Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொலையாளி கைது

Featured Replies

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரனை சுட்டுக்கொன்ற கொலையாளியை கைது செய்திருப்பதாக கொட்டாஞ்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி கொலையாளிக்கு புலி முத்திரை குத்துவதென்ற நாடகம்

திரைக்கு பின்னால் நடப்பதனால்தான் பெயரை வெளியிடுவலதில் தாமதம்????

கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை

maheshwarenmaderad5.png

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் புதுவருடத்தினமான இன்று கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தில் வைத்து துப்பாக்கிதாரி ஒருவரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆலயத்தின் உள்வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம், கொழும்பில் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று காலை சுமார் 10 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தார் மற்றும் மெய்பாதுகாப்பு உறுப்பினர்கள் சகிதம்இ மிகவும் சனக்கூட்டம் நிறைந்த இந்த ஆலய உள்வீதியில் வலம் வந்துகொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்ததாகக் கருதப்படும் துப்பாக்கி நபரினால் சரமாரியாகச் சுடப்பட்டிருக்கிறார்.

maheshwarenmader01bmpbk7.png

இந்தச் சம்பவத்தின்போது படுகாயமடைந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான, இந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விரையப்பட்டபோதிலும், அங்கு அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிற்குள்ளேயே சிகிச்சைகள் பயனின்றி இறந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தச் சம்பவத்தின் போது அவரது மெய்பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதோடு, மேலும் 12 பேர் வரையில் காயமடைந்தாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலை மேற்கொண்டதாகக் சந்தேகிக்கப்படும் துப்பாக்கிநபர் கொட்டாஞ்சேனை பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாப்பாளரின் பதில்தாக்குதலில் காயமடைந்திருந்ததாகவும் அந்த வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இந்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் இவர், தற்போது பொலிசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.

அத்துடன் மகேஸ்வரனின் இன்றைய இந்தப்படுகொலையைக் கேட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வன்மையாகக் கண்டித்திருப்பதாகவும் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பாக தேவையான விசாரணைகளை மேற்கொண்டு கொலையாளிகளைக் கைதுசெய்யும்படியும் ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

அதேவேளை மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இந்தியாவில் இருந்து விடுத்துள்ள ஒரு செய்தியில், இலங்கை அரசாங்கமே இந்தக் கொலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தகவல் பி பி சி தமிழ்ச்சேவை

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் - ஐ.தே.க.

1/1/2008 10:42:02 PM

வீரகேசரி நாளேடு - ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். அத்துடன் அக்கொலைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களுமே காரணமாகவும் இருக்கின்றனர். என்று ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் படுகொலை தொடர்பில் எதிர்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளை, கடத்தல் போன்றவற்றை மேற்கொண்டுவரும் நபர்கள் குறித்து எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் விபரங்களை வெளியிடப்போவதாக அண்மைக்காலங்கலாக கருத்து வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

இதேசமயம் கடந்த வரவு செலவுத் திட்ட வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு மேற்கொள்ளும் வரையில் மகேஸ்வரனின் பாதுகாப்பு நிமித்தம் 18 பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அந்த வாக்கெடுப்பு முடிவையடுத்தே அவருக்கான 16 பாதுகாப்பு அதிகாரிகளை அரசாங்கம் நீக்கியது.

அரசாங்கத்தின் இந்நடவடிக்கை இந்த படுகொலைக்கான ஒரு பாதைத் திறப்பாகவே காணப்படுகிறது. அரசின் இவ்வாறான செயற்பாடுகள் இக்கொலைக்கு யார் காரணம் என்பதை வெளிப்படையாக்குகிறது. கடந்த 2006ஆம் ஆண்டு நத்தார் நினத்தன்று கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் போன்றோரின் படுகொலைகள் தொடர்பில் இதுவøடிரயிலும் ஒழுங்கானதொரு விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன் அவர்களின் கொலைக்கான காரணமும் கொலையாளிகளும் இதுவரையில் கண்டுபடிக்கப்படவில்லை. இதே நிலைமை தற்போது மகேஸ்வரனின் கொலø விசாரணையிலும் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுகின்றன, அதனால் இவரது கொலை தொடர்பான விசாரøணகள் சர்வதேச பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் இப்படுகொலைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பே காரணம் என்று அரச தரப்பினர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இவர்களின் கூற்று மிகவும் கேலிக்குரியதாகவே காணப்படுகிறது. காரணம் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பு நீக்கப்பட்ட போது விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்த அவர்களின் உயிர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததாக கூறிய அதே அரசாங்கம் தற்போது மகேஷ்வரனின் கொலைக்கு புலிகளே காரணம் என்கிறது. இது வேடிக்கையானது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.