Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: "தவெக தலைவர் விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது. அப்படி, இருந்திருந்தால் அந்த மொழியில் வெளிப்பட்டிருக்கும்" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விஜய் சென்றதால்தான் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதற்கு காரணம் யார்? ஆனால், அவர் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. திரைப்படத்தின் வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார். இது நல்ல அணுகுமுறை இல்லை.

மற்ற இடத்தில் இல்லாமல் கரூரில் மட்டும் இப்படி நடந்தது எப்படி என விஜய் கேட்பது தவறு. மற்ற இடங்களிலும் இப்படி நடக்க வேண்டும் என அவர் நினைக்கிறாரா? கூட்டத்தில் கத்தியுடன் புகுந்தவர்கள் தாக்கினார்கள் என்று சொன்னார்கள். ஆனால், மருத்துவமனையில் இருக்கும் ஒருவருக்குக் கூட கத்திக் குத்து காயம் இல்லாதது எப்படி? நானே நேரில் சென்று பார்த்தேன். கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கூட கத்திக் குத்து காயம் இல்லை. விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்?

வீடியோவில் பேசும்போது அவர் வலியை கடத்தி இருக்க வேண்டும், ஆனால் அவர் கடத்தவில்லை. சி.எம். சார் என்று கூப்பிடுவதே சின்ன பிள்ளைகள் விளையாட்டாக பேசுவதுபோல் இருக்கிறது. முதல்வர் மேல் அவருக்கு மரியாதை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் இருக்கும் நாற்காலி பல தலைவர்கள் இருந்த இடம்” இவ்வாறு அவர் தெரிவித்தார். விஜய் இப்படி தான் பேசியிருக்க வேண்டும் என சீமான் பேசி காட்டியது குறிப்பிடத்தக்கது.

“விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது” - சீமான் | seeman slams tvk leader vijay - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ், உதயநிதி இன்னும் இருக்கும் திமுக பேச்சாளர்கள் எல்லாரும்…இதை பார்த்து, பேச கற்றுகொள்ள வேண்டும்😂.

பிகு

கரூர் அவலம் பற்றி நான் முதன் முதலில் திரி திறந்த போது, டிஸ்கியாக ஒரு எதிர்வுகூறலை போட்டேன்.

ஐந்து நாளில் அது உண்மையாகி உள்ளது 😂.

1 hour ago, பிழம்பு said:

சி.எம். சார் என்று கூப்பிடுவதே சின்ன பிள்ளைகள் விளையாட்டாக பேசுவதுபோல் இருக்கிறது. முதல்வர் மேல் அவருக்கு மரியாதை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் இருக்கும் நாற்காலி பல தலைவர்கள் இருந்த இடம்”

1 hour ago, பிழம்பு said:

ஆனால், மருத்துவமனையில் இருக்கும் ஒருவருக்குக் கூட கத்திக் குத்து காயம் இல்லாதது எப்படி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் சரியாத்தான் சொல்லியிருக்கின்றார். சினிமா வேறு அரசியல் வேறு என்பதை நடிகர் விஜய் எக்காலத்திலும் உணரமாட்டார் என்பதை அவர் கடைசியாக வெளியிட்ட அறிக்கையிலிருந்து தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

சீமான் சரியாத்தான் சொல்லியிருக்கின்றார். சினிமா வேறு அரசியல் வேறு என்பதை நடிகர் விஜய் எக்காலத்திலும் உணரமாட்டார் என்பதை அவர் கடைசியாக வெளியிட்ட அறிக்கையிலிருந்து தெரிகின்றது.

ஒரு சினிமாகாரனின் மனசு இன்னொரு சினிமாகாரனுகுத்தான் தெரியும் என்பது சரியாத்தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/19ukjrCRGY/

என்.ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் மனுக்கள் ஒத்திவைப்பு!

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் ஒத்திவைக்கப்பட்டது.

கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

கரூர் போலீசாரும் இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். இதற்கிடையே, அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜோதிராமன் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர்: அதிகளவில் மக்கள் போக்குவரத்து இருக்கும் பகுதி என்பதாலும், குறுகிய சாலை என்பதால் இருபக்கமும் மறைக்கும் நிலை வரும் எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டிருக்க வேண்டும். வேலுச்சாமிபுரத்தில் அனுமதி கோரிய போது காவல்துறை இதனை செய்திருக்கலாம். எங்களுக்கு அது குறித்து தெரியவில்லை. ஒட்டுமொத்த மக்களும் கூடிய நிலையில் காவல்துறை தடியடி நடத்தியுள்ளனர். ஒரு நாளைக்கு முன்பாகவே வேறு இடத்தில் நடத்த அனுமதி கோரி முறையிட வந்தோம். அன்று நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அன்று முறையிட இயலவில்லை. அதனால் வேலுச்சாமிபுரத்தில் நடத்தும் நிலை வந்தது. மனுதாரர்கள் மீது பதியப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஜாமின் வழங்கக்கூடியவையே. மரணத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இல்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மதியழகன் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் குற்றம் செய்யவில்லை, காவல்துறையே தவறிவிட்டது.

நீதிபதி: உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையையே நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எனும் போது அதற்கான பொறுப்பு வேண்டும் தானே?

அரசுத்தரப்பு வழக்கறிஞர்: இது முன் ஜாமின் வழக்கே. மரணத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் இல்லை என கூறுகிறார்கள். 304 (A) பிரிவிலேயே வழக்கு பதியப்பட்டுள்ளது. சிலர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 105 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கூட்டநெரிசலுக்கு காரணமானவர் யார் என கண்டறிய விசாரணை அவசியம். அது தற்போது தொடக்க நிலையிலேயே உள்ளது. மனுதாரர்கள் இருவரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இரவு 7 மணிக்கு துயர சம்பவம் நிகழ்ந்தது. கட்சியினரால் தான் அவர்களின் தொண்டர்களைக் கட்டுப்படுத்த இயலும். அது போன்ற அறிவிப்பை அவர்கள் செய்யவில்லை. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர் நீரிழப்பின் காரணமாகவே உயிரிழந்ததாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது. தலைமறைமாவது ஏற்கத்தக்கதல்ல. விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும். கேரவனில் 4 மூலைகளிலும் சிசிடிவி இருக்கும். அவற்றை வழங்க வேண்டும். விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. இந்த நிலையில் முன் ஜாமின் வழங்கினால் விசாரணை செய்வது கடினம். பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே முன் ஜாமின் வழங்கக்கூடாது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோதிராமன், முன் ஜாமீன் மனுக்களை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

#TVK | #Vijay | #TVKVijay | #NAnand | #Karur | #Nirmalkumar | #LatestNews | #TNNews

  • கருத்துக்கள உறவுகள்

“விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பது தெரிகிறது” - சீமான்

அண்டங்காக்கா கரிச்சட்டியைப் பார்த்து நீ கருப்பாய் இருக்கிறாய் எண்டிச்சாம்! 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

ஒரு சினிமாகாரனின் மனசு இன்னொரு சினிமாகாரனுகுத்தான் தெரியும் என்பது சரியாத்தான் இருக்கு.

சினிமாக்காரன் இல்லை என்றால் தமிழ்நாட்டு அரசியல் அசையாது அரங்காது என்பது தம்பியருக்கு இன்னும் தெரியேல்ல போல...

கரூரில் விஜய்யண்ணாவுக்கு திரள் திரளாய் படையெடுத்து வந்த வாக்காள பெருமக்கள் சிறப்புகளை இன்னும் கண்ணில் படவில்லையாக்கும்.

Edited by குமாரசாமி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.