Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தலைவர்கள் பலர் இயக்கத்தைவிட்டு தப்பியோட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவர்கள் பலர் இயக்கத்தைவிட்டு தப்பியோட்டம்

[10 - December - 2007] [Font Size - A - A - A]

வடபகுதிப் பிரதேசங்களில் இதுகாலவரையில் முன்னணியில் செயற்பட்டுவந்த புலிகள் இயக்கத் தலைவர்களில் பலர் இயக்கத்தைக் கைவிட்டு இரகசியமாக வேறு பிரதேசங்களுக்குத் தப்பியோடுவதாக வடபகுதி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரச படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்துவரும் நிலையில் அவற்றுக்கு முகம் கொடுக்கக்கூடிய பலத்தையும் பாதுகாப்பையும் புலிகள் இயக்கம் இழந்து வருவதாலேயே இவ்வாறு தமது உயிரைப் பாதுகாக்கும் நோக்கத்தில் புலிகள் இயக்கத் தலைவர்கள் வடபகுதியிலிருந்து வேறு பிரதேசங்களுக்கு பாதுகாப்பைத் தேடி தப்பியோடிவருவதாக வடபகுதியிலிருந்து தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக புலிகள் இயக்கத்தின்பல அலுவலகங்களும் மூடப்பட்ட நிலையிலே இருப்பதாக குறித்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள முக்கிய பிரதேசமான கிளிநொச்சியில் புலிகள் இயக்கத்தின் பல அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. அவ்வாறே அப்பிரதேசங்களில் செயற்பட்டு வந்த புலிகள் இயக்கத்தினரின் செய்திப் பரிமாற்றங்களுக்கான தொலைபேசித் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், புலிகள் இயக்கத்தால் நடத்தப்பட்டுவந்த நீதிமன்றங்களும் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் திறக்கப்படவோ செயற்படவோ இல்லை என்று அப்பகுதித் தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது. அந்த நீதிமன்றங்களில் நீதிபதிகளாகவும் வழக்கறிஞர்களாகவும் இதுவரை செயற்பட்டுவந்தவர்களும் எங்கோ தப்பியோடிவிட்டதாகவும் அவர்கள் வசித்துவந்த இடங்களில் தற்போது அவர்களைக் காணவில்லையென்றும் மக்கள் தரப்பிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன், புலிகளின் பொலிஸ் நிலையங்களும் பூட்டப்பட்டுள்ளன. புலிகள் இயக்கப் பொலிஸ் நிலையத் தலைவர்களையோ பொலிஸ்காரர்களையோ காணமுடியவில்லை எனவும் அவர்களும் எங்கோ தப்பியோடிவிட்டார்கள் என்றும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறே புலிகள் இயக்கத்தின் ஏனைய அலுவலகங்களும் பூட்டப்பட்டுவிட்டன.

