Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க அழுத்தங்களை மீறி மகிந்த இன்று ஈரான் பயணம்

Featured Replies

அமெரிக்காவின் அழுத்தங்களை மீறி ஈரான் நாட்டுக்கு 4 நாட்கள் பயணமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று செல்கிறார்.

தொடர்ந்து வாசிக்க

அமெரிக்காவின் அழுத்தங்களை மீறி ஈரான் நாட்டுக்கு 4 நாட்கள் பயணமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று செல்கிறார்.

என்ன செய்யிறது கார்த்திகை 27 வாறநேரம் அரச தலைவர்கள் ஓடி ஒளியிறது வழக்கம்தானே? :):):):):):):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் இணையங்களுக்கு ஒரு வேண்டுகோள்

தயவு செய்து ஏதோ அமெரிக்கா சீறிலங்காமீது பெரிய அழுத்தங்களை மேற்கொள்வது போல கட்டுரைகளை செய்திகளை எழுதவேண்டாம். இது எம்மை நாம் ஏமாற்றுலது போலாகும் :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே பலபேர் பேனா பேப்பர் எண்டு எழுத உட்கார்ந்து இருப்பினம். ஏதோ அமெரிக்கா இலங்கைகு எதிராகத் தடை கொண்டுவரப் போகுதென்று. ஒருத்தரும் வரக்கூடாது...சொல்லிப்போட்டன்..

.ஓம். உதைக் கேட்டு..கேட்டு .அலுத்துப்போச்சு....

மனுசன் ஊரில இருக்கப் பயந்து கொன்சம் வெளியில் ஒளிந்திருக்கலாம் என்று பார்த்தால், இவை வருகினம் ஏதோ புதுக் காரணத்தைத் தேடிக் கொண்டு. மனுசர் படுற பாடு உவைக்குத் தெரியப் போகுதே ? அமெரிக்காவாம்..தடையாம்!!

பயப்பட ஒன்றுமில்லை... எல்லாம் போனபிறகு பயம் மட்டும் மிச்சம் இருக்குமோ? இந்தியா என்ன அமேரிக்கா என்ன அல்லாம் ஒன்றுதான் இதுல ஈராக்கும் ஒரு கேடா?

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ஈரான் தலைவருடன் சந்திப்பு

வீரகேசரி நாளேடு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரான் சென்றுள்ளார். நேற்று காலை இலங்கை நேரப்படி 9 மணியளவில் ஜனாதிபதி ஈரானை சென்றடைந்தார்.

ஜனாதிபதியின் விஜயம் குறித்து ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உகண்டாவில் கம்பாலா நகரில் இடம் பெற்ற பொது நலவாய அமைப்பு நாடுகளின் கலந்துகொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மாநாடு முடிந்ததும் அங்கிருந்து ஈரானுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ஈரான் நேரப்படி காலை 7.00 மணிக்கு (இலங்கை நேரப்படி 9 மணி) விமான மூலம் டெஹ்ரான் விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குழுவினரையும் ஈரானின் வர்த்தகத்துறை அமைச்சர் மசூர் மீர் காசிம் வரவேற்றார்.

அதன் பின்னர் ஈரான் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதிக்கு அரச மரியாதை அணிவகுப்பு வரவேற்பு வழங்கப்பட்டது. ஈரான் ஜனாதிபதி மஹமூத் அஹமத் நிஜாத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடாகியுள்ளது.

ஜனாதிபதியின் ஈரான் விஜயத்தின்போது இரு நாட்டு நட்புறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதோடு பல்வேறு வர்த்தக உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளது.

ஜனாதிபதியுடன் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி மற்றும் குழுவினரும் ஈரான் சென்றுள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி ஜனாதிபதி மகிந்த ஈரான் பயணம்

அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை ஈரானுக்கான சர்ச்சைக்குரிய பயணத்தை மேற்கொள்கிறார்.

உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்கிருந்து ஈரானுக்கு விஜயம் செய்துள்ளார்.

நான்கு நாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ஈரான் ஜனாதிபதி அகமட் நிஜாட்டை சந்தித்துப் பேசுவார்.

அத்துடன் ஈரானின் மதத்தலைவர் அயத்துல்லா அலி கொமேனியையும் ஜனாதிபதி சந்தித்துப் பேசுவார்.

