Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் இது வரையும் யாரின் காலிலும் விழுந்ததில்லை. அதை ஆதரிப்பவனும் அல்ல.

அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் பேராசிரியரின் காலில் பல மாணவர்கள் விழுந்து கும்பிட்டு சென்றதை அவதானித்தேன். அதை அந்த பேராசிரியர்களும் ரசித்திருக்க வேண்டும் என்பது என்னுடைய அனுமானம்.

உண்மையிலயே காலில் விழுதல் என்பது ஒரு பண்பா? ஒருவருக்கு மரியாதையை செலுத்தும் முறையா?

எதாவது சங்க இலக்கியங்களில் இது பற்றி கூறப்பட்டிருக்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதர் காலில் விழுவது என்பது மிக கேவலமான முறை. இந்தியாவில் தமிழ்நாட்டில் அதிகமாகவும் சிங்கலவர்களிடம் ஓரளவுக்கு இருப்பதாகவும் அறிந்தே. ஜெயலலிதா இந்த முறையை தனது காலில் மறறவர்கள் வீழ்வதற்காக ஊக்குவித்தாராம்.சங்க இலக்கியங்களில் சொல்லபட்டிருந்தால் என்ன அவசியம் ஒழிக்கபட வேண்டியது.

காணொளி பார்க்க முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2025 at 10:15, ஊர்க்காவலன் said:

நான் இது வரையும் யாரின் காலிலும் விழுந்ததில்லை. அதை ஆதரிப்பவனும் அல்ல.

அண்மையில் நடந்த ஒரு நிகழ்வில் பேராசிரியரின் காலில் பல மாணவர்கள் விழுந்து கும்பிட்டு சென்றதை அவதானித்தேன். அதை அந்த பேராசிரியர்களும் ரசித்திருக்க வேண்டும் என்பது என்னுடைய அனுமானம்.

உண்மையிலயே காலில் விழுதல் என்பது ஒரு பண்பா? ஒருவருக்கு மரியாதையை செலுத்தும் முறையா?

எதாவது சங்க இலக்கியங்களில் இது பற்றி கூறப்பட்டிருக்கிறதா?

மாதா, பிதா, குரு, தெய்வம்.

தெய்வத்தின் கால்களில் விழுகின்றோம். அட்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரம் உள்ளன.

மாதா, பிதா, குரு, மற்றும் இவர்களுக்கு நிகரானவர்கள் கால்களிலும் விழலாம், ஆசீர்வாதம் பெறலாம். இது ஒரு அவமான செய்முறை அல்ல. சிறுவயதிலேயே பெரியவர்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் பழக்கம் இல்லை என்றால் வளர்ந்தபிறகு விழுவது தன்மான, மற்றும் கெளரவ பிரச்சனை ஆகிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

காலில் விழுதல் என்பது தான் தன்னை அடிமையாக உணர்த்துதலின் முதற்படி. இதன் தாக்கம் தான் அதை வைத்தே பின்னர் நடைபெறும் அனைத்து குளறுபடிகளுபடிகளுக்கும் அத்திவாரமாகிவிடுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயம் said:

மாதா, பிதா, குரு, தெய்வம்.

தெய்வத்தின் கால்களில் விழுகின்றோம். அட்டாங்க, பஞ்சாங்க நமஸ்காரம் உள்ளன.

மாதா, பிதா, குரு, மற்றும் இவர்களுக்கு நிகரானவர்கள் கால்களிலும் விழலாம், ஆசீர்வாதம் பெறலாம். இது ஒரு அவமான செய்முறை அல்ல. சிறுவயதிலேயே பெரியவர்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் பழக்கம் இல்லை என்றால் வளர்ந்தபிறகு விழுவது தன்மான, மற்றும் கெளரவ பிரச்சனை ஆகிடலாம்.

மரியாதையை என்பது ஒருவரின் காலில் விழுந்து கொடுப்பது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எழுந்து நிற்பது, கையெடுத்து வணக்கம் வைப்பது போன்றவைகளும் மரியாதையின் அடையாளம் தானே. ஒருவரின் காலில் விழும் பொழுது எம்மை நாமே தாழ்த்துகிறோம் என்பது என்னுடைய கருத்து.

13 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஒரு மனிதர் காலில் விழுவது என்பது மிக கேவலமான முறை. இந்தியாவில் தமிழ்நாட்டில் அதிகமாகவும் சிங்கலவர்களிடம் ஓரளவுக்கு இருப்பதாகவும் அறிந்தே. ஜெயலலிதா இந்த முறையை தனது காலில் மறறவர்கள் வீழ்வதற்காக ஊக்குவித்தாராம்.சங்க இலக்கியங்களில் சொல்லபட்டிருந்தால் என்ன அவசியம் ஒழிக்கபட வேண்டியது.

காணொளி பார்க்க முடியவில்லை

கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி.

காணொளி நான் இணைக்கவில்லை. 😀

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஊர்க்காவலன் said:

மரியாதையை என்பது ஒருவரின் காலில் விழுந்து கொடுப்பது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

காலில் விழுவது என்பது இன்னொரு மனிதர் காலில் விழுந்து தனது மானம் மரியாதை எல்லாவற்றையும் கொடுத்து தன்னை அடிமை என்று அறிவிப்பதாகும். இந்தியாவின் மோசமான கண்டுபிடிப்புக்கள் மனிதனை அடக்கி ஒடுக்க சாதி முறை அது போன்று மனிதனை காலில் விழுந்து வணங்க வைத்து அடிமைபடுத்துவது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, ஊர்க்காவலன் said:

மரியாதையை என்பது ஒருவரின் காலில் விழுந்து கொடுப்பது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எழுந்து நிற்பது, கையெடுத்து வணக்கம் வைப்பது போன்றவைகளும் மரியாதையின் அடையாளம் தானே. ஒருவரின் காலில் விழும் பொழுது எம்மை நாமே தாழ்த்துகிறோம் என்பது என்னுடைய கருத்து.

ஆசான்களை,பெரியோர்களை எழுந்து நின்று வணக்கம் சொல்வது, வாழ்த்துக்களை பெற்றுக்கொள்வது,காலில் விழுந்து ஆசி வாங்குவது எல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம்.சிலர் இரு கைகளாலும் மற்றவர் கைகளை பிடித்து வணக்கம் சொல்வார்கள்.கையை பிடித்து நன்றி/மரியாதை முத்தம் கொடுப்பார்கள். இதெல்லாம் உலக வழக்கமாக இருக்கின்றது.

அது போல்....

பலர் கால்களை தொட்டு ஆசீர்வாதம் வாங்கும் நடைமுறை இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இருக்கின்றது.அதை ஏன் மரியாதைகுறைவாக/அடிமைத்தனமாக பார்க்க வேண்டும் என்பது என் கேள்வி?

ஏய் காலில் எல்லாம் விழக்கூடாது என்பார்கள். காலைத்தொட்டு ஆசி வாங்குவதையோ காலில் விழுவதையோ ஏன் ஏளனமாக பார்க்க வேண்டும்.

பெரியவர்கள் காலில் விழுந்தால் அவமானம் எம்மை நாமே தாழ்த்துதல் என்றால் கையை பிடித்தால் எழுமானமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.