Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழுக்கு!!

Featured Replies

அழுக்கு!!

site03sx3.jpg

ஆக்கம் -

களவாஞ்சிகுடி யோகன்..!!

அலுவலக மாதந்தம் கூட்டத்தில் இருந்த போது தான் அந்த அழைப்பு.கைத் தொலைபேசியைத் தூக்கி இலக்கங்களை பார்த்தான் "பிறைவேற்" என்று விழுந்திருந்தது.பட்டனை அழுத்தி "கலோ" என்ற பொழுது மறுமுனையில் தெய்வேந்திரன் அங்கிள். :lol:

"எப்படியிருக்கிறீர்கள் தம்பி?" கேட்டார்.சுகத்தைக் கூறி என்ன விஷயம் அங்கிள்?" என்று விசாரித்தான் செல்வன்.

"இந்த சனி ஞாயிற்கு ஏதாவது அலுவல்கள் இருக்கிறதோ?"

"ஏன் அங்கிள்?"

"ஒருக்கா வீட்டுக்கு வாங்கோ கதைக்க வேணும்."

தொலைபேசியைத் துண்டித்துவிட்டு கூட்டத்திலே கவனம் செலுத்தத் தொடங்கினான்.கூட்டம் முடிந்த பின்னர் தெய்வேந்திரன் அங்கிள் ஞாபதிற்கு வந்தார்.அவரோடு செல்வனுக்கு பன்னிரன்டு வருடப் பழக்கம்.செல்வன் அவுஸ்ரெலியா வருவதிற்கு ஊக்குவித்த நண்பன்,அவன் இங்கு வந்திறங்கிய பொழுது "சிட்னி" மாநிலதிற்கு வேலை பெற்று போயிருந்தான்.ஆனாலும் அவனின் நண்பனின் நண்பனொருவன் அவனுக்குச் சில அடிப்படை உதவிகளைச் செய்து கொடுத்தான்.அந்த உதவியால் முதன் முதலில் வாடகை வீடோன்றுக்கு போன போது,பக்கத்துக் குடியிருப்பில் தெய்வேந்திரன் அங்கிளின் வீடு."ஊரிலே" டிப்போ ஒன்றில் வேலை செய்தவர்,கொஞ்சம் புளுகுதான் ஆனாலும் உதவி செய்யும் மனபான்மை உள்ளவர்."என்று அங்கிளை பற்றி அறையில் உள்ள சிநேகிதர்கள் செல்வனுக்குச் சொன்னார்கள்.புதுப் பொடியன் ஒருவன் வந்திருக்கிறான் என அறிந்து செல்வனைக் காண அங்கிள் வந்தார்."டை" அடித்த தலையிலே தொப்பியொன்றை அணிந்திருந்த அவர்,கதைக்கும் பொழுது பரஸ்பர அறிமுகத்திற்கும் பின்னர்,ஊரிலுள்ள பலரது பெயர்களைக் கூறியவர்களில் சிலரைத் தான் செல்வனுக்கு தெரிந்திருந்தது.ஆனாலும்,"நீர் நமது பிள்ளை தான்,உமக்கு என்ன உதவிகள் தேவைபட்டாலும் தயங்காமல்வாரும்."என்று கூறிவிட்டுப் போனார். :o

பின்னாளில் செல்வன் படித்து,வேலை பெற்று புது இடத்திற்கும் போய்விட்டான்.அங்கிளும் புதுவீடு வாங்கிக் கொண்டு பிறிதொரு ஊருக்கும் போயிருந்தார்.அப்படியிருந்து??் இருவருக்குமிடையில் தொடர்பு இருந்து கொண்டுதானிருந்தது.இரண்டு மாதங்களுக்குமுன் அங்கிள் தம்பதியினரின் திருமண நிறைவு நாள் கொண்டாட்டம்.செல்வனுக்கும் அழைப்பு.பரிசுப் பொருட்களோடு சென்று வாழ்த்திவிட்டு வந்தான்.

"அங்கிள் அலுவல்கள் இல்லாமல் அழைக்கமாட்டர்,ஞாயிற்றுக் கிழமை போனால் தெரிந்துவிடும்."நினைத்து கொண்டான்.பின்னேர வெயில் மறைந்துபோயிற்று,அங்கிளின் வீட்டுக்கும் போக ஆயத்தமாகிக்கொண்டிருந்த போது அழைப்பு மணி ஒலித்தது.செல்வன் கதவை திறந்தான்.வெளியே புருஷோத்....

