Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாய்களின் காதலர் தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4415553924.jpg

சென்னை: சென்னையில் இளம் காதலர்கள் ரோஜாப்பூ, வாழ்த்து அட்டைகள், பரிசுகள் வழங்கியும், ஓட்டல்களில் `காக்டெய்ல்' விருந்துடனும் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

காதலர் தினமான நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் பார் உதவியாளர்கள் தயாரித்து வழங்கிய புதிய வகை `காக்டெய்ல்'களை சுவைத்து மகிழ்ந்த பல ஜோடிகளை பார்க்க முடிந்தது. கலாசார சீரழிவு என்ற எதிர்ப்புகளை பற்றி கவலைப்படாத இந்த இளம் ஜோடிகள், காதலுக்கு கலாசாரம், மதம் மட்டுமல்ல `காக்டெய்ல்'லும் தடையில்லை என்று மகிழ்ச்சியில் திளைத்தனர். இவர்களுக்காக பார் உதவியாளர்களும் மது வகைகளுடன் பழ வகைகளை கலந்து தங்களது புதுமையினால் அசத்தினர்.

தாஜ் கன்னிமாரா ஓட்டலின் பார் உதவியாளர் அசோக்குமார், வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி பழம், அன்னாசிபழம் மற்றும் ரம் கலந்து புதுவகை `காக்டெய்ல்' உருவாக்கியிருந்தார். அவர் கூறுகையில், `கேப்டன் மார்கன், வாழைப்பழம், ஸ்டிராபெர்ரி பழம், அன்னாசிபழம், எலுமிச்சை சாறு ஆகியவை கலந்த கலவை இது' என்றார். கன்ட்ரியார்ட் மெரியட் ஓட்டலின் பார் உதவியாளர், தான், தயாரித்த மதுபான கலவைக்கு `காதல் விஷம்' என்று பெயர் வைத்துள்ளார். வோட்கா, டிரிப்பிள்செக், கேன்பெர்ரி பழச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு ஆகியவற்றின் கலவையாக இது உருவாக்கப்பட்டிருந்தது.

ஜி.ஆர்.டி., ஓட்டலில், சோயா பால், ஸ்ட்ராபெர்ரி, தேங்காய் சாறு, ஸ்ட்ராபெர்ரி சாறு கலந்த `காக்டெய்ல்' உருவாக்கப்பட்டிருந்தது. மதுபானம் அல்லாத பழச்சாறு கலவைகளும் சில ஓட்டல்களில், காதல் ஜோடிகளுக்கு வழங்கப்பட்டன.

காதலர் தினத்தை கொண்டாடிய தம்பதிகள் கார்கள் அணிவகுப்பு: காதலர் தினத்தில், கணவன் மனைவிக்கிடையே அன்பை பரிமாறிக் கொள்ளும் தம்பதிகளின், கார் அணிவகுப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. காதலர் தினம் இப்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தை திருமணமான தம்பதிகள் வித்தியாசமாக கொண்டாடினர். திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய வாழ்க்கைப் பயணம் இனிமையாக செல்கிறது என்பதை வலியுறுத்தும் வகையில், கணவன், மனைவி இருவர் மட்டுமே செல்லும் `கார் அணிவகுப்பு' நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று நடைபெற்றது. இந்த கார் அணிவகுப்பை பிரபல விளையாட்டு வீரரான ஜோஸ்சி - சாரம்மா ஜோடி கொடியசைத்து துவக்கி வைத்தது. இந்நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்றன. புதுமணமக்கள் இருப்பதைப் போலவே அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு கார்களிலும், `சிறந்த மணவாழ்க்கை, பிள்ளைகளுக்கு பாதுகாப்பு', `நல்ல குடும்பம், இனிய சமுதாயம்' உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்த கார் அணிவகுப்பு சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில், முடிவடைந்தது. அங்கு தம்பதிகளுக்கு, `திருமணம் என்னும் நெடுஞ்சாலை' என்ற தலைப்பில், பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் கணவன் மனைவி மட்டுமே அமரக்கூடிய மேஜையில், மனைவிகளுக்கு கணவன்கள் உணவு பரிமாறி மகிழ்ந்தனர்.இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோயல் கூறுகையில், `திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது என்று வெளிப்படையாகப் பலர் அறிவிக்க முடிவதைக் கேட்கப் பெருமையாக இருந்தது.

