Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : முதல்வர் வாழ்த்து!

14 Mar 2026, 6:43 PM

vairamuthu.jpg

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஞானபீட அமைப்பு வைரமுத்துவுக்கு ஞான பீட விருதை இன்று அறிவித்துள்ளது. 

சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழிக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதற்கு முன்பு தமிழில் 1975-ல் அகிலனுக்கும், 2002-ல் ஜெயகாந்தனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து வைரமுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு ஞானபீட விருது கிடைத்திருக்கிறது. இது எனக்குக் கிடைத்த விருதைவிட, தமிழ் மொழிக்குக் கிடைத்த மகுடமாகவே கருதுகிறேன்” என்றார். 

கடந்த காலங்களில் ஞானபீட விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது குறித்துத் தான் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததை குறிப்பிட்டு பேசிய வைரமுத்து,  “தகுதியுள்ள படைப்புகள் இருந்தும் காலதாமதம் ஆனது வருத்தமளித்தாலும், இப்போது வழங்கப்பட்டிருப்பது நீதி நிலைநாட்டப்பட்டதாக உணர்கிறேன். இந்த விருது என் பேனாவுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பைத் தந்திருக்கிறது. வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே என் எழுத்துக்கள் இயங்கும்” என்றார். 

இந்நிலையில் வைரமுத்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.  ” தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது!

காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது!

தமிழில் இதுவரையில் அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.

தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்துவை வாழ்த்துகிறேன்!” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஏற்கனவே வைரமுத்து 7 முறை தேசிய விருதுகளையும், ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதையும், மற்றும் மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://minnambalam.com/jnanpith-award-for-vairamuthu/

  • கருத்துக்கள உறவுகள்

விருது என்ன பவுடர் டப்பாவா? ஷாம்பூவா😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழுக்கு அவமானம் - ஜெயமோகன்

jeyamohanMarch 15, 2026

vairamuthu1xx.jpg

சென்ற ஓராண்டாகவே செய்திகள் காதில் விழுந்துகொண்டிருந்தன. பாரதிய ஜனதாவின் சிலருடன் வைரமுத்து மிக அணுக்கமாகச் செயல்பட்டு ஞானபீடத்திற்கு மீண்டும் முயல்கிறார் என்று. ஆனால் விசாரித்தபோதெல்லாம் அப்படியில்லை என அவர்களில் சிலர் ஆக்ரோஷமாக மறுக்கவும் செய்தனர். வைரமுத்து ஒரே சமயம் திமுகவுக்கு வேண்டியவர், கருணாநிதியின் நண்பர், மோடி கவிதைகளை மொழியாக்கம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.அனுதாபி, பாரதிய ஜனதாவின் கலாச்சாரத்துறை முகவர்களின் அணுக்கர். எல்லாமும்தான். அது ஒரு தனிக்கலை. தமிழ்நாட்டில் இந்த தலைமுறையில் அவர் அதில் மாபெரும் நிபுணர். 

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஞானபீடத்தை அணுகிவிட்டார் என்பதை உள்வட்டம் வழியாகவே அறிந்தேன். கடுமையான கண்டனத்தை பதிவுசெய்தேன். நண்பர்களும் திரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது அந்த விருதை வைரமுத்துவுக்காகப் பரிந்துரைத்தவர் வெங்கையா நாயுடு. ஞானபீட நிறுவனம் அப்போது மறுத்தது. வைரமுத்துவுக்கு பின்னடைவு உருவானது.பிறகு அவர்மேல் வந்த பாலியல்குற்றச்சாட்டுக்களால் மேலும் பின்னடைவு. ஆனால் கல்வித்துறையிலுள்ள தன் நண்பர்கள்(பெரும்பாலானவர்கள் சாதி ஆதரவாளர்கள்) வழியாக கி.ராஜநாராயணன் போன்று ஞானபீடத்திற்கு முற்றிலும் தகுதியானவர்களுக்கு அது கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்.  

இந்திய  துணைஜனாதிபதிக்கு ஞானபீடப்பரிசில் பெரும் பங்களிப்புண்டு என அறிந்திருக்கலாம். இந்த தேர்தலை ஒட்டியும் ஏதேதோ கணக்குகள் இருந்திருக்கலாம். இந்த ஞானபீட விருது அந்த அமைப்பு தமிழ் நவீன இலக்கியத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தமைக்குச் சமம். நீ என்னவாக வேண்டுமென்றாலும் இரு, நீ என்னென்ன சாதனைகளை வேண்டுமென்றாலும் செய், நாங்கள் உன்னை தெருப்புழுதியின் தரத்தில்தான் மதிப்பிடுவோம், உங்களில் சிறந்தவர் என உங்களில் கடையரைத்தான் நாங்கள் ஏற்போம், பிறர் அனைவரையும் அவரைவிட கீழேதான் வைப்போம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த அவமதிப்புக்கு தமிழர்களாகிய நாம் பொறுப்பேற்கவேண்டும். எந்த பேரிலக்கியவாதியையும் நாம் ஏற்றுக்கொண்டு முன்னிறுத்தியதில்லை. அவர்களை அவமதிக்கும் தருணங்களை தவறவிட்டதுமில்லை. ஞானபீடப்பரிசு என்பதை தீர்மானிப்பதில் பரிந்துரை முதல் இறுதிவரை தமிழகக் கல்வித்துறையினர் ஒரு பங்களிப்பாற்றுகின்றனர். அவர்களில் இலக்கியமறிந்தவர்கள், அடிப்படை அறிவுத்திறன் கொண்டவர்கள் அரிதினும் அரிது. பெரும்பாலும் சாதிக்கணக்குகள், அரசியல் கணக்குகள் கொண்டவர்களே மிகுதி. ஒவ்வொரு இடத்திலும் எந்த தகுதியுமற்றவர்களை, வெற்றுச்சூழ்ச்சியாளர்களை மேலே தூக்கி வைத்திருக்கிறோம். கொண்டாடுகிறோம். அப்போது அவர்களில் ஒருவரைத்தான் அவர்கள் முன்னிறுத்துவார்கள். அது நிகழ்ந்துள்ளது. தமிழ் தனக்குரிய அவமதிப்பையே ஈட்டிக்கொண்டிரள்ளது.

இந்த விருதை ஏன் இப்படிக் கண்டிக்கிறோம்? அகிலனுக்கு அளிக்கப்பட்ட் ஞானபீடம்  ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலம் தமிழ் நவீன இலக்கியத்தையே இந்திய இலக்கியச் சூழலில் இருட்டடிப்பு செய்தது. அகிலனே இந்த தரம் என்றால் தமிழில் என்ன நவீன இலக்கியம் இருக்கப்போகிறது என்று சொல்லப்படுவதை ஏறத்தாழ இருபது மேடையிலாவது நானே என் காதால் கேட்டிருப்பேன். தமிழில் நவீன இலக்கியமே இல்லை என்றுதான் இன்றும் இந்தியச்சூழலில் பிற மொழியினரில் கணிசமானவர்கள் எண்ணுகிறார்கள். ஆங்கில மொழியாக்கங்கள் வழியாக மெல்ல மெல்ல அந்தச் சித்திரம் ஒரு சிறு வட்டத்தில் மாறுகிறது. ஆனால் இந்திய மொழிகளுக்கு செல்லும் மொழியாக்கங்களே இந்திய இலக்கியங்கள் பற்றிய சித்திரங்களை இந்தியச் சூழலில் உருவாக்குகின்றன. இங்கிருந்து செல்பவை நாம் பரிசளிக்கும் படைப்புகளே. வைரமுத்துவுக்கு கிடைத்த இந்த விருது தமிழுக்கு அளிக்கும் சிறுமை இன்னும் நம்மை முப்பதாண்டுகள் பின்னடைவுக்கு உள்ளாக்கும். ஒவ்வொரு மேடைகளிலும் நாம் இளம்கேலியுடனும் அதன் விளைவான பரிந்துநோக்கும் மேட்டிமைப்பார்வையுடனும் அணுகப்படுவோம்.

இச்சூழலில்தான் தரமான தமிழ்ப்படைப்பாளிகளை முன்வைக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா போன்ற எங்கள் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகாரபீடங்கள் நம்மை தொடர்ச்சியாக சிறுமைசெய்துகொண்டே இருக்கின்றன. அடிவிழுந்தோறும் நாம் நிமிர்ந்தாகவேண்டும்.நம் முன்னோடிகளை, நம்மை முன்வைக்கவேண்டும். நாம் மனம்தளராமலிருக்கவேண்டிய சூழல் இது. வைரமுத்து போன்ற சிறுமையாளர்கள் வருவார்கள் போவார்கள், சூழ்ச்சிகள் வழியாக அற்பவிருதுகளை ஈட்டுவார்கள், இலக்கியம் என்றும் வெல்லும்.

தமிழ் இலக்கியத்திற்கு எல்லாவகையிலும் அவமதிப்பு இச்செய்தி. இந்த அவமானத்தை செயல்வழியாகக் கடந்துசெல்வோம். இனி இதைப்பற்றி விவாதிக்கவேண்டியதில்லை. அருவருப்பும், கூச்சமும் நிறைகிறது உள்ளத்தில். ஒரு கீழ்த்தரக் கவிஞர் என்ற வகையில் வைரமுத்து மேல் ஒரு மதிப்பின்மையே இதுவரை இருந்தது. இப்போது அவர் மேல் ஆழ்ந்த அருவருப்பே அடைகிறேன்.அவர் தன் நாலாந்தரச் சூழ்ச்சிகள் வழியாக தமிழுக்கு தலைமுறைகளுக்கு நீளும் இழிவை சேர்த்தளித்துவிட்டார்.

https://www.jeyamohan.in/230180/

பழைய கட்டுரை (2017 ஆம் ஆண்டில் இருந்து)

வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

jeyamohanDecember 29, 2017

vairamuthu1xx

உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வழியாக நான் ஒன்றை அறிந்தேன், வைரமுத்து ஞானபீடம் பெறுவதற்கான முயற்சிகளில் அனேகமாக வென்றுவிடும் இடத்தில் இருக்கிறார்.எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் கடிதங்களும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயிடுவை இதற்காகச் சந்திக்கவுள்ளனர் என்று கேள்விப்பட்டேன். பாரதிய ஜனதாக் கட்சியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பொறுப்பிலிருப்பவர்கள் சிலர் இதற்கான தனிமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தருண் விஜயை அழைத்துக் கூட்டம் நடத்தியது, மோடி கவிதைகளை வெளியிட்டது என அவர் சென்ற சில ஆண்டுகளாக படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தார். மோடி எதிர்ப்பில் அன்றாடம் குமுறும் நம் ஊடகங்கள் ,அறிவுஜீவிகள்கூட இச்செயல்களைப்பற்றி ஏதும் சொல்லாமல் அடக்கியே வாசித்தன. ஆகவே ஐயம் உறுதியாகிறது.

