Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் ரத்து? சிறிலங்க அமைச்சர் சூசகம்!

Featured Replies

இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் ரத்து? சிறிலங்க அமைச்சர் சூசகம்!

வெள்ளி, 4 ஜனவரி 2008( 18:57 IST )

பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கையின் 80வது ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தெரியவந்துள்ளது!

கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ரோஹித போகல்லகாமா, "பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறும் இலங்கையின் சுதந்திர தின பொன்விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வார் என்று சிறிலங்க அரசு ஒருபோதும் கூறவில்லை" என்று கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளில் இலங்கைக்கு வரவில்லை என்றும், இந்த ஆண்டில் அவர் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறிய போகல்லகாமா, இதுவரை அவரின் வருகை குறித்து எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும், தங்கள் நாட்டிற்கு வருமாறு சிறிலங்க அரசு விடுத்த அழைப்பை பிரதமர் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் இலங்கைக்கான இந்தியத் தூதர் கூறியுள்ளார்.

இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வாக அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றை ராஜபக்ச அரசு வேகமாக உருவாக்கி வருகிறது என்றும், இந்தியப் பிரதமரின் வருகையின் போது இறுதி செய்யப்படும் என்றும் சில செய்திகள் வந்த நிலையில், சிறிலங்க அயலுறவு அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

http://tamil.webdunia.com/newsworld/news/i...080104050_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

அது . இவ்வளவு பயம் இருத்தால் போதும். பேசாமல் அடக்கி வாசியுங்க மன் மோகன் சிங் அவர்களே. கொஞ்சம் பொறுத்திருங்கள் கொழும்பில் பெரிய தலைகள் உருளப்போகின்றன. நீங்கள்(இந்தியர்கள்) சூடு பட்ட பூனையல்லோ. அடுப்பங்கரையை நாடாது நாட கூடாது.

ஜெயலலிதாவிடம் முறையிட்டால் கட்டாயம் அனுப்பிவைப்பார்.

இலங்கையின் அறுபதாவது சுதந்திரதின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது பெரும்பாலும் அசாத்தியமானது என நம்பகரமாக அறிய வருகின்றது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான யுத்த நிறுத்த் ஒப்பந்தம் செயலிழந்தது முழு யுத்தம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ள பின்னணியில், இந்திப் பிரதமர் கொழும்பு செல்வது சாத்தியமற்றது என்ற தகவல் புதுடில்லியிலிருந்து சென்னைக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவு

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறவுகள்

தனது பெயரையும் தமிழரின் ரத்தத்தில் கரைத்துவிட வெளிப்படையாக விரும்பவில்லை போலத் தெரிகிறது. மற்றும்படி தமிழ்ர் மேல் அநுதாபப்பட்டு வராமல் விடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் பிரதமரின் வருகை ரத்து போர்நிறுத்தம் முறிந்துவிட்டதால் கொழும்புக்கு விரைவில் தகவல் தெரிவிக்கப்படும்

[saturday January 05 2008 05:55:30 AM GMT] [யாழினி]

இலங்கையின் அறுபதாவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்வது பெரும்பாலும் அசாத்தியமானது என நம்பகரமாக அறிய வருகின்றது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்து முழு யுத்தம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ள பின்னணியில், இந்தியப் பிரதமர் கொழும்பு செல்வது சாத்தியமற்றது என்ற தகவல் புதுடில்லியிலிருந்து சென்னைக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவு

இந்திய பிரதமர் தற்போதைக்கு இலங்கைக்கு வரும் சாத்தியமில்லை.

அப்படியே வந்தாலும் சிங்கள அரசே அவரை திட்டமிட்டு கொலை செய்து விட்டு

பழியை புலிகள் மீது போடக்கூடிய சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை! தமிழர்களுக்கு எதிராக முழுவதுமாக இந்தியாவை திருப்பும் நோக்கத்துடன் எத்தகைய பாதகங்களையும் செய்ய சிங்கள அரசு தயங்காது என்ற உண்மையை இந்திய பிரதமரின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே வந்தாலும் சிங்கள அரசே அவரை திட்டமிட்டு கொலை செய்து விட்டு

பழியை புலிகள் மீது போடக்கூடிய சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை! தமிழர்களுக்கு எதிராக முழுவதுமாக இந்தியாவை திருப்பும் நோக்கத்துடன் எத்தகைய பாதகங்களையும் செய்ய சிங்கள அரசு தயங்காது என்ற உண்மையை இந்திய பிரதமரின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்

நீங்கள் சொன்ன காரணமும் ஒன்று மன்மோகன் சிங் வராமல் விடுவதற்கு.

நீங்கள் சொன்ன காரணமும் ஒன்று மன்மோகன் சிங் வராமல் விடுவதற்கு.

ஏனெண்டா கூப்பிட்டு போட்டு ராஜிவ் காந்திக்கே பிடரியில அடி கொடுத்தவங்கள்.

மன்மோகன் ஒருக்கா கற்பனை பண்ணி பாத்திருப்பார். அய்யோ வேண்டாம் சாமி எண்டிருப்பர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.