Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு புதிய விளையாட்டுத்திடலை வழங்கினார் தேசியத் தலைவர்

Featured Replies

கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு தமிழீழத் தேசியத் தலைவரால் புதிய விளையாட்டுத்திடல் இன்று வழங்கப்பட்டது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் கிளி. மகாவித்தியாலத்திற்கு விளையாட்டுத்திடல் வழங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி. இதுபோலவே எங்கள் தழிழீழத்தையும் விரைவில் மீட்டு எங்கள் கையில் தந்துவிடுங்கள் தலைவரே.

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் கிளி. மகாவித்தியாலத்திற்கு விளையாட்டுத்திடல் வழங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி. இதுபோலவே எங்கள் தழிழீழத்தையும் விரைவில் மீட்டு எங்கள் கையில் தந்துவிடுங்கள் தலைவரே.

தலைவர் வழிநடத்துவார் தமிழீழத்தை மீட்க வேண்டியதும் அதை உங்கட எதிர்கால சந்ததியிடம் கையளிக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு. தலைவரில தலைல எல்லாத்தையும் ஒப்படைச்சிட்டு.. நீங்கள் என்ன செய்யப் போறியள் என்று கேட்கிறன்..??! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவர் கிளி. மகாவித்தியாலத்திற்கு விளையாட்டுத்திடல் வழங்கியது குறித்து மிக்க மகிழ்ச்சி. இதுபோலவே எங்கள் தழிழீழத்தையும் விரைவில் மீட்டு எங்கள் கையில் தந்துவிடுங்கள் தலைவரே.

இங்கை கொஞ்சபேர் 30 வருசத்தை வீணாக்கி போட்டமாம்.நீங்கள் என்னடா எண்டால் தலைவர் விரைவில் மீட்டு தருவார் எண்னுறீங்கள். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் கூறுவது வாஸ்த்தவம் தான். ஆனால் பத்திரிகைகள் இதுபோன்ற விடயங்களை பெரிதாக்கி தலைவர் அது கொடுத்தார் இது கொடுத்தார் என்று எழுதுவதுதான் அவசியமாகப் படவில்லை. தலைவர் நிச்சயமாக பாடசாலையின் அல்லது மாணவர்களின் வேண்டுகோளைப் பரிசீலித்து இதுவிடயத்தில் ஆவன செய்யும்படி தமிழீழ கல்விப் பிரிவைப் பணித்திருப்பார். தேசிய தலைவரின் வழிகாட்டலில் தமிழீழத்தின் சேவைப் பிரிவுகள் மக்களின் தேவைகளைக் கவனிக்க ஏற்கனவே நிறுவப்பட்டு செயற்படுகின்றன.

இங்கு ஈழத்திலிருந்து வரும் நிர்வாக சம்பந்தமான செய்திகள் இந்திய அரசியல் செய்திகளுக்கு ஒத்தவையாக எழுதப்படுவது விசித்திரம். உதாரணமாக முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதி - பிரதம மந்திரியின் சுனாமி நிதி இப்படி எத்தனையோ நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அனர்த்தங்களையும் அவசிய தேவைகளையும் கவனிக்க அதற்கென்று இலாகாக்களும் சேவைப் பிரிவுகளும் இருக்கும்போது முதலமைச்சரும் பிரதமமந்திரியும் அங்கு வரவேண்டிய தேவையே இல்லை என்பது எனது அபிப்பிராயம்.

இன்றைய காலகட்டத்தில் தலைவர் அவர்கள் செய்வதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. வன்னிப் பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் நடப்பதில்லை என்பதையும் விடுதலைப் புலிகளே செயற்பாட்டுக் குறைவை நிறைவேற்றுகிறார்கள் என்ற செய்தியையும் உலகுக்கு தெரிவிக்கவேண்டிய அவசியம் ஒன்று உள்ளது. இது ஆரம்பம்தான். போகப்போக இன்னும் நடக்கும்.

ஒரு நடைமுறை அரசின் நடவடிக்கைகளில் மைதானம் வழங்கப்பட்ட செயலும் ஒன்று. நிலம் அரசுடைமை, அதனைப் பகிர்ந்து தேவைக்கேற்றாற்போல் வழங்குவது அரச தலைவர் கடமை. அது நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம். இன்றைய நிலையில் தமிழீழத்திற்காக புலம் பெயர்ந்தவர்களால் செய்யக் கூடிய பேருதவி பொருளாதார ரீதியானதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நடைமுறை அரசின் நடவடிக்கைகளில் மைதானம் வழங்கப்பட்ட செயலும் ஒன்று. நிலம் அரசுடைமை, அதனைப் பகிர்ந்து தேவைக்கேற்றாற்போல் வழங்குவது அரச தலைவர் கடமை.