இது வெறும் வதந்தியாக இருந்தால் மகிழ்ச்சி. இல்லையென்றால் தமிழ் இலக்கியம் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சிறுமைகளில் ஒன்றாக இது இருக்கும்.  இன்று இந்திய இலக்கியச் சூழலில் தமிழுக்கு என எந்த மதிப்பும் கிடையாது. காரணம், நாம் தேசிய அளவில் முன்னிறுத்தும் படைப்பாளிகள் பெரும்பாலும் எவரும் இலக்கியப்பெறுமதி கொண்டவர்கள் அல்ல. அகிலன்,நா.பார்த்தசாரதி, சிவசங்கரி முதல் பாமா, பெருமாள் முருகன் வரை. ஆனால் அவ்வரிசையிலேயே கூட இறுதியாகச் சேர்க்கப்பட வேண்டியவரான வைரமுத்து ஞானபீடம் பெறுவார் என்றால் தமிழிலக்கியச் சூழல் தன்னைத்த்தானே அவமதித்துக்கொள்வதாகவே பொருள்படும்.

இது ஏன் நிகழ்கிறது என்று நாம் பார்க்கவேண்டும். இங்கே சமநிலையும் நேர்மையும் கொண்ட இலக்கிய விமர்சனம் இல்லை. வைரமுத்து ஒரு நல்ல படைப்பாளி அல்ல என அறியாத இலக்கியவாசகன் இல்லை. ஆனால் அவரைப்பற்றி அப்படி தெளிவாக மதிப்பிட்டு எழுதப்பட்ட ஒரு நல்ல விமர்சனக் கட்டுரை தமிழிலக்கிய சூழலில் இருந்து எழுதப்பட்டிருக்காது. அந்த மதிப்பீடுகள் செவிச்சொற்களாகவே சுழன்றுவரும். ஆனால் அசோகமித்திரன் பற்றியும் சுந்தர ராமசாமி பற்றியுமெல்லாம் பக்கம் பக்கமாக வசைகளும் நிராகரிப்புகளும் எழுதப்பட்டிருக்கும். அரிதாகவே நல்லசொற்கள் தென்படும்.

ஏனென்றால் நல்ல இலக்கியத்தை, அழகியல்மரபை நிராகரிக்கும் தெருமுனை அரசியல் எழுத்தாளர்கள் இலக்கியத்திற்கும் இலக்கியவாதிகளுக்கும் எதிராக சலிக்காமல் எழுதிக்குவித்திருப்பார்கள். இலக்கியத்திற்குள் இருக்கும் உள்குத்துகள் மற்றும் காழ்ப்புகளால் இலக்கியவாதிகளாலும் அவை  எழுதப்பட்டிருக்கும். ஆனால் தமிழின் மையஓட்டமான அதிகார முகங்கள் பற்றி ஆழமான அமைதியே இருக்கும்.ஏன் வைரமுத்து குறித்து எதுவும் எழுதப்படுவதில்லை? ஏனென்றால் பொதுவாக தமிழ்ச்சூழலில் இலக்கியவாதிகளின் ஆவேசமெல்லாம் அதிகாரமேதுமில்லாத அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்களை நோக்கியே திரும்பியிருக்கும். வைரமுத்து போன்ற அதிகாரத்திற்கு அணுக்கமானவர்களைப்பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. அந்த அதிகாரம் கும்பலதிகாரமாக இருந்தாலும் அப்படியே.

உதாரணம், இன்குலாப் இவ்வருடச் சாகித்ய அக்காதமி விருதுபெற்றதற்கான எதிர்வினைகள். சென்ற முப்பதாண்டுகளில் தமிழ்ச் சிற்றிதழ்சார் இலக்கியமரபு இன்குலாபை ஓர் இலக்கியவாதியாக கருதியதில்லை. எந்த எழுத்தாளரும் அவரைப்பற்றி பேசியதில்லை. அவரே அதைப்பற்றி கசந்து கூறியிருக்கிறார். இப்போதும் அவருடைய கவிதையை தனிப்பேச்சில் ஏற்றுக்கொள்ளும் இலக்கியவாதியோ வாசகனோ இல்லை ஆனால் அவருக்கு சாகித்ய அக்காதமி கொடுக்கப்பட்டபோது நானறிந்து லட்சுமி மணிவண்ணனும் நானும் மட்டுமே எதிர்வினையாற்றினோம். மற்றவர்களின் நிலைபாடு  ‘எதற்கு வம்பு’ என்பதே. வசைக்கும்பலைக் கண்ட அச்சமே காரணம்.  இந்த தயக்கத்திலிருந்தே வைரமுத்து போன்றவர்கள் மேலெழுந்து செல்கிறார்கள். அவருக்கு இங்கிருப்பவர்களின் இடமென்ன இயல்பென்ன என நன்றாகவே தெரியும்.

ஆகவே, வேறுவழியில்லாமல் என் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன். இவ்விருது அளிக்கப்பட்டால்கூட தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழல் அந்தரங்கமாக முணுமுணுத்துக்கொள்ளுமே ஒழிய வாய்திறந்து எதிர்ப்பைப் பதிவுசெய்யப்போவதில்லை. என் குரல் அகிலனுக்கு அளிக்கப்பட்ட ஞானபீடத்திற்கு எதிராக எழுந்த சுந்தர ராமசாமியின் குரலுக்கு ஒரு சமகாலநீட்சி என சிலரேனும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.

வைரமுத்து தமிழின் வளமான இலக்கியமரபின் தொடர்ச்சி அல்ல. எவ்வகையிலும் நவீனத்தமிழிலக்கியத்தின் முகம் அல்ல. அவர் ஒரு பரப்பியல் எழுத்தாளர், இலக்கியமறியா பொதுவாசகர்களுக்கு மட்டும் உரியவர். அவருடைய எழுத்து இலக்கியத்தின் அடிப்படை இயல்புகள் என்று கருதப்படும் மொழியமைதி, வடிவ ஒருமை, அந்தரங்கநேர்மை, நுண்மடிப்புகள் கொண்டது அல்ல. செயற்கையாக செய்யப்பட்டவை அவை.

ஞானபீடம் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளான மூத்தபடைப்பாளிகளுக்கே இங்கு பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளது. பிற இந்தியமொழிகளில் அவ்விருதைப்பெற்றவர்களின் பெரும்பாலானவர்கள் இந்திய இலக்கிய மேதைகள். அவ்வரிசையில் வைரமுத்து தமிழின் பிரதிநிதியாக வைக்கப்படுவாரென்றால் அது தமிழிலக்கியச்சூழலை சிறுமைசெய்வதாகவே அமையும்.  தமிழிலக்கியத்தையே அவரைக்கொண்டு பிறர் மதிப்பிட ஏதுவாகும். ஆகவே இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய முயற்சி.

இது ஓர் அமைப்பு ஒருவருக்கு விருது அளிக்கிறது என்னும் தனிநிகழ்வு அல்ல. ஞானபீடம் தமிழின் ஒரு சித்திரக்குள்ளரை இந்தியாவின் பேருருவப் படைப்பாளிகளின் வரிசையில் நிற்கவைத்து தமிழில் இவ்வளவே இலக்கியம் உள்ளது, தமிழுக்கு இதுவே தரம் என்று சொல்கிறது என்பதே இவ்விருதின் உண்மையான அர்த்தம் . தமிழை மட்டுமல்ல ஞானபீடம் தன்னைத்தானேகூட இதன் வழியாக மட்டம்தட்டிக்கொள்கிறது.

சென்ற ஆண்டுகளில் இந்தியச்சூழலில் இன்று அறியப்பட்ட எந்த மேதைக்கும் நிகரான பெரும்படைப்பாளிகள் சிலர் தமிழிலிருந்து ஞானபீடத்திற்கு முன்வைக்கப்பட்டனர். லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன் என. அவர்கள் அனைவரும் திறமையான உள்குத்துகள் வழியாக தோற்கடிக்கப்பட்டனர். இன்று வைரமுத்து மேலேறிச்செல்கிறார்

கி.ராவுக்கு ஞானபீடம் தமிழுக்குப் பெருமைசேர்க்கும் என நான் எழுதியபோது, அதற்கு கல்வித்துறையின் சிறிய ஆதரவு இருந்தால்கூடப்போதும் என்றபோது, தமிழ்ச்சூழலில் இருந்து சிறிய அளவில்கூட ஆதரவு எழவில்லை. இலக்கியவாதிகள்கூட குரலெழுப்பவில்லை. அதற்குப்பின்னாலிருப்பது இத்தகைய அரசியல் கணக்குகள், சாதிக்கணக்குகள்.