ஈரானிடம் இருந்து 1400 கோடி ரூபாவுக்கு முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்திலும் ஜனாதிபதி கைச்சாத்திடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானின் அணுத்திட்டத்துக்கு எதிராக வல்லரசு நாடுகள் உட்பட சர்வதேச சமூகம் பொருளாதாரத் தடைகளை விதித்து ஈரானை தனிமைப்படுத்திவரும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கை ஜனாதிபதி அங்கு சென்று ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டால் அந்த நடவடிக்கையானது இலங்கைக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இந்த விஜயம், மற்றும் ஆயுதக் கொள்வனவு தொடர்பாக இலங்கைக்கான ஈரானிய தூதுவர் ஏற்கனவே அங்கு சென்று ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவும் ஈரானுக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரானிடம் இருந்து இலங்கை பெருமளவு மசகு எண்ணெயை கொள்வனவு செய்து வருகிறது.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி மஹிந்தவினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஈரான் பூரண ஆதரவு

வீரகேசரி நாளேடு

ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையில் முன்னெடுக்கப்படுகின்ற இருதரப்பு தொடர்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள ஈரான் ஜனாதிபதி இலங்கையின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களுக்கு பூரண ஆதரவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு ஈரானிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஈரான் ஜனாதிபதி மஹ்முட் அஹமடிநிஜாட்டிற்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையிலேயே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரான் ஜனாதிபதி மஹ்முட் அஹமடிநிஜாட்டை அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இருநாட்டு தலைவர்களுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக கருத்துக்கள் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுனாமி அனர்த்தத்தின் போது இலங்கைக்கு உதவிய முதலாவது நாடு ஈரான் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த உதவிகளுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.அத்துடன் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவருகின்ற உதவிகள் தொடர்பாகவும் ஜனாதிபதி நினைவு கூர்ந்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக எடுத்துகூறியுள்ள ஜனாதிபதி பயங்கரவாதிகளினால் நாட்டின் ஒரு பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஜனநாயக விரோத செயல்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். சிறுவர்களை படையில் சேர்த்து கொள்ளுதல் மற்றும் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்பாக எடுத்துரைத்துள்ள ஜனாதிபதி அவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் அபிவிருத்திக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாகவும் விளக்கியுள்ளார்.

அத்துடன் சகல இன மக்களும் சமாதானமாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதற்காக தனது தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் எடுத்து கூறியுள்ளார்.இருநாடுகளுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வர்த்தக மற்றும் முதலீடு சந்தர்ப்பங்களை தெளிவுபடுத்தியதுடன் மா ஓயா திட்டம்,அபிவிருத்தி வேலைகளை விரிவு படுத்தல்,ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவையை அபிவிருத்தி செய்வதற்காக ஈரான் அரசாங்கத்தின் ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

65 மில்லியனுக்கு மேலான மக்கள் வாழ்கின்ற ஈரான் நாட்டிற்கு இலங்கையில் ஏற்றுமதி செய்கின்ற தேயிலையின் தொகையை எதிர்காலத்தில் அதிகரித்தல் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

என்ன போடு போடு றாண்டா சாமி.... உன்னையும் வெண்டுட்டானையா சுப்புரம்மண்ணியசுவாமி...

  • கருத்துக்கள உறவுகள்

செவ்வாய் 27-11-2007 09:54 மணி தமிழீழம் [மயூரன்]

சிறீலங்காவில் ஈரானின் உதவியில் நீர் மின்நிலையம்

ஆசிய பசுபிக் வர்த்தக பிரிவை ஊக்கிவிக்கும் ஈரானின் வர்த்தக நிறுவனத்தின் தலைவர் சிறீலங்காவில் நீர்மின்நிலையம் அமைப்பது தொடர்பில் அறிவித்துள்ளார்.

இதன்படி 150 மெகாவாட்ஸ் நீர் மின்நிலையம் இவ் நிறுவனத்தின் உதவியின் கீழ் அமைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

இதையும் சேர்த்துப் பாருங்கோ

மாத்தளை கலபிட்டிய பகுதியில் மின்மாற்றி தகர்ப்பாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.