"வா மச்சான்,உனக்கு கல்யாணமெல்லாம் முற்றாகியிருக்குதாம்."

"ஓமடா,கல்யாணமென்று ஏற்பாடு பண்ணியாட்டி,காசு தான் கையில் இல்ல,அது தான் உன்னட்டக் கொஞ்சம் மாறலாமென்று வந்தனான்."

"போன கிழம தான் ஊருக்கு காசு அனுப்பினனான்,இப்ப என்னட்ட காசு இல்லை மச்சான்."செல்வன் கூறினான்.

"இல்லடா செல்வா,உன்னை நம்பி தான் வந்தனான்,நீ சீட்டும் எடுத்த நீ என்று கேள்விபட்டனான்,எப்படியோ மாறியெண்டாலும் உதவி செய் மச்சான்."

செல்வன் ஆச்சரியபடும் விதத்தில் புகைபடத்திலே அந்தை பெண் அழகாய்த் தெரிந்தாள்.அவனுக்குப் பிடித்க்ட பச்சை நிறத்தில் சேலை உடுத்திருந்தாள்.குங்குமப்பொ??்டோடும் திருத்தமான அவயங்களோடு தெளிவாய்த் தெரிந்தாள் அவள்.புகைபடத்தைப் பார்த்து அவன் சற்றுத் தடுமாறியது உண்மை. :)

"என்ன சொல்கிறீர்?" தெய்வேந்திரன் அங்கிள் கேட்டார்.

"என்னுடைய முடிவு மட்டும் இறுதி முடிவு இல்லையங்கிள்.ஊரிலும் கேட்க வேணும்,

அதுவும் சரியென்றால் நான் ஊருக்கு போக இருக்கிறன்,போகிற போது இந்தப் பெண்ணைச் சந்தித்து இருவரும் மனம் விட்டுக் கதைத்து,விருப்பு வெறுப்புகளைப் பகிர்ந்து,இருவருக்கும் பிடித்துச் சம்மதம் என்று வந்தால் செய்யலாம் ஆனால் அதற்கிடையில் என்னைவிட நல்ல வரன் அமைந்தால் நீங்கள் செய்து கொடுங்கள் பிரச்சினையில்லை."என்றான் செல்வன்.

"எப்ப மட்டில் ஊருக்கும்போக இருக்கிறீர்?"அங்கிள் கேட்டார்,

செல்வன் குறிப்பாக போகும் நாள் பற்றி சொன்னான்..

"நீர் ஊருக்கு போய் பார்த்து முடிவு சொன்ன பிறகு தான் நாங்கள் வேறு வரன் பாக்கிறதப் பற்றி யோசிப்பன்,என்னப்பா?"என்று ஆன்ரி,அங்கிளின் துணையோடு சொன்னாள்.இருவரும் புறப்ப்ட ஆயத்தமானார்கள்.. :(

"இவ்வளவு வசதியான வீட்டில் நீர்மட்டும் தனியாகவா இருக்கிறீர்?,அதுவும் இந்த இடத்தில்?"புறபடும் போது அங்கிள் இரண்டு தடவைகள் கேட்டார்."ஏன் அங்கிள் திரும்பத் திரும்பக் கேட்கிறீர்கள்,தனியாக இருந்துவிட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்கலாமல்லவா?"என்று சொல்லி விட்டான் செல்வன்..

ஒரு சனி கிழமை மதியம்.கல்யாண வீடொன்றில் செல்வன் சாப்பிட்டு கொண்டிருந்தான்.அப்பொழுது அங்கிளின் தொலைபேசி அழைப்பு.

"உம்மை பெண்வீட்டாருக்கும் பிடிக்கவில்லையாம்,அதனால் இந்த சம்பந்தத்தை நாங்கள் கைவிடுவோம்."என்று கூறிவிட்டுத் தொலைபேசியை துண்டித்துக் கொண்டார். :(

அங்கிளின் அன்புபிடியிலிருந்து விடுபட்டதில் செல்வனுக்கு ஓரளவு நிம்மதி ஆனாலும் என்ன காரணமாக இருக்க கூடும் என்ற நினைப்பு நெஞ்சிலே எழுந்தது."ஒருவனை என்னைவிடத் தகுதியான மாப்பிள்ளை அவர்களுக்கு கிடைத்திருக்க கூடும்."என்ற ஜதார்த்த சிந்தனையோடு அதை பற்றி மறந்திருந்தான்.

