Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மாணவர் ஒன்றியத்தலைவர் சுட்டுக்கொலை.

Featured Replies

தமிழ் மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் குணேந்திரன் யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வைத்து இன்று காலை 10.30மணியளவில் படைப்புலனாய்வாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

துவிச்சக்கரவண்டியில் சென்ற குணேந்திரன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்துவிட்டு தனது வீட்டிற்கு செல்லமுற்படுகையில் துவிச்சக்கரவண்டியில் சிவில் உடையில் பல்கலைக்கழகத்திற்குள்வந்த படைப்புலனாய்வாளர்கள் இருவர் இவரை சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இவரது சடலம் யாழ்போதனா மருத்துவமனையில் சிறிலங்கா காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

sankathiiiiiii

யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்று காலை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

அடப்பாவிகளா பல்கலைக்கழகத்துக்கையும் புகுந்து கொலை செய்ய துவங்கீட்டாங்களா? நாசமாப் போக!!

கொல்லப்பட்ட மாணவனுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!

மகிந்து ஒண்டுக்கு போனாலே அல்லது கு* விட்டாலே விழுந்து அடித்து கருத்து எழுதும் யாழ்கள உறவுகள் பாரதூரமான இந்தச் செய்திக்கு ஏன் பதில் கருத்து எழுதவில்லை?

மேற்குறித்த செய்தி பிழையானதா? அல்லது கொஞ்சம் பெரிய தலைகள் விழுந்தால்தான் தமிழ்மக்களின் கண்களின் இருந்து நீர் சுரக்குமா?

பல்கலைக்கழகத்தினுள் நடைபெற்ற இந்தக் கொலைச்சம்பவம் மிகவும் பாரதூரமானது. இது எதிர்காலத்தில் இன்னும் பல கொலைகள் பல்கலைக்கழகத்தினுள் இடம்பெறுவதற்கு ஊக்கம் அளிக்கும். இதுபற்றி பல்கலைக்கழக சமூகம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, தேவையான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியமானது.

இப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்று இருந்தால் இந்தச்செய்தி உலகம் முழுவதும் பிரபலம்பெற்று உலகமே ஆ ஓ எண்டு துள்ளிக்குதித்து கடுமையான விமர்சனங்கள் செய்து இருக்கும். ஆனா மூன்றாம் உலகநாடான சிறீ லங்காவில் மூன்றாம் தரநகரமான யாழ்ப்பாணத்தில நடைபெற்ற சம்பவம் எண்டபடியால் உலக செய்தி ஸ்தாபனங்களின் ஹெட்லைனை தொடமுடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

குணேந்திரனின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.கொலை வெறியர்கட்கு கோயில் என்ன பாடசாலை என்ன எல்லாமே ஒன்று தான்.

மகிந்து ஒண்டுக்கு போனாலே அல்லது கு* விட்டாலே விழுந்து அடித்து கருத்து எழுதும் யாழ்கள உறவுகள் பாரதூரமான இந்தச் செய்திக்கு ஏன் பதில் கருத்து எழுதவில்லை?

மேற்குறித்த செய்தி பிழையானதா? அல்லது கொஞ்சம் பெரிய தலைகள் விழுந்தால்தான் தமிழ்மக்களின் கண்களின் இருந்து நீர் சுரக்குமா?

இவற்றை செய்திட்டா மட்டும் என்னவாம்?

இன்னும் எத்தனை காலத்திற்கு இதை மட்டும் செய்யப்போறம்?

இதை தடுக்க காத்திரமான செயற்பாடுகளில் இறங்க நாங்கள் அனைவரும் தயாரா?

யார் முதலில இறங்கிறது? எப்படி இறங்கிறது?

