Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராமேஸ்வரம்- முட்டுக்கட்டை போடும் லண்டன் பிரமுகர்

Featured Replies

தமிழ்சினிமா.கொம் என்ற தளத்தில் வந்த செய்தி கீழே....

இலங்கையில் ரிலீஸ் ஆகாத ராமேஸ்வரம்!

-முட்டுக்கட்டை போடும் லண்டன் பிரமுகர்

உலகத்தமிழர்கள் எல்லாம் ஆர்வத்துடன் எதிர்பார்த்த படம் ராமேஸ்வரம். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த தமிழனுக்கும், இராமேஸ்வரத்தில் வசிக்கும் தமிழச்சிக்கும் நடக்கிற காதல் கதை இது. காதலோடு சேர்த்து இலங்கையில் நடக்கும் இன்னல்களையும் சிறிதளவு சொல்கிறது படம்.

உலகம் முழுக்க திரையிடப்பட்டிருக்க வேண்டிய ராமேஸ்வரம், சில நாடுகளில் திரையிடப்படவில்லையாம். குறிப்பாக இலங்கையில். ஏன்?

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து லண்டனுக்கு போய் செட்டிலாகி, பெயருக்கு பின் லண்டனையும் சேர்த்துக் கொண்ட திரையுலப் பிரமுகர், தன் கம்பெனிக்காக இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை கேட்டாராம். விலை படியாததால், தனித்தனியாக விற்றுவிடலாம் என்று முடிவு செய்த தயாரிப்பாளர் லண்டன் பிரமுகருக்கு தராமல் மறுக்க, எப்படி வெளிநாட்டில் ரிலீஸ் செய்கிறீர்கள். பார்க்கலாம் என்று கருவினாராம் பிரமுகர். இதை தொடர்ந்துதான் இந்த சிக்கல்.

உலகம் முழுக்க தனக்கு பழக்கமான தியேட்டர் அதிபர்களை அழைத்து படத்தை திரையிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம். தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் நிறைய படங்களை இவரே வாங்கி வெளியிடுவதால் வேறு படங்களை திரையிடும்போது சிக்கல் வரும் என்று கருதிய தியேட்டர்காரர்களும் பிரமுகர் சொன்னதை அப்படியே கேட்டிருக்கிறார்கள். இதை தொடர்ந்து தயாரிப்பாளரின் பகீரத முயற்சியால் சில நாடுகளில் மட்டும் வெளியாகியிருக்கிறது ராமேஸ்வரம்.

கனடாவில் சற்று தாமதமாக வெளியிடப்பட்டதாம். இலங்கையில் இந்த நிமிடம் வரை திரையிடப்படவில்லை. மேற்படி பிரமுகர் ஒரு இலங்கை தமிழராக இருந்தும் இப்படி செய்துவிட்டாரே என்று அதிர்ந்து போயிருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு.

கொஞ்சம் கருணை காட்டுங்க பிரமுகரே!

-ஆர்.எஸ்.

  • தொடங்கியவர்

யார் அந்த பிரமுகர்?? :)

இது என்ன கேள்வி பதில் பகுதியா? :)

யார் அந்த பிரமுகர்?? :rolleyes:

இவரை போய் பிரமுகர் என்று சொல்லுறீங்க :wub: ...............இவரின் செயலை பார்த்தா தெரியவில்லை எப்படிபட்ட ஆளா இருக்கும் என்று!! :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த பிரமுகர்?? :)

பெயருக்கு பின் லண்டனையும் சேர்த்துக் கொண்ட திரையுலப் பிரமுகர்,

என்று புதிர் தந்திருக்கின்றார்கள். லண்டனில் வசிக்கின்ற ஆட்கள் தான் இதற்குப் பதில் சொல்ல வேணும்.

பெயருக்குப் பின்னாலா அல்லது பெயருக்கு முன்னாலா லண்டணை இணைத்துள்ளார்?? நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

பெயருக்குப் பின்னாலா அல்லது பெயருக்கு முன்னாலா லண்டணை இணைத்துள்ளார்?? நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்??

பெயருக்குப் முன்னால் என்றால், லண்டன் பாபாவோ? பிழையென்றால் லண்டன் பாபா அவர்களே.. என்னை மன்னியுங்கள்... :unsure:

  • தொடங்கியவர்

எனக்கும் தெரியாது.. ஆனால் கள உறவு ஒருவர் இங்கு ஒரு நிறுவனத்தையும் (பிள்ளையாரின் மறுபெயர்),

ஒருவரின் பெயரையும் (லண்டனில் கைதான ஒருவரின் பெயர்போன்றது) குறிப்பிட்டிருந்தார். ::wub:

மோகன் அண்ணா அதை தூக்கிவிட்டார். :unsure:

Edited by vasisutha

அதை ஈரோஸ் நிறுவனத்திற்கு விற்ற பொழுதே அவரின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று தெரிந்தது தானே.

