Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சரண்யா பாக்யராஜ் தற்கொலை முயற்சி?

Featured Replies

நேற்று மாலை அந்த தகவல் மளமளவென பரவியது. பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதிகளின் மகள் சரண்யா தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவர் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்படி செய்தி பரவியதும், பரபரப்பானது கோடம்பாக்கம்.

தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக வந்த தகவலை உறுதி செய்து கொள்வதற்காக சில நிருபர்கள் அந்த மருத்துவமனைக்குள்ளேயே சென்று விட்டனர்.

இதற்கிடையே இந்த தகவல் குறித்து மறுப்பு தெரிவித்த பாக்யராஜ், பூர்ணிமாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதன் காரணமாகதான் அந்த மருத்துவமனைக்கு சென்றோம். நீங்கள் குறிப்பிடுவது போல், சரண்யா தற்கொலைக்கு முயலவில்லை என்று தெரிவித்தார். பாரிஜாதம் படத்தின் மூலம் அறிமுகமான சரண்யா, சில மலையாள படங்களிலும் நடித்து வந்தார். ஒரு முன்னணி மலையாள நடிகருடன் இவரை இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகையின் புடவையை காணவில்லை!!

நேற்று மாலை இந்த தகவல் மளமளவென்று பரவியதை அடுத்து தமிழகமே ஒரு விநாடி ஸ்தம்பிதம் அடைந்தது :( ..அந்த பிரபல நடிகையில் புடவையை கைப்பற்றுவதிற்காக விசேட அதிரடிபடையினர் களத்தில் இறக்கபட்டுள்ளதுடன் முப்படையினரும் அந்த பிரபல நடிகையின் புடவையை தேடல் வேட்டையில் ஈடுபட்டார்கள் :( அத்துடன் காலவரையன்றிய ஊரடங்குசட்டம் பிறப்பிக்கபட்டு ஒவ்வொரு வீடுகளிளும் தேடுதல் வேட்டையில் இராணுவத்தினர் முடக்கிவிடபட்டனர்..நள்ளிரவு பிறகு கிடைத்த செய்தியின்படி நடிகை அந்த புடவையை தன் நாயிற்கு அழகு பார்க்க போட்டதாகவும் பின் மறந்துவிட்டதாகவும் தன்னுடைய கவலையீனதிற்கு பொதுமக்களிடம் மன்னிப்பும் கேட்டு :( எல்லாருக்கும் "உம்மா" கொடுத்தா டீவியில :( ...பொதுமக்களும் நடிகையிடம் டீவியில் "உம்மா" பெற்று கொண்ட மகிழ்ச்சியில் நாய் போல் வாலை ஆட்டினார்கள்!! :(

இருபேப்பரிற்காக,

விசேட நிருபர்,

ஜம்மு பேபி!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் ஜம்முபேய் நடிகையிட்டை புடைவை இருந்தால் தானே காணாமல் போறதுக்கு சிலநேரம் நடிகையின் அம்மா புடைவை என்ற செய்தியாய் இருக்கும் :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த நடிகை, கு**புவோ?

ஒய் ஜம்முபேய் நடிகையிட்டை புடைவை இருந்தால் தானே காணாமல் போறதுக்கு சிலநேரம் நடிகையின் அம்மா புடைவை என்ற செய்தியாய் இருக்கும் :lol::lol:

சாத்திரி அங்கிள் ம்ம்ம்ம்...நீங்க சொல்லுறது சரியா தான் இருக்கும் நடிகையிட்ட புடவை இருக்காது அவாவின்ட மம்மியின்ட புடவையே தான்!! :)

அப்ப நான் வரட்டா!!

யார் அந்த நடிகை, கு**புவோ?

இல்லை அண்ணே ஏனென்றா அவாவிற்கு வயசு போயிட்டு அல்லோ!! :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் ஜம்முபேய்[/b] நடிகையிட்டை புடைவை இருந்தால் தானே காணாமல் போறதுக்கு சிலநேரம் நடிகையின் அம்மா புடைவை என்ற செய்தியாய் இருக்கும் :unsure::o

:blink::huh::wub:

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்மா ஏன்மா இந்த வேலை?

அதான் சுண்டல் இருக்கன்ல என்கிட்ட சொல்லுறது என்ன பிரச்சனைனாலும்...