முருகன் கோவிலின் கும்பாபிஷேகத் தினம்.அலையலையாக மக்கள் கூட்டம்.செல்வனும் அந்த கூட்டத்தில் ஒருவனாக நின்றான்,நிர்மல மூர்த்தி அண்ணணும் கோவிலிலே தென்பட்டார்.குடும்பத்தோடு அவர் சாமி கும்பிட வந்திருந்தார்.பல மாதங்களுக்கு பின் இருவரும் சந்திக்கிறார்கள்.

"எப்படி இருக்கிறீர் செல்வா?தெய்வேந்திரன் அங்கிள் கல்யாணமெல்லாம் பேசினவராமே?கேள்விபட்டேன்?"நிர்மலமூர்த்தி அண்ணன் கேட்டார்.அங்கிளோடு நெருங்கி பழகுபவர் நிர்மல மூர்த்தி அண்ணன்.அவருக்கு விஷயம் தெரிந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டான் செல்வன்.ஆரம்பம் முதல் இறுதி வரை நிகழ்ந்தவற்றை அவருக்கு சொன்னான்.

"பெண் வீட்டார் யாரும் உம்மை வேண்டாமென்று செல்லவில்லை அங்கிளுக்கு உம்மேல சந்தேகம்,அந்த இடத்தில் நீர் தனியாக வசிக்கிறீராம்,ஏன் இவர் தனியாக இருக்க வேண்டும்,நிறைய பெட்டைகளோடு இவருக்குத் தொடர்பு இருக்க வேண்டும்,அது தான் தனியாக இருக்கிறார் என்பது அவரின் கணிப்பு.அது போக நீர் இருக்கும் ஏரியாவில் விலைமாதர் விடுதியும் இருகிறதாம்,நீர் அங்கேயும் அடிக்கடி போய்வரக் கூடுமாம்,இந்தச் சந்தேகங்களோடு புருஷோத்திடமும் கேட்டிருக்கிறார்,அவனுக்கு உம்மீது என்ன கோபமோ தெரியாது,செல்வனுக்கு நிறைய பெட்டைகளோடு தொடர்பு இருக்கிறது தான் அங்கிள் அது தான் அவன் தனியாகவே இருக்கிறானென்று அவனும் சொல்லியிருக்கிறான்,அதனால் தான் அங்கிளே உனக்கு இந்த முடிவைச் சொல்லியிருக்கிறார்." :D

நிர்மலமூர்த்தி அண்ணணின் கதையை கேட்டுச் செல்வனுக்குக் கோபம் வரவில்லை.சிரிப்பு தான் அதிகம் வந்தது.ஆனாலும் புருஷோத்தும் இப்படி சொல்லியிருக்கிறானே என்று தான் வேதனை.

"கல்யாணதிற்குப் பண உதவி செய்யவில்லையென்பதற்காக இப்படிச் சொல்லியிருக்கிறான்,இவனெல்லா??் ஒரு சினேகிதன்."அலுத்துக் கொண்டான் செல்வன். :lol:

மழைதூறி கொண்டிருக்கிற மாலைபொழுது அது.காதுமடல்களைக் கூட விறைக்க வைக்கும் குளிர்காற்று வீசிக்கொண்டிருக்கிறது.செல்வ

யோகன் அண்ணா நலமா??

என்னை ஞாபகம் இருக்கிறதோ

என்னை விட அக்காவுக்கு தான்

உங்கள் எழுத்து மீது விருப்பம்

இருந்தாலும் அழுக்கு சிறு கதை

நன்றாகவே இருக்கிறது.

செல்வன் யார் நீங்களோ??

உங்கள் சிறு கதைகள் பலவற்றை அக்காவுடன்

சேர்ந்து வாசித்த ஞாபகம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு, உங்களின் கன்னி முயற்சிக்கு பாராட்டுக்கள். தொடருங்கள்.

"அழுக்கு" கதை சுத்தமாகவே இருக்கின்றது. களுவாஞ்சிக்குடி யோகன் அவர்களின் கன்னி முயற்சி அருமை. பாராட்டுக்கள்

அட இது உண்மைச் சம்பவமோ? அப்போ தனிய வீட்டில் ஒரு ஆனோ பெண்ணோ இருந்தால் தப்பாமோ?