திருமணம் என்பது உண்மையிலேயே முக்கியான ஒன்றுதான். காதலர் தினத்தை திருமணமான தம்பதிகள்தான் கொண்டாட வேண்டும். திருமணமான தம்பதிகளை ஒருங்கிணைத்து, திருமண பந்தம் எவ்வளவு முக்கியமானது என்பதை நிரூபித்து வருகிறோம். தற்போது எட்டாவது ஆண்டாக, தம்பதிகளின் கார் அணிவகுப்பை முதன் முதலாக நடத்தினோம். இந்நிகழ்ச்சியின் நோக்கமே, கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது. வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் வருவது சகஜம். அதை முறியடித்து, திருமணமான ஐந்துமாத ஜோடிகள் முதல் 25 ஆண்டுகள் வரை சேர்ந்து வாழ்ந்த பல்வேறு துறைகளில், பணிபுரிபவர்கள் தங்கள் மனைவிகளுடன் இந்த கார் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்' என்றார்.

நாய்களுக்கு திருமணம் : காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: காதலர் தினத்தை எதிர்க்கும் வகையில், இந்து மகாசபா மேளதாளத்துடன் நாய்களுக்கு திருமணம் நடத்தியது. நாகர்கோவில், பீச்ரோட்டில் இந்த சம்பவம் நடந்தது. நாய்களை குளிப்பாட்டி, அழகுபடுத்தி, மாலை அணிவித்து, ஊர்வலமாக அழைத்து வந்தனர். புரோகிதர்கள் மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க நாய்த் திருமணம் நடத்தப்பட்டது. ஆண் நாய்க்கு கருப்பு வண்ணச் சட்டையும், பெண் நாய்க்கு கருப்பு வண்ண சேலையும் அணிவிக்கப்பட்டிருந்தது. இந்து மகா சபா மாநில அமைப்பு செயலர் மதுசூதனபெருமாள் தலைமையில் இது நடந்தது. இது குறித்து அவர் கூறுகையில், `காதலர்களை எதிர்க்கவில்லை, காதலர் தினத்தை தான் எதிர்க்கிறோம்' என்றார். நாய் திருமணத்தை ஏராளமானோர் வேடிக்கை பார்த்தனர்.

அழுகிய கலாசாரத்தை ஏன் பின்பற்ற வேண்டும்? காதலர் தினத்துக்கு சிவசேனா எதிர்ப்பு

"மேற்கத்திய மக்கள் பின்பற்றும் அழுகிய கலாசாரமான காதலர் தினத்தை சிவசேனா தொண்டர்கள் கடுமையாக எதிர்ப்பர்," என்று அக்கட்சி தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார். காதலர் தினத்தையொட்டி சிவசேனா தலைவர் பால் தாக்கரே, நேற்று தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கட்டுரை எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: காதலர் தினம் என்றால் என்ன? இந்த காதலர் தினத்துக்கும், இந்திய கலாசாரத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய் யப்பட்ட அழுகிய கலாசாரம் இது. திடீர் பணக்காரர்கள் இந்த கலாசாரத்தை பின்பற்றுகின்றனர். காதலர் தினம் என்னும் போர்வையில், வசதி படைத்த, சீரழிந்த இளைஞர்கள் ஆபாச செயல்களில் ஈடுபடுகின்றனர். வர்த்தக நோக்கங்களுக்காகவும் இந்த காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே, காதலர் தினத்தை சிவசேனா தொண்டர்கள் தொடர்ந்து எதிர்ப்பர்.இவ்வாறு பால் தாக்கரே கூறியுள்ளார்.காதலர் தினத்தையொட்டி, டில்லி, லக்னோ உட்பட பல்வேறு இடங்களில் சிவசேனா தொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