அது அரச தலைவரின் கடமையல்ல. அது அமைச்சுகளின் அல்லது இலாகாக்களின் கடமை. இவ்வாறான பல அரசின் அமைச்சுகளுக்கும் இலாகாக்களுக்கும் அரசதலைவர் தனது அதிகாரங்களைப் பிரித்து வழங்கி அவற்றைச் சுயமாக இயங்க வைப்பார். இன்றைய பத்திரிகைச்செய்திகள் மக்களின் மத்தியில் பிழையான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தவே வழிவகுக்கும்.

உதாரணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் ஒரு சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட போது முதலமைச்சர் நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக செய்திகள் வந்தன. இதில் இன்னொரு விசேடம் என்னவென்றால் அரசியல் இலாபம் தேடும் நோக்குடன் இச்செய்தியை பத்திரிகைகள் கையாண்டதால் சிறுமியின் பூர்வீகம் பெயர் அனைத்தையும் வெளியிட்டு அந்தக் குழந்தையின் வாழ்க்கையையே பாழடித்துவிட்டார்கள். சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை ஒரு சமுதாய சீர்கேடு. இதை இல்லாதொழிப்பதும் அதற்குரிய நட்டஈட்டை வழங்குவதும் அதற்குரிய இலாகாக்களின் பொறுப்பு. இதில் முதலமைச்சர் தலையிடவேண்டிய அவசியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இளையோர் கல்வி, விளையாட்டு என்பவற்றில் தேசிய தலைவர் பெரும் ஆர்வம் கொண்டவர் ?பா.நடேசன்.

07.02.2008 / நிருபர் எல்லாளன்

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் எமது இளைய தலைமுறை கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் உயர்வடையவேண்டும் என்பதில் பெரும் ஆர்வம்கொண்டவர் எனத் தமிழீழ அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு தமிழீழத்தேசியத்தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட புதிய விளையாட்டுத்திடலின் தொடக்கநிகழ்வில் சிறப்புரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எல்லோருக்கும் மிக மகிழ்ச்சியான நாள் இன்றாகும் இந்தப்பாடசாலையில் நிலவிய விளையாட்டுத்திடல் நெருக்கடி தொடர்பாக பாடசாலை சமூகம் தேசியத்தலைவர் அவர்கட்கு வேண்டுகை ஒன்றை விடுத்திருந்தது. வேண்டுகை கிடைத்தவுடனேயே உடனடியாகவே இந்த விளையாட்டுத்திடலினை பாடசாலைக்கு வழங்குமாறு பணித்திருந்தார்.

எமது தலைவர் அவர்கள் பாடசாலைகளில் நிலவும் வசதிக்குறைகள் தொடர்பாக அக்களை செலுத்திவருபவர். கல்வி, விளையாட்டுத்துறைகளில் எமது இளைய தலைமுறைஉச்சங்களைப் பெறவேண்டும் என்பதில் விருப்புடையவர். கிராமம் நகரம் என்றில்லாமல் மாணவர்கள் சகலருக்கும் கல்வியிலும், விளையாட்டிலும் உயர்வடையவேண்டும் என்ற நோக்குடன் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார் எனவும் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வான்படைத்தாக்குதல்களினால் எமது மாணவர்கள் அச்சமடையத்தேவையில்லை வீரமரபில் தோன்றிய நாம் எல்லா ஆற்றல்களையும் வெளிப்படுத்துகின்ற காலமாக இக்காலமுள்ளதெனவும் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

http://www.sankathi.com/content/full_leadn...amp;ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டத்தில் தலைவர் அவர்கள் செய்வதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. வன்னிப் பகுதிகளில் சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் நடப்பதில்லை என்பதையும் விடுதலைப் புலிகளே செயற்பாட்டுக் குறைவை நிறைவேற்றுகிறார்கள் என்ற செய்தியையும் உலகுக்கு தெரிவிக்கவேண்டிய அவசியம் ஒன்று உள்ளது. இது ஆரம்பம்தான். போகப்போக இன்னும் நடக்கும்.

தமிழீழத்தின் நிர்வாக கட்டமைப்புகள் அனைத்தும் தடையின்றி செவ்வனே இயங்குவதாக சிங்களத்துக்கு குறிப்பாக சர்வதேச சமுகத்துக்கு நாம் காட்டவேண்டிய அவசியம் உண்டு என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன்.

அதை இவ்வாறு செய்தி பிரசுரிப்பதால் எட்டலாமா என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்.

தமிழீழ கல்வித்துறை விளையாட்டுத்திடலை பாடசாலைக்கு வழங்கியது என்பததையும் தேசியத் தலைவர் விளையாட்டுத்திடலை பாடசாலைக்கு வழங்கினார் என்பதையும் ஒப்பிடுவீர்களாயின் இதில் முதலாவது கூற்றே தமிழீழத்தின் நிர்வாகக் கட்டமைப்புகள் சரியாக இயங்குகின்றன என்பதற்கான சான்றாகும்.

சர்வதேச சமுகத்தின் பார்வையில் இவ்வாறான செய்திகளின் வடிவமைப்புகள் எமக்கு எதிரான அபிப்பிராய மாற்றங்களை உருவாக்கக் காரணமாகக் கூடாது என்பதில் எமது ஊடகங்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.