என்ன துயரம் என்றால் உள்ளே பல்வேறு அதிகார விளையாட்டுக்களுக்கு உடன்பட்டு இந்தமுயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களே வெளியே இலக்கியக்காவலர்களாகப் பேசிக்கொண்டும் இருப்பார்கள். இதில் ஈடுபட்டிருக்கும் அனைவரின் பெயர்களையும் வெளிக்கொண்டுவந்து இவர்களின் தரமென்ன என்று இலக்கியவாசகர்கள் முன் வெளிப்படுத்தவேண்டும். இவர்கள் தமிழுக்கு இயற்றிய அநீதி என்ன என்று அடுத்த தலைமுறை உணரும்படிச் செய்யவேண்டும்

அனைத்துக்கும் மேலாக ஒன்றைச் சொல்லிக்கொள்வேன், இலக்கிய மதிப்பு என்பது அமைப்புகளின் அடையாளங்களால் அமைவதல்ல. ஞானபீடம் என்ன நோபல் கூட எவரையும் இலக்கியவாதியாக நிலைநாட்டுவதில்லை. அகிலனின் மதிப்பு இந்திய இலக்கியத்தில் என்ன? ஏன் தமிழில் அவருடைய இடம் என்ன? வைரமுத்து தமிழின் முகம் அல்ல என மிக எளிதில் வலுவான சில கட்டுரைகள் வழியாக தேசிய அளவிலேயே இலக்கியவாசகர்களிடம் நிறுவிவிடமுடியும். இதனால் அவருக்குக் கிடைப்பது இலக்கியத்துடன் சம்பந்தமற்ற ஒரு தற்காலிகப்புகழ் மட்டுமே. உண்மையான சோகம் என்பது இதன்மூலம் இந்தியாவின் பொதுவாசகனிடம் உள்ள தமிழைநோக்கிய இழிவான நோக்கு உறுதிப்படுத்தப்படும் என்பதும் , இவ்விருது வாழும் முன்னோடிகளை அவமதிப்பதாக ஆகும் என்பதும் மட்டுமே

வைரமுத்து சிறந்த பாடலாசிரியர். நல்ல கவிஞரோ எழுத்தாளரோ அல்ல. அவர் தமிழ்நவீன இலக்கியச் சூழலின் அங்கீகாரம் பெற்ற படைப்பாளி அல்ல. அதிகார அமைப்புகளினூடாகச் சென்று அவர் இவ்வங்கீகாரத்தைப் பெறுவார் என்றால் அது தமிழுக்கு இழிவு.   இலக்கிய ஆர்வமுள்ளவர்கள், அதன்பொருட்டு கருத்துத்தெரிவிக்கும் துணிவுமுள்ளவர்கள் தங்கள் எதிர்ப்பை ஆங்கிலத்தில் எழுதி ஞானபீட அமைப்பின் செயலருக்கு அனுப்பவேண்டும். அதிகார விளையாட்டுக்களை இலக்கியம் எளிதில் கடக்க முடியாது. ஆனால் தமிழிலக்கியச்சூழலின் எதிர்ப்பை மீறியே இவ்விருது அளிக்கப்பட்டது என்பதைப் பதிவுசெய்வோம். இத்தருணம் கடந்தால் நம் தலைமுறைகள் முன் சிறுமையுடன் நின்றிருப்போம்.

https://www.jeyamohan.in/105208/

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் மிகப்பெரிய இலக்கிய விருது இனி நம்மிடமிருந்து!

ஜெயமோகன்

jeyamohanMarch 16, 2026

selection.png

இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பு அகிலனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டபோது சுந்தர ராமசாமி மிகக் கடுமையாக எழுதினார். அகிலன் இன்று எவர் என்று தெரியாத நிலை. சு.ராவின் அக்கட்டுரை இன்றும் வாசிக்கப்படும் ஒரு ‘கிளாஸிக்’. சு.ரா சொன்னார் “ஜிப்பா தேசிய உடை ஆக்கப்படுவதை பிக்பாக்கெட்டுகள் ஆதரிப்பது போன்றது அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்தபோது சோட்டா எழுத்தாளர்கள் கொண்டாடியது”. அந்த பிக்பாக்கெட்டுகளின் பெயர்களை இன்று தமிழ் விக்கியில்தான் தேடவேண்டும்.

இது ஓர் எழுத்தாளர் விருது பெறுவதற்கு எதிரான கண்டனம் அல்ல. இது அந்த ஓர் எழுத்தாளர் சார்ந்த விஷயமும் அல்ல. இந்த விருதோ, அந்த எழுத்தாளரோ எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

அகிலனுக்கு கிடைத்த ஞானபீடம் தமிழை சிறுமை செய்தது. ஐம்பதாண்டுகளாக தமிழ் இலக்கியத்தை எந்த இலக்கிய மேடையிலும் உரிய இடம் இல்லாததாக ஆக்கியது. அகிலன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர் என்றால் மற்றவர்களின் எழுத்தை பொருட்படுத்தவேண்டியதில்லை என்று இந்தியா முடிவு செய்தது. “தமிழில் நவீன இலக்கியம் உண்டா?” என்று என்னிடம் பல மற்றமொழிக்காரர்கள் கேட்டிருக்கிறார்கள்.

அகிலனில் இருந்து தொடங்கி இந்திய மொழி அறிஞர்கள் நம் நவீன இலக்கியம் பற்றிய ஆழ்ந்த முன்முடிவுக்குள் சென்றுவிட்டனர். நம் நவீன இலக்கியத்தை உலகம் அறிந்தால்தான் இந்தியாவில் மதிப்பு என முடிவுசெய்தோம். இன்று அதை கொண்டுசெல்ல வாழும்தமிழ் இலக்கிய மாநாடு வழியாக பெருமுயற்சி எடுக்கிறோம். இன்று எந்த சர்வதேச இலக்கிய இதழ் ஓர் இந்திய இலக்கியச் சிறப்பிதழ் வெளியிட்டாலும் அதில் நம் படைப்பு உள்ளது. இந்தியா அதை திகைப்புடன் பார்க்கிறது.

அந்த முயற்சிகள் அனைத்தையும் சீரழிப்பது வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்ட இந்த ஞானபீடப் பரிசு. தமிழிலக்கியத்தை நோக்கிக் காறித்துப்பியிருக்கிறார்கள். இதற்குமேல் உனக்கு மதிப்பில்லை என்கிறார்கள். இந்த அளவே உன்னை அளவிடுவோம் என குனிந்து நோக்கிச் சொல்கிறார்கள்.

அதை நான் நேரில் கண்டிருக்கிறேன். கேந்திர சாகித்ய அக்காதமி அரங்கில் வைரமுத்து அரை லட்சம் கவிதைகள் எழுதியுள்ளார், தாகூரை விட அதிகம் என அசோக் வாஜ்பாய் என்பவர் சொல்ல அரங்கே சிரித்தது. அந்தச் சிரிப்பின் பொருள் தெரிந்து நான் கூசிச் சிறுத்து அமர்ந்திருந்தேன்.

அந்த சிரிப்பு, அந்த இளக்காரம், அந்த போலிப்பெருந்தன்மை கொண்ட தட்டிக்கொடுத்தல், வேண்டுமென்றே நம்மில் சிறியவர்களை அங்கீகரித்து பிறரை அவரைவிடக் கீழ் என நிறுவும் சூழ்ச்சி– இது நூறாண்டுகளாக தமிழுக்கு எதிராக நிகழ்கிறது. இப்போதும் நிகழ்ந்துள்ளது.

இவர்கள் யார் நம்மை மதிக்க? இவர்களிடம் ஏன் சென்று நிற்கிறோம்? இத்தனை சூழ்ச்சிகள் செய்து இவர்களிடம் ஏன் ஏற்பு பெற முண்டியடிக்கிறோம்? எண்ணக்கூசுகிறது.

இந்த இரவு முழுக்க பெண்களின் அழைப்புகள். கண்ணீருடன், கொந்தளிப்புடன். ஏதோ தங்களுக்கு தனிப்பட்ட முறையில் அநீதி இழைக்கப்பட்டது போல. ஒரு தமிழ்ப்பெண்ணாகவே அவமானம் கொள்கிறார்கள் என்றனர். “ஏன் இந்த ஞானபீடைகளிடம் நாம் சென்று நிற்கவேண்டும்? நாம் உருவாக்குவோம் நமக்கான விருதை. அதை விட பெரிய விருதை. நான் என் நகைகளை முழுக்க தந்துவிடுகிறேன்” என்று பல பெண்கள் சொன்னார்கள். அவர்கள் கண்ணீருடன் சொன்னது ஓர் ஆணை.

இதோ நாங்கள் அறிவிக்கிறோம், இந்திய வரலாற்றின் மிகப்பெரிய இலக்கிய விருது. உலக இலக்கியத்திலும் இந்திய இலக்கியத்திலும் சாதனைப் படைப்புக்கான LIVING TAMIL AWARD FOR WORLD LITERATURE . ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது டெல்லியிலும் நியூயார்க்கிலும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். விருதுத்தொகை இந்திய ரூபாயில் ஒரு கோடி. (ஏறத்தாழ ஒரு லட்சம் டாலர்)

இந்த செய்தி டெல்லியிலும், சென்னையிலும், நியூயார்க்கிலும் முறையாக அறிவிக்கப்படும்.

https://www.jeyamohan.in/230197/

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வைரமுத்துவிற்கு வாழ்த்துக்கள்!

எரிச்சல், பொறாமை மிகுந்த, சிறிய மனிதர்கள் நிறைந்தது இலக்கிய உலகம். தனக்கு பரிசு பாராட்டு, அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதை விட மற்றவனுக்கு கிடைக்கக்கூடாது என இங்கு நினைப்பவர்கள் பலர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தமிழுக்கு அவமானம் - ஜெயமோகன்

jeyamohanMarch 15, 2026

vairamuthu1xx.jpg

சென்ற ஓராண்டாகவே செய்திகள் காதில் விழுந்துகொண்டிருந்தன. பாரதிய ஜனதாவின் சிலருடன் வைரமுத்து மிக அணுக்கமாகச் செயல்பட்டு ஞானபீடத்திற்கு மீண்டும் முயல்கிறார் என்று. ஆனால் விசாரித்தபோதெல்லாம் அப்படியில்லை என அவர்களில் சிலர் ஆக்ரோஷமாக மறுக்கவும் செய்தனர். வைரமுத்து ஒரே சமயம் திமுகவுக்கு வேண்டியவர், கருணாநிதியின் நண்பர், மோடி கவிதைகளை மொழியாக்கம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.அனுதாபி, பாரதிய ஜனதாவின் கலாச்சாரத்துறை முகவர்களின் அணுக்கர். எல்லாமும்தான். அது ஒரு தனிக்கலை. தமிழ்நாட்டில் இந்த தலைமுறையில் அவர் அதில் மாபெரும் நிபுணர். 

