Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலரே மௌனமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலரே மௌனமா?

வசந்தகால ஆரம்பத்தின் இதமான குளிர்காற்று உடம்பைத் தழுவ புரண்டு படுத்த பிரியாவுக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. இதுவரை தூங்கியது கூட கோழித் தூக்கம்தான். மனதில் விவரிக்க முடியாத விநோதமான உணர்வுகளின் சங்கமம்.

இன்று தன் மனதுக்கினியவனுக்கு இன்ரவியூ நடக்க இருக்கிறது. அதனால்தான் அவள் மனதுக்குள் பயம் கலந்த மகிழ்ச்சி. காரணம் தன் பெற்றவருக்தும் உடன் பிறப்புகளுக்கும் தெரியாமலே தன் மனம் கவர்ந்த பிரசாந்தை பொன்சர் செய்திருந்தாள்;. இச் செய்தி வீட்டிலிருப்பவர்களுக்குத் தெரிந்துவிடும் என்று மிகக் கவனமாகவே செயற்பட்டாள்;. தனது வீட்டிலிருந்து போன் எடுக்காமல் தன் நண்பியின்; வீட்டிலிருந்துதான் பிரசாந்திற்கு போன் எடுப்பது கடிதத் தொடர்புகூட நண்பியின் வீட்டிற்கு வருவதுதான் வழக்கமாக இருந்தது.

வசந்தத்தின் வாசலிலே பிரசாந்தின் வாலிப உணர்வுக்கு விருந்தாக விழிகளில் விழுந்தவள்தான் பிரியா. சிறுவயதுமுதல் ஒரே பாடசாலையில் ஒன்றாகக் கல்வி பயின்றதால் ஏற்பட்ட இறுகிய நட்பி;ன் பயனாக மலர்ந்த காதல். விழியில் விழுந்து இதயம் நுழைந்தவனை விட்டு விலகிச் செல்ல வைத்தது இனப் பிரச்சனை. கண்டங்களும் சமுத்திரங்களும் காதலரைப் பிரிக்கலாம். ஆனால் காதலைப் பிரிக்கவா முடியும்?

ஜந்து நீண்ட வருடங்கள் பஞ்சாகப் பறந்து மறைந்தது. பிரசாந்தின் குடும்பமும் வடக்கிலிருந்து இடம் பெயர்ந்து தெற்கில் குடியேறி விட்டதால் பிரசாந்துடன்; தொலைபேசி மூலம் உரையாடவம் கடிதப் போக்குவரத்து வைத்திருக்கவும் அவர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. சரியாக ஒரு வருடத்தின் முன் பிரசாந் கொழும்புக்கு வந்ததை அறிந்ததும் பிரியா வான்நிலவில் ஏறித் தேன்நிலவு போகக் கனவுகாண ஆரம்பித்து விட்டாள். தன் மனதிலுள்ள காதலை தன் மனதுக்குள் பூட்டி வைத்திருந்ததால் மற்றையவர் அறிய இடம் கொடுக்கவில்லை. தன் ஒரே நண்பி ரோசிக்கு மட்டும் இது பற்றிய முழுவிபரங்களும் தெரியும்.

விடிந்ததும் விடியாததுமாக தன் காதலனின்; குரலைக் கேட்க ஆவலுடன் தொலைபேசியை எடுத்து பிரசாந்தை அழைத்தாள். பிரியாவின் இனிய குரல் பிரசாந்தின் காதில் தேன் வார்த்தது.

“என்ன பிரசாந் இன்ரவியூ எப்படி?”

“ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லா விhரங்களும் சரியாக இருந்ததால் மெடிக்கலுக்கு தந்திருக்கினம்.” என்றான் இனிய எதிர்பார்ப்புடன்.

“சரி எல்லாம் கெதியாச் செய்யுங்கோ. ஏனெண்டா இங்க எங்கட வீட்டுக்காரர் ஒருவருக்கும் தெரியாதுதானே. அதுதான் எனக்கு ஒரே பயம். வெளியில யாருக்கும் சொல்ல வேணாம்.” என்று அங்கலாய்ப்புடன் சொன்னவள் அவனது நலனையும் நாட்டு நிலையையும் விசாரித்தபின் தொலைபேசியைத் துண்டித்தாள். அவளது மனதுள் சந்தோச ராகங்கள் இசைக்கத் தொடங்கின.

மெடிக்கலும் முடிந்து இருண்டு மாதமாகி விட்டது. இனி விசா கையில் கிடைத்துவிட்டால் அடுத்தநாளே ரிக்கற் புக் பண்ணி பிரசாந் வந்து சேர்ந்து விடுவான். பிரியாவின்; கனவுகள் வண்ணவண்ணமாக வலம் வந்து அவளைக் கற்பனையில் மிதக்கவிட்டா:லும் பெற்றவரையும் உடன் பிறப்புகளையும் நினைக்க மனதுக்குள் பயமும் பரவாமலில்லை. பிரசாந்தோ பயணத்துக்கு வேண்டிய ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்து இருந்தான்.