25 சேனாவினர் கைது: ம.பி., மாநிலம் இந்தூரில் உள்ள காந்தி சிலை அருகே நேற்று காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகேஷ் சர்மா என்பவர் தலைமையில் சிவசேனா கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதே இடத்தில் காதலர் தின செய்தியை பரப்பும் வகையில், தேவேந்திர சிங் யாதவ் தலைமையில் இளைஞர் காங்., தொண்டர்கள் சிலர் ரோஜா மலர்களை வினியோகித்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ் நிலை உருவானது. இதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவசேனா தொண்டர்கள் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.மகாராஷ்டிராவின் கலாசார தலைநகரான புனேயில் உள்ள முக்கிய கல்லூரிகளின் முன், சிவசேனா மாணவரணி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். காதலர் தின அட்டைகள் கிழிக்கப்பட்டன. இதில், சிவசேனா தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

http://www.dinamalar.com/

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மனிசருக்கு மட்டும் தான் குட்டிபோட ஏதுவாக சோடி சேர காதல் வர முடியுங்களா. நாயும் தானே சோடி சேர்ந்து குட்டி போடுது. அதுக்கு வாயில்லை.. எழுத வழியில்லை என்றதுக்காக.. அதனுடைய காதல் உணர்வுகளை அதுவும் கள்ளக் காதல் உணர்வுகளை மழுங்கடிப்பது தமிழரின் பாரம்பரிய கள்ளக் காதலுணர்வுகளை புறக்கணிப்பது போன்றது. அது தமிழரை இழிவுபடுத்தும் செயல்.

நாய்கள் காதலர் தினம் கொண்டாடுவது இன்றன்று.. தொல்காப்பியத்தில் ஒரு பாடல் வரியில் சொல்லி இருக்கிறார் தொல்காப்பியர்.. வள்ளுவர் காமத்துப்பாலை மனிதர்களுக்கு மட்டும் படைத்ததாக எங்கும் சொல்லவில்லை அது நாய்களுக்கும் பொருந்தும்... அகநானூறு புறநானூறு என்று தமிழர்களின் பாரம்பரியம் முழுக்க நாய்களுக்கு காதலர் தினம் கொண்டாடி இருக்கும் போது இப்ப மட்டும் ஏன் மறுக்கனும்.

பகுத்தறிவுள்ள ஒவ்வொருவரும் இந்த நாய்களின் காதலர் தினக் கொண்டாட்டத்தை மதிச்சு... அடுத்த முறை மனிசக் காதலர்களோட நாய்களையும் பூனைகளையும் சோடி சோடியா கூட்டி வைக்க வேண்டிக் கொள்கிறோம். அப்போதுதான் தமிழர்களின் பாரம்பரியம் காக்கப்படுவதோடு தமிழர்கள் பகுத்தறிவு மிக்கவர்கள் என்ற உண்மையும் வெளி உலகுக்குப் புலப்படும்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகுத்தறிவுள்ள ஒவ்வொருவரும் இந்த நாய்களின் காதலர் தினக் கொண்டாட்டத்தை மதிச்சு... அடுத்த முறை மனிசக் காதலர்களோட நாய்களையும் பூனைகளையும் சோடி சோடியா கூட்டி வைக்க வேண்டிக் கொள்கிறோம். அப்போதுதான் தமிழர்களின் பாரம்பரியம் காக்கப்படுவதோடு தமிழர்கள் பகுத்தறிவு மிக்கவர்கள் என்ற உண்மையும் வெளி உலகுக்குப் புலப்படும்..! :lol:

நெடுக்கண்ணை நீங்க சொல்லுறது ஒண்ணுமாய் புரியலையே? ஏனெண்டால் கல்யாணம் செஞ்சு வைச்சது உங்க ஆக்களாச்சே?

