Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Courtesy: Rajugaran

மன்னார் - மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும் நிலையில் உள்ளதாகவும் அங்கு சிக்கியுள்ள 40 பேரில் 27 பேரின் நிலை மிக மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் இருந்த நிலையில் அனர்த்த நிலையை கருத்திற் கொண்டு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள், கள்ளியடி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திரும்பி வந்த இராணுவத்தினர் 

இருப்பினும், வெளியேற அறிவுறுத்திய போது 40 பேர் அதனை மறுத்து கிராமத்திலேயே தங்கியதாகவும் அவர்களே தற்போது அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரில் உயிருக்கு போராடும் 40 பேர்.. காப்பாற்ற முடியாத நிலையில் அதிகாரிகள் | Mannar Maanthai Eaxtreme Flood 40 Trapped

இந்நிலையில், குறித்த 40 பேரையும் மீட்க சென்ற இராணுவ அதிகாரிகளின் படகு கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திரும்பி வந்துள்ளது.

அதனை தொடர்ந்து, விமான படையினரின் உதவி நாடப்பட்ட போது அப்பகுதியில் அதிக மேக மூட்டம் காரணமாக மீட்புக்கு ஹெலிகொப்டர்களை அனுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அப்பகுதியில் நீரின் மட்டம் குறைவடைந்த பின்னர் 40 பேரையும் மீட்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் எமது பிராந்திய செய்தியாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

மேலும், மன்னார் மாந்தை பகுதியில் வரலாற்றில் இதுவரை பதிவாகாத அளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

25-692ad7007840c.webp

25-692ad70122b57.webp

25-692ad701bf0dc.webp

https://tamilwin.com/article/mannar-maanthai-eaxtreme-flood-40-trapped-1764414289

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

எனவே, அப்பகுதியில் நீரின் மட்டம் குறைவடைந்த பின்னர் 40 பேரையும் மீட்கும் பணி ஆரம்பிக்கப்படும்

அவர்களது உடல்களையா?

  • கருத்துக்கள உறவுகள்

குறித்த 40 பேரையும் மீட்க சென்ற இராணுவ அதிகாரிகளின் படகு கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திரும்பி வந்துள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் சீரற்ற வானிலையால் 310 நபர்களின் தொடர்புகள் துண்டிப்பு : பலர் மரங்களிலும், வீட்டு கூரைகளிலும் உள்ளதாக தகவல்

Published By: Digital Desk 3

29 Nov, 2025 | 09:09 PM

image

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டம்  பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சுமார் 310 நபர்கள் எவ்வித தொடர்பும் இன்றி இருப்பதாகவும் அவர்கள் மரங்களிலும், கட்டிடங்களின் கூறைப் பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த 310 நபர்கள் கடந்த இரண்டு நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி இருக்கின்றார்கள். மேலும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட சிலரை படகுகள் மூலம் மீட்டுள்ளோம்.

மேலும் கூராய் பிரதேசத்தில் 36 நபர்கள் எவ்வித தொடர்புகளும் இன்றி மரத்திலும்,கூரைகள் மேலும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அவர்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினர்,விமானப்படையினர் மற்றும் ஏனைய அரச அலுவலகர்களின்  உதவியுடன் மீட்க முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். கடற்படையினரால் மீட்பிற்காக சென்ற படகு நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளமையினால் பாதிக்கப்பட்ட மக்களை நெருங்குவதில் கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற காலநிலை காரணமாக விமானப்படையின் உதவியையும் பெற்றுக் கொள்ள கஷ்டமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி மீண்டும் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலை சீரான நிலைக்கு வரும் சந்தர்ப்பத்திலேயே மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். மேலும் மாந்தை மேற்கு, மடு, முசலி பிரதேச செயலாளர் ஆகிய பிரிவுகள் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசிகள் இயங்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை பெற்றுக் கொள்வதில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. மாந்தை மேற்கு பிரதேசம் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து கொழும்பு  மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கான பாதைகளும் தடைப்பட்டுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.

10.jpg

14.jpg

13.jpg

https://www.virakesari.lk/article/231979

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.