என்னமோ போங்கோ நான் செல்வனாக இருந்தால் தெய்வேந்திரன் அங்கிள் ( சீ அவரை அங்கிள் னு இனிமேல் சொல்ல வேணாம்) அவரைப் போய் 4 வார்த்தை நறுக்கென்று கேட்டிருப்பேன் ல. ஜஸ்ட்டு மிஸ்ஸு.

  • கருத்துக்கள உறவுகள்

கன்னி முற்சியோ வெண்ணிலா?

யாழ்ழ இது அவருடைய கன்னி முயற்றி பட் அவர் ஒரு பிரபல சிறுகதை எழுத்தாளர்....

நல்லா இருக்கு யோகன் அண்ணா பட் உந்த பெறுசுகளாள நல்லா நொந்து போனிங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

"அழுக்கு" கதை சுத்தமாகவே இருக்கின்றது. களுவாஞ்சிக்குடி யோகன் அவர்களின் கன்னி முயற்சி அருமை. பாராட்டுக்கள்

ஜயோ பிள்ளை நீங்க ஊரில பேப்பர்கள் வாசிக்கிற பழக்கமில்லையோ இந்த மனிசனின்ட கதை வராத பேப்பரே இல்லை இது கன்னி முயற்சி இல்லை கிழவி முயற்சி அதாவது கனகதைகள் எழுதி போட்டு சும்மா நேரம் போகல்ல என்று யாழில எழுதி இருக்கிறார் போல.

இவர் ஒரு நல்ல படைப்பாளி,கலைஞன்,வானொலி அறிவிப்பாளர், மற்றும் புகழ் விரும்பாத படியால் தான் பேபிகளிட்டையே தன்ட படைப்பை கொடுத்திருக்கிறார் போல.

அட கதை எழுதுறது என்றா இப்படியா எழுத வேண்டும் உவ்வளவு நாளும் நான் எழுதினது எல்லாம் என்னவென்று எனக்கே விளங்கவில்லை. :rolleyes:

என்னை விட அக்காவுக்கு தான்

உங்கள் எழுத்து மீது விருப்பம்

இருந்தாலும் அழுக்கு சிறு கதை

நன்றாகவே இருக்கிறது.

பிள்ளை அக்கா வாசித்தா அக்கா தான் கருத்து எழுத வேண்டும் நீங்க வாசித்தா நீங்க கருத்து எழுத வேண்டும்,அது சரி அக்காவும் யாழிற்கு வாரவாவோ :):lol:

இப்படி எல்லாம் எழுதிட்டன் என்று பிறகு கொஞ்ச நாள் போக என்னையும் வெங்காயம் என்று திட்ட கூடாது சொல்லிட்டன் :lol:

Edited by putthan

குறிப்பு -

யாழில் எனது முதற் சிறுகதை அன்புள்ளங்களிடமிருந்து ஆரோக்கியமான விமர்சனத்தை எதிர்பார்கிறேன்...!!

ஜயோ பிள்ளை நீங்க ஊரில பேப்பர்கள் வாசிக்கிற பழக்கமில்லையோ இந்த மனிசனின்ட கதை வராத பேப்பரே இல்லை இது கன்னி முயற்சி இல்லை கிழவி முயற்சி அதாவது கனகதைகள் எழுதி போட்டு சும்மா நேரம் போகல்ல என்று யாழில எழுதி இருக்கிறார் போல.

கன்னி முற்சியோ வெண்ணிலா?

யாழ்ழ இது அவருடைய கன்னி முயற்றி பட் அவர் ஒரு பிரபல சிறுகதை எழுத்தாளர்....

நான் வீரகேசரியில் களுவாஞ்சிக்குடியோகனின் கதைகள் வாசித்த நினைவு.

