Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஸ்யாவிடமிருந்து சிறிலங்கா பாரிய ஆயுதக் கொள்வனவு: கொழும்பில் ரஸ்யப் படை அதிகாரிகள்

Featured Replies

ரஸ்சியாவில் இருந்து பெருந்தொகையான ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளதனைத் தொடர்ந்து ரஸ்சியாவின் உயர்மட்டப் படை அதிகாரிகள் குழு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவிற்குச் சென்றுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஸ்சியாவில் இருந்து பெருந்தொகையான ஆயுதங்களை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளதனைத் தொடர்ந்து ரஸ்சியாவின் உயர்மட்டப் படை அதிகாரிகள் குழு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்காவிற்குச் சென்றுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

இந்த கொள்வனவுக்கு பக்க பலமா இந்தியா இருக்கின்றதா??

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் சமாதானம் என்று பேசிக்கொண்டு, பணத்தை அள்ளி வழங்கும் போது இவ்வளவு ஆயுதங்களை நிச்சயமாக இலங்கை அரசு வாங்கி குவிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆயுத கொள்வனவின் போது இந்திய இராணுவ அதிகாரிகள் சீறிலங்காவுக்கு வாங்கும் ஆயுதங்களுக்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் வழங்கியதாக சொல்லப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதக் கொள்வனவு குறித்து இந்தியா, ரஷ்யாவுடன் இலங்கை பேச்சு

வீரகேசரி நாளேடு

வான் பாதுகாப்பு உட்பட ஆயுதக் கொள்வனவு தொடர்பில் இந்தியா மற்றும் ரஷ்ய தூதுக்குழுக்களை இவ்வாரம் இலங்கை அதிகாரிகள் சந்தித்துப் பேசவுள்ளதாக ஆங்கில் மற்றும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விடுதலைப்புல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய ஆயுத கருவாட்டுச்சந்தை மத்தியநாடுகளை அடுத்து மாங்காய் வடிவிலான இலங்கையும் முக்கியத்துவம் பெறுகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயுதக் கொள்வனவு குறித்து இந்தியா, ரஷ்யாவுடன் இலங்கை பேச்சு

வீரகேசரி நாளேடு

இது குறித்து பாதுகாப்பு வட்டாரங்களோ அன்றேல் ரஷ்ய மற்றும் இந்திய ராஜதந்திரிகளிடமிருந்தோ எந்தவிதமான கருத்தும் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.

இவங்க முழு பூசனிக்காய எப்படி மறைத்தாலும் நம்ம புலநாய்வு(புலனாய்வு) கூட்டம் அவங்க தண்ணி வெந்நில வந்து இணையத்தில் உளரும் போது முதல் கொஞ்ச உண்மையை எடுத்திடுவாங்க :)

  • கருத்துக்கள உறவுகள்

:lol: எந்த ஒரு நாட்டின் உதவியுமில்லாமல் தன்னந்தனியே போராடும் ஒரு சிறு ராணுவத்தை அழிக்கவா இவ்வளவு நாடுகளும் போட்டி போட்டுகொண்டு ஆயுதங்கள் வழங்குகின்றன ? இந்த நாடுகளுக்கு இது வியாபாரமாக இருந்தாலும், சிறிலங்கா ரொம்பத்தான் புலிகளுக்குப் பயப்படூது போலத் தெரியுது !

உண்மைக் காரணமும், நீதியுமில்லாத போர் நடத்தும் சிறிலங்கா இலட்சிய வேட்கையுடன் வாழ்வுரிமைக்கான போர் நடத்தும் புலிகளுடனான போரில் தோற்றுவிடுவோம் என்று பயப்படுவதில் நியாயம் இல்லாமலுமில்லை !

சரி ..சரி..நல்ல ஆயுதங்களாப் பாத்து வேண்டுங்கோ ! பிறகு நாங்களும் பாவிக்க வேணுமெல்லே!!!!!

ஆயுதம் வாங்குவதற்கு முன் புலிகளிடம் ஒரு தடவையென்றாலும் கலந்தாலோசிக்கவேணும். அவர்களுக்குத் தேவையிலாத ஆயுதங் களை வாங்குவது வீண்விரயம். ஏதோ இந்தியா சொல்லுது ரசியா தருகுது என்று இருக்ககூடாது. பாவிக்கப் போறவர்களிடந் தான் முதல்ல காட்டவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
:D:lol::D:D:D:lol::D:lol: அப்படிப் போடுungkaL அரிவாளைச் சூராவளி !