அந்த நிறுவனத்தை ஈழத்தமிழர் நிறுவனமாக இன்னமும் யோசிப்பது எமது தவறு. அந்தப் "பிரமுகரின்" தவறு அல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை ஈரோஸ் நிறுவனத்திற்கு விற்ற பொழுதே அவரின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்று தெரிந்தது தானே.

அந்த நிறுவனத்தை ஈழத்தமிழர் நிறுவனமாக இன்னமும் யோசிப்பது எமது தவறு. அந்தப் "பிரமுகரின்" தவறு அல்ல.

கொஞ்சம் கருணை காட்டுங்க பிரமுகரே!

தமிழுக்காக பலர் தம்மை

தமிழராக அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

தமது உயிர்வுக்காக மட்டுமே

தமிழராய் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.

இலங்கை தமிழ் சினமா ஒன்று உருவாகாததற்கு

இலங்கை தமிழர்தான் காரணம்.

அவர்கள் இலங்கை தமிழ் திரைப்படங்களை

அன்று ஓடவே விடவில்லை

இன்றும் ஈழத் தமிழர் குறித்த படைப்புகள் கூட

வெளிவராமல் இருப்பதற்கு நம்மவர்தான் காரணமாக இருக்கிறார்கள்.

நோக வேண்டிய நம்மவரை விட்டு விட்டு

இந்திய சினமாவை நொந்து ஒரு பிரயோசனமுமில்லை.

காயத்தை காலில் வைத்துக் கொண்டு

எங்கோ நாறுது என்று சொல்வதில் எதுவும் ஆகப் போவதில்லை?

ராமேஸ்வரத்தின்

சர்வதேச உரிமத்தை

பிரான்ஸில் வசிக்கும்

ஈழத்தவர்களான

இசையமைப்பாளர் நீரூ - கமல் மற்றும் ரமேஸ் ஆகியோரது

Dream Phoenix நிறுவனம் பெற்றிருக்கிறது.

லண்டன் உரிமம்

அங்கு வசிக்கும் ஈழத்தவர்களான

முரளியும்

நீரூவின் மாமாவும் பெற்றிருக்கிறார்கள்.

ஏற்கனவே திரைப்படங்களை விநியோகிக்கும் நிறுவனத்தினர் கூட

நிரூவின் உறவுகளே..............? :unsure:

இருந்தாலும் பணம் என்று வந்துவிட்டால்

உறவாவது மண்ணாவது?

தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு என்பது

பொய்யல்ல என்பது நிரூபனமாகிறது நீரூ................ :wub:

இப்படியான ஒரு விடயத்தில்

அனுசரித்து போய் இருக்கலாமே என்று எண்ணத் தோன்றுகிறது.

படம் பார்த்தவர்கள்

அகதி வாழ்வை விட

காதலே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளத

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையில் தாயாரிப்பாளருக்கு எதிராகவல்ல புலம் பெயர்ந்த ஈழத் தமிழருக்கு விடுதலை ஆதரவாளருக்கு எதிராக விடப்பட்ட மறைமமுகச் சவால். ராமேஸ்வரத்தை முடக்கினால் அவர்கள் படங்களை புலாம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பகிஸ்கரிப்பார்கள்ள் என உணர்த்தப் பட்டால் ந்நல்லது. ஆனாலும்ம் அது சாத்தியமா?

Edited by poet

இது உண்மையில் தாயாரிப்பாளருக்கு எதிராகவல்ல புலம் பெயர்ந்த ஈழத் தமிழருக்கு விடுதலை ஆதரவாளருக்கு எதிராக விடப்பட்ட மறைமமுகச் சவால். ராமேஸ்வரத்தை முடக்கினால் அவர்கள் படங்களை புலாம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பகிஸ்கரிப்பார்கள்ள் என உணர்த்தப் பட்டால் ந்நல்லது. ஆனாலும்ம் அது சாத்தியமா?

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை

இதைவிட சொல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை.

புலம் பெயர்ந்து வாழும்

எதிர்கால சந்ததியினர்

அவர்கள் வாழும் நாடுகளில்

அந்த மொழி திரைப்படங்களை உருவாக்க வேண்டும்.

இதை விட வேறு மாற்று வழி

ஒரு காலும் இல்லை.

புலம் பெயர்ந்து வாழும் பிரச்சனைகளை

அவர்களாவது சொல்லட்டும்.