ஆனால் யாழில் இதுதான் முதற்சிறுகதை என்றதுகாக அபப்டி சொன்னேன்

  • தொடங்கியவர்

வணக்கம் ஜோகன் மாமா....கதை மிகவும் நன்றாக இருந்தது..(எழுத்து நடையை மிகவும் நன்றாக இரசித்தேன் :lol: )..யாழ்களதிற்காக கதை எழுதி தரும்படி கேட்க எழுதி தந்ததிற்கும் கள உறவுகள் சார்பாக நன்றிகள் ஜோகன் மாமா.. :D

கதை மிகவும் யதார்த்தமாக செல்கிறது..(அத்துடன் சமுகத்தில் நடந்த/நடக்கின்ற)...விடயத்தை கதையாக்கிய விதம் நன்றாக இருக்கிறது ஆனால் கதை முதல் பாதி மிகவும் சுவார்சியமாக நகர்ந்து சென்றதை அவதானிக்க கூடிதாக இருந்தது.. :D (இடையில் சற்று தொய்வு)..இது என்னுடைய கருத்து மற்றவர்களை பற்றி தெரியாது..இறுதியில் நன்றாக இருந்தது..(இடையில் கதை சுவாரசியம் சற்று குறைந்தது கதையின் மேல் இருந்த ரசனையை குறைத்ததாக கருதுகிறேன் :D )...அவ்வாறு இல்லாதுவிடில் கதை இன்னும் நன்றாக அமைந்திருக்கும் என்பது எனது தனிபட்ட கருத்து...(இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க :D )..

மற்றும்படி கதை மிகவும் நன்றாக இருந்தது மிகவும் நன்கு ரசித்தேன்..(அது சரி ஜோகன் மாமா என்ன உங்களுக்கு நடந்த கதையோ :D )...அட நான் பகிடிக்கு.. :lol:

அத்துடன் கதையின் தலைப்பு "அழுக்கு" பெரிதாக எழும்பவில்லை என்று நினைக்கிறன் :D ஏன் இந்த தலைப்பை தெரிவு செய்தீங்க போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா.. :D

நன்றி!!

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்மு, உங்களின் கன்னி முயற்சிக்கு பாராட்டுக்கள். தொடருங்கள்.

நுணா அண்ணா இது என்னுடைய கன்னி முயற்சி அல்லா... :D (பிரபல எழுத்தாளர் ஒருவரின் கதை)....யாழிற்காக கதை எழுதி தரும் படி கேட்டனான் கேட்டவுடனே எழுதி தந்தவர் :lol: ...உங்கள் வாழ்த்து அவருக்கு தான் போய் சேர வேண்டும்..(உங்கள் விமர்சனங்களையும் சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் :D )...நன்றி...(அது சரி ஜம்மு பேபி உப்படி எல்லாம் கதை எழுதுமா :lol: )...ரொம்ப கொடுமையாக்கும்..ஜம்மு பேபியின்ட கதை வந்து சிவப்பு ரோஜா ரேஞ்சில தான் இருக்கு.. :D (நிசமா என்னால முடியல்ல :D )...

கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள்...(உங்கள் கருத்துக்கள் எல்லாம்)..சிறுகதையை எழுதியவரை சென்றடையும்... :D (அவர் உங்களுக்கு கருத்துகளை தெரிவிப்பார்)...அனைத்து உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.. :D

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • தொடங்கியவர்

பிள்ளை அக்கா வாசித்தா அக்கா தான் கருத்து எழுத வேண்டும் நீங்க வாசித்தா நீங்க கருத்து எழுத வேண்டும்,அது சரி அக்காவும் யாழிற்கு வாரவாவோ

இப்படி எல்லாம் எழுதிட்டன் என்று பிறகு கொஞ்ச நாள் போக என்னையும் வெங்காயம் என்று திட்ட கூடாது சொல்லிட்டன்

முடியல்ல மாமா...டிஸ் இஸ் டூ டூ மச் ஆக்கும்...(என்ன கொடுமை இது :D )...அது சரி இப்ப என்னதிற்கு அவாவின்ட அக்கா யாழிற்கு வந்தா தான் என்ன வராட்டி தான் என்ன...(இருங்கோ மாமியிட்ட போட்டு கொடுக்கிறேன் :lol: )...

வெங்காயம் என்று திட்டினதில தப்பே இல்லையப்பா :lol: ...(என்னால முடியல்ல :D )...மாம்ஸ் அவாவை விட்டிடுங்கோ...(என்ட தங்கச்சி ஆச்சே)...அது தான்.. :D

அப்ப நான் வரட்டா!!

புத்தன் அண்ணா,

அக்கா கதை வாசித்தால்

அக்கா தான் கருத்து எழுத

வேண்டுமோ..

