Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

உதவி செய்ய விரும்பும் உறவுகள் விரும்பினால் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள் .

நானும் அப்பப்ப செய்வேன்.

ஓய்வூதியத்தில் வாழ்வதால் எல்லாமே திட்டமிட்டே செலவு.

  • Replies 53
  • Views 2.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • அண்ணை, புலர் அறக்கட்டளைக்கு ஊடாக இயலாமை உடையவர்களை மட்டுமே முன்னுரிமை கொடுத்து செயற்படுகிறோம். ஆனால் அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பினால் பணத்தை மீளப்பெற நிர்வாக அனுமதி கோரவேண்டும். அடிக்கடி பணத்த

  • ஏராளன்
    ஏராளன்

    நல்லது, மாற்று கருத்து இல்லை அண்ணா. தாயகத்தில் அவர் பெயரைச் சொல்லி செயற்படமுடியாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். யாழிணையத்தில் அவர் பெயரால் இந்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது என்பதில் எ

  • கருத்துக்கள உறவுகள்

Request-letter2.jpg

காரைநகரில் இருந்து முன்னோடிக்கான இரண்டாவது வேண்டுகோள் கடிதம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் அப்பப்ப செய்வேன்.

ஈழப்பிரியன் அண்ணா சிறு துளி பெரு வெள்ளம்

ஒரு டொலர் அல்லது யூரோ கிடைத்தாலும்

அதைக் கொடுக்க முன் வருபவர்களின் மனது பெரிது

அவற்றை ஏற்றுக் கொண்டு செயற்படும் வேளையில் தான்

மற்றவர்களுக்கும் திருப்தியும் மனநிறைவும் கிடைக்கும்.

முன்னோடிகளில் நீங்கள் ஒருவராக இணைந்ததையிட்டு மகிழ்ச்சி 🙏

  • நிழலி changed the title to முன்னோடி அடிப்படை சுகாதார வசதி திட்டம்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய வங்கிக் கணக்கு ஒன்றை இன்றைய தினம் சங்கானை தேசிய சேமிப்பு வங்கிக்கு நேரடியாகச் சென்று 1000 ரூபா வைப்பிட்டு ஆரம்பித்துவிட்டேன். வங்கிக் கணக்கு விபரங்களை இங்கே பகிரவா? தனிமடலில் போடவா? என்பதை கள உறவுகள் தெரியப்படுத்துங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

புதிய வங்கிக் கணக்கு ஒன்றை இன்றைய தினம் சங்கானை தேசிய சேமிப்பு வங்கிக்கு நேரடியாகச் சென்று 1000 ரூபா வைப்பிட்டு ஆரம்பித்துவிட்டேன். வங்கிக் கணக்கு விபரங்களை இங்கே பகிரவா? தனிமடலில் போடவா? என்பதை கள உறவுகள் தெரியப்படுத்துங்கோ.

நன்றி.

இங்கே பதிவிடுவது நல்லது என எண்ணுகிறேன்.

On 6/1/2026 at 11:46, வாத்தியார் said:

பெயர் தெரிவிக்க விரும்பாதவர்கள் ஏராளனுடனோ அல்லது கோஷானுடனோ?(கோஷான் விரும்பும் பட்சத்தில் ) தனி மடல் மூலம் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்

சம்மதமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஏராளன் said:

புதிய வங்கிக் கணக்கு ஒன்றை இன்றைய தினம் சங்கானை தேசிய சேமிப்பு வங்கிக்கு நேரடியாகச் சென்று 1000 ரூபா வைப்பிட்டு ஆரம்பித்துவிட்டேன். வங்கிக் கணக்கு விபரங்களை இங்கே பகிரவா? தனிமடலில் போடவா? என்பதை கள உறவுகள் தெரியப்படுத்துங்கோ.

எனது வாட்ஸ் அப் இலக்கத்திற்கும் அனுப்பிவிடுங்கள்.🙏

நீங்கள் முதல் தெரிவித்த தொகையை அனுப்பி விடுகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன ஐடியா.

On 31/12/2025 at 21:27, வாத்தியார் said:

5 சுழிபுரம் , 5 காரைநகர் , இடையே திருத்த வேலைகள் பொன்னாலை யில் செய்யலாம்.

அடுத்த கட்டமாக முதலில் பொன்னாலையில் நடமாட முடியாத அந்தச் சகோதரர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய எவ்வளவு செலவாகும் என அறிய விரும்புகின்றேன்

பெரிய திட்டங்கள் அனைத்தையும் செய்ய தொடங்க முன் ஒரு pilot திட்டத்தை run பண்ணுவோம் அல்லவா?

அதைப்போல் இந்த பொன்னாலை மாற்றுதிறனாளி சகோதர்களின் திருத்த வேலையை முதலில் ஒரு pilot ஆக செய்வோமா?