கிளிநொச்சியில் காணப்படும் இந்த நிலைமையே முல்லைத்தீவுப் பிரதேசத்திலும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அடுத்ததரங்களிலுள்ள புலிகள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், பொலிஸ்பிரிவுத் தலைவர் நடேசன் நீதி விசாரணை நிதி சேகரிப்புப் பிரிவு, பிரதான படையணிப்பிரிவு ஆகியவற்றின் தலைவர்களும் முல்லைத்தீவு காட்டுப்பகுதிகளிலுள்ள முகாம் பதுங்குகுழி நிலையங்களிலேயே வாழ்ந்துவருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் அவ்வாறான பிரதான முகாம்களும் இதுவரை செயற்பட்டுவந்த இடங்களிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் இதனால் புலிகள் இயக்கத் தலைவர் உட்பட ஏனைய தலைவர்களும் குறித்த பகுதிகளிலிருந்து தப்பியோடிவிட்டதாகப் பேசப்படுவதாகவும் மேலும் அப்பகுதி தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வகையில் தற்போது முல்லைத்தீவில் அதிஉயர் பாதுகாப்பு வலயமாகக் கருதப்படும் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் மட்டும் புலிகள் இயக்கத்தினரின் நடமாட்டம் காணப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், பெரும்பாலும் முல்லைத்தீவு கிளிநொச்சியில் பொதுமக்களின் நடமாட்டம் பெருமளவில் குறைந்துவிட்டது என்றும் ஒருசிலர் நடமாடுவதை மட்டும் காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களிலேயே புலிகள் இயக்கத்தின் நிர்வாகம் இதுவரை நடந்துவந்த நிலையில் அப்பகுதிகளில் அவர்களின் நிர்வாகம் தற்போது கிடையாது எனவும் புலிகள் இயக்கக் கட்டுப்பாட்டிலுள்ள மேற்படி நகரங்கள் கிராமங்கள் காட்டுப்பகுதிகள் எல்லாமே தற்போது வெறிச்சோடிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசபடையினர் விரைவில் மேற்படி கிளிநொச்சி, முல்லைத்தீவு உட்பட வடபகுதிப் பிரதேசங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக தீவிர தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கக்கூடிய சாத்தியம் இருப்பதாலேயே புலிகள் இயக்கத் தலைவர்கள் குழப்பம், அச்சம் காரணமாக இயக்கத்தைக் கைவிட்டு பாதுகாப்புக்காக வேறு பகுதிகளுக்குத் தப்பியோடுவதாகப் படையினருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு புலிகள் இயக்கத் தலைவர்கள் பலரும் புலிகள் இயக்க பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் அனைத்து அலுவலகத் தலைமைப் பதவியில் இருந்தவர்களும் தற்போது தலைமறைவாகிவிட்டனர்.

ஏற்கனவே, அரசபடையினரின் கிழக்குப்படை நடவடிக்கைகள் காரணமாக கிழக்கிலிருந்து தப்பியோடிவந்த புலிகள் இயக்கத் தலைவர்கள் இதுகாலவரை மேற்படி முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளிலேயே செயற்பட்டுவந்தனர். இவர்களும் தற்போது இரகசியமாக எங்கோ தப்பியோடிவிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி இந்தியாவுக்கு தப்பியோடிவிட்டதாகக் கடந்த வாரம் தகவல்கள் வெளியாகி இருந்தன. இவ்வாறு தனது மகனைப் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பிவிட்ட பிரபாகரன் தனது மனைவி மதிவதனியை பாதுகாப்பான வேறு இடத்துக்கு அனுப்பியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே, பிரபாகரனின் மகள் வெளிநாட்டுக்குச் சென்று அங்கு புலிகள் இயக்கத்துக்கான பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

தினமின:4/12/2007

http://www.thinakkural.com/news/2007/12/10...s_page41996.htm

யாழ் கலம் துரோகிகள் கலமாகி விட்டத. லூசுதனம இப்படி தலைப்ப போட்டு, மக்களை பிழையான பாதையில நடதுரிங்கள்.

இது என்ன தூரிகளின் பிரச்சார வலையா?

யாழின் கட்டுபாடுகளை மீறி னீங்கள் இதை செய்யலாம?

பொய் பிர்ச்சாரம் இல்லாம அரசியல் இல்லை. விடுதலை வென்றெட்ட பொய் பிரச்சாரம் உதவாது

நெருப்பில்லாமல் புகையாது :wub:

நெருப்பில்லாமல் புகையாது :wub:

ஓம் அண்ணை தமிழ்கார்டியன் ஆயவாளர் சொன்னா அதில ஒரு மறைமுகமாக ஒரு நல்ல சிந்திக்க வேண்டிய உண்மை இருக்குமாம்

நெருப்பு இல்லாம புகையாது

நெருப்பு என்றால் புகை தான் வரும் புண்ணாக்கா வரும்?

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெருப்பில்லாமல் புகையாது :wub:

நிட்சயமாக உண்மை. தென்பகுதியிலிருந்து புகை வடக்கு நோக்கி வருமென்பது :wub:

யாழ் கலம் துரோகிகள் கலமாகி விட்டத. லூசுதனம இப்படி தலைப்ப போட்டு, மக்களை பிழையான பாதையில நடதுரிங்கள்.

