Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை பள்ளி-மருதாணி வைத்ததால் சஸ்பென்ட்

Featured Replies

மருதாணி வைத்ததால் சஸ்பென்ட் : சென்னையில் கிறிஸ்தவப் பள்ளி அட்டகாசம்!

More with Pictures-http://puduvaisaravanan.blogspot.com/2007/12/blog-post.html

சென்னை புரசைவாக்கம் தாண்டவன் தெருவில் வசிப்பவர் கணேஷ்ராம். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரபாவதியும் வழக்கறிஞர்தான். செஷன்ஸ் கோர்ட்டில் கூடுதல் அரசு வழக்கறிஞராக இருக்கிறார். இவர்களது மகன் கவுசிக் டவுட்டன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 3-ம் வகுப்பில் படித்து வருகிறான். கடந்த 19-11-2007 தேதி வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற கவுசிக்கிடம் உன்னை சஸ்பென்ட் செய்திருக்கிறோம் என்றுச் சொல்லி வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த கவுசிக்கின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியர் தியோடர், தாளாளர் வில்கின்ஸ் ஆகியோரிடம் விளக்கம் கேட்டனர்.

"உங்கள் மகன் கையில் மருதாணி வைத்துள்ளான். மருதாணி வைத்துக்கொண்டு பள்ளிக்கு வர அனுமதி இல்லை. எனவே அவனை 10 நாட்கள் சஸ்பென்ட் செய்துள்ளோம்" என்று கூறியுள்ளனர். அத்தோடு மருதாணி வைத்தற்காக ரூ. 500 அபராதம் கட்ட வேண்டும் வற்புறுத்தி உள்ளனர். `30-11-2007 அன்று என் மகனுக்கு தேர்வு நடக்க இருக்கிறது. இப்போது சஸ்பென்ட் செய்தால் அவன் தேர்வு எழுதமுடியாத நிலை ஏற்படும்' என்று கவுசிக்கின் தந்தை கணேஷ்ராம் கெஞ்சியும் பள்ளி நிர்வாகம் அதனை ஏற்கவில்லை.

" என் கணவரும் மாமனாரும் சபரிமலைக்கு செல்லவிருக்கிறார்கள். எனது மாமனார் மலைக்கு செல்வதற்காக கார்த்திகை முதல் நாளன்று அதற்கான பூஜை நடந்தது. அப்போது சாஸ்திரப்படி எல்லோருக்கும் மருதாணி வைத்தோம். என் மகன் கவுசிக்கிற்கும் வைத்தோம். கையில் உள்ள மருதாணியை எப்படி அழிக்க முடியும்? அபராதம் செலுத்தி விடுகிறோம். மகனை சஸ்பென்ட் செய்ய வேண்டாம் என்று கேட்டோம். ஆனாலும் அவர்கள் எங்களை அவமானப்படுத்தும் வகையிலேயே பேசினார்கள். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனித உரிமை கமிஷனிலும், பள்ளிக் கல்வி துறையிலும் புகார் செய்துள்ளோம்" என்று வேதனையுடன் பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளார் கவுசிக்கின் தாய் பிரபாவதி.

"மருதாணி வைத்துக்கொண்டு வந்ததற்காக கவுசிக்கை தலைமை ஆசிரியை ஒரு நாள் சஸ்பென்ட் செய்தார். பள்ளியின் விதிமுறைகளை கடைபிடிப்பதில் தலைமை ஆசிரியை கவனமாக இருப்பார்" என பத்திரிகையாளர்கள் கேட்டபோது டவுட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் வில்கின்சன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ் கலாசாரப்படி மருதாணி வைத்துக்கொண்டு வந்தால் சஸ்பென்ட் செய்வதுதான் பள்ளியின் விதிமுறையா? மாணவன் கவுசிக்கின் தந்தை கணேஷ்ராம் மருதாணி வைப்பது தமிழ் கலாசாரம்தானே என்று கேட்டபோது "இந்து மதப்படி நடக்க விரும்புபவர்கள் ஏன் மகனை கிறிஸ்தவ பள்ளியில் சேர்த்தீர்கள். உங்கள் மத வழக்கங்களை வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள். அதனை பள்ளியில் புகுத்தாதீர்கள்" என்று பள்ளி நிர்வாகம் மிரட்டியுள்ளது. மகன் கவுசிக்கை சபரிமலைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார் கணேஷ்ராம். மருதாணி வைத்ததற்கே பள்ளி நிர்வாகம் சஸ்பென்ட் செய்ததால் மகனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டார்.