உடல்நிலையால் அவர்கள் முன்னுரிமைக்கும் தகுதியானோரே.

கருத்தை சொல்லவும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஒரு சின்ன ஐடியா.

பெரிய திட்டங்கள் அனைத்தையும் செய்ய தொடங்க முன் ஒரு pilot திட்டத்தை run பண்ணுவோம் அல்லவா?

அதைப்போல் இந்த பொன்னாலை மாற்றுதிறனாளி சகோதர்களின் திருத்த வேலையை முதலில் ஒரு pilot ஆக செய்வோமா?

உடல்நிலையால் அவர்கள் முன்னுரிமைக்கும் தகுதியானோரே.

கருத்தை சொல்லவும்.

நல்லது. பரீட்சார்த்தமாகவும் இருக்கும். படிப்பினையையும் தரும். அந்தத் திட்டம் நல்லமுறையில் நடந்தால் புது உத்வேகமும் கிடைக்கும்.

இன்னும் நாங்கள் ஆரம்பப் புள்ளிக்கே வரவில்லை. பேச்சளவில்தான் நிற்கின்றோம். அடுத்த நகர்வைக் காணவில்லை.

என்னிடம் இந்தக் கேள்விகள் இருக்கின்றன,

முன்னோடி அமைப்பை ஏதாவது நாட்டில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப் போகின்றோமா? (இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில்)

இதை நடைமுறைப் படுத்துபவர்(கள்) யார்?

வங்கி விபரங்கள் என்ன?

திட்டங்களுக்கென்று பணம் தரப்பட வேண்டுமா? அல்லது மாதாந்தமாக/ அன்பளிப்புகளாக பெறும் பணத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படப் போகின்றனவா?

வரும் தைப் பொங்களுக்கு தொடங்கலாமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kavi arunasalam said:

இன்னும் நாங்கள் ஆரம்பப் புள்ளிக்கே வரவில்லை. பேச்சளவில்தான் நிற்கின்றோம். அடுத்த நகர்வைக் காணவில்லை

உண்மைதான் ஐயா…

9 minutes ago, Kavi arunasalam said:

முன்னோடி அமைப்பை ஏதாவது நாட்டில் சட்டபூர்வமாகப் பதிவு செய்யப் போகின்றோமா? (இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில்)

இதை நடைமுறைப் படுத்துபவர்(கள்) யார்?

வங்கி விபரங்கள் என்ன?

திட்டங்களுக்கென்று பணம் தரப்பட வேண்டுமா? அல்லது மாதாந்தமாக/ அன்பளிப்புகளாக பெறும் பணத்தில் திட்டங்கள் நிறைவேற்றப்படப் போகின்றனவா?

வரும் தைப் பொங்களுக்கு தொடங்கலாமா?

  1. இப்போதைக்கு மேலே சொன்னபடி (பொன்னாலை திருத்த வேலை, காரைநகர்5, சுழிபுரம்-சார் பகுதிகள்5 என்பதை செய்வோம்.

    இவை முடியும் தறுவாய்க்கு வரும் போது ஒரு திட்ட மீளாய்வை செய்வோம். அதன் போது பதிவதை செய்வதா அல்லது இன்னும் பொறுத்து செய்வதா என முடிவு செய்யலாம்.

  2. நாட்டில் நடைமுறை மேலாண்மை ஏராளன்(project implementation oversight) . உதவி - வாத்தியார் அண்ணா மற்றும் நான். நிதி திரட்டல் (fund raising). குசா அண்ணா. ஏனையோர் எவரும் முன்வரலாம்.

  3. ஏராளன் பகிருவார்.

  4. Hybrid (இரெண்டு மாதிரியும்) முறையில் செய்யலாம். நான் முதலில் ஒரு தொகையை கொடுத்து விட்டு, பின்னர் மாதாந்தம் அனுப்பலாம் என நினைக்கிறேன்.

  5. முயலுவோம். குறைந்தபட்சம் - பொன்னாலை வேலையை ஆரம்பித்து விட்டோம் எண்டால் deadline ஐ மீட் பண்ணியதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ரிய திட்டங்கள் அனைத்தையும் செய்ய தொடங்க முன் ஒரு pilot திட்டத்தை run பண்ணுவோம் அல்லவா?

அதைப்போல் இந்த பொன்னாலை மாற்றுதிறனாளி சகோதர்களின் திருத்த வேலையை முதலில் ஒரு pilot ஆக செய்வோமா?

உடல்நிலையால் அவர்கள் முன்னுரிமைக்கும் தகுதியானோரே.

