Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை

Nov 30, 2025 - 12:10 PM

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை

யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று (30) காலை வேளையில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: 

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். 

இதற்கமைய, இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர், தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் ஆடியபாதம் வீதி ஊடாகத் தனது வீடு நோக்கிப் பயணித்துள்ளார். 

அப்போது, பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில், திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் அவர்களின் மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளது. அவர்கள் பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞன் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனர். 

தாக்குதலாளிகளிடமிருந்து உயிரைக் காத்துக்கொள்ள, வாள்வெட்டுக் காயங்களுடன் வீதியில் சுமார் 50 மீற்றர் தூரம் ஓடிச் சென்றவரை, அக்கும்பல் துரத்திச் சென்று வெட்டியுள்ளது. 

ஓடிச் சென்றவர் வர்த்தக நிலையமொன்றின் முன்பாக விழுந்தபோது, துரத்தி வந்த நால்வரும் சரமாரியாக வெட்டியதில், இளைஞனின் கால் ஒன்று கணுக்காலுடன் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 

இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு, நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், வைத்தியசாலையில் அந்த இளைஞன் உயிரிழந்துள்ளான். 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முன்விரோதம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

மேலும், வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கெமராக்களில் (CCTV) சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmilcpimo0272o29nmzlmzydi

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டும் மழைக்குள் இளைஞன் வெட்டிப் படுகொலை

written by admin November 30, 2025

***

 

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளாா், திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் காவல்  நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதன் பிரகாரம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் , தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் ஆடியபாதம் வீதி ஊடாக தனது வீடு நோக்கி பயணித்த வேளை  காவல் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் , திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் அடங்கிய வன்முறை கும்பல் அவர்களின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து , பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞன் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.

தாக்குதலாளிகளிடம் இருந்து உயிரை காக்க வாள் வெட்டு காயங்களுடன் வீதியில் சுமார் 50 மீட்டர் தூரம் ஓடி சென்றவரை ,தாக்குதலாளிகள் துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர்.   ஓடி சென்றவர் வர்த்தகநிலையம் ஒன்றின் முன்பாக விழுந்த போது,துரத்தி வந்த நால்வரும் சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டதில் , இளைஞனின் கால் ஒன்று கணுக்காலுடன் துண்டாட்டப்பட்டுள்ளது. அதனை அடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , நோயாளர் காவு வண்டியில் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையில் இளைஞன் உயிரிழந்துள்ளாா்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முன்பகை காரணமாகவே கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களில் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் தாக்குதலாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

IMG_1905.jpg?resize=800%2C450&ssl=1IMG_1923.jpg?resize=800%2C450&ssl=1


https://globaltamilnews.net/2025/223286/

  • கருத்துக்கள உறவுகள்

மழைக்கும் கொலைக்கும் என்ன சம்பந்தம்???

வாக்கு முக்கியம். நாளை மறுநாள் நீ உயிரோடு இருக்கமாட்டாய்.... 😡

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

மழைக்கும் கொலைக்கும் என்ன சம்பந்தம்???

வாக்கு முக்கியம். நாளை மறுநாள் நீ உயிரோடு இருக்கமாட்டாய்.... 😡

உங்கள் எழுத்து ஏன் இந்த செய்தியை இங்கு கொண்டு வந்து போட்டேன் என்று இருக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் காலத்தில் ஷெல், விமான குண்டு வீச்சு காலங்களில்தான் இப்படி உடல் சிதறும் அவல காட்சிகள் தென்படும். போர் இப்போது இல்லை. ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு விட்டது. ஆனால், உள்ளூர் ரவுடிகள், தாதாக்கள் உருவாகிவிட்டார்கள். என்ன கொடுமை சாமி இது.

4 minutes ago, யாயினி said:

உங்கள் எழுத்து ஏன் இந்த செய்தியை இங்கு கொண்டு வந்து போட்டேன் என்று இருக்கிறது..

விசுகரின் கருத்தை பார்த்தேன். செய்தியில் உள்ள படத்தை பார்த்ததும் அதிர்ச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் இயற்கை அனர்த்தனத்தில் அவலப்படும்போது உள்ளூர் ரவுடிகள், தாதாக்களுக்கு வேறு பிரச்சனைகள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, யாயினி said:

உங்கள் எழுத்து ஏன் இந்த செய்தியை இங்கு கொண்டு வந்து போட்டேன் என்று இருக்கிறது..