புரிந்து புரியாமல் இருக்கும் நம்மவர்களை விட

எம்மை புரியாத

வெளிநாட்டவராவது நம் பிரச்சனைகளை புரிந்து கொள்ளட்டும்.

இது எதிர்காலத்தில் நிச்சயம் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை

இதைவிட சொல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை..

நன்றி அஜீவன்,

அண்மையில் நடந்த விற்றல் வாங்கல்களும் அதன் பின்னர் ராமேஸ்வரம் பட வெளியீடு தொடர்பான நடவடிக்கைகளும் சட்டரீதியாக இடம்பெற்றவையா? அதிகமாக ஹவாலா பணமும் கறுப்புப் பணமும் பூரளுவதால் இது மாபியாக்கள்வளர வாய்புள்ள துறையாகும். ரமேஸ்வரம் தொடர்பான சிக்கல்களும் சுதந்திரமான வர்த்தகப் போட்டிக்கு எதிரான அழுத்தங்களும் ஆபத்தான monopoly ஒன்றைக் கட்டி எழுப்ப சிலர் முனைவதைக் காட்டுகிறதா? இது எந்தவகையிலும் ஐரோப்பிய சட்டங்களுக்கு இணக்கமான நடவடிக்கையல்ல. இதுபற்றி சட்டம் தெரிந்தவர்கள் ஆலோசனை சொல்லலாமே. இதுதொடர்பாக முறையான ஆவணம் தயாரிக்கப் பட்டால் நோர்வே அரசினூடாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சம்பந்தப் பட்ட துறையினரின் கவனத்துக்குக் கொண்டுவரலாம்.

எனக்கும் தெரியாது.. ஆனால் கள உறவு ஒருவர் இங்கு ஒரு நிறுவனத்தையும் (பிள்ளையாரின் மறுபெயர்),

ஒருவரின் பெயரையும் (லண்டனில் கைதான ஒருவரின் பெயர்போன்றது) குறிப்பிட்டிருந்தார். ::lol:

மோகன் அண்ணா அதை தூக்கிவிட்டார். :)

அவர்தான் ஆள்.

ஜங்கரன் என நினைகிறன்

மெல்பேனில் படம் திரையிட்டார்கள் ஆனால் சரியாக விளம்பரம் செய்யவில்லை படத்தினை பார்க்க ஆவலாக இருந்தேன் ஆனால் படம் தொடங்க 10 நிமிடத்துக்கு முன்னரே நான் அறிந்தேன் ஆகவே போக முடியவில்லை அத்துடன் 3 காட்சிகளே நடத்தப்பட்டன

வழமையாக விநயோகஸ்தர்கள் இதனை வெளியிடவில்லை புதியவர்கள் வெளியிட்டதே இதன் காரணம்

வேறுவழியில்லை இன்ரநெட்டில் பார்பதை தவிர

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக விநயோகஸ்தர்கள் இதனை வெளியிடவில்லை புதியவர்கள் வெளியிட்டதே இதன் காரணம்

வேறுவழியில்லை இன்ரநெட்டில் பார்பதை தவிர

தனி மனிதர்களாக ஒரு படத்தை வெளியிடுவது பொருளாதார ஆபத்துக்கள் (risk) நிறைந்தது. அத்தகைய ஆபத்து ஒரு நிறுவனமாக மேம்பட எதிர் கொள்ளப் பட்டதாயின் அதில் ஒரு நியாயமிருக்கும். அல்லது நிறுவனங்களோடு பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கப் பயன் பட வேண்டும். நிறுவனங்கள் வெளியிடும் ஒரிரு படங்களை முன்னரே இன்ரர் நெற்றில் வெளியில்ட்டும் பகிஸ்கரித்தும் எதிர்காலத்தில் எதிர் முகமாக மறையாக(negativive)பேரம் பேசும் சக்தியை உயர்த்த முடியும். பல நிறுவனங்களுக்கு இடமில்லாத சிறிய சந்தையாக இருப்பதால் நேர் முகமாக (Positive) சாதிக்கும் வாய்ப்பு அரசியல் நிறுவனங்களுக்கு வெளியில் அதிகம் இல்லை. சந்தை சிறியது அதிலும் வட அமரிக்காவில் தமிழ் நாட்டுத் தமிழர்களது சந்தைப்பங்கு பெருத்து வருகிற பின்னணியில் நாம் இதனை அணுக வேண்டும். இதுகாறும் இருபக்கத் தமிழர்களுக்கும் இடையிலான ஊடாட்டம் மிகவும் குறைவாக உள்ளது என்பதை மறுப்பதற்க்கில்லை.

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.