சரி அப்படியே செய்யலாம் ஏராளன் பரிந்துரைத்த அந்தப் பொன்னாலை திருத்த வேலைகளை முன்மாதிரியாக ஆரம்பிக்கலாம்

அதற்கான செலவு அண்ணளவாக 184,௦௦௦ வரும் என்று ஏராளனுடைய நண்பர் ஒருவர் கணித்திருக்கின்றார் , அதை ஏராளன் மற்றைய திரியில் சொல்லியிருக்கின்றார் .

நாங்கள் 200.000 ரூபாய் என்ற தொகையை முதலில் சேர்ப்போம்.

இப்போது இந்தக் குழுவில் நிதி உதவி செய்ய முன் வந்திருப்பது

வாத்தியார்

குமாரசாமி அண்ணா .

கோஷான்

கவி அருணாசலம் அண்ணா

இதில் குமாரசாமி அண்ணா முன்னோடியூடாக இன்னுமொரு திட்டத்திற்கு நிதி உதவி செய்வதாக எழுதியுள்ளார்

ஆகவே அவருடைய நிலையை அவர் விளக்கமாக தெரியப்படுத்துவது நல்லது

1 hour ago, Kavi arunasalam said:

இன்னும் நாங்கள் ஆரம்பப் புள்ளிக்கே வரவில்லை. பேச்சளவில்தான் நிற்கின்றோம். அடுத்த நகர்வைக் காணவில்லை.

என்னிடம் இந்தக் கேள்விகள் இருக்கின்றன,

1 hour ago, Kavi arunasalam said:

இன்னும் நாங்கள் ஆரம்பப் புள்ளிக்கே வரவில்லை. பேச்சளவில்தான் நிற்கின்றோம். அடுத்த நகர்வைக் காணவில்லை.

என்னிடம் இந்தக் கேள்விகள் இருக்கின்றன,

மற்றும்படி கவி அருணாசலம் அண்ணை எழுத்தியதை நான் ஏற்கனவே எழுத நினைத்தேன் .

நேரம் கிடைக்கவில்லை அவர் சரியாகவே கேட்டுள்ளார்

1 hour ago, goshan_che said:

முயலுவோம். குறைந்தபட்சம் - பொன்னாலை வேலையை ஆரம்பித்து விட்டோம் எண்டால் deadline ஐ மீட் பண்ணியதாகும்

நாங்கள் நினைத்தால் இந்த பொன்னாலை திட்டத்தை மாசி மாதத்திற்குள் முடித்து விடலாம்.

அந்தத் திட்டத்திற்கான எனது பங்களிப்பு இப்போதே தயாராக உள்ளது

அந்தப் பங்களிப்பின் தொகையை இங்கே எழுதுவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை .

பூனைக்கு யாராவது மணி கட்டத்தானே வேண்டும்

ஒளிவு மறைவு இல்லாமல் தெரியப்படுத்தலாம் என்றால் எழுதுகின்றேன் .

அண்ணை,

கொமட் 35000 - 70000 ரூபா வரை உள்ளது. நாங்கள் 50000 ரூபா என்று சராசரி விலை குறித்து வைப்போம்.

கைகளால் பிடித்து நகர வெள்ளிரும்பு பைப் 15000 ரூபா(ஏற்கனவே இரும்பு பைப் போட்டு உக்கிவிட்டது)

2 லான்ட் மாஸ்ரர் மண் 24000 ரூபா

2 லான்ட் மாஸ்ரர் சல்லி 15000 ரூபா

8 பைக்கற் சீமந்து 20000 ரூபா

20 (3/8) கம்பி 20000 ரூபா

1 கிலோ கட்டுக்கம்பி 4000 ரூபா

பொருட்கள் கொண்டுவர கூலி 1000 ரூபா

மேசன், பிளம்பிங் கூலி 35000 ரூபா

மொத்தச் செலவு 184000 ரூபா(கொஞ்சம் கூடிக் குறையலாம்)

எனக்கு அறிமுகமான எலக்ரீசியன் தம்பி நேரில் சென்று பார்த்து தந்த விபரங்கள்.

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாத்தியார் said:

இப்போது இந்தக் குழுவில் நிதி உதவி செய்ய முன் வந்திருப்பது

வாத்தியார்

குமாரசாமி அண்ணா .

கோஷான்

கவி அருணாசலம் அண்ணா

ஈழப்பிரியன் அண்ணா

இதில் ஈழப்பிரியன் அண்ணாவும் அப்பப்ப உதவி செய்யலாம் எனக் கூறியதை மறந்து விட்டேன்.🙏

அவரையும் சேர்த்துக்கொள்ளலாம்.

1 hour ago, goshan_che said:

உண்மைதான் ஐயா…

  1. இப்போதைக்கு மேலே சொன்னபடி (பொன்னாலை திருத்த வேலை, காரைநகர்5, சுழிபுரம்-சார் பகுதிகள்5 என்பதை செய்வோம்.

    இவை முடியும் தறுவாய்க்கு வரும் போது ஒரு திட்ட மீளாய்வை செய்வோம்.