என் கோபத்தை நீங்கள் பார்க்கவில்லை என்று தெரிகிறது. 😢

5 hours ago, நியாயம் said:

விசுகரின் கருத்தை பார்த்தேன். செய்தியில் உள்ள படத்தை பார்த்ததும் அதிர்ச்சி ஏற்பட்டது. நாடு முழுவதும் இயற்கை அனர்த்தனத்தில் அவலப்படும்போது உள்ளூர் ரவுடிகள், தாதாக்களுக்கு வேறு பிரச்சனைகள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, யாயினி said:

கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில்,

தென்பகுதியில் பாதாள போதைக்கும்பல் கொலைச்சம்பவத்தை ஒத்து இங்கு வாள்வெட்டு. விடுதலைப்போரை முறியடித்ததே இவற்றை வளர்க்கத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களுக்கு முன்னர் பிரன்சில் இருந்து வந்த ஒரு இளைஞனையும் இப்படி வெட்டி கொன்றார்களே.

  • கருத்துக்கள உறவுகள்

திருநெல்வேலி சம்பவம் போதைப்பொருளுடன் சம்மந்தப்பட்டது என இலங்கை நண்பர் ஒருவரிடம் கேட்டபோது கூறினார். பிரான்ஸ் இளைஞர் பற்றிய செய்தி இணைப்பை தாருங்கள். @விசுகு அவர்கட்கு தெரியுமா சம்பவம் பற்றி. தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களை விட போதைப்பொருள் பிரச்சனைகளை ஒழிப்பதில் அதிக அக்கறை காட்டுவதாக இன்னோர் இலங்கை நண்பர் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

திருநெல்வேலி சம்பவம் போதைப்பொருளுடன் சம்மந்தப்பட்டது என இலங்கை நண்பர் ஒருவரிடம் கேட்டபோது கூறினார். பிரான்ஸ் இளைஞர் பற்றிய செய்தி இணைப்பை தாருங்கள். @விசுகு அவர்கட்கு தெரியுமா சம்பவம் பற்றி. தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களை விட போதைப்பொருள் பிரச்சனைகளை ஒழிப்பதில் அதிக அக்கறை காட்டுவதாக இன்னோர் இலங்கை நண்பர் கூறினார்.

முகப் புத்தகத்திலும் எழுதிப் போட்டு கிடந்தது.தாக்கபட்டு இறந்த இந்த நபரும் அவரது துணைவியாரும் படிக்கும் பிள்ளைகளை தவறான வழிக்கு கொண்டு போகிறார்களாம்.இவரை விட இவரது மனைவியே (போதைகளை விற்று கூடுதலாக) தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் எழுதிஇருந்தது.எதனால் இப்படி நடந்தது என்று யூருப்காரர்களோ , பத்திரிகைகாரர்களோ இவர்களின் அயலவர்களிடம் போய் விசாரித்த போது அவரகளே சொல்லி இருக்கிறார்கள்.இந்தக் குடும்பம் பற்றி.ஊரிலிருப்பவர்களுக்கு இருப்பதை வைத்து வாழ முடியாமலிருக்கிறது.

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோப்பாய் பொலிஸ் பிரிவில் நபரொருவர் கொலை — சந்தேக நபர்கள் கைது!

02 Dec, 2025 | 11:14 AM

image

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் நேற்றையதினம் திங்கட்கிழமை (01) கைதுசெய்யப்பட்டனர்.

கொலை சம்பவத்துக்கு பின்னர் குறித்த கும்பல் ஹயஸ் வாகனத்தில் யாழ் மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டத்திற்கு தப்பிச் சென்றபோது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது ஹயஸ் வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ஆடைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

நீண்டகாலமாக இரண்டு வன்முறைக் கும்பலிடைய காணப்பட்ட பகைமை உணர்வே குறித்த கொலைச் சம்பவத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, 

யாழ்ப்பாணத்தில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டு வன்முறை கும்பலைச் சேர்ந்த நபர்களிடையே மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை அதற்கு பழிதீர்க்கும் முகமாக விளக்கமறியலில் சிறையில் உள்ள நபரின் வழிகாட்டலுக்கமைய தெல்லிப்பழையில் வட்டி தொழில் செய்யும் ஒருவரிடம், கொலை செய்யப்பட்டவருக்கான தாக்குதலுக்கான திட்டம் கொடுக்கப்பட்டது. 

