்கின்றன , சின்ன விமானம் இறங்கும் போதும் ஏறும் போதும் பேயாட்டம் ஆடுது வயிறு கலங்கும் இப்பிடியான விமானத்தில் ஏறி பழக்கம் இல்லாவிடில்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, victhanan said:

சின்ன விமானம் இறங்கும் போதும் ஏறும் போதும் பேயாட்டம் ஆடுது

ஏறும்போதும், இறங்கும்போதும் மட்டும்தானா பேயாட்டம் ஆடுது. ஏறமுன்னம் கொஞ்சம் யோசிக்கவேண்டிய விடயம்தான். 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயம் said:

ஏறும்போதும், இறங்கும்போதும் மட்டும்தானா பேயாட்டம் ஆடுது. ஏறமுன்னம் கொஞ்சம் யோசிக்கவேண்டிய விடயம்தான். 😁

எப்பவும் ஜெற் விமானத்தில் பறப்பவர்களுக்கு சிறிய இரட்டை என்ஜின் விமானங்களில் பறப்பது புது அனுபவமாக இருக்கலாம். 😃

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் 6 மாததம் முன்பும் ஒரு செய்தி வந்தது.இப்ப மீன்டும் முதலில் இருந்தா.☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இப்படித்தான் 6 மாததம் முன்பும் ஒரு செய்தி வந்தது.இப்ப மீன்டும் முதலில் இருந்தா.☹️

தீபாவளிக்கு தீர்வு என்ற மாதிரி இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

இது யாழ்ப்பாணத்தினை பொருளாதார ரீதியாக வளர்ச்சிக்குள்ளாக்கும், இதனை வரவேற்கவேண்டும் அத்துடன் காங்கேசந்துறை துறைமுகத்தினையும் விரிவாக்கம் செய்து திட்டமிட்ட சாலை ஒருங்கிணைப்பு செய்தால் ஒரு கைத்தொழில் நகரமாக யாழ்ப்பாணத்தினை மாற்றமுடியும்.

On 21/8/2025 at 03:22, ஏராளன் said:

வணிக திட்டமிடல்கள்

இதனை ஆங்கிலத்தில் Business plan என கூறுவார்கள், இரண்டுவகையான ஆய்வறிக்கைகள் முதாலந்தர ஆய்வறிக்கை (நேரடி ஆய்வறிக்கை), இரண்டாந்தர ஆய்வறிக்கையினை (நிறுவனங்களின் ஆய்வறிக்கை) மூலம் 2 வருட cash flow எதிர்வு கூறலை உருவாக்குதல் உள்ளடங்கலாக இத்திட்டம் உருவாக்கப்படும்.

இது சாதார வர்த்தக நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்காக நடைமுறையில் உள்ள விடயம், சில வருடங்களின் முன்னர் ஒரு வர்த்தக விடயமாக ஒரு நிறுவனத்தின் முகவரை அணுகிய போது அவர் தனது நிறுவனத்தினூடாக ஒரு கிளையினை குறித்த நகரத்தில் ஆரம்பிக்க உள்ளதாக கூறினார், ஒரு ஆர்வகோளாறில் வர்த்தக திட்டம் வைத்திருக்கிறீர்களா என கேட்டேன் அது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

வங்கிகளில் வேலை செய்பவர்களுக்கே வர்த்தக திட்டம் பற்றி தெரிந்திருப்பதில்லை, ஆனால் இணையத்தில் மாதிரி வர்த்தக திட்டம் மற்றும் வழிகாட்டிகளும் உள்ளது, புதிதாக தொழில் தொடங்குபவர்கள் முயற்சிக்கலாம்.

இரு பெரிய விமான உற்பத்தி நிறுவனங்களான எயர்பஸ் போயிங் ஆகியவை 2024 இல் மொத்தமாக 1114 விமானங்களைத் தயாரித்துள்ளன. இந்த ஆண்டில் அது 7 வீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் கோமக் நிறுவனம் இந்த ஆண்டு முதல் விமானங்கள் தயாரிக்க ஆரம்பித்துள்ளது. மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடையால் விமான எஞ்சின்களைப் பெற முடியாமல் இந்த நிறுவனம் தனது இலக்கான 50 விமானங்களை எட்ட முடியாமல் உள்ளது. ஆனால் விரைவில் தனது உற்பத்தியை அதிகரிக்கும்.

உலகெங்கிலும் விமான நிலையங்கள் விஸ்தரிக்கப்படுகின்றன. விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. ஆசிய நாடுகளே அதிகமான விமானங்களை வாங்குகின்றன. இதில் இலங்கை இலாபம் ஈட்டாமல் இருப்பது அதன் மோசமான வர்த்தகக் கொள்கையைக் காட்டுகிறது. பலாலி விமானத்தளம் விஸ்தரிக்கப்பட்டால் இலங்கையின் வடக்கு - கிழக்கிற்கு வர விரும்பும் உல்லாசப் பயணிகளில் பெரும்பாலானோர் இந்தியா மூலமாக வர விரும்புவார்கள்.....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.