அடுத்த கட்டமாக எங்களின் இலக்கான திட்டத்திற்கு நான் என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் சிலரிடம் பேசியிருக்கின்றேன்.

அவர்களும் நிச்சயமாக இந்தத் திட்டத்திற்கு உதவுவதாகக் கூறியுள்ளார்கள்

அதற்கும் ஒரு காலத்தை நிர்ணயம் செய்தால் தான் அந்தக் காலத்திற்குள் செய்து முடிக்க முடியும் என்பது கருத்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, வாத்தியார் said:

இதில் குமாரசாமி அண்ணா முன்னோடியூடாக இன்னுமொரு திட்டத்திற்கு நிதி உதவி செய்வதாக எழுதியுள்ளார்

ஆகவே அவருடைய நிலையை அவர் விளக்கமாக தெரியப்படுத்துவது நல்லது

ஒரு குறிப்பிட்ட தொகை மலசல கூடம் கட்ட தேவை என ஏராளன் அறியத்தந்துள்ளார்.அதை நான் அனுப்புகின்றேன்.

ஆடம்பர மலசல கூடம் கட்டுவதற்கு அந்த பணம் பயன்படாது என நான் நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, வாத்தியார் said:

அந்தப் பங்களிப்பின் தொகையை இங்கே எழுதுவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை .

பூனைக்கு யாராவது மணி கட்டத்தானே வேண்டும்

ஒளிவு மறைவு இல்லாமல் தெரியப்படுத்தலாம் என்றால் எழுதுகின்றேன் .

கட்டாயம் எழுதுங்கள்.

தீமை செய்பவரே சொல்லி காட்டும் உலகில் நாம் ஒளிக்க தேவையில்லை என்பது என் நிலைப்பாடு.

அத்தோடு இது ஏனையோரையும் ஊக்கப்படுத்தும்.

நானும் அப்படியே செய்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, வாத்தியார் said:

அந்தப் பங்களிப்பின் தொகையை இங்கே எழுதுவது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை .

பூனைக்கு யாராவது மணி கட்டத்தானே வேண்டும்

ஒளிவு மறைவு இல்லாமல் தெரியப்படுத்தலாம் என்றால் எழுதுகின்றேன்

அல்லது யார் எவ்வளவு நிதி உதவி செய்கின்றார்கள் என்பதை மறைத்து அவர் அவர் தனது பங்களிப்பை வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடலாம் .

ஏராளன் வரவுவில் வைக்கப்பட்ட தொகையை மட்டும் எங்களுடன் பகிரலாம்.

தேவையான தொகை சேர்ந்த கையுடன் முன்னோடிகளின் திட்டத்தை ஆரம்பிக்கலாம்

எது சரியானது என்பதற்கு அப்பால் இந்தத் திட்டம் நிறைவேற வேண்டும் அதுவே எமது இலக்கு

3 minutes ago, goshan_che said:

கட்டாயம் எழுதுங்கள்.

தீமை செய்பவரே சொல்லி காட்டும் உலகில் நாம் ஒளிக்க தேவையில்லை என்பது என் நிலைப்பாடு.

அத்தோடு இது ஏனையோரையும் ஊக்கப்படுத்தும்.

நானும் அப்படியே செய்கிறேன்

சரி

இன்னும் சிலர் தங்களின் கருத்தையும் கூறட்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

அல்லது யார் எவ்வளவு நிதி உதவி செய்கின்றார்கள் என்பதை மறைத்து அவர் அவர் தனது பங்களிப்பை வங்கிக் கணக்கிற்கு அனுப்பி விடலாம் .

மீள யோசித்ததில்:

சிலவேளை யார் எவ்வளவு அனுப்புகிறார் என்ற விபரம் - ஒப்பீட்டளவில் குறைந்த தொகை அனுப்புவோரை சங்கடபடுத்தலாம்.

அதனால் அவர்கள் பங்களிக்காமலே விடலாம்.

எனவே எந்த முடிவும் எனக்கு சமனே.

  • கருத்துக்கள உறவுகள்

SIVARANCHAN THEVAKUMARAN

A/C:- 300131108781

National Savings Bank

Chankanai Branch

Swift Code:- NSBALKLX

உறவுகளே, மேலே உள்ளது "முன்னோடி - அடிப்படை சுகாதார வசதித்திட்டம் 2026" மட்டும் பயன்படுத்தும் வங்கிக் கணக்கு.

உங்களிடம் (யாழில்) தகவல் தெரிவிக்காமல் ஒரு ரூபா பணமும் செலவளிக்கப்படமாட்டாது.

பணம் அனுப்பினால் தகவல் தாருங்கள். நீங்கள் விரும்புகின்ற வகையில் யாழ் புனைபெயர்/ பெயர் குறிப்பிட விருப்பமில்லை/ சொந்தப்பெயர் தகவலைப் பகிர்வோம்.