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஞானபீடத்தை அணுகிவிட்டார் என்பதை உள்வட்டம் வழியாகவே அறிந்தேன். கடுமையான கண்டனத்தை பதிவுசெய்தேன். நண்பர்களும் திரண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அப்போது அந்த விருதை வைரமுத்துவுக்காகப் பரிந்துரைத்தவர் வெங்கையா நாயுடு. ஞானபீட நிறுவனம் அப்போது மறுத்தது. வைரமுத்துவுக்கு பின்னடைவு உருவானது.பிறகு அவர்மேல் வந்த பாலியல்குற்றச்சாட்டுக்களால் மேலும் பின்னடைவு. ஆனால் கல்வித்துறையிலுள்ள தன் நண்பர்கள்(பெரும்பாலானவர்கள் சாதி ஆதரவாளர்கள்) வழியாக கி.ராஜநாராயணன் போன்று ஞானபீடத்திற்கு முற்றிலும் தகுதியானவர்களுக்கு அது கிடைக்காமல் பார்த்துக்கொண்டார்.  

இந்திய  துணைஜனாதிபதிக்கு ஞானபீடப்பரிசில் பெரும் பங்களிப்புண்டு என அறிந்திருக்கலாம். இந்த தேர்தலை ஒட்டியும் ஏதேதோ கணக்குகள் இருந்திருக்கலாம். இந்த ஞானபீட விருது அந்த அமைப்பு தமிழ் நவீன இலக்கியத்தின் முகத்தில் காறி உமிழ்ந்தமைக்குச் சமம். நீ என்னவாக வேண்டுமென்றாலும் இரு, நீ என்னென்ன சாதனைகளை வேண்டுமென்றாலும் செய், நாங்கள் உன்னை தெருப்புழுதியின் தரத்தில்தான் மதிப்பிடுவோம், உங்களில் சிறந்தவர் என உங்களில் கடையரைத்தான் நாங்கள் ஏற்போம், பிறர் அனைவரையும் அவரைவிட கீழேதான் வைப்போம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த அவமதிப்புக்கு தமிழர்களாகிய நாம் பொறுப்பேற்கவேண்டும். எந்த பேரிலக்கியவாதியையும் நாம் ஏற்றுக்கொண்டு முன்னிறுத்தியதில்லை. அவர்களை அவமதிக்கும் தருணங்களை தவறவிட்டதுமில்லை. ஞானபீடப்பரிசு என்பதை தீர்மானிப்பதில் பரிந்துரை முதல் இறுதிவரை தமிழகக் கல்வித்துறையினர் ஒரு பங்களிப்பாற்றுகின்றனர். அவர்களில் இலக்கியமறிந்தவர்கள், அடிப்படை அறிவுத்திறன் கொண்டவர்கள் அரிதினும் அரிது. பெரும்பாலும் சாதிக்கணக்குகள், அரசியல் கணக்குகள் கொண்டவர்களே மிகுதி. ஒவ்வொரு இடத்திலும் எந்த தகுதியுமற்றவர்களை, வெற்றுச்சூழ்ச்சியாளர்களை மேலே தூக்கி வைத்திருக்கிறோம். கொண்டாடுகிறோம். அப்போது அவர்களில் ஒருவரைத்தான் அவர்கள் முன்னிறுத்துவார்கள். அது நிகழ்ந்துள்ளது. தமிழ் தனக்குரிய அவமதிப்பையே ஈட்டிக்கொண்டிரள்ளது.

இந்த விருதை ஏன் இப்படிக் கண்டிக்கிறோம்? அகிலனுக்கு அளிக்கப்பட்ட் ஞானபீடம்  ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலம் தமிழ் நவீன இலக்கியத்தையே இந்திய இலக்கியச் சூழலில் இருட்டடிப்பு செய்தது. அகிலனே இந்த தரம் என்றால் தமிழில் என்ன நவீன இலக்கியம் இருக்கப்போகிறது என்று சொல்லப்படுவதை ஏறத்தாழ இருபது மேடையிலாவது நானே என் காதால் கேட்டிருப்பேன். தமிழில் நவீன இலக்கியமே இல்லை என்றுதான் இன்றும் இந்தியச்சூழலில் பிற மொழியினரில் கணிசமானவர்கள் எண்ணுகிறார்கள். ஆங்கில மொழியாக்கங்கள் வழியாக மெல்ல மெல்ல அந்தச் சித்திரம் ஒரு சிறு வட்டத்தில் மாறுகிறது. ஆனால் இந்திய மொழிகளுக்கு செல்லும் மொழியாக்கங்களே இந்திய இலக்கியங்கள் பற்றிய சித்திரங்களை இந்தியச் சூழலில் உருவாக்குகின்றன. இங்கிருந்து செல்பவை நாம் பரிசளிக்கும் படைப்புகளே. வைரமுத்துவுக்கு கிடைத்த இந்த விருது தமிழுக்கு அளிக்கும் சிறுமை இன்னும் நம்மை முப்பதாண்டுகள் பின்னடைவுக்கு உள்ளாக்கும். ஒவ்வொரு மேடைகளிலும் நாம் இளம்கேலியுடனும் அதன் விளைவான பரிந்துநோக்கும் மேட்டிமைப்பார்வையுடனும் அணுகப்படுவோம்.

இச்சூழலில்தான் தரமான தமிழ்ப்படைப்பாளிகளை முன்வைக்கும் வாழும் தமிழ் இலக்கிய விழா போன்ற எங்கள் முயற்சிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகாரபீடங்கள் நம்மை தொடர்ச்சியாக சிறுமைசெய்துகொண்டே இருக்கின்றன. அடிவிழுந்தோறும் நாம் நிமிர்ந்தாகவேண்டும்.நம் முன்னோடிகளை, நம்மை முன்வைக்கவேண்டும். நாம் மனம்தளராமலிருக்கவேண்டிய சூழல் இது. வைரமுத்து போன்ற சிறுமையாளர்கள் வருவார்கள் போவார்கள், சூழ்ச்சிகள் வழியாக அற்பவிருதுகளை ஈட்டுவார்கள், இலக்கியம் என்றும் வெல்லும்.

தமிழ் இலக்கியத்திற்கு எல்லாவகையிலும் அவமதிப்பு இச்செய்தி. இந்த அவமானத்தை செயல்வழியாகக் கடந்துசெல்வோம். இனி இதைப்பற்றி விவாதிக்கவேண்டியதில்லை. அருவருப்பும், கூச்சமும் நிறைகிறது உள்ளத்தில். ஒரு கீழ்த்தரக் கவிஞர் என்ற வகையில் வைரமுத்து மேல் ஒரு மதிப்பின்மையே இதுவரை இருந்தது. இப்போது அவர் மேல் ஆழ்ந்த அருவருப்பே அடைகிறேன்.அவர் தன் நாலாந்தரச் சூழ்ச்சிகள் வழியாக தமிழுக்கு தலைமுறைகளுக்கு நீளும் இழிவை சேர்த்தளித்துவிட்டார்.

https://www.jeyamohan.in/230180/

பழைய கட்டுரை (2017 ஆம் ஆண்டில் இருந்து)

வைரமுத்துவுக்கு ஞானபீடமா?

jeyamohanDecember 29, 2017

vairamuthu1xx

உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வழியாக நான் ஒன்றை அறிந்தேன், வைரமுத்து ஞானபீடம் பெறுவதற்கான முயற்சிகளில் அனேகமாக வென்றுவிடும் இடத்தில் இருக்கிறார்.எம்.டி.வாசுதேவன் நாயர் உட்பட இந்தியாவின் 16 முக்கியமான எழுத்தாளர்களின் கடிதங்களும் பல்கலை துணைவேந்தர்களின் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. துணை குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயிடுவை இதற்காகச் சந்திக்கவுள்ளனர் என்று கேள்விப்பட்டேன். பாரதிய ஜனதாக் கட்சியில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பொறுப்பிலிருப்பவர்கள் சிலர் இதற்கான தனிமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தருண் விஜயை அழைத்துக் கூட்டம் நடத்தியது, மோடி கவிதைகளை வெளியிட்டது என அவர் சென்ற சில ஆண்டுகளாக படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தார். மோடி எதிர்ப்பில் அன்றாடம் குமுறும் நம் ஊடகங்கள் ,அறிவுஜீவிகள்கூட இச்செயல்களைப்பற்றி ஏதும் சொல்லாமல் அடக்கியே வாசித்தன. ஆகவே ஐயம் உறுதியாகிறது.

இது வெறும் வதந்தியாக இருந்தால் மகிழ்ச்சி. இல்லையென்றால் தமிழ் இலக்கியம் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சிறுமைகளில் ஒன்றாக இது இருக்கும்.  இன்று இந்திய இலக்கியச் சூழலில் தமிழுக்கு என எந்த மதிப்பும் கிடையாது. காரணம், நாம் தேசிய அளவில் முன்னிறுத்தும் படைப்பாளிகள் பெரும்பாலும் எவரும் இலக்கியப்பெறுமதி கொண்டவர்கள் அல்ல. அகிலன்,நா.பார்த்தசாரதி, சிவசங்கரி முதல் பாமா, பெருமாள் முருகன் வரை. ஆனால் அவ்வரிசையிலேயே கூட இறுதியாகச் சேர்க்கப்பட வேண்டியவரான வைரமுத்து ஞானபீடம் பெறுவார் என்றால் தமிழிலக்கியச் சூழல் தன்னைத்த்தானே அவமதித்துக்கொள்வதாகவே பொருள்படும்.