இதேவேள நடிகையின் புடவையை காணவில்லை என்று யாழில் வந்த செய்தியை அடுத்து யாழ் உறுப்பினர்கள் நடிகையின் கையால் பரிசுவாங்க வேணஒ;டும் எனபதற்காக தேடுதல் வேட்டையில் களம் இறங்கினார்கள் சாத்திரி அவர்கள் முனியம்மாவின் புடவையை எடத்து கொண்டு இதான் உங்கள் புடவை என்றும் கந்தப்பு அவர்கள் பக்கத்து வீட்டு கொடியல் காய்ந்து கொண்டிருந்த தாத்தா ஒருவரின் வேட்டியை எடுத்து இதான் உங்கள் புடவை என்றும் மாப்பி அவர்கள் துப்பாட்டவை திருடி இதான் உங்க்ள புடவை என்றுநும் கப்ஸா விட்டார்கள் நடிகையிஜன் நாய் 3 வரையும் துறத்தி வர 3 Nhரும் கல்லால் நாய்க்கு எறிந்து விட்டு தப்பித்ததாக கள செய்திகள் தெரிவிக்கின்றன.....

துணு;ட காணம் துணிய காணம் என்று நடிகை புலம்புவதாகவும் உள்வீட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

  • கருத்துக்கள உறவுகள்

பூர்ணிமா பாக்யராஜ் பேட்டி

''என் மகளுக்கு என்ன நடந்தது?''

திகைக்க வைக்கும் முடிச்சுக்கள், ரசிகர்களால் தீர்மானிக்க முடியாத திருப்பங்களோடு திரைக்கதை அமைப்பதில் இயக்குநர் பாக்யராஜுக்கு நிகர் அவரே! அவரது மகளும் இளம் நடிகையுமான சரண்யா காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றார் என்று கிளம்பியுள்ள ஒரு செய்தி அந்தக் குடும்பத்தில் வேதனை அலைகளை எழுப்பியிருக்க... அந்தச் செய்தியே பாக்யராஜின் திரைக்கதை போன்ற திருப்பங்களோடு புதிய உருக் கொண்டபடி இருக்கிறது.

கடந்த 21-ம் தேதி இரவு சரண்யாவை சென்னைஅடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக சேர்த்தார்கள். இதனைத் தொடர்ந்துதான், 'சரண்யா காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்... நல்ல வேளையாக பிழைத்துக் கொண்டு விட்டார்!' என்ற செய்தி கோடம்பாக்கத்தைக் கடந்து தமிழகம் முழுக்க வேகவேக மாகப் பரவியது.

இந்த தகவல் கேள்விப்பட்ட அடுத்த சில மணித் துளிகளிலேயே போலீஸார் மலர் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். ஆனாலும், இது தொடர்பாக அவர்கள் வாய் திறக்காமல் மௌனம் காத்தார்கள். காரணம், சரண்யாவின் அப்பா பாக்யராஜ் இப்போது தி.மு.க-வில் பவர்ஃபுல் மனிதராக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

நீண்ட முயற்சிக்குப் பிறகு விசாரணை நடத்திய போலீஸார் சிலர் நம்மிடம் சம்பவம் குறித்து இப்படிச் சொன் னார்கள்-

''சரண்யா தற்கொலைக்கு முயல காதல் விவகாரம் தான் காரணமாக இருந்திருக்கிறது. கடந்த 21-ம் தேதி நுங்கம்பாக்கத்திலுள்ள தனது வீட்டின் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார் சரண்யா. உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டதால் அவர் காப்பாற்றப்பட்டு விட்டார்'' என்றார்கள்.

சரண்யாவின் தற்கொலை முயற்சி குறித்து கோடம்பாக்க வட்டாரத்தில் விசாரிக்கப் புகுந்தால், நிறைய தகவல்களை நம்மிடம் கொட்டினார்கள். ''சரண்யாவின் தற்கொலை முயற்சி முதல் முறையல்ல... இதற்கு முன்னால் ஏற்கெனவே இரண்டு முறை நடந்திருக்கிறது. ஆஸ்திரேலிய தமிழர் ஒருவர் பாக்யராஜின் பரமவிசிறி. அவர் சென்னை வந்த போது அவரையும் சைலன்ட் தயாரிப்பாளராக்கித்தான் 'பாரிஜாதம்' படத்தை எடுத்தார் பாக்யராஜ். அந்த படத்தில்தான் முதன்முதலில் கதாநாயகியாக அறிமுகமானார் சரண்யா. கால ஓட்டத்தில் அந்த ஆஸ்திரேலிய தமிழருக்கும், சரண்யாவுக்கும் காதல் அரும்பு விட்டது. இந்த விஷயம் பாக்யராஜ் குடும்பத்துக்கு ஆரம்ப கட்டத்திலேயே தெரியும்.