என்னுடைய தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் +94 77 959 1047, பொதுவானது +94 77 777 5448.(வட்சப், வைபர்)

Edited by ஏராளன்
முழுப்பெயர் போட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கு பகுதி பகுதியாக பணத்தை வேலைகள் முடிய முடிய வைப்புச் செய்யும்படி காரைநகர் பிரதேச செயலக திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்திருந்தார். அவர்களுடைய தொழிநுட்ப உத்தியோகத்தர் கையெழுத்து போட்டு வங்கியில் மீள எடுக்கும் சீட்டு வழங்கினால் மட்டுமே பணம் வங்கியில் எடுக்கலாம்.

முதலாவது வேண்டுகோள் கடிதம் வட்டு தெற்கு, வட்டுக்கோட்டை யா/165 நாகன் பரராசசிங்கம் ஐயாவின் மலசல கூடம் பூரணப்படுத்த 150000 ரூபா தேவைப்படுகிறது. அவருடைய படங்கள், குறுங்காணொளிகள் குமாரசாமி அண்ணைக்கு அனுப்பிவிட்டேன். விரைவில் அந்தப் பணிகள் நடைபெறும் என நம்புகிறேன்.

பொன்னாலை விசேட தேவையுடைய சகோதரர்களின் பணியை அடுத்ததாக செய்வோம். அவர்களுடைய மலசல கூடக் குழி பெரிதாக நீளமாக இருப்பதாக பிளம்பிங் வேலை செய்யும் தம்பி குறிப்பிட்டார். அதனுடைய பிளாற் புதிதாக அமைக்க வேண்டும். கூரைப் பிளாற் வெடித்துள்ளதாகவும் தண்ணீர் தாங்கியை மேலே வைப்பது பாதுகாப்பு இல்லை என்றும் கூறினார்கள்.

முதலில் அவசரத் தேவையை நிறைவேற்றுகிறோம். தண்ணீர் தாங்கியை ஒரு ஸ்ராண்டில் வைப்போம் என தெரிவித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னோடிநகரத் தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி.

மாதாந்த பங்களிப்பு செய்பவர்களின் தனிப்பட்ட விபரங்களை பொதுவெளியில் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். ஆனால், முன்னோடி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் பிரத்தியேக மற்றும் அவசர உதவுத் திட்டங்கள், அவற்றுக்கான நிதி தொகை, செயற்படுத்தும் காலஅளவு, மற்றும் உதவி பெற்றோர் தொடர்பான அடிப்படை விபரங்கள் அறிவிக்கப்படுவது நல்லது என்பது என் கருத்து. இது நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்.

ஒவ்வொருவரும் தனித்தனியாக தாயகத்தில் உள்ள முன்னோடிக்கான வங்கிக் கணக்குக்கு நேரடியாகப் பணம் அனுப்பும் போது வங்கி கட்டணங்கள் போன்ற கூடுதல் செலவுகள் ஏற்படலாம். அனுப்பப்படும் தொகைகளின் விபரங்கள் வங்கியில் பதிவாகினாலும், அவற்றை ஒரே நபர் அல்லது குழு பொறுப்புடன் கண்காணித்து பராமரிப்பது அவசியம். அதற்காக, முன்னோடியில் நிதிப் பொறுப்பாளர் ஒருவரை அல்லது இருவரைக் கொண்ட குழுவை நியமிப்பது சிறந்தது எனக் கருதுகிறேன்.

அந்த பொறுப்புக்கு கோசன் ஜி, குமரசாமி, வாத்தியார் ஆகிய மூவரில் ஒருவரை அல்லது இருவரை தெரிவு செய்யலாம்.

மாற்றாக, ஒவ்வொரு நாட்டிலும் முன்னோடியின் நாட்டு பொறுப்பாளரை நியமித்தால், அந்த நாட்டில் உள்ளவர்கள் அவர்களிடம் பணம் அனுப்பி வைக்கலாம். தேவையான விபரங்களையும் அவர்களிடம் இருந்தும் பெறலாம். அந்தந்த நாட்டில் திரட்டப்படும் தொகைகளை, பொறுப்பாளர்கள் முன்னோடியின் பொதுக் கணக்கில் முறையாக சேர்த்துவிடலாம். இது செலவுகளைக் குறைப்பதுடன், நிதி நிர்வாகத்தையும் எளிதாக்கும்.

நான் இருக்கும் நாட்டிற்கான பொறுப்பாளராக குமரசாமியை முன்மொழிகிறேன். அவர் சம்மதித்தால், எனது மாதாந்த பங்களிப்பை அவர் குறிப்பிடும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறேன்.