90 சதவீத இந்து மாணவர்களுடன் தமிழகத்தில் பள்ளிகூடம் நடத்தி டவுட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி போன்ற பள்ளிகள் இந்துக்களிடம் இருந்து பணத்தைக் குவிக்கிறது. ஆனால் மருதாணி வைக்கக்கூடாது பொட்டு வைக்கக்கூடாது, பூ வைக்கக்கூடாது, வளையல் அணியக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு விதித்து இந்துக்களின் மதநம்பிக்கைகளை சிதைக்கிறார்கள். அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை மத சுதந்திரத்தை தடுக்கிறார்கள். ஓட்டுக்காக அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் இந்த அராஜகத்தை கண்டுகொள்வதில்லை. "இனி கிறிஸ்தவப் பள்ளியில் என் பிள்ளைகளை சேர்க்க மாட்டேன்" என ஒவ்வொரு இந்துப் பெற்றொரும் சபதம் ஏற்றால் இப்பிரச்சினயை ஒரு நொடியில் தீர்த்து விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல. சனநாயக நாட்டில் கேட்க ஆளில்லையா?"அன்பான தமிழ் மக்களே " என்று விளிக்கும் அறிஞர் பெருந்தகைக்கு ஓர் விண்ணப்பம் இடுங்கள்(சம்பத்தப்பட்டோர்).

கிறீஸ்தவ பள்ளியில் சேர்த்திருக்காவிட்டால் இந்தப்பிரச்சனை வந்திருக்காது....

இதில ஒன்றும் பிழை இருகிற மாதிரி தெரியவில்லை ஏனென்றா பாடசாலைக்கு என்று விதிமுறைகள் இருக்கு அதனை கடைபிடிக்க வேண்டும் கடைபிடிக்காவிடில் தண்டனை விதிக்க தானே வேண்டும் ஏனேனின் ஒரு மாணவனிற்கு "எஸ்கீயூஸ்" வழங்கினா பிறகு மற்ற மாணவர்களை எப்படி கட்டுபடுத்துவது :lol: ..அதுவும் "கிறிஸ்தவ பள்ளி" என்றா அதற்கு என்று விதிமுறைகள் இருக்கும் நீங்கள் அங்கே சென்று படிக்க போறீங்க என்றா அந்த விதிகளை பின்பற்றவேண்டும் இல்லையெனில் வேறொரு "இந்து" பாடசாலையில் சென்று படித்திருக்கலாமே :lol: இதில் முழு பிழையும் மாணவன் பக்கத்திலே தான் ஏன் பாடசாலை நிர்வாகத்தை குறை கூறவேண்டும் அதில வேற "சென்னையில் கிறிஸ்தவ பள்ளி அட்டகாசம் என்று" தலைப்பிட வேண்டும்.....இது ஒன்றும் பள்ளி நிர்வாகத்தை குறை சொல்ல போட்ட மாதிரி தெரியவில்லை :lol: ......ஆகவே ஜம்மு பேபியின் தீர்பு பள்ளி நிர்வாகம் செய்த நடவடிக்கை சரி......சரி....சரி!! :o

என்ன ஜம்மு பேபி தீர்ப்பு வழங்கியாச்சு என்ன எல்லொரும் ஒரு மாதிரி பார்கிறீங்க இதற்கு மிஞ்சி யாரும் தீர்ப்பு வழங்க ஏலாது பிகோஸ் இது ஜம்மு பேபியின் தீர்ப்பு!! :o

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

"உங்கள் மகன் கையில் மருதாணி வைத்துள்ளான். மருதாணி வைத்துக்கொண்டு பள்ளிக்கு வர அனுமதி இல்லை.

பள்ளியின் சட்டதிட்டங்கள் தெளிவாக சொல்லப்பட்டு அந்த சட்ட திட்டங்கள் அடங்கிய நிர்வாக விதிமுறைப் பத்திரத்தில் பெற்றோர்கள் கையொப்பம் இட்டிருந்தால் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சுமத்த முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.