இது ஏன் நிகழ்கிறது என்று நாம் பார்க்கவேண்டும். இங்கே சமநிலையும் நேர்மையும் கொண்ட இலக்கிய விமர்சனம் இல்லை. வைரமுத்து ஒரு நல்ல படைப்பாளி அல்ல என அறியாத இலக்கியவாசகன் இல்லை. ஆனால் அவரைப்பற்றி அப்படி தெளிவாக மதிப்பிட்டு எழுதப்பட்ட ஒரு நல்ல விமர்சனக் கட்டுரை தமிழிலக்கிய சூழலில் இருந்து எழுதப்பட்டிருக்காது. அந்த மதிப்பீடுகள் செவிச்சொற்களாகவே சுழன்றுவரும். ஆனால் அசோகமித்திரன் பற்றியும் சுந்தர ராமசாமி பற்றியுமெல்லாம் பக்கம் பக்கமாக வசைகளும் நிராகரிப்புகளும் எழுதப்பட்டிருக்கும். அரிதாகவே நல்லசொற்கள் தென்படும்.

ஏனென்றால் நல்ல இலக்கியத்தை, அழகியல்மரபை நிராகரிக்கும் தெருமுனை அரசியல் எழுத்தாளர்கள் இலக்கியத்திற்கும் இலக்கியவாதிகளுக்கும் எதிராக சலிக்காமல் எழுதிக்குவித்திருப்பார்கள். இலக்கியத்திற்குள் இருக்கும் உள்குத்துகள் மற்றும் காழ்ப்புகளால் இலக்கியவாதிகளாலும் அவை  எழுதப்பட்டிருக்கும். ஆனால் தமிழின் மையஓட்டமான அதிகார முகங்கள் பற்றி ஆழமான அமைதியே இருக்கும்.ஏன் வைரமுத்து குறித்து எதுவும் எழுதப்படுவதில்லை? ஏனென்றால் பொதுவாக தமிழ்ச்சூழலில் இலக்கியவாதிகளின் ஆவேசமெல்லாம் அதிகாரமேதுமில்லாத அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்றவர்களை நோக்கியே திரும்பியிருக்கும். வைரமுத்து போன்ற அதிகாரத்திற்கு அணுக்கமானவர்களைப்பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. அந்த அதிகாரம் கும்பலதிகாரமாக இருந்தாலும் அப்படியே.

உதாரணம், இன்குலாப் இவ்வருடச் சாகித்ய அக்காதமி விருதுபெற்றதற்கான எதிர்வினைகள். சென்ற முப்பதாண்டுகளில் தமிழ்ச் சிற்றிதழ்சார் இலக்கியமரபு இன்குலாபை ஓர் இலக்கியவாதியாக கருதியதில்லை. எந்த எழுத்தாளரும் அவரைப்பற்றி பேசியதில்லை. அவரே அதைப்பற்றி கசந்து கூறியிருக்கிறார். இப்போதும் அவருடைய கவிதையை தனிப்பேச்சில் ஏற்றுக்கொள்ளும் இலக்கியவாதியோ வாசகனோ இல்லை ஆனால் அவருக்கு சாகித்ய அக்காதமி கொடுக்கப்பட்டபோது நானறிந்து லட்சுமி மணிவண்ணனும் நானும் மட்டுமே எதிர்வினையாற்றினோம். மற்றவர்களின் நிலைபாடு  ‘எதற்கு வம்பு’ என்பதே. வசைக்கும்பலைக் கண்ட அச்சமே காரணம்.  இந்த தயக்கத்திலிருந்தே வைரமுத்து போன்றவர்கள் மேலெழுந்து செல்கிறார்கள். அவருக்கு இங்கிருப்பவர்களின் இடமென்ன இயல்பென்ன என நன்றாகவே தெரியும்.

ஆகவே, வேறுவழியில்லாமல் என் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன். இவ்விருது அளிக்கப்பட்டால்கூட தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழல் அந்தரங்கமாக முணுமுணுத்துக்கொள்ளுமே ஒழிய வாய்திறந்து எதிர்ப்பைப் பதிவுசெய்யப்போவதில்லை. என் குரல் அகிலனுக்கு அளிக்கப்பட்ட ஞானபீடத்திற்கு எதிராக எழுந்த சுந்தர ராமசாமியின் குரலுக்கு ஒரு சமகாலநீட்சி என சிலரேனும் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.

வைரமுத்து தமிழின் வளமான இலக்கியமரபின் தொடர்ச்சி அல்ல. எவ்வகையிலும் நவீனத்தமிழிலக்கியத்தின் முகம் அல்ல. அவர் ஒரு பரப்பியல் எழுத்தாளர், இலக்கியமறியா பொதுவாசகர்களுக்கு மட்டும் உரியவர். அவருடைய எழுத்து இலக்கியத்தின் அடிப்படை இயல்புகள் என்று கருதப்படும் மொழியமைதி, வடிவ ஒருமை, அந்தரங்கநேர்மை, நுண்மடிப்புகள் கொண்டது அல்ல. செயற்கையாக செய்யப்பட்டவை அவை.

ஞானபீடம் நவீன இலக்கியத்தின் முன்னோடிகளான மூத்தபடைப்பாளிகளுக்கே இங்கு பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளது. பிற இந்தியமொழிகளில் அவ்விருதைப்பெற்றவர்களின் பெரும்பாலானவர்கள் இந்திய இலக்கிய மேதைகள். அவ்வரிசையில் வைரமுத்து தமிழின் பிரதிநிதியாக வைக்கப்படுவாரென்றால் அது தமிழிலக்கியச்சூழலை சிறுமைசெய்வதாகவே அமையும்.  தமிழிலக்கியத்தையே அவரைக்கொண்டு பிறர் மதிப்பிட ஏதுவாகும். ஆகவே இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய முயற்சி.

இது ஓர் அமைப்பு ஒருவருக்கு விருது அளிக்கிறது என்னும் தனிநிகழ்வு அல்ல. ஞானபீடம் தமிழின் ஒரு சித்திரக்குள்ளரை இந்தியாவின் பேருருவப் படைப்பாளிகளின் வரிசையில் நிற்கவைத்து தமிழில் இவ்வளவே இலக்கியம் உள்ளது, தமிழுக்கு இதுவே தரம் என்று சொல்கிறது என்பதே இவ்விருதின் உண்மையான அர்த்தம் . தமிழை மட்டுமல்ல ஞானபீடம் தன்னைத்தானேகூட இதன் வழியாக மட்டம்தட்டிக்கொள்கிறது.

சென்ற ஆண்டுகளில் இந்தியச்சூழலில் இன்று அறியப்பட்ட எந்த மேதைக்கும் நிகரான பெரும்படைப்பாளிகள் சிலர் தமிழிலிருந்து ஞானபீடத்திற்கு முன்வைக்கப்பட்டனர். லா.ச.ராமாமிருதம், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன் என. அவர்கள் அனைவரும் திறமையான உள்குத்துகள் வழியாக தோற்கடிக்கப்பட்டனர். இன்று வைரமுத்து மேலேறிச்செல்கிறார்

கி.ராவுக்கு ஞானபீடம் தமிழுக்குப் பெருமைசேர்க்கும் என நான் எழுதியபோது, அதற்கு கல்வித்துறையின் சிறிய ஆதரவு இருந்தால்கூடப்போதும் என்றபோது, தமிழ்ச்சூழலில் இருந்து சிறிய அளவில்கூட ஆதரவு எழவில்லை. இலக்கியவாதிகள்கூட குரலெழுப்பவில்லை. அதற்குப்பின்னாலிருப்பது இத்தகைய அரசியல் கணக்குகள், சாதிக்கணக்குகள்.

என்ன துயரம் என்றால் உள்ளே பல்வேறு அதிகார விளையாட்டுக்களுக்கு உடன்பட்டு இந்தமுயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களே வெளியே இலக்கியக்காவலர்களாகப் பேசிக்கொண்டும் இருப்பார்கள். இதில் ஈடுபட்டிருக்கும் அனைவரின் பெயர்களையும் வெளிக்கொண்டுவந்து இவர்களின் தரமென்ன என்று இலக்கியவாசகர்கள் முன் வெளிப்படுத்தவேண்டும். இவர்கள் தமிழுக்கு இயற்றிய அநீதி என்ன என்று அடுத்த தலைமுறை உணரும்படிச் செய்யவேண்டும்

அனைத்துக்கும் மேலாக ஒன்றைச் சொல்லிக்கொள்வேன், இலக்கிய மதிப்பு என்பது அமைப்புகளின் அடையாளங்களால் அமைவதல்ல. ஞானபீடம் என்ன நோபல் கூட எவரையும் இலக்கியவாதியாக நிலைநாட்டுவதில்லை. அகிலனின் மதிப்பு இந்திய இலக்கியத்தில் என்ன? ஏன் தமிழில் அவருடைய இடம் என்ன? வைரமுத்து தமிழின் முகம் அல்ல என மிக எளிதில் வலுவான சில கட்டுரைகள் வழியாக தேசிய அளவிலேயே இலக்கியவாசகர்களிடம் நிறுவிவிடமுடியும். இதனால் அவருக்குக் கிடைப்பது இலக்கியத்துடன் சம்பந்தமற்ற ஒரு தற்காலிகப்புகழ் மட்டுமே. உண்மையான சோகம் என்பது இதன்மூலம் இந்தியாவின் பொதுவாசகனிடம் உள்ள தமிழைநோக்கிய இழிவான நோக்கு உறுதிப்படுத்தப்படும் என்பதும் , இவ்விருது வாழும் முன்னோடிகளை அவமதிப்பதாக ஆகும் என்பதும் மட்டுமே

வைரமுத்து சிறந்த பாடலாசிரியர். நல்ல கவிஞரோ எழுத்தாளரோ அல்ல. அவர் தமிழ்நவீன இலக்கியச் சூழலின் அங்கீகாரம் பெற்ற படைப்பாளி அல்ல. அதிகார அமைப்புகளினூடாகச் சென்று அவர் இவ்வங்கீகாரத்தைப் பெறுவார் என்றால் அது தமிழுக்கு இழிவு.   இலக்கிய ஆர்வமுள்ளவர்கள், அதன்பொருட்டு கருத்துத்தெரிவிக்கும் துணிவுமுள்ளவர்கள் தங்கள் எதிர்ப்பை ஆங்கிலத்தில் எழுதி ஞானபீட அமைப்பின் செயலருக்கு அனுப்பவேண்டும். அதிகார விளையாட்டுக்களை இலக்கியம் எளிதில் கடக்க முடியாது. ஆனால் தமிழிலக்கியச்சூழலின் எதிர்ப்பை மீறியே இவ்விருது அளிக்கப்பட்டது என்பதைப் பதிவுசெய்வோம். இத்தருணம் கடந்தால் நம் தலைமுறைகள் முன் சிறுமையுடன் நின்றிருப்போம்.

https://www.jeyamohan.in/105208/

பவுடர் டப்பாவுக்கும் புளித்த மாவுக்கும் சண்டை….