இதுபோன்ற அமைப்புசார், வெளிப்படையான மற்றும் பலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடுகளுக்குள் நானும் முழுமையாக இணைந்து செயல்படுவேன். உங்களது கருத்துகளையும் முன்மொழிவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் செயற்பாடுகளுக்குள் நானும் இணைந்து கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kavi arunasalam said:

நான் இருக்கும் நாட்டிற்கான பொறுப்பாளராக குமரசாமியை முன்மொழிகிறேன். அவர் சம்மதித்தால், எனது மாதாந்த பங்களிப்பை அவர் குறிப்பிடும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறேன்.

எனக்கு நேரப்பற்றாக்குறையும்,வேலையிடத்து பண வரவுகள் இருப்பதாலும் நீங்கள் அல்லது வாத்தியார் அந்த பொறுப்பை எடுத்தால் எனக்கு பெரிய உதவியாக இருக்கும் என நினைக்கின்றேன்.சம்மதமாயின் இன்றே ஏராளன் குறிப்பிட்ட தொகையை அனுப்பி விடுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

முன்னோடிநகரத் தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி.

மாதாந்த பங்களிப்பு செய்பவர்களின் தனிப்பட்ட விபரங்களை பொதுவெளியில் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். ஆனால், முன்னோடி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் பிரத்தியேக மற்றும் அவசர உதவுத் திட்டங்கள், அவற்றுக்கான நிதி தொகை, செயற்படுத்தும் காலஅளவு, மற்றும் உதவி பெற்றோர் தொடர்பான அடிப்படை விபரங்கள் அறிவிக்கப்படுவது நல்லது என்பது என் கருத்து. இது நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்.

ஒவ்வொருவரும் தனித்தனியாக தாயகத்தில் உள்ள முன்னோடிக்கான வங்கிக் கணக்குக்கு நேரடியாகப் பணம் அனுப்பும் போது வங்கி கட்டணங்கள் போன்ற கூடுதல் செலவுகள் ஏற்படலாம். அனுப்பப்படும் தொகைகளின் விபரங்கள் வங்கியில் பதிவாகினாலும், அவற்றை ஒரே நபர் அல்லது குழு பொறுப்புடன் கண்காணித்து பராமரிப்பது அவசியம். அதற்காக, முன்னோடியில் நிதிப் பொறுப்பாளர் ஒருவரை அல்லது இருவரைக் கொண்ட குழுவை நியமிப்பது சிறந்தது எனக் கருதுகிறேன்.

அந்த பொறுப்புக்கு கோசன் ஜி, குமரசாமி, வாத்தியார் ஆகிய மூவரில் ஒருவரை அல்லது இருவரை தெரிவு செய்யலாம்.

மாற்றாக, ஒவ்வொரு நாட்டிலும் முன்னோடியின் நாட்டு பொறுப்பாளரை நியமித்தால், அந்த நாட்டில் உள்ளவர்கள் அவர்களிடம் பணம் அனுப்பி வைக்கலாம். தேவையான விபரங்களையும் அவர்களிடம் இருந்தும் பெறலாம். அந்தந்த நாட்டில் திரட்டப்படும் தொகைகளை, பொறுப்பாளர்கள் முன்னோடியின் பொதுக் கணக்கில் முறையாக சேர்த்துவிடலாம். இது செலவுகளைக் குறைப்பதுடன், நிதி நிர்வாகத்தையும் எளிதாக்கும்.

நான் இருக்கும் நாட்டிற்கான பொறுப்பாளராக குமரசாமியை முன்மொழிகிறேன். அவர் சம்மதித்தால், எனது மாதாந்த பங்களிப்பை அவர் குறிப்பிடும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கத் தயாராக இருக்கிறேன்.

இதுபோன்ற அமைப்புசார், வெளிப்படையான மற்றும் பலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடுகளுக்குள் நானும் முழுமையாக இணைந்து செயல்படுவேன். உங்களது கருத்துகளையும் முன்மொழிவுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலராலும் ஏற்றுக் கொள்ளப்படும் செயற்பாடுகளுக்குள் நானும் இணைந்து கொள்கிறேன்.

கவி அருணாசலம் அண்ணை கூறுவதும் நன்மை தரும் விடையமே ஒவ்வொரு நாட்டிற்கு ஒரு அமைப்பாளர் என்ற ரீதியில் முன்னோடி அமைப்பிற்கான முன்னோடி அமைப்பாளர்கள் இருப்பதும் சிறப்பாக இருக்கும்

uk யில் கோஷான்.....

ஜெர்மனியில் குமாரசாமி அண்ணை ...

கனடாவில் ஒருவர் தேவை....

அமெரிக்காவில் ஈழப்பிரியன் .......