தமிழ் மாணவ ஒன்றியத் தலைவர் குணேந்திரன் அவர்கட்கு எனது கண்ணீர் அஞ்சலியையும் அவரது குடும்ப உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.உய

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுடப்பட்டு இளைஞன் நேற்றுப் பலி

யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் வைத்து நேற்று முற்பகல் 10.30 மணியளவில் 19 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட நீதிபதி இ.த.விக்னராஜா சம்பவ இடத்தில் விசாரணைகளை நடத்தினார்.

பல்கலைக்கழகத்தின் வடக்குப் பக்க வாசல் ஊடாகச் சென்ற இருவர் பிரஸ்தாப இளைஞனைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

பிரஸ்தாப இளைஞன் பல்கலைக்கழக மாணவனோ ஊழியரோ அல்லர் என பல்கலைக்கழகத் தரப்பில் விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.

இவர் படைத்தரப்பைச் சேர்ந்தவர் அல்லர் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிரஸ்தாப இளைஞனை அடையாளம் காணக்கூடிய ஆவணங்கள் எவையும் அவர் வசம் இருக்கவில்லை என்று விசாரணையில் கூறப்பட்டது.

19 வயது மதிக்கத்தக்க 5 அடி 8 அங்குல உயரமுள்ள இச்சடலத்தை யாழ். ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கும்படியும் சடலத்தை இனங்காண பத்திரிகையில் தகவல் வெளியிடும்படியும் நீதிபதி யாழ். பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

(உதயன்.கொம்)

இந்த செய்தியில் உள்ளது குணேந்திரன் தானா?

நான் அறிந்த அளவில் ஒருவரும் கொலை செய்யப்பட்ட இந்த இளைஞன் விடயத்தில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை. அரசியல் ஆதாயம் இல்லாதபோது இந்தக்காலத்தில் காக்காவும் எச்சம்போடுவதற்கு பின்னிற்கின்றது.

எனக்கு ஒருவர் சொன்ன தகவலின்படி, குறிப்பிட்ட இளைஞன் ஆமியின் செக் பொயிண்டில் நிற்காது சென்றதாகவும், பின் இளைஞனை மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து வந்த இனந்தெரியாத நபர்கள் இளைஞன் பல்கலைகழக வளவினுல் நுழைந்தபோது யாழ் பல்கலைக்கழக பின்வாசலில் வைத்து (தண்ணீர் தாங்கி உள்ள வாசல்) சுட்டுக் கொன்றதாகவும் அறிந்தேன்.

மனித உயிர்களிற்கு யாழ்ப்பாணத்தில் மதிப்பு இவ்ளோதான் பாருங்கோ. தெருவில் எவனாவது வந்து காக்கா குருவிய சுடுறமாதிரி சுட்டுப்போட்டு போவாங்கள். கேக்கிறதுக்கு ஆக்கள் இல்லை. இதுதான் கலிகாலம்!

ஒட்டு மொத்தமாக எல்லா தமிழர்களின் உயுரும் அடைவு வைச்சாசு... அதைக் கண்டிங்க் முன்னம்....

நான் நினைக்கிறேன் இவர் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் என்று ...

ஏதாவது தகவல்கள் இருக்கின்றனவா?

ஒட்டு மொத்தமாக எல்லா தமிழர்களின் உயுரும் அடைவு வைச்சாசு... அதைக் கண்டிங்க் முன்னம்....

அடவு வச்சாங்களா? யார் அடவு வச்சது? யாருக்கு அடவுவச்சது? தமிழரிண்ட அனுமதி கேட்கப்பட்டதா அடவு வைக்கும் முன்னம்? என்னா சொல்லுறீங்கள்? :)

பின்ன என்ன? ஒன்று இரண்டு பேரா சாகிறாங்கள்? கணக்கு வழக்கு இல்லாமல் சுட்டுத்தள்ளுறானுகள். எங்க சொல்லியும் புண்ணியமில்லை... அதனால் தான் சொன்னேன் அடைவு வைச்சாச்சு என்று..

இன்னும் விக்கவில்லை அதுவரைக்கும் லாபம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.