டைம் போர் 🍿😂

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயமோகனுடன் இந்த விடயத்தில் எனக்கு உடன்பாடு.

அதிக புத்தகங்களை வெளியிடுவது, அதிக திரைப் படப் பாடல்களை எழுதுவது என்பன வர்த்தக வெற்றிகள். "வர்த்தக மயப்படுத்திய தமிழ்" என்ற பிரிவில் ஒரு விருது இருந்தால் அதற்கு வைரமுத்து அவர்கள் உரித்தானவர். "நவீன தமிழ் இலக்கியம்" என்ற பிரிவில் உச்ச அடைவாக வைரமுத்துவின் கவிதைகளையும் பாடல் வரிகளையும் வகைப் படுத்த இயலாது. அதிலும் குற்றஞ் சாட்டப் பட்டிருப்பது போல அரசியல் வாதிகளின் செல்வாக்கினால் அதை அவரே முயன்று பெற்றிருக்கிறார் எனும் போது, இது மிக மரியாதை குறைந்த ஒரு விருதாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

விருதின் பெயரை மாற்றி டைமென்ட் பேர்லுக்கு காம பீட விருதாக அறிவிக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு வெளியானதும் சர்ச்சை - என்ன நடக்கிறது?

வைரமுத்து

பட மூலாதாரம்,FACEBOOK

கட்டுரை தகவல்

  • நந்தினி வெள்ளைச்சாமி

  • பிபிசி தமிழ்

  • 17 மார்ச் 2026, 09:58 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பிரபல கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்ட பிறகு அவர் மீதான மீடூ' குற்றச்சாட்டுகள் மீண்டும் கவனம் பெற ஆரம்பித்துள்ளன.

வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த முக்கிய நபர்களுள் ஒருவரான பாடகி சின்மயி, வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதையும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பவர்களையும் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளார்.

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டது குறித்து இலக்கிய உலகிலும் சர்ச்சை எழுந்துள்ளது.

தனக்கு விருது வழங்கப்படுவது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள், விமர்சனங்கள் குறித்த வைரமுத்துவின் கருத்தை அறிய அவரை பிபிசி தமிழ் தொடர்புகொள்ள முயன்றது. எனினும், அவருடைய கருத்தை அறிய முடியவில்லை. அவருடைய கருத்து பெறப்பட்டவுடன் இக்கட்டுரை புதுப்பிக்கப்படும்.

பாரதிய ஞானபீடம் (jnanpith) எனும் சுயாதீன அமைப்பால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்திய மொழி இலக்கியங்களில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ரூ. 11 லட்சம் பணமும், வெண்கல சரஸ்வதி சிலையும் விருது பெறும் நபருக்கு குடியரசு தலைவரின் கைகளால் வழங்கப்படும்.

தமிழ் மொழியில் இதுவரை 1975-ம் ஆண்டில் எழுத்தாளர் அகிலனுக்கும் 2002-ம் ஆண்டில் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கும் ஞானபீட விருது வழங்கப்பட்டது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் இந்த விருதை பெறுபவராக ஆகியிருக்கிறார் வைரமுத்து.

வைரமுத்துவுக்கு பாராட்டு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் உள்ளிட்டோர் வைரமுத்துவை பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

ஞானபீட விருது பெறுவது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய வைரமுத்து, "கால் நூற்றாண்டுக்குப் பிறகு வாராது வந்த மாமணியாக தமிழுக்கு இந்த விருது வந்திருக்கிறது. என்னை நானே வியந்துகொள்கிறேன். மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்." என தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் கேள்வி கேட்கலாம் என தெரிவித்த வைரமுத்து, அவை ஞானபீட விருது மற்றும் தமிழ் தொடர்பானதாக இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார். அதுபோன்றே, செய்தியாளர் சந்திப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

1980-ல் வெளியான நிழல்கள் படத்தில் 'இது ஒரு பொன்மாலை பொழுது' என்ற பாடல் மூலம் திரையுலகில் வைரமுத்து அறிமுகமானார்.

கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், தண்ணீர் தேசம், மூன்றாம் உலகப்போர் உள்ளிட்ட புதினங்கள், பல கவிதை மற்றும் கட்டுரை தொகுப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.

சாகித்ய அகாடமி, தேசிய விருது, பத்மபூஷன் உள்ளிட்ட விருதுகளை வைரமுத்து பெற்றுள்ளார்.

தற்போது வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டது தொடர்பான வாழ்த்துகளுக்கு மத்தியில் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

பின்னணி பாடகி சின்மயி விமர்சனம்

சின்மயி

பட மூலாதாரம்,Chinmayi Sripada

படக்குறிப்பு,சின்மயி

குறிப்பாக, வைரமுத்து மீது பாலியல் அத்துமீறல் புகாரை முன்வைத்த சின்மயி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய சின்மயி, "வைரமுத்து மீது புகார் கொடுத்ததால் நான் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திலிருந்து தடை செய்யப்பட்டேன். சினிமாவில் உள்ள பலதுறை சங்கங்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை. என் மீது சமூக வலைதளங்களில் இன்னும் விமர்சனங்கள் தொடர்கின்றன. 17 பேர் வைரமுத்துவுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர். மூன்று பேர் வீடியோ முன்பாக வந்து கூறினர். எங்களின் போராட்டம் தனி, சினிமா வாழ்க்கை தனி என பார்க்கின்றனர்" என்றார்.

வைரமுத்துவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது ஒரு கலைஞரை அவருடைய கலை ரீதியாக மட்டும் அணுக வேண்டுமா அல்லது அவர் மீதான தனிப்பட்ட விமர்சனங்கள், சர்ச்சைகள், செயல்பாடுகளுடன் சேர்த்தே அணுக வேண்டுமா என்ற விவாதத்தையும் தூண்டியுள்ளது.

இதுகுறித்து பதிலளித்த சின்மயி, "கலையையும் கலைஞரையும் பிரித்துப் பார்க்க முடியாது." என தெரிவித்தார்.

"என்னுடைய 32 வயதில் இந்த புகாரை கூறினேன். இப்போது எட்டு ஆண்டுகளாகிவிட்டன. 40 வயதாகிறது. என்னுடைய 30 வயதுகளை நான் எப்படி கழிக்க வேண்டுமென நினைத்தேனோ, அப்படி என்னால் கழிக்க முடியவில்லை. என்னுடைய பாடல்கள் பலவும் மிகப்பெரிய ஹிட். ஆனால், அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு எனக்கு வாய்ப்புகளே இல்லை." என்கிறார் சின்மயி.

"நான் டப்பிங் பேசுகிறேன் என்றால், அந்த படத்தில் யாரும் டப்பிங் பேச மாட்டார்கள் எனும் அளவுக்கு என்னை ஒதுக்கினர்."

பிரபலம் அடையவும் பணத்துக்காகவும் தான் இத்தகைய குற்றச்சாட்டுகளை சொல்வதாக இன்று வரை தன் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக சின்மயி தெரிவித்தார்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க 2018-ஆம் ஆண்டில் 'மீ டூ' இயக்கம் பரவலாக கவனம் பெற்றது. அப்போது வைரமுத்து மீது சின்மயி குற்றம்சாட்டினார்.

வைரமுத்து மீதான சின்மயி குற்றச்சாட்டு என்ன?

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சின்மயி தனது சமூக ஊடக பதிவில், அந்த சம்பவம் 2005-2006ஆம் ஆண்டில் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைத் தமிழர்களுக்காக 'வீழ மாட்டோம்' என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்ததாகவும் இது தொடர்பான வெளியீட்டு விழா, சுவிட்சர்லாந்தில் நடந்ததாகவும் கூறிய சின்மயி, இந்த விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பாடியதாகக் கூறியிருந்தார்.

விழா முடிந்து எல்லோரும் புறப்பட்ட நிலையில், தன்னையும் தன் தாயாரையும் புறப்பட வேண்டாம் என்று கூறியதாகவும் அப்போது விழா அமைப்பாளர்களில் ஒருவர் வைரமுத்துவை அவரது அறையில் சென்று சந்திக்குமாறு கூறியதாகவும் தெரிவித்திருந்தார்.

எதற்காக எனக் கேட்டபோது, ஒத்துழைக்கும்படி அவர் கூறியதாகவும் இல்லாவிட்டால் இந்தத் தொழிலிலேயே இருக்க முடியாது என மிரட்டியதாகவும் சின்மயி தெரிவித்திருந்தார்.

ஆனால், தாங்கள் உறுதியாக நின்று, உடனடியாகத் தங்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி வலியுறுத்தியதாக சின்மயி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

ஆனால், இதுகுறித்து வைரமுத்து அச்சமயத்தில் தனது எக்ஸ் பக்கத்தில், "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்." என்று பதிவிட்டார்.