இப்படி அவர்கள் இந்தத் திட்டத்திற்கான ஒருங்கிணைக்கும் வேலைகளையும் கிடைக்கும் சிறு துளி நிதியையும் சேர்த்து இலங்கை முன்னோடி வங்கிக்கு கணக்கிற்கு அனுப்பலாம்.

சாதாரண வங்கியினூடாக நிதியை அனுப்பும் வேளை வங்கி அறவிடும் கட்டணம் அதிகமாக இருக்கும் .அதுவும் சிறு தொகையாக பல முறைகள் அனுப்புவதால் இன்னும் அதிக கட்டணம் கொடுக்க வேண்டும்

3 hours ago, ஏராளன் said:

S THEVAKUMARAN

A/C:- 300131108781

National Savings Bank

Chankanai Branch

Swift Code:- NSBALKLX

உறவுகளே, மேலே உள்ளது "முன்னோடி - அடிப்படை சுகாதார வசதித்திட்டம் 2026" மட்டும் பயன்படுத்தும் வங்கிக் கணக்கு.

உங்களிடம் (யாழில்) தகவல் தெரிவிக்காமல் ஒரு ரூபா பணமும் செலவளிக்கப்படமாட்டாது.

பணம் அனுப்பினால் தகவல் தாருங்கள். நீங்கள் விரும்புகின்ற வகையில் யாழ் புனைபெயர்/ பெயர் குறிப்பிட விருப்பமில்லை/ சொந்தப்பெயர் தகவலைப் பகிர்வோம்.

என்னுடைய தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் +94 77 959 1047, பொதுவானது +94 77 777 5448.(வட்சப், வைபர்)

மிகுந்த கரிசனையுடன் இந்தத் திட்டத்தை முன் கொண்டு செல்ல உதவும் வகையில்வங்கிக்கணக்கை அறிவித்த ஏராளனுக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

யோசித்ததில்:

சிலவேளை யார் எவ்வளவு அனுப்புகிறார் என்ற விபரம் - ஒப்பீட்டளவில் குறைந்த தொகை அனுப்புவோரை சங்கடபடுத்தலாம்.

அதனால் அவர்கள் பங்களிக்காமலே விடலாம்.

எனவே எந்த முடிவும் எனக்கு சமனே.

ஓகே கோஷான் அப்படியும் நான் நினைத்தேன்

ஆகவே தற்சமயம் முடிந்தவர்கள் தங்கள் நிதிப்பங்களிப்பை முன்னோடி வங்கிக் கணக்கிற்கு அனுப்பட்டும்.யார் என்ன தொகை அனுப்பியது என்ற விபரங்கள் தெரியப்படுத்தத் தேவையில்லை கிடைத்த நிதி முதலாவது திட்டமான பொன்னாலை சகோதரர்களின் திட்டத்திற்கு ஏற்றவகையில் சேர்ந்ததும் ஏராளன் எங்களுக்கு அதைத் தெரியப்படுத்தி விட்டால் நாங்கள் அந்தத் திட்டத்திற்கான அனுமதியைக் கொடுத்து நிறைவேற்றி வைக்கலாம்.

எங்களின் இலக்கான திட்டம்( காரைநகர் 5, சுழிபுரம் 5 )நிறைவேறும் வரை நிதி உதவி செய்பவர்களின் விபரங்களைத் தெரியப்படுத்துவதைத் தவிர்ப்போம்.

எங்களின் இலக்கான திட்டத்திற்கான செலவு அண்ணளவாக 15 இலிருந்து 20 லட்சம் வரை தேவைப்படும்

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர்...... அந்த் திட்டத்தில் நிதி பங்களிப்புச் செய்தவர்களின் விபரங்களை...... அவர்கள் விரும்புவதை பொறுத்து வெளியிடலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாத்தியார் said:

ஆகவே தற்சமயம் முடிந்தவர்கள் தங்கள் நிதிப்பங்களிப்பை முன்னோடி வங்கிக் கணக்கிற்கு அனுப்பட்டும்.யார் என்ன தொகை அனுப்பியது என்ற விபரங்கள் தெரியப்படுத்தத் தேவையில்லை கிடைத்த நிதி முதலாவது திட்டமான பொன்னாலை சகோதரர்களின் திட்டத்திற்கு ஏற்றவகையில் சேர்ந்ததும் ஏராளன் எங்களுக்கு அதைத் தெரியப்படுத்தி விட்டால் நாங்கள் அந்தத் திட்டத்திற்கான அனுமதியைக் கொடுத்து நிறைவேற்றி வைக்கலாம்.

ஏற்கிறேன்

13 minutes ago, வாத்தியார் said:

எங்களின் இலக்கான திட்டம்( காரைநகர் 5, சுழிபுரம் 5 )நிறைவேறும் வரை நிதி உதவி செய்பவர்களின் விபரங்களைத் தெரியப்படுத்துவதைத் தவிர்ப்போம்.