காதலர் தினத்தை எதிர்க்கும் வகையில், இந்து மகாசபா மேளதாளத்துடன் நாய்களுக்கு திருமணம் நடத்தியது.

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கண்ணை நீங்க சொல்லுறது ஒண்ணுமாய் புரியலையே? ஏனெண்டால் கல்யாணம் செஞ்சு வைச்சது உங்க ஆக்களாச்சே?

dogis6.jpg

இரண்டும் செய்யுறது ஒன்றுதான் என்று பகுத்தறிவாளர்களுக்கு காட்டியிருக்காங்க..! இன்னுமா புரியவில்லை..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினத்தை முன்னிட்டு சுமார் 110 கோடி வாழ்த்து அட்டை, இ-மெயில் வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் பரிமாறப் பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

* காதலை வெளிப்படுத்த எத்தனையோ வழிகள் உள்ள போதிலும் அன்பை வெளிப்படுத்த சிவப்பு ரோஜா ஒன்று போதும் என்ற கருத்து உலகம் முழுவதும் நிலவுகிறது. இந்த ஆண்டு சிவப்பு ரோஜாக்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

* உலகில் ஐரோப்பிய நாடுகளில் தான் காதலர் தினம் ஒரு திருவிழா போல மிக, மிக, உற்சாகமாகக் கொண்டா டப்படுகிறது.

* காதலை வெளிப்படுத்தும் சிவப்பு ரோஜாவை உலகில் இரண்டே இரண்டு நாடுகள் தான் அதிகம் உற்பத்தி செய்கின்றன. ஒன்று இந்தியா, மற்றொன்று கென்யா.

* கென்யாவை விட இந்திய ரோஜாக்களைத்தான் மேலை நாட்டுக்காரர்கள் மிகவும் விரும்பி போட்டி போட்டு வாங்குகிறார்கள்.

* கென்யா தோட்டங்களில் சிவப்பு ரோஜாக்களை யாரும் பறித்து சென்று விடக்கூடாது என்பதற்காக துப்பாக்கி ஏந்திய ராணுவ பாதுகாப்பு கொடுத்திருந்தனர்.

* இந்தியாவில் தென் மாநிலங்களில்தான் அதிக அளவில் ரோஜா பூக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

* இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டு 650 கோடி ரூபாய்க்கு ரோஜா பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு அது ஆயிரம் கோடி ரூபாயை எட்டி உள்ளது.

* பெங்களூரில் இருந்து கடந்த 5-ந்தேதி 45 லட்சம் ரோஜா பூக்கள் தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு அனுப்பப் பட்டது.

* தமிழ்நாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தான் ரோஜா விளைச்சல் அதிகம். இங்கிருந்து மேலை நாடுகளுக்கு இந்த ஆண்டு 30 லட்சம் காதல் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

* உலக காதலர்களின் சொர்க்கப்புரி எது என்று ஆய்வு நடத்தப்பட்டது. இதில் வெனீஸ் நகரத்துக்கு முதலிடம் கிடைத்து உள்ளது.

* இ-மெயிலில் வரும் காதலர் தின வாழ்த்துக்களை ஆர்வத்தில் உடனே திறந்து விடாதீர்கள். சில வாழ்த்துக்கள் மூலம் வைரஸ் பரவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே இ-மெயில் வாழ்த்துக்களில் உஷாராக இருக்கவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

dogis6.jpg

இரண்டும் செய்யுறது ஒன்றுதான் என்று பகுத்தறிவாளர்களுக்கு காட்டியிருக்காங்க..! இன்னுமா புரியவில்லை..! :D:lol:

காதலர் தினத்தை கொண்டாடுகிறவர்கள் எல்லாரும் பகுத்தறிவாளர்களா?

அப்படியானால் நான் நினைக்கிறன் எம் யாழ்கள கலைஞன் தீவிர தி.க உறுப்பினர் என்று. :D

Edited by காட்டாறு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.