இது என்ன தூரிகளின் பிரச்சார வலையா?

யாழின் கட்டுபாடுகளை மீறி னீங்கள் இதை செய்யலாம?

பொய் பிர்ச்சாரம் இல்லாம அரசியல் இல்லை. விடுதலை வென்றெட்ட பொய் பிரச்சாரம் உதவாது

இது இப்பவா தெரியும் :lol:பணம் அதில் விலைபோகாத சரக்குகளே கிடையாது :lol:

Edited by tamillinux

நுணாவிலான்! நகைச்சுவைக்காக கூட இப்படியான தலைப்பிட்டு செய்திகளை பிரசுரிக்காதீர்கள்.

தினமின போன்ற இனவாத பத்திரிகைகள் அடிக்கடி இப்படி ஆசைக்கனவுகள் காண்பது வழக்கம். இது தினமின பத்திரிகையின் ஆசைக்கனவு என்பதை விட சிறிலங்கா உளவுத்துறையினதும் ரோவினதும் ஆசைக்கனவு என்பதே பொருந்தும்.

அம்பாய் ஆயிற்று தினமின! எய்தவர்கள் எனக்கும் உங்களுக்கும் தெரிந்தவர்கள் தான்!

Edited by vettri-vel

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்.இச்செய்தியை நகைசுவையாக எடுத்து நோக்குவீர்கள் என எதிர்பார்த்தேன். எனது எதிர்பார்ப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளது.யாரையும் திசை திருப்பும் நோக்கம் எனதல்ல.

மன்னிக்கவும்.இச்செய்தியை நகைசுவையாக எடுத்து நோக்குவீர்கள் என எதிர்பார்த்தேன். எனது எதிர்பார்ப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளது.யாரையும் திசை திருப்பும் நோக்கம் எனதல்ல.

தினமினவில் வெளிவந்த செய்தி என்று தெரிந்தும், ஆடிப்போகிறது யாழ் வாசகர் வட்டம்!

இவ்வளவுதானா எங்கள் தமிழ்தேசிய உறுதிப்பாடு?

இப்போது புரிகிறதா ஏன் சிங்கள இளைஞர்கள் ஆட்சேர்ப்புக்கு வரிசையில் வருகிறார்கள் என்று!

இதற்கு பதிலாக "எங்கே இராணுவத்தை விட்டு ஓடிப்போனோர் பட்டியல்" என கேட்டு அதற்கான பொறுப்பையும் தாயக தமிழ் இளைஞர்கள் தோளில் சுமத்திவிடலாமா?

ஏன் இதற்கு ஒரு பதில் எம்மிடம் இல்லையா? அதுவும் சிங்களத்தில் இருந்தால் எப்படி இருக்கும்!

அரசுக்கு எதிராக புதிதாக முளைத்து வரும் ஆங்கில, சிங்கள இணையத்தளங்கள் அவற்றை பிரசூரிக்க ஒரு போதும் பின்னிற்கப் போவதில்லை!

இதுவும் போராட்டத்திற்கான ஒரு தோள்கொடுப்பே!

Edited by சாணக்கியன்

நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போகாது.

கீழே எங்கிருந்து பெற்றது என்று நுணாவிலான் போட்டிருக்கிறார்தானே. இது பிழையான விடயமாக எனக்குத் தெரியவில்லை.

எங்களுக்கு என்று சுயமாக சிந்திக்கக்கூடிய அறிவு இருக்கும் வரை இப்படிப் பட்ட செய்திகள் எம்மைப் பாதிக்கப் போவதில்லை. நாட்டுநடப்பை நாம் அறிந்து கொள்ள இது உதவும்.

நாலு பேரிடம் கருத்துக் கேட்க வேண்டும். நாமாக முடிவு எடுக்க வேண்டும். அது நல்லதாக இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.