Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

07 Jan, 2026 | 05:02 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்தில்  எனக்கு பக்கத்தில் வலது பக்கமாக அமர்ந்து  பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆசனத்தை வேறு இடத்திற்கு  மாற்றுங்கள், இல்லையேல்  தொடர்ந்தும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தன்னால் பொறுப்புக் கூற முடியாது. ஒழுக்கமற்ற வகையில்  பேசும்   அவருக்கு பக்கம் என்னால் அமரமுடியாது   என  யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன்  சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (07) நடைபெற்ற  சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றும்  போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சக உறுப்பினர் ஒருவர் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களில் தகாத  மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களை செய்துள்ளமை தொடர்பான முறைப்பாட்டை சமர்ப்பிப்பதாகவும், இதன்படி கடந்த டிசம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனக்கு தவறாக வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி ஒருமையில் மிகக் கேவலமாகவும், பொதுமக்களால் கேட்க முடியாதவாறு வார்த்தைப் பிரயோகங்களையும் பயன்படுத்தி தன்னை இழிவாக பேசியதாகவும் சபையில் முறையிட்டார்.

முறைப்பாட்டை  முன்வைத்து  உரையாற்றிய அர்ச்சுனா, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்னை கேவலமாக பேசினார்.

பாராளுமன்றத்தில் அவருக்கு அருகில் எனது ஆசனம் இருப்பது தொடர்பிலும் பேசினார். இது பாராளுமன்றத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்களிடையே தவறான கருத்துக்களை பரப்பும் வகையில் அமைந்துள்ளது .

இதனால் இன்றில் இருந்து எனது ஆசனத்திற்கு வலது பக்கத்தில் அமைந்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்  ஆசனத்தை வேறு இடத்திற்கு மாற்றுங்கள். தொடர்ந்தும் இவர் தனது வலது பக்கத்தில் இருப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில்  பொறுப்புக்கூற முடியாது.

இதேவேளை பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பான ஒழுக்காற்று குழுவில் அங்கம் வகிப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி தகுதியற்றவர்.இதனால் அந்தக்  குழுவில் இருந்தும் அவரை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்   சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒழுக்கமற்ற வகையில் பேசினார் ; அவரின் பக்கம் அமரமுடியாது - சபாநாயகரிடம் முறையிட்ட அர்ச்சுனா | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

நான் மூன்றாம் வகுப்பு படித்த போது எனது பக்கத்து இருக்கையிலிருந்த இரு மாணவர்களுக்கிடையில் இவ்வாறான ஒரு பிரச்சினை இருந்தது. அந்த நாள் ஞாபகம், அறிவு வளராத பருவம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

தனக்கு தவறாக வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி ஒருமையில் மிகக் கேவலமாகவும், பொதுமக்களால் கேட்க முடியாதவாறு வார்த்தைப் பிரயோகங்களையும் பயன்படுத்தி தன்னை இழிவாக பேசியதாகவும் சபையில் முறையிட்டார்.

அதுசரி, இவர் பொதுவெளியில் பகிரங்கமாக, தனக்குப்பிடிக்காதவர்களை, தமது உரிமைகளுக்காக போராடுபவர்களை, ஒருமையில் விளித்து, தகாத, கேவலமான வார்த்தைகளை பேசும் இவர், பொதுமக்களை அதுவும் பெண்களை அச்சுறுத்தும் இவர் பாராளுமன்றம் செல்லவோ, மற்றவர்களுக்கு பாடம் நடத்தவோ தகுதியற்றவர். தனக்கென்றால் கொதிப்பு, மற்றவர்க்கென்றால் ரசிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் பொதுவாக பண்பாகப் டபேசும் மனிதர்இ ஆனால் அர்ச்சுனா மற்றவர்கள் கோபப்படுத்தும் வகைpலேயும் பண்பற்றும் பொரதுவெளிகளில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் வார்த்தைகளைக் கண்டபடி கொட்டும் அரைப்பைத்தியம். அபிவிருத்திச்சபைக் கூட்டத்தில் அபிவிருத்தி பற்றிப் பேசாமல் மற்றவர்களையும் பேசவிடாமல் காட்டுக்கத்தல்கத்துபவர். கஸேந்திரகுமாரைக் கோபமூட்டி கஜேந்திரகுமார் கோபத்தில் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தையை பெசிவிட்டார். அதற்காக அவர் பேட்டியில் தான் அப்படிப் பேசியிருக்கக்கூடாது என்று வருத்தமும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த அரைப்பைத்தியம் தான் பேசும் எந்த தவறான பேச்சுக்களுக்கும் வருத்தமோ மன்னிப்போ கேட்டது கிடையாது. தமிழ்மக்களின் பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். அது பற்றிக்கதைக்காமல் சிறு வயதில் பள்ளிக் கூடத்தில் ரீச்சர் இவன் என்னைக் கிள்ளிவிட்டான் என்று முறையிடுவதைப்போல பாராளுமன்றத்தைக் கேள்விக்கூத்தாக்குகிறார். இவருக்குப் பிடிக்காவிட்டால் இவர் வேறு இட்த்தில் பின்வரிசையில் உட்காரவேண்டியதுதானே; நாடு இருக்கும் நிலைமையில் இவருக்கு சீற் ஓதுக்குகிறதுதான் பாராளுமன்றத்தின் வேலையா?இவர் ஒரு தற்குறி இவரைத் தெரிவு செய்தவர்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனா பெண்களையும் மற்றவாகளையும் இழிவாக பேசியுள்ளார் 👎 அதே போன்று கஜேந்திரகுமாரும் அர்ச்சுனாவின் தாயாரை இழிவுபடுத்தி பேசியதையும் ஏற்று கொள்ள முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

அபிவிருத்திச்சபைக் கூட்டத்தில் அபிவிருத்தி பற்றிப் பேசாமல் மற்றவர்களையும் பேசவிடாமல் காட்டுக்கத்தல்கத்துபவர்.

அங்கு மட்டுமல்ல அவர் செல்லுமிடமெங்கும் அதே கூத்துத்தான்! மக்களுக்குரிய பிரச்சனைகளை கதைக்கும்போது இடையூறு விளைவித்து தன்னை பெரியவராக காட்ட கத்தி கூச்சலிடுபவர். அடிக்கடி தேவையற்ற பிரச்சனைகளில் மாட்டுப்படுபவர், சட்டத்தை மீறுபவர். இவர் தனது பாராளுமன்ற பிரவேசத்தின்பின் எத்தனை தடவை நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்? மக்களின் பிரச்சனைகளுக்காகவா?

2 hours ago, புலவர் said:

இவருக்குப் பிடிக்காவிட்டால் இவர் வேறு இட்த்தில் பின்வரிசையில் உட்காரவேண்டியதுதானே; நாடு இருக்கும் நிலைமையில் இவருக்கு சீற் ஓதுக்குகிறதுதான் பாராளுமன்றத்தின் வேலையா?

அதேதான்! பாராளுமன்ற பிரவேசத்தின்போதே இவர் வேறொருவருக்குரிய ஆசனத்தில் இருந்துகொண்டு போட்ட அலப்பறை தெரியுமே. பாராளுமன்ற கோமாளி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.