எங்கு தப்பு நடந்ததோ? எப்படி அது தெரிய வந்ததோ தெரியாது. ஆனால் இன்று வீட்டில் பெரிய பிரளயமே உருவானது. “என்ன அந்தக் குடும்பத்தில் கலியாணம் செய்வதா? இது நடக்காது. நான் உயிரோட இருக்கிறது உனக்குப் பிடிக்கயில்லையா?” என்று அம்மாவும்

“எங்கட குலம் என்ன? கோத்திரம் என்ன? அந்தக் குடும்பத்தோட சம்பந்தம் செய்ய ஏலுமே? இந்தக் கலியாணம் நடக்கிற அண்டைக்கு என்ர பிணம் இந்த வீட்டில விழும்” என்று பெருங்குரலெடுத்து அப்பாவும் கத்தினார்கள்.

வாழ்வின் இனிமையான பக்கங்களை மட்டும் பார்த்துப் பழக்கப்பட்ட பிரியாவுக்கு வாழ்வியலின் யதார்த்தமான போக்கு எம் தமிழினத்தின் கலாச்சாரப் போர்வையில் கட்டி வளர்க்கப்படும் சாதி சமயம் அந்தஸ்து என்ற பிளவுகள் புரியத் தொடங்கியது இன்றுதான்.

பிரியாவும் எவ்வளவோ அழுது அடம் பிடித்துப் பார்த்தாள்.

“நீ இப்பிடி சாதி மதம் மாறி திருமணம் செய்தால் உன் தங்கையை யாருக்கு கட்டி வைக்கிறது? அவளையும் கொலை செய்யப் போறியா? என்று உடன் பிறப்புகள் வேறு உரிமையுடன் கடிக்கத் தொடங்கினர்.

அழகிய ரோஜாவைப் பறிக்க கையை நீட்டியவளின் கையில் குக்துவதற்கு மலரைச்சுற்றி இத்தனை முட்களா?

பிரியா பெற்றவரை இழக்கவோ பிரிய உடன் பிறப்புகளைத் துறக்கவோ முடியாத இரண்டும் கெட்டான் நிலையில் தடுமாறினாள்.

தாயின் உண்ணாவிரதமும் தந்தையின் போதனைகளும் உடன் பிறப்புகளின் ஒருமனப் பட்ட எதிர்ப்பும் ஒன்று சேர்ந்து பிரியாவை வக்கீல் வரை இழத்துச் சென்றது.

மணக்கோலம் காண மனமெல்லாம் பூச்சிதறலாய் கனாக்கண்ட அந்த அன்பு இதயம்; கையில் பிடித்திருந்த கனடிய தூதரகக் கடிதத்திலுள்ள வாசகத்தின் அர்த்தம் புரிய பிரமை பிடித்து கால்கள் துவள கைகள் நடுங்க பக்கத்தில் இருந்த கதிரையைப் பிடித்தபடி கல்லாய் சமைந்து நின்றான்.

அவனைச் சுற்றி நின்றவர் யாரையும் அவனுக்குத் தெரியவில்லை. தங்கைதான் கையிலிருந்து நழுவிய கடிதத்தை எடுத்துப் பிரித்தாள். அதில் விசா விண்ணப்பம் வாபஸ் பெற்று விட்டதால் விசா நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்திருந்தனர்.

“என் காதலி என் காதலி நீ என்ன சொல்லப் போகிறாய் நான்

ஓவியன் என்று தெரிந்தும் என் கண்ணிரண்டைக் கேட்கிறாய்

சிலுவைகள் சிறகுகள் இரண்டில் என்ன தரப் போகிறாய்”

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானலை சோகமாகப் பாடிக்கொண்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை கண்மணி அக்கா. புலம் பெயர் நாடுகளில, திருமணம் என வரும்போது, சாதி சமயம் சமூஅந்தஸ்து எல்லாம பாக்கிறதில்லை எண்டு அடம் பிடிப்பவர்களுக்கு சமர்பியுங்கோ.

ஐயோ பாவம் பிரசாந்த் & பிரியா.

பெற்றோருக்கு சாதி மத இன பேதம் பார்க்கிறதே வேலையாகிச்சு இப்போ

சந்தோசமாக வசித்தேன். இறுதியில் சோகத்தில் ஆழ்த்திவிட்டீங்க. ம்ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை. சகோதரி!!! :rolleyes::wub:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபேஸ் வெண்ணிலா சுவி அனைவருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குததான் சொல்லுறது சில மலர்கள் மெளனமாகவே இருப்பது நல்லம் என்று.ஒன்றில் ஸ்பொன்சர் செய்யமுன் பெற்றோரின் சம்மதத்தை பெற்று இருக்கனும்,இல்லாட்டி முன்னுக்கு வைத்த காலை பின்னுக்கு எடுத்திருக்க கூடாது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா நல்ல கதை. என்றாலும் சோகமாக முடித்தது தாங்க முடியவில்லை.அட கதை தானே. அப்ப ஓகே. :rolleyes::rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணாவிலான். கற்பனைக் கதையாக இருந்தால் பரவாயில்லை. இது சில வருடங்களுக்குமுன் நடந்த

உண்மைக் கதை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.