இதன்படி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த நபர்கள் இணைக்கப்பட்டு தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டது. 

கொலை செய்யப்பட்ட நபரின் வீட்டில் அருகில் வசிக்கும் நபர் ஒருவரும் இதற்கு ஒத்துழைத்துள்ளதுடன் பிரத்தியேக கையடக்க தொலைபேசிகள், சிம்கள் வாங்கப்பட்டு அதன் ஊடாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) திட்டமிட்டபடி தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை திட்டத்தை மேற்கொண்ட வட்டித் தொழில் செய்பவர் தனது ஹயஸ் வாகனத்தில் ஏற்றி தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தாலும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தனியான விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்தில் பதிவான காணொளி, கொல்லப்பட்ட நபரின் பின்ண்ணி என்பவற்றை வைத்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றையதினம் குறித்த கொலையை புரிந்தவர்கள், ஒத்துழைத்தவர்கள், திட்டம் தீட்டிய வர்கள் என்ற சந்தேகத்தில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கைதானவர்கள் 20 வயது தொடக்கம் 25 வயதுக்குட்பட்டோர் எனவும் நயினாதீவு, கொக்குவில், தெல்லிப்பழை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு உடந்தையாக இருந்த மேலும் இருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் கைதான ஆறு பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/232200

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பட்டப்பகலில் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளைஞன் - அதிரவைக்கும் பின்னணிகள்

செவ்வாய், 02 டிசம்பர் 2025 06:15 AM

யாழில் பட்டப்பகலில் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளைஞன் - அதிரவைக்கும் பின்னணிகள்

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் இளைஞன் ஒருவனை வீதியில் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 06 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். 

கைதானவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலை சம்பவம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல் கைதி ஒருவரின் திட்டமிடலுடன் , அவரின் அறிவுறுத்தலுக்கு அமையவே நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது. 

அத்துடன் , கொலை சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் தெல்லிப்பழை பகுதியில் உள்ள வீடொன்றில் கொலைக்கான ஒத்திகையும் நடைபெற்றுள்ளது. 

வீதியில் துரத்தி துரத்தி வெட்டப்பட்ட இளைஞன். 

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அண்மித்த பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் வீதியில் இளைஞன் ஒருவரை வன்முறை கும்பலை சேர்ந்த நால்வர் துரத்தி துரத்தி வெட்டி வீழ்த்தியதில் , இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். 

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து , தாக்குதலாளிகள் தப்பி சென்ற தடத்தை பின் பற்றி , வாகனம் ஒன்றில் வன்னி பகுதிக்குள் பயணித்துக்கொண்டிருந்த வேளை நேற்றைய தினம் திங்கட்கிழமை தாக்குதலாளிகளில் இருவர் மற்றும் அவர்களை ஏற்றி சென்ற வாகன சாரதி என மூவரையும் கைது செய்து , வாகனத்தையும் மீட்டனர். 

அவர்களை யாழ்ப்பாணம் கொண்டு வந்து விசாரணைகளை முன்னெடுத்ததன் அடிப்படையில், படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் நடமாட்டங்களை வேவு பார்த்து தகவல் வழங்கியவர், சம்பவ தினத்தன்று இளைஞனை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து தகவல்களை வழங்கியவர்கள் என மூவர் கைது செய்யப்பட்டனர். 

06 பேர் கைது 

சம்பவம் தொடர்பில் இதுவரையில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு பட்ட தாக்குதலாளிகளான மேலும் இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் , அவர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரியவருவதாவது, 

வன்முறை கும்பல்களுடையே நீண்ட கால பகை

யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல்கள் இரண்டுக்கு இடையில் நீண்ட காலமாக இடம்பெற்று வரும் மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியாக கொக்குவில் சந்தைக்குள் கடந்த மாதம் இளைஞன் ஒருவனை சிலர் தலைக்கவசம் உள்ளிட்டவற்றால் மிக மோசமாக தாக்கி இருந்தனர். அது தொடர்பிலான சிசிரிவி காணொளிகள் சமுக வலைத்தளங்கள் , ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

அது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியும் நாடாளுமன்றில் , யாழில் இயங்கும் வன்முறை கும்பல்கள் , வட்டி தொழிலில் ஈடுபடும் மாபியாக்களை கட்டுப்படுத்த வேண்டும் என கோரி இருந்தார். 