சின்மயி உட்பட 17 பெண்கள் வைரமுத்து மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

2023-ஆம் ஆண்டு புவனா சேஷன் எனும் பாடகியும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

வைரமுத்து உடனான தொலைபேசி உரையாடல்கள் ஒருகட்டத்தில் அசௌகரியமாக உணர வைத்ததாக அச்சமயத்தில் அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

சின்மயி

பட மூலாதாரம்,chinmayi/Instagram

படக்குறிப்பு,சின்மயி

வைரமுத்துவுக்கு எதிராக சின்மயி 2019-ம் ஆண்டு தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.

திரைத்துறையில் உள்ள சங்கங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புக்கான உள் புகார்கள் குழு (ஐசிசி புகார் குழு) அமைக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் அமைக்கப்படவில்லை என சின்மயி கூறுகிறார்.

வழக்கறிஞர் கருத்து

சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கீதா ராமசேஷன், "சினிமாவின் பல்வேறு துறைகளில் பாலியல் புகார்களை விசாரிக்க சட்டப்படி குழுக்கள் அமைக்க வேண்டும், அதை விசாரிக்க வேண்டும். சினிமா ஓர் அமைப்பாக இல்லை. அங்கு இத்தகைய குழுக்கள் அமைப்பது சவாலாக உள்ளது. கேரளாவில் நீதிபதி ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழு பல பரிந்துரைகளை வழங்கியது. தமிழ் சினிமாவில் அப்படி அமைக்கப்படவில்லை. இந்த மாதிரியான புகார்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை." என தெரிவித்தார்.

மலையாள திரை உலகில் நடிகைகள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள், புகார்கள் போன்றவை நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் மூலம் 2024-ம் ஆண்டு பொது வெளிக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, நடிகைகள் பலரும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களால் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளானதாக அடுத்தடுத்து புகார்களை முன்வைத்தனர். மலையாள நடிகர் சங்கத்தில் சேர்வதற்கே கூட பாலியல் சமரசத்திற்கு சிலர் நிர்பந்திக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

'சட்ட ரீதியான இடைவெளிகள்'

தாரா கிருஷ்ணசுவாமி

பட மூலாதாரம்,Tara Krishnaswamy/Facebook

படக்குறிப்பு,தாரா கிருஷ்ணசுவாமி

எழுத்தாளரும் பெண்ணியச் செயற்பாட்டாளருமான தாரா கிருஷ்ணசுவாமி கூறுகையில், "தனியார் அறக்கட்டளை வழங்கும் விருதாக இருந்தாலும் இதை வழங்குவது குடியரசு தலைவர். எனவே, அந்த வகையில் அரசுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது." என்றார்.

தாரா கிருஷ்ணசுவாமி, பெண் எம்எல்ஏக்கள், எம்.பிக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வலியுறுத்தும் 'பொலிட்டிக்கல் ஷக்தி' (Political Shakti) எனும் அமைப்பின் இணை நிறுவனராக உள்ளார்.

பெண்ணின் குற்றச்சாட்டுகளை விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதில் சட்ட ரீதியாக பல இடைவெளிகள் இருப்பதாக அவர் கூறுகிறார்.

"பெண்ணுக்கு எதிரான பல குற்றங்கள், குற்றமாகவே அங்கீகரிக்கப்படவில்லை. திருமண உறவில் பாலியல் துன்புறுத்தல் அதற்கு ஓர் உதாரணம். அமைப்புசாரா தொழிலில் பெண்களுக்கு நேரும் பாலியல் குற்றங்களில் தகுந்த ஆதாரங்களை சேகரிப்பது சவாலாக இருக்கிறது. இந்த இடைவெளிகளை நிரப்புவதற்கு சட்ட ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்ற வெளிப்படையான விவாதமே இங்கு நடைபெறவில்லை. பாலியல் குற்றங்களை மறைக்கக் கூடிய சமூகமாக, கலாசாரமாகத்தான் இந்திய சமூகம் பெரும்பாலும் இருக்கிறது" என்றார் தாரா கிருஷ்ணசுவாமி.

இலக்கிய உலகில் சர்ச்சை

பாலியல் குற்றச்சாட்டுகள் மட்டுமல்லாமல், இலக்கிய உலகிலும் வைரமுத்துவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஜெயமோகன், பவா செல்லதுரை போன்ற எழுத்தாளர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

"ஞானபீடப் பரிசு என்பதை தீர்மானிப்பதில் பரிந்துரை முதல் இறுதிவரை தமிழகக் கல்வித்துறையினர் ஒரு பங்களிப்பாற்றுகின்றனர். அவர்களில் இலக்கியமறிந்தவர்கள், அடிப்படை அறிவுத்திறன் கொண்டவர்கள் அரிதினும் அரிது. பெரும்பாலும் சாதிக்கணக்குகள், அரசியல் கணக்குகள் கொண்டவர்களே மிகுதி. ஒவ்வொரு இடத்திலும் எந்த தகுதியுமற்றவர்களை, வெற்றுச்சூழ்ச்சியாளர்களை மேலே தூக்கி வைத்திருக்கிறோம். கொண்டாடுகிறோம். அப்போது அவர்களில் ஒருவரைத்தான் அவர்கள் முன்னிறுத்துவார்கள். அது நிகழ்ந்துள்ளது. தமிழ் தனக்குரிய அவமதிப்பையே ஈட்டிக்கொண்டுள்ளது." என்று எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சித்துள்ளார்.

அதேவேளையில் வைரமுத்துக்கு ஆதரவாகவும் கருத்துகள் வந்துள்ளன.

பெண்ணிய செயற்பாட்டாளர் ஓவியா தன் பேஸ்புக் பக்கத்தில், "இந்திய அளவிலான கவிஞர்களில் தமிழ்நாட்டிலிருந்து ஞானபீட விருது பெறும் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துகள். எனக்கு பொதுவாக விருதுகள் குறித்து பெரிய பிரமிப்பு ஏதுமில்லை. நான் பெரிய இலக்கிய அறிவு பெற்றவளுமில்லை. எனவே கருத்துரைக்க வேண்டாமென்றே ஒதுங்க எண்ணினேன். ஆனால் முகநூலைத் திறந்ததும் திரண்டு வந்து நின்ற படையைப் பார்த்து அசந்து போனேன்.

ஏதோ புனிதர்களும் தேவதூதர்களுமான இந்த படைப்பாளிகள் உலகத்தில் ஒரேயொரு ஒற்றைக் கறுப்பு மனிதனாக வைரமுத்துவை இவர்கள் சித்தரிப்பதைப் பார்த்த பின் இதுபோன்று ஒரு ரவுடியிசக் கலாசாரத்தை ஆதரிக்க முடியாது என்று தோன்றுகிறது. ஒரு விருதை தாஜா செய்தும் பணம் கொடுத்தும் வாங்குவது எவ்வளவு கேவலமோ அதைவிட கேவலம் இது போன்று ஒருவருக்கு விருதளிக்கப்பட்ட பின் இவ்வளவு பேர் சேர்ந்து சேற்றை வாரியிறைப்பது.

இன்றுவரை நேரம் ஒதுக்கி தமிழ்க் கவிதைகளில் வைரமுத்துவின் இடம் குறித்து படிக்கவில்லை. (எத்தனையோ பாடல்கள் இதயம் தொட்டதுண்டு. அதேபோல் முகம் சுளிக்க வைத்ததும் உண்டு) இப்போதைய எனது நேர நெருக்கடிகளில் உடனடியாக அதனைச் செய்யும் திட்டமுமில்லை. நிச்சயமாக தமிழ் எழுத்து வரிசை குறித்து இன்னும் தீவிர வாசிப்புக்குள் போகும் போது கண்டிப்பாகக் கவிஞர் வைரமுத்துவின் எழுத்தும் என்னுடைய கவனத்தில் இடம் பெறும்." என பதிவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx24ermz1kyo

On 16/3/2026 at 02:17, கிருபன் said:

இதோ நாங்கள் அறிவிக்கிறோம், இந்திய வரலாற்றின் மிகப்பெரிய இலக்கிய விருது. உலக இலக்கியத்திலும் இந்திய இலக்கியத்திலும் சாதனைப் படைப்புக்கான LIVING TAMIL AWARD FOR WORLD LITERATURE . ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது டெல்லியிலும் நியூயார்க்கிலும் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். விருதுத்தொகை இந்திய ரூபாயில் ஒரு கோடி. (ஏறத்தாழ ஒரு லட்சம் டாலர்)

இந்த செய்தி டெல்லியிலும், சென்னையிலும், நியூயார்க்கிலும் முறையாக அறிவிக்கப்படும்.

அதற்கு கூட தமிழில் பெயர் வைக்கமாட்டீர்களா?!

உலக தமிழ் இலக்கியத்திற்கான வாழும் விருது என்று எழுதினால் குடியா முழுகிவிடும்!

நேரடி கூகிள் பெயர்ப்பு கீழுள்ளவாறு வருகிறது!

உலக இலக்கியத்திற்கான வாழும் தமிழ் விருது .

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2026 at 09:10, Justin said:

ஜெயமோகனுடன் இந்த விடயத்தில் எனக்கு உடன்பாடு.

அதிக புத்தகங்களை வெளியிடுவது, அதிக திரைப் படப் பாடல்களை எழுதுவது என்பன வர்த்தக வெற்றிகள். "வர்த்தக மயப்படுத்திய தமிழ்" என்ற பிரிவில் ஒரு விருது இருந்தால் அதற்கு வைரமுத்து அவர்கள் உரித்தானவர். "நவீன தமிழ் இலக்கியம்" என்ற பிரிவில் உச்ச அடைவாக வைரமுத்துவின் கவிதைகளையும் பாடல் வரிகளையும் வகைப் படுத்த இயலாது. அதிலும் குற்றஞ் சாட்டப் பட்டிருப்பது போல அரசியல் வாதிகளின் செல்வாக்கினால் அதை அவரே முயன்று பெற்றிருக்கிறார் எனும் போது, இது மிக மரியாதை குறைந்த ஒரு விருதாகிறது.