எங்களின் இலக்கான திட்டத்திற்கான செலவு அண்ணளவாக 15 இலிருந்து 20 லட்சம் வரை தேவைப்படும்

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர்...... அந்த் திட்டத்தில் நிதி பங்களிப்புச் செய்தவர்களின் விபரங்களை...... அவர்கள் விரும்புவதை பொறுத்து வெளியிடலாம்.

மிக சரியான அணுகுமுறையாக படுகிறது. அப்படியே செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

முன்னோடியில் நிதிப் பொறுப்பாளர் ஒருவரை அல்லது இருவரைக் கொண்ட குழுவை நியமிப்பது சிறந்தது எனக் கருதுகிறேன்

ஏராளன் நிதியை கையாளும் விதம் மிகவும் சிறந்த முறை

ஒரு உதவித்தட்டம் செயற்படுத்தும் வேளை அந்த வேலைத் திட்டத்தின்

செயற்பாட்டைக் கண்காணித்து அந்த பிரதேசத்தின் பணிமனை யில் இருக்கும் அபிவிருத்தி தொடர்பான உத்தியோகத்தரின் அறிவுறுத்தலின்படியே நிதி ஏராளனால் விடுவிக்கப்படும் .

இப்படியாக நிதி விடுவிக்கப்படும் நேரத்தில் பயனாளர் பக்கமும் உதவி செய்யும் எங்கள் பக்கமும் நிதியைக் கையாளும் ஏராளன் பக்கமும் உண்மைத் தன்மையும் வெளிப்படையான நிதி பரிமாற்றமும் தெரியவரும் சிறப்பான வழிமுறை

ஆகவே இதற்கு இன்னுமொரு நிதிப் பொறுப்பாளர் தேவை இல்லை என்பது எனது கணிப்பு .

முன்னோடி அடிப்படை வசதித் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் மொத்த நிதியும் சேரும் வரை காத்திருக்காமல் ஒருவருடைய தேவையை நிறைவேற்றத் தேவையான நிதி கிடைத்தவுடன் ஆரம்பித்து வைக்கலாம் என்பது எனது கணிப்பு

1.குமாரசாமி அண்ணா உதவி செய்யும் திட்டம் அது எதுவென அவர் விரும்பினால் இங்கே தெரியப்படுத்தலாம்

2.பொன்னாலை திட்டம்

3.சுழிபுரம் அல்லது காரைநகரில் ஒருவருடைய தேயைப் பூர்த்தி செய்தல்

4. இன்னுமொருவருடைய தேவையை பூர்த்தி செய்தல்

இப்படி மாறி மாறி தேவையின் அடிப்படையில் வேலைகளைத் தொடங்கி இலகுவாகவும் விரைவாகவும் இந்தத் திட்டத்தை செய்து முடிக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, வாத்தியார் said:

1.குமாரசாமி அண்ணா உதவி செய்யும் திட்டம் அது எதுவென அவர் விரும்பினால் இங்கே தெரியப்படுத்தலாம்

இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

6 hours ago, ஏராளன் said:

முதலாவது வேண்டுகோள் கடிதம் வட்டு தெற்கு, வட்டுக்கோட்டை யா/165 நாகன் பரராசசிங்கம் ஐயாவின் மலசல கூடம் பூரணப்படுத்த 150000 ரூபா தேவைப்படுகிறது. அவருடைய படங்கள், குறுங்காணொளிகள் குமாரசாமி அண்ணைக்கு அனுப்பிவிட்டேன். விரைவில் அந்தப் பணிகள் நடைபெறும் என நம்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

கு சா அண்ணை,

ஒரு சின்ன தெளிவுபடுதலை வேண்டி நிற்கிறேன்.

நீங்கள் தனிமனிதனாக செய்யும் பங்களிப்புக்கு அப்பால் - முன்னோடிக்கான நிதி சேகரிப்பாளராகவும் நீங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்துகிறீர்கள் தானே?

மற்றைய திரியில் எமது முதலாவது சம்பாசணையில் இதை சொன்னதன் பின் வேறு இடங்களில் இதை நாம் கதைக்கவில்லை என நினைக்கிறேன்.

இந்த முயற்சியில் மிக கடினமான பணிகளில் இது முதன்மையானது. அடுத்த கட்டத்துகு நகரும் போது, நாம் தனிநபர்களோ அல்லது யாழ் கள உறவுகளோ சேர்ந்து மட்டும் தேவைப்படும் தொகையை சேர்ப்பது கடினம்.

யாழுக்கு வெளியே இருந்தும் நிதி உதவிகள் வந்து சேரல் அவசியமாகும்.

திட்டம் தடையின்றி முன்செல்ல இந்த தெளிவு அவசியமாவதால் கேட்கிறேன்.

பிழை ஏதும் இருப்பின் மன்னித்தருள்க.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.