அதை கேட்டு நானும் எழுதலாம் தானே

அக்கா ஆர்வமாக யாழ் வாசிப்பா

அதோடு நின்று விடுவா. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் அண்ணா,

அக்கா கதை வாசித்தால்

அக்கா தான் கருத்து எழுத

வேண்டுமோ..

அதை கேட்டு நானும் எழுதலாம் தானே

அக்கா ஆர்வமாக யாழ் வாசிப்பா

அதோடு நின்று விடுவா. <_<

அக்கா வாசித்தால் என்ன ? அவ வின் கருத்தை கேட்டு நீங்களே எழுதி விடுங்கள். ஆனால் ஒன்று உங்க அக்காவையும் கெதியில் யாழில் இணைத்து , கருத்துக்களை எழுத வையுங்கள். அது உங்கள் சாமர்த்தியம்

  • கருத்துக்கள உறவுகள்

அதானே பாவம் நிண்டு கொண்டே இருந்தான்னா கால் நோக போது அட கப்பி அக்கா பீளீஸ் அவாவ இருக்க சொல்லுங்க...

  • தொடங்கியவர்

அதானே பாவம் நிண்டு கொண்டே இருந்தான்னா கால் நோக போது அட கப்பி அக்கா பீளீஸ் அவாவ இருக்க சொல்லுங்க...

அது சரி சுண்டல் அண்ணா அதை ஏன் நீங்க சொல்லாம கறுப்பி அக்காவிட்ட சொல்ல சொல்லுறியள்... :huh: (இது ரொம்ப கொடுமையாக்கும் :unsure: )...நிசமா என்னால முடியல்ல...(அட...அட சுண்டல் அண்ணாவிற்கு எவ்வளவு பாசம் பாருங்கோ கால் நோக போது என்று இருக்க எல்லாம் சொல்லுறார் :unsure: )...நல்லா நடத்துறியள்.. :unsure:

"ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி

இனி என்ன நான் செய்ய" :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அட ஜம்ஸ்! இதென்ன அழுக்கு என்று கொஞ்சம் அரக்கிப் போக நினைத்தேன். ஆனால் சுத்தம் நம்மை விட்டாலும் விடும், அழுக்கு விடாதுதானே! அப்படியே கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். தொட்டுட்டுது மனசை!!! நன்று! வாழ்த்துகள்!!! :D:D

  • தொடங்கியவர்

அட ஜம்ஸ்! இதென்ன அழுக்கு என்று கொஞ்சம் அரக்கிப் போக நினைத்தேன். ஆனால் சுத்தம் நம்மை விட்டாலும் விடும், அழுக்கு விடாதுதானே! அப்படியே கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். தொட்டுட்டுது மனசை!!! நன்று! வாழ்த்துகள்!!!

ம்ம்ம்...சுத்தத்திலும் விட அழுக்கில் தான் நிறைய மாட்டரே இருக்கு பெரியப்பா..(அது தான் சுத்தமா இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு பாருங்கோ :unsure: )...அட நான் ஒவ்வொரு நாளும் குளிக்கிறனான் பாருங்கோ..மனசை பற்றி கொண்ட அழுக்கை துடைத்துவிட்டு தூய்மையாக வாசித்து கருத்து சொன்ன சுவி பெரியப்பாவிற்கு நன்றிகள்.. :D (மனதில் ஒற்றி கொண்ட அழுக்கை தூய்மையாக எழுதியவர் நானல்ல பெரியப்பா ஜோகன் என்னும் சிறுகதை எழுத்தாளர் :D )...உங்கள் பாராட்டு அவருக்கு தான் சென்றடைய வேண்டும்..(நான் யாழில அவரின்ட கதையை போட்டது மட்டும்தான் :lol: )...

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

  • கருத்துக்கள உறவுகள்

அழுக்கு சிறுகதை மிகவும் நன்றாக இருந்தது. ஒவ்வொருவர் மனங்களிலும் அப்பிக்கிடக்கும் அழுக்குகளைப்

போக்குவதற்கு அவரவர்தான் முயற்சிசெய்ய வேண்டும். எழுதிய யோகனுக்கும் எடுத்துவந்த யமுனாவுக்கும்

நன்றிகள் தொடர்ந்தும் யோகனுடைய ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன்.