ஒரு கட்டத்தில், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்கள் பாக்யராஜ் குடும்பத்தினர். இது தொடர்பாக அந்த ஆஸ்திரேலிய பிரமுகரிடம் பாக்யராஜ் குடும்பத்தினர் பேச, 'சினிமா வேறு... எதார்த்த வாழ்க்கை வேறு... நான் இரண்டையும் ஒன்றாக்கிக் கொள்ள விரும்பவில்லை. பாக்யராஜைப் பொறுத்தவரையில் அவர் என்னோட சினிமா ஹீரோ. அவரை நான் ரொம்ப மதிக்கிறேன். அதுக்காக அவரது மகளை நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை...' என்று சொல்லி விட்டாராம் அந்த ஆஸ்திரேலியத் தமிழர். அதிர்ச்சியில் உறைந்து போனது பாக்யராஜ் குடும்பம். ஆனாலும், அதிலிருந்து தங்களை அவர்கள் தேற்றிக் கொண்டுவிட, சரண்யாவால் அந்த அதிர்ச்சியில் இருந்து விடுபட முடியவில்லையாம். தனிமையிலேயே புலம்பிக் கொண்டிருந்தவர், தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்... இந்தக் கவலை பாக்யராஜையும் வாட்டி வதைக்க, அவரும் ரொம்பவே உடைந்து போயிருந்தார்'' என்கிறார்கள் கோலிவுட்டில்.

வேறு சிலரோ, ''தன் மகள் சரண்யாவை நடிகையாக்க வேண்டும் என்று பாக்யராஜ் ஒருபோதும் விரும்பியதில்லை. ஆனால், குடும்பத் திலேயே இருந்த சிலருடைய வற்புறுத்தலால் அவருக்கு வேறு வழி தெரியவில்லை. அதனாலேயே தனது மகளை 'பாரிஜாதம்' படத்தின் மூலம் நடிகையாக்கினார் பாக்யராஜ். சரண்யா நடிகையான பிறகு வீட்டில் நிம்மதி தொலையத் துவங்கியது. இன்றைக்கு சமூகம் இருக்கும் சூழலில் சாதாரணமாக ஒரு பெண் வேலைக்குப் போய் வந்தாலே ஆயிரம் கதைகள் கிளம்பும். நடிகை என்றால் கேட்கவும் வேண்டுமா? சாதாரண கிசுகிசுவாக கிளம்பியது விதம் விதமான கதைகளாகி, குடும்பத்தையே இறுக்கத்தில் ஆழ்த்தியது.

ஏற்கெனவே மலையாள சினிமாவில் மீரா ஜாஸ்மினோடு நிச்சயம்வரை போய், பின்பு லோகிதாஸ் பிரச்னையால் நின்று போனது நடிகர் பிருத்விராஜின் திருமணம். அவரை 'பாரிஜாதம்' படம் மூலம் தமிழில் ஹீரோவாக்கினார் பாக்யராஜ். படத்தில் சரண்யாவோடு அவர் பாடிய டூயட் காட்சிகள் சினிமாவைக் கடந்து வெளியிலும் தொடர்ந்ததாகவும், இரண்டு குடும்பமுமே பச்சைக் கொடி காட்டி விட்டதாகவும் அதைத் தொடர்ந்து இரண்டு குடும்பத்தினருமே நட்போடு நெருக்கமாக பழக ஆரம்பித்ததாகவும் தகவல்கள் வந்தன. இரண்டு தரப்பிலும் கல்யாணப் பேச்சு வரை வந்து விட்டார்கள்.

இந்த சூழ்நிலையில்தான், பிருத்விராஜ் ஏற்கெனவே இரண்டு நடிகைகளுடன் பழகிவரும் விஷயம் சரண்யாவுக்குத் தெரியவந்து, ஆடிப் போய்விட்டாராம். இது தொடர்பாக பிருத்விராஜிடம் நேரடியாகவே சண்டை போட்டிருக்கிறார் சரண்யா. வாக்குவாதங்கள் முற்றித்தான், சரண்யா வேறுவழியில்லாமல் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்'' என்று சொல்கிறார்கள்.