அதனால் பொலிஸாருக்கு ஏற்பட்ட கடும் அழுத்தம் காரணமாக , கொக்குவில் சந்தைக்குள் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற உத்தரவில் அவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறைக்குள் இருந்து திட்டம் 

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர், தன்னை சிறைக்கு அனுப்பிய நபர்களின் கையும் காலும் வேண்டும் என கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கூறியுள்ளார். 

அதனை அடுத்து அவரின் ஒழுங்கமைப்பில் மல்லாகம் பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் தாக்குதலுக்கு தயார் படுத்தப்பட்டனர். 

ஒரு மாத வேவு நடவடிக்கை

படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் தாக்குதலுக்கு முன்னர் ஒருவேளை இலக்கான இளைஞனின் வீட்டுக்கு அருகாமையில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் தொடர்பினை பேணி கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக இளைஞனின் நடமாட்டம் தொடர்பில் தகவல்களை சேகரித்து உள்ளனர். 

இதற்காக தகவல் வழங்கிய இளைஞன் மற்றும் தகவல்களை பெற்றுக்கொண்ட தரப்பினர் புதிதாக இரண்டு சிம் அட்டைகளை வாங்கி , அவற்றின் மூலமே தகவல்களை பரிமாறி கொண்டனர். 

அதன் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு கையொப்பம் வைக்க , இருவர் அல்லது தனியே தான் செல்வார் என்பதனை உறுதிப்படுத்தி ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை மேற்கொள்ள நாள் குறித்தனர். 

தாக்குதலுக்கு ஒத்திகை. 

தெல்லிப்பழையில் வட்டி தொழிலில் ஈடுபடும் நபருக்கு சொந்தமான வீடொன்றில் தாக்குதலுக்கான திட்டமிடப்பட்டு , தாக்குதலுக்கான ஒத்திகையும் பார்க்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று ... 

சம்பவ தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை இருவர் மோட்டார் சைக்கிளில் , திருநெல்வேலி சந்தையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள  உணவகத்திற்கு அருகாமையில் காத்திருந்துள்ளனர். மேலும் இருவர் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் காத்திருந்துள்ளனர். 

கொக்குவிலில் இருந்து இளைஞன் தனது நண்பனின் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதும் , கொக்குவில் பகுதியில் இருந்தே இருவர் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின் தொடர்ந்து வந்துள்ளனர். 

திருநெல்வேலி சந்தி சிக்னல் விளக்கை தாண்டி மோட்டார் சைக்கிள் பயணித்ததும் , திருநெல்வேலி சந்தைக்கு அண்மையில் , தாக்குதலுக்காக காத்திருந்தவர்களுக்கு இளைஞனை பின் தொடர்ந்துள்ளனர். 

சந்தியில் இருந்து 500 மீட்டர் வந்ததும் , உணவத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் தாக்குதலுக்கு தயாராக காத்திருந்தவர்கள் , படுகொலையான இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கு குறுக்கே தமது மோட்டார் சைக்கிளை செலுத்தி , மோட்டார் சைக்கிளை வழிமறித்து , பின்னால் இருந்த இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை நடத்த முயற்சிக்க இளைஞன் இறங்கி வீதியில் ஓடியுள்ளார். 

அவ்வேளை, இளைஞனை பின் தொடர்ந்து வந்த மற்றைய இரு தாக்குதலாளிகளும் இடையில் வழிமறித்து வாள்  வெட்டு தாக்குதலை மேற்கொண்ட வேளை அவர்களிடமும் இருந்து தப்பியோட முயன்றும் கடுமையான வெட்டு காயங்களால் தப்பி ஓட முடியாது. வர்த்தக நிலையம் முன்பாக விழுந்த வேளை இளைஞனின் காலை கணுக்காலுடன் வெட்டி 

துண்டாக்கி விட்டு தாக்குதலாளிகள் தப்பி சென்றுள்ளனர். 

கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் பின் தொடர்ந்த பொலிஸார்  

சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் , தாக்குதலாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற பாதைகளை கண்டறிந்தனர்.

அதன் போது உரும்பிராய் பகுதியில் தாக்குதலாளிகள் தமது ஆடைகளை மாற்றி வாகனம் ஒன்றில் ஏறி தப்பி சென்றுள்ளனர். 