Edited by ragunathan

அப்ப அடுத்த செய்தி ஆயுதம் வாங்குவதில் முறைகேடு தான் பாருங்கோ

வேலை செய்யாத ராடர்களை வாங்கி வெட்டியாக தப்புக்கணக்கு காட்டிவிட்டு தலையில் கைவைக்கபோரார்கள்

பாவம் சிங்களம்

ரஷ்யா, இந்தியா மற்றும் இத்தாலிய உயர் மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது இலங்கையில் முக்கிய சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

மூன்று முக்கிய நாடுகளின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட படை அதிகாரிகள் ஒரே நேரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்தமை இதுவே முதல் தடவையாகும்.

இலங்கைப் படையினருக்கான போhத்தளபாட மற்றும் இராணுவ உதவிகளை வழங்குவது தொடர்பாகவே மேற்படி மூன்று நாட்டுக் குழுவினரும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரையும் முப்படைத்தளபதிகளையும் சந்தித்துப் பேசி வருகின்றனர்.

ரஷ்ய இராணுவ பிரதம தலைமை அதிகாரி கேணல் ஜெனரல் விளாடிமிர் மொல்பென்ஸ் கோய் தலைமையில் ஆறு பேர் கொண்ட உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் தற்போது கொழும்பில் தங்கியிருந்து இலங்கைத் தரப்பினரை சந்தித்து வருகின்றனர்.

இவர்கள் கோதாபயவை சந்தித்த போது, இலங்கைப் படையினருக்கு நவீன உயர்தர ஆயுதங்களை வழங்குமாறு இலங்கை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

அத்துடன், இரு நாடுகளுக்குமிடையிலான இராணுவ ஒத்துழைப்பு குறித்தும் நீண்ட நேரம் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதே வேளை, இந்திய உயர்மட்ட இராணுவ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு கொழும்பு வந்தது. இக்குழு இன்று இரவு வரை இங்கு தங்கியிருக்கும்.

இந்தக் குழுவில் இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பிமல் ஜூல்கா, இந்திய வெளி விவகார அமைச்சின் இணைச் செயலாளர் ரி.எஸ். திமுத்தி, இராணுவத் தலைமையக தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் எஸ்.கே. சின்ஹா, இந்திய விமானப்படையின் தென் பிராந்திய கட்டளைத் தலைமையகத்தைச் சேர்ந்த ஏ.வி.எம்.ராஜேந்திர சிங், கடற்படைத்தலைமையகத்தைச் சோந்த கப்டன் எம்.அகர்வால், கரையோரக் காவல் படையைச் சேர்ந்த ரி.பி. சதானந்தன் மற்றும் பாதுகாப்பு அமைச்சைச் சேர்ந்த கப்டன் பிரதீபக் சிங் ஆகியோரே கொழும்புக்கு வந்துள்ளனர்.

இவர்கள் செவ்வாய்க்கிழமை காலை இராணுவத் தளபதி லெ.ஜெனரல் சரத் பொன்சேகா மற்றும பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இலங்கையின் முப்படையினருக்குமான ஆயுத உதவிகள் குறித்து இவாகள் முக்கிய பேச்சுகளை நடத்தி வருகின்றனர்.

விமானப்படையினருக்கான உதவிகள் குறித்தும் விடுதலைப் புலிகளின் வான் புலிகளது அச்சுறுத்தல் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கான உதவிகள் மற்றும் கடற்புலிகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்தும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இதே நேரம், இத்தாலியிலிருந்தும் உயர் மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

இந்தக் குழுவினர் நேற்றுக் காலை இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதியை சந்தித்து பேச்சுகள் நடத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் பியோ மரியனி மற்றும் தூதரக பாதுகாப்பு அதிகாரி கேணல கியுஸ்வி எம.ஜியோன்றி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கைப் படையினருக்கான ஆயுத உதவிகள் குறித்தம் இங்கு பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நன்றி : தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.