இது தொடர்பாக பிருத்விராஜ் என்ன சொல்கிறார் என்பதை அறிவதற்காக அவரைத் தொடர்பு கொண்டபோது, அவரது மேனேஜர் கிருஷ்ணமூர்த்தி நம்மிடம் பேசினார். ''நீங்க சொல்ற மாதிரி பிருத்விராஜுக்கு எந்த நடிகையுடனும் காதலும் இல்லே, கத்தரிக்காயும் இல்லே. நல்லா நடிச்சு சினிமாவுல பெரிய ஆளா வரணுங்கறது தான் அவரோட லட்சி யம், கனவு எல்லாமே! கௌரவமான குடும் பத்தைச் சேர்ந்தவர் அவர். ஒருபோதும் கண்ணியக்குறைவான காரியங்களில்இறங்க மாட்டா. சக நடிகை களிடமும் எப்போதும் கண்ணியத்தோடுதான் பழகுவார். அவர் மேல் பொறாமை கொண்டவர் கள்தான் இஷ்டத்துக்கு இப்படியெல்லாம் கதை கட்டி விடுகிறார்கள்'' என்றார்.

''உங்கள் மகளுக்கு என்னதான் நடந்தது?'' என்று சரண்யாவின் அம்மா பூர்ணிமா பாக்யராஜிடம் கேட்டோம்.

''நாலு நாளைக்கு முன்னால சரண்யா தன் தோழி களுடன் ஹோட்டலுக்குப் போனா. அந்த ஹோட்டல் சாப்பாடு அவளுக்கு ஏத்துக்கலை. ஃபுட் பாய்ஸனாயிடுச்சு. இத நாங்க முதல்ல ரொம்ப சாதாரணமாத்தான் எடுத்துக்கிட்டோம். ஆனா, நிலைமை கொஞ்சம் சீரியஸாயிடுச்சு. அதுனால மலர் ஆஸ்பிட்டலுக்குப் போனோம். அங்க சத்தியமூர்த்திங்கற எங்க ஃபேமிலி டாக்டர்தான் ட்ரீட்மென்ட் கொடுத்தார். ஆனா, இல்லாதது பொல்லாததை சிலர் பரப்பியதோடு, அதே ஆஸ்பிட்டல்ல இருக்கற ஒரு மனநல மருத்துவர்கிட்டதான் சரண்யா ட்ரீட்மென்ட் எடுத்துக்கறானுகூட கதை கட்ட ஆரம்பிச்சிட்டாங்க. சரண்யாவின் அப்பாவிடமும் பலரும் பலவிதமான தகவல்களைச் சொல்லி விசாரிச்சிருக்காங்க'' என்றவரிடம், பிருத்விராஜ், ஆஸ்திரேலியத் தமிழருடனான காதல் பற்றியெல்லாம் கேட்டோம்.

''நல்லவேளை சரண்யா ஒரு படத்துலதான் நடிச்சிருக்கா. இன்னும் சில படங்கள்ல நடிச்சிருந்தா இன்னும்கூட நிறைய கதை கட்டியிருப்பாங்க போல... 'பாரிஜாதம்' படத்துல பிருத்வி ஹீரோ, சரண்யா ஹீரோயின் அவ்வளவுதான். இதுக்கடுத்து, ஆஸ்திரேலியத் தமிழரை வெச்சும் ஒரு கதை கட்டுறாங்க. அதுக்கு சப்போர்ட்டா சரண்யா ஆஸ்திரேலியா போய் வந்ததாகவும் சொன்னாங்க. அவ இன்னி வரைக்கும் ஆஸ்திரேலியாவுக்குப் போனதே இல்லை. தேவைப்பட்டா அவளோட பாஸ்போர்ட்டைக்கூட காட்டத் தயாரா இருக்கேன். சந்தோஷமா இருக்கற எங்க குடும்பத்தை வெச்சு ஏகப்பட்ட கதைகள் கிளப்பி விடறாங்க. ஆனா உண்மைன்னு ஒண்ணு இருக்கற வரைக்கும் எங்க சந்தோஷத்தை யாரும் குலைச்சிட முடியாது'' என்று உணர்ச்சிவசப்பட்டார் பூர்ணிமா.

'காதல் பூதமே காதல் பூதமே...' என 'பாரிஜாதம்' படத்தில் ஜாலியாக பாட்டுப் பாடிய சரண்யாவை ஒருவேளை நிஜமாகவே காதல் பூதம்தான் ஆஸ்பத்திரி வரை போக வைத்தது என்றால்... அது வருத்தத்துக்குரிய பொருத்தம்தான்.

http://www.vikatan.com/jv/2008/jan/30012008/jv0502.asp

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.