வைரமுத்து எழுதிய பல ஆயிரம் பாடல்களில் சில நூறு முத்துக்களாவது இல்லையா? வைரமுத்து வெளியிட்ட நூல்களில் ஒரு சிலவாவது முத்துக்கள் இல்லையா? இந்த முத்துக்கள் ஞானபீடத்துக்குரிய தகுதியை கொடுக்கவில்லையா? கவிஞர் கண்ணதாசனிற்கு எவ்வாறான அங்கீகாரங்கள், விருதுகள் கிடைத்தன என தெரியவில்லை. ஆனால், அவர் மீது வசவுகள் பாடி அவர் படைப்புக்களை நையாண்டி செய்து தமது வக்கிரங்களை கொட்டி தீர்த்த தமிழ் இலக்கிய காவலர்களின் புலம்பல்களை முன்னொரு பொழுது வாசித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

வைரமுத்து எழுதிய பல ஆயிரம் பாடல்களில் சில நூறு முத்துக்களாவது இல்லையா? வைரமுத்து வெளியிட்ட நூல்களில் ஒரு சிலவாவது முத்துக்கள் இல்லையா? இந்த முத்துக்கள் ஞானபீடத்துக்குரிய தகுதியை கொடுக்கவில்லையா? கவிஞர் கண்ணதாசனிற்கு எவ்வாறான அங்கீகாரங்கள், விருதுகள் கிடைத்தன என தெரியவில்லை. ஆனால், அவர் மீது வசவுகள் பாடி அவர் படைப்புக்களை நையாண்டி செய்து தமது வக்கிரங்களை கொட்டி தீர்த்த தமிழ் இலக்கிய காவலர்களின் புலம்பல்களை முன்னொரு பொழுது வாசித்துள்ளேன்.

என்ன இப்படி கேட்டுட்டேள் நியாயம்வாழ்.

இலக்கியம்னா அது ஒரு நூல் லோ இல்லியோ😂.

பிகு

பவுடர் டப்பா அவரின் காமாந்திர சுரண்டல் காரணமாக எந்த விருதுக்குமான தகமையை இழக்கிறார்.

ஆனால்…இந்த நூலிபான்கள் கிடந்து புலம்புவது ஒரு நான்-நூலுக்கு விருது கிடைத்ததை பொறுக்க முடியாமலே.

தாம் எழுதுவதும் அதை போல எழுதுவதுமே மட்டுமே இலக்கியம் என எண்ணும் இந்த சுந்தர ரா, ஜெய கா, பு மோ க்களை விட நெருப்பு போல எளிய பாடல்களில் இலக்கியம் படைத்தவன் பட்டுகோட்டை.

ஆனால் இந்த நூலிபான்களுக்கு தம்மை தவிர வேறு எவர் எழுதினாலும் அது இலக்கியம் அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம், நம் கனவுகள்!

jeyamohanMarch 18, 2026

வைரமுத்து ஞானபீட விருது பெற்றதற்கு எதிராக கடுமையான எதிர்வினையை நான் முன்வைத்தேன். அது ஒரு முகநூல் பூசலாக முடிந்துவிடக்கூடாது, அது இந்திய அளவில் கவனிக்கப்பட வேண்டும் என எண்ணினேன். என் நூல்கள் உருவாக்கிய இந்திய அறிமுகம் அதை கொண்டுசெல்ல உதவியது.எனக்கு வைரமுத்து மேல் எந்த விரோதமும் இல்லை. அவரை வைத்து நம் கவிதையை இந்தியா மதிப்பிட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே என் கவலை.

இந்திய மொழிகளிலேயே நவீனக் கவிதை அழகியல்செறிவு கொண்டிருக்கும் மொழி தமிழ்தான். அடுத்தபடியாகத்தான் மணிப்புரி மொழியைச் சொல்வேன். மலையாளம், கன்னடம் எல்லாம் கூட பிறகுதான். அபி, தேவதேவன், தேவதச்சன், விக்ரமாதித்யன் என நம்மிடம் இன்று வாழும் பெருங்கவிஞர்கள் இழிவாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது.

நம் இலக்கியம் இவ்விருதை வைத்து மதிப்பிடக்கூடாதென்றால் பிறமொழிகளுக்கு நம் எதிர்ப்பு சென்றடையவேண்டும். அது நிகழ்ந்துள்ளது. இந்தியா முழுக்க எங்கள் எதிர்ப்பு சென்றடைந்துள்ளது. ஞானபீடத்தின் ஐம்பதாண்டுக்கால வரலாற்றில் இப்படி இதற்குமுன் நிகழ்ந்ததில்லை.

இன்று முழுக்க நேற்றைய காணொலிக்கான வசைகள். எண்ணிக்கையை மட்டுமே பார்த்தேன். நண்பர்கள் அழித்துக்கொண்டே இருந்தனர். வசைகள் ஆயிரம் தாண்டியிருக்கும். ஆனால் அவை நம்மை எதிர்மனநிலை நோக்கிக் கொண்டுசெல்லக் கூடாது. நம்மைச் சூழ்ந்திருப்பவர்களில் எதையேனும் எப்போதேனும் வாசிப்பவர்கள் ஒரு சதவீதம்கூட இல்லை என நாமறிவோம். ஆனால் அத்தனைபேருக்கும் தரப்புகள் உள்ளன. காழ்ப்புகளும் கசப்புகளும் உள்ளன. சாதி,மத, அரசியல் பற்றுகள் உள்ளன.

இலக்கியம் அல்லது அறிவுச்செயல்பாடு பற்றி மிகமிக அடிப்படையான விஷயங்களே இங்கே எவருக்கும் தெரிவதில்லை. எந்த வகை அறிவுச்செயல்பாட்டில் இருப்பவர்களும் இங்கே ஒருவகை அன்னியர், ஒருவகை தலைமறைவு மனிதர்தான். இந்த விவாதத்திலேயே முக்கால்பங்கு வசையாளர்கள் திகைப்புடன் ‘யார் நீ?’ என்று என்னைக் கேட்கிறார்கள். என் பெயர்கூட அவர்களுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை. ஆனால் எது சரி, என்ன செய்யப்படவேண்டும் என்று முடிவுசெய்து பேசுகிறார்கள்.

இதுதான் நம் சூழல். இதனுடன் மோதுவது வீண்வேலை. இவர்கள் மேல் கசப்பை உருவாக்கிக்கொள்வதிலும் பொருளில்லை- எல்லாச் சூழலிலும் எல்லா படைப்பாளிகளும் எதிர்கொள்வது இந்த பொதுவான மூர்க்கத்தையே. ஆனால் நாம் அவர்களுக்காகவும்தான் எழுதுகிறோம். ஆகவே எதிர்ப்பு கசப்பாக ஆகிவிடாமலிருக்கவேண்டும் என நாமே நம்மிடம் சொல்லிக்கொள்ளவேண்டும். இந்த வைரமுத்து இன்னும் மூன்றுமாதகாலம் அதிகபட்சம் பேசப்படுவார். அதன் பின் அவருடைய சினிமாப்பாடல் ரசிகர்களின் உலகுக்குள் செல்வார். அவர் நமக்கொரு பேசுபொருளே அல்ல. அவர் பெற்ற இந்த விருதும்கூட.

எதிர்ப்பை முடிந்த அளவு தீவிரமாக முன்வைத்துவிட்டேன். ஆனால் எதிர்ப்பு என் வழி அல்ல. எதிர்க்கவேண்டிய இடத்தில் கடுமையாக, கறாராக, அச்சமில்லாமல், தயக்கமில்லாமல் எதிர்ப்பை தெரிவிப்பேன். ஆனால் அந்த எதிர்ப்பு மனநிலையை அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கு மேல் நீட்டிப்பதில்லை. அது என் ஆற்றலைக் குறைத்துவிடும். என் ஆற்றல் என் கனவுகளிலேயே. ஆகவே இந்த எதிர்ப்பு முடிந்தது. முன்னரும் இப்படியே.

தமிழின் மூத்த பெரும்படைப்பாளிகள் பெரும்பாலானவர்கள் எந்த ஏற்புமின்றி இருக்கும் நிலை பற்றிய என் தொடர் ஆதங்கம் இயல் விருது உருவாவதற்கு ஒரு காரணம். ஆனால் அந்த விருது பல்கலையுடன் இணைக்கப்பட்டு, நடுவர்களாக பேராசிரியர்கள் அழைக்கப்பட்டபோது அவர்கள் அதை தங்களுக்கே மாறிமாறிக்கொடுத்துக்கொண்டார்கள். அந்த நிலைக்கு எதிராக என் கடும் எதிர்ப்பை நான் பதிவுசெய்தேன்- அவ்விருதை நிறுவிய அ.முத்துலிங்கம் என் பெருமதிப்புக்குரிய பெரும்படைப்பாளி என்ற போதிலும். அதையொட்டி உருவான கனவே விஷ்ணுபுரம் விருது. இன்று அது எந்த இடத்தில் உள்ளது என எவரும் அறிவார்கள்.

தமிழ் விக்கிபீடியாவில் இருந்த நசிவுக்கும்பலுடன் போராடி, தோற்றபின், என் எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். உருவானதே தமிழ் விக்கி. இன்று தமிழ்விக்கியின் பங்களிப்பென்ன என்று எவருக்கும் தெரியும். விக்கிபீடியாவே இன்று மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளமைக்கு தமிழ்விக்கியே காரணம்.

அதைப்போன்ற ஒரு சூழல் இது. நம்மை இழிவுசெய்த ஞானபீடத்திடம் இனி நமக்கு பூசல் இல்லை. நமக்கான விருதை நாம் உருவாக்குவோம். தமிழகத்தில் இருந்து அந்த விருதுக்காக உலகமே இங்கு வரட்டும். மிகப்பெரும் கனவு. கனவுகள் மலைப்பூட்டுபவைதான். ஆனால் ஒவ்வொரு சிறுபடியாக ஒவ்வொரு நாளும் காலெடுத்து வைத்தால் எய்திவிடமுடியும். இணைந்து செல்வோம்.

https://www.jeyamohan.in/230261/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.