  • தொடங்கியவர்

அழுக்கு சிறுகதை மிகவும் நன்றாக இருந்தது. ஒவ்வொருவர் மனங்களிலும் அப்பிக்கிடக்கும் அழுக்குகளைப்

போக்குவதற்கு அவரவர்தான் முயற்சிசெய்ய வேண்டும். எழுதிய யோகனுக்கும் எடுத்துவந்த யமுனாவுக்கும்

நன்றிகள் தொடர்ந்தும் யோகனுடைய ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன்.

நன்றி கண்மனி அக்கா உங்கள் கருதிற்கு தொடர்ந்து வரும் காலங்களிள் ஜோகன் அண்ணாவின் ஆக்கங்களை இங்கே கொண்டு வருகிறேன்... :D

அப்ப நான் வரட்டா!!

சகோதரி கறுப்பி,

இதில் சாமர்த்தியம் எல்லாம் ஒன்றுமில்லை

அக்காவிற்கு நேரம் கிடைபதில்லை

அவ்வளவு தான். :D

சகோதரி ஒரு உதவி!!

எனக்கு பிடித்திருந்தா

நான் இருப்பேன் தானே

யாரும் சொல்லி தான்

இருப்பேன் என்று இல்லை

இதை அந்த நபரிடம்

சொல்லி விடுங்கோ. :D

  • கருத்துக்கள உறவுகள்

கப்பி அக்கா பதில் போட்டதுக்கு றொம்ப தாங்ஸ்னு சொல்லி விடுங்க... :unsure::wub:

  • தொடங்கியவர்

கப்பி அக்கா பதில் போட்டதுக்கு றொம்ப தாங்ஸ்னு சொல்லி விடுங்க... :):(

சுண்டல் அண்ணா உது தேவையோ... :unsure::wub::D:D

அப்ப நான் வரட்டா!!

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

யாழ்கள உறவுகள் அனைவருக்கும் அன்பு கனிந்த வணக்கங்கள.யாழிலே வெளியான எனது " அழுக்குகள்" சிறுகதையைப் படித்த அன்புள்ளங்கள் எல்லாருக்கும் இவ்வேளையில் இதயபூர்வமான நன்றியைத் தெரிவிக்கிறேன்.குறிப்பாக விமர்சனங்கள் எழுதிய உறவுகளுக்கு விஷேடமாக நன்றிகள் கூறும் தருணத்தில்,சில கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்குப் பதிலுமாக கீழே தொடர்கின்றேன். :lol:

யாழில் என்னை எழுதத் தூண்டியவர்கள் இருவர்.காணும்பொழுதெல்லாம் அன்பாக வற்புறுத்தியவர்கள் அவர்கள்.சுண்டலும்,ஜம்மு பேபியும் சொல்வதைத் தட்டுவது மிகவும் அரிது.ஏனென்றால் நீயுட்டனின் மூன்றாவது விதியை பார்க்கவும். :lol:

அதிலும் இரண்டு நாளைகுள் தரவேண்டும் என்று ஜம்மு பேபி தவணையும் தந்தான்.புறத்திலுள்ள அழுக்கை விட அகத்திலுள்ள அழுக்கினால் ஆபத்துக்கள் அதிகம்.மனதிலே புரையோடிகிடந்த கரு இரண்டு நாட்களில் "அழுக்காக" உருப்பெற்றது சரி விமர்சனங்களை பார்போம்.

சிறு இடைவேளைக்கு பின்னர் கனிஷ்டாவை யாழ் மூலம் சந்தித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.அக்கா தான் அதிகமாக உங்கள் கதைகளை படிப்பார் என்று எழுதியிருந்தீர்கள்.ஏன் கனிஷ்டா உங்களுக்குக் கதைகள் பிடிக்கிறதில்லையா?உங்களுக்கு எழுத்து திறமை இருக்கிறது.அதை கொண்டு பொறுமையாக வாசிக்கலாமல்லவா?நன்றி கனிஷ்டா.செல்வன் நீங்களோ யோகன் அண்ணா? என்று கேட்டிருந்தீர்கள் ஏதோ அறிந்து விட்டுக் கேட்பது போல் இருக்கிறது கனிஷ்டா. :o