வன்னிக்குள் கைது நடவடிக்கை. 

அதன் அடிப்படையில் வாகனம் தொடர்பிலான தகவல்களை பெற்ற வேளை நேற்றைய தினம் திங்கட்கிழமை வாகனம் வன்னி பகுதியில் பயணித்துக்கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் , வாகனத்தை பொலிஸ் குழு வழிமறித்த வேளை வாகனத்தினுள் தாக்குதலாளிகள் இருவர் மற்றும் அவர்கள் தப்பி செல்ல உதவிய வாகன சாரதியும் . தாக்குதல் சம்பவத்தை வழி நடத்தியவருமான கந்துவட்டி தொழில் செய்யும் தெல்லிப்பழையை சேர்ந்த நபரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட மூவரையும் , அவர்கள் பயணித்த வாகனத்தையும் மீட்டு யாழ்ப்பாணம் கொண்டு வந்தனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன் தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். 

வாகனங்கள் மீட்பு 

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து இதுவரையில் , தாக்குதலாளிகள் தப்பி சென்ற வாகனம் , தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் , வாள் ,தாக்குதல் நடாத்தும் போது அணிந்திருந்த ஆடைகள் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் , தெல்லிப்பழை கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 20 தொடக்கம் 25 வயது வரையிலானவர்கள் எனவும் , கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்தி , பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க மன்றில் அனுமதி கோரவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://jaffnazone.com/news/52820

  • கருத்துக்கள உறவுகள்

திருநெல்வேலியில் இளைஞன் கொலை சம்பவம் – கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் மீட்பு

adminDecember 4, 2025

1002647670.jpg?fit=1170%2C878&ssl=1

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் இளைஞன் ஒருவரை வெட்டி படுகொலை செய்த பின்னர் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வேளை , அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து பின் தொடர்ந்த கார் ஒன்றினை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

திருநெல்வேலி சந்தைக்கு அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கொட்டும் மழைக்குள் மத்தியில் வீதியில் இளைஞன் ஒருவரை ஓட ஓட வன்முறை கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்திருந்தது.

குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வந்த காவற்துறையினர்  மறுநாள் திங்கட்கிழமை இளைஞனை வெட்டியா நால்வரில் இருவர் உள்ளிட்ட 06 பேரை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட 06 பேரையும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவும் , மேலும் சில சான்று பொருட்களை மீட்கவும் , சந்தேகநபர்களை காவற்துறையினரின் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதிக்குமாறு மன்றில் காவற்துறையினர்  விண்ணப்பம் செய்தனர்.

காவற்துறையினரின் விண்ணப்பத்தை அடுத்து , சந்தேகநபர்களை 24 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மன்று அனுமதித்தது.

அதனை அடுத்து காவற்துறையினர்  மேற்கொண்ட தொடர் விசாரணையின் போது, கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்லும் போது, எவரேனும் பின் தொடர்ந்தால் , அவர்களிடம் இருந்து கொலையாளிகளை காப்பாற்றும் நோக்குடன் , கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளித்தவாறு கொலையாளிகளை பின் தொடர்ந்த கார் தொடர்பில் காவற்துறையினர் கண்டறிந்து , குறித்த காரினை மீட்டுள்ளனர்.

இந்நிலையில், காவற்துறையினருக்கு  நீதிமன்று அனுமதித்த 24 மணிநேரம் நேற்றைய தினம் புதன்கிழமையுடன் நிறைவுற்றதால் , நேற்றைய தினம் சந்தேகநபர்கள் 06 பேரையும் மீண்டும் மன்றில் முற்படுத்திய வேளை 06 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.

அதேவேளை , இளைஞனை கொலை செய்த நால்வரில் இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , ஏனைய இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் , அவர்களை கைது செய்வதற்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , கொலையாளிகள் தப்பி செல்ல பாதுகாப்பு அளித்து சென்ற காரினை மீட்டுள்ள நிலையில் , காரில் பயணித்தவர்கள் தொடர்பிலான விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

https://globaltamilnews.net/2025/223543/

  • கருத்துக்கள உறவுகள்

அவலத்தை கண்ட எங்கள் இனத்தின் சாபக்கேடுகள் தான் இந்த காட்டுமிராண்டிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.