சுவைபடவும் சுருக்கமாகவும் என்னை ஊக்குவித்த நுணாவிலானுக்கு நன்றிகள்.. :D

கன்னி முயற்சி என்று தெரிவித்து,யாழிலே கன்னி முயற்சி என்று கூறி சுடச் சுடத் தெளிவாக விமர்சித்த வெண்ணிலா உங்களுக்கு இதயங் கனிந்த நன்றிகள்.அவரையெல்லாம் இனி "அங்கிள்" என்று கூப்பிடுவதே "வேஸ்ற்" என்ற பந்தியை வாசித்த போது சிரிப்பை அடக்க முடியாமல் திண்டாடிவிட்டேன். :wub:

என்ன சுண்டல்?பெரிசுகளால் அதிகமாக நொந்து போனீர்களோ யோகன் அண்ணா?என்று கேட்டிருந்தீர்கள்.சுண்டலை விட சற்றுக் கம்மிதான். :lol:

புத்தன் அண்ணாவின் பாராட்டுக்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றி கூறுகின்றேன்.அறிவிப்பு துறையில் இன்னும் கவனம் எடுக்க தூண்டியது உங்கள் பாராட்டு,நிச்சயமாக எழுத்திலும் என்னை மெருகேற்றுவேன் நன்றிகள்.அது சரி நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள்.எதிர்காலத்தி??் திறமையாகவும் எழுதுவீங்கள் என்று நம்புகிறேன். :wub:

தலைப்பே பிடிக்கவில்லை என்று ஜம்மு பேபி தெரிவித்திருந்தார்.புறத்தை பார்ப்பதை விட அகத்தை பார்த்து எடை போடுங்கள் சரியா.சில பந்தியை வாசித்து சுவாரஷ்யமாக நகர்த்த முடியவில்லை என்று சொல்லியிருந்தீர்கள்.அந்த துணிச்சலிற்கு சபாஷ்.உண்மையில் நானும் இதை ஒப்பு கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது.விஷய மென்னவென்றால் முக்கியமான திருப்பத்தில் சுவாரஷ்யம் தேவைபடாது என்று நினைத்தன்.அது தவறு என்று அறிவித்ததிற்கு பாராட்டுக்கள்.. :(

சுவி,நீங்களுமா புற அழுக்கைக் கண்டு ஓட நினைத்தீர்கள் நல்ல வேளை நெருங்கி வந்து வாசித்து விமர்சித்த தருணதிற்கு அன்பான நன்றிகள். :lol:

காவலூர் கண்மணி,எமது ஆக்கத்தை எதிர்பார்க்கிறார் என்ற போது மிக்க மகிழ்ச்சியடந்தேன்.உங்கள் ஆக்கங்களையும் நாம் கூர்ந்து நோக்குகிறோம் தயவு செய்து அடிகடி எழுதுங்கள். :lol:

நன்றி!!

களவாஞ்சிக்குடியோகன்..

Edited by Jamuna

ஹீஹீ களுவாஞ்சிக்குடி யோகன் தனது கதைக்கு கருத்துக்கள் சொன்னவர்களுக்கு பதில் கூறியிருக்கின்றார் ஜம்மு மூலம். நன்றிகள் ஜம்மு. :wub:

அவரையெல்லாம் இனி "அங்கி" என்று கூப்பிடுவதே "வேஸ்ற்" என்ற பந்தியை வாசித்த போது சிரிப்பை அடக்க முடியாமல் திண்டாடிவிட்டேன்

அவரை அங்கிள் என்று கூப்பிடுவது வேஸ்ட் என்பது என் கருத்து. இருப்பினும் உங்கள் பெருந்தன்மையால் நீங்கள் அவர் சொன்னால் சொல்லிட்டு போகட்டும் அவர் அங்கிள் ஆச்சுதே அவருக்கு மதிப்பு கொடுக்கணும் வயதுக்கு மதிப்புக்கொடுக்கணும் என நினைச்சு அவர் செய்த சதியை மறந்து அவரை அங்கிள் என்று கூப்பிடணும் எனில் கூப்பிடலாமே. ஏன் திண்டாடுறிங்க. திண்டாடாதையுங்கோ களுவாஞ்சிக்குடி யோகன். :wub:

அதுசரி நீங்கள் வெண்ணிக்கு அங்கிளா அண்ணாவா? வெண்ணி எபப்டி கூப்பிட்டால் பொருத்தமாக இருக்கும்? :D:lol:

ஜம்ஸ் ஆன்சர் ப்ளீஸ் :o

Edited by வெண்ணிலா

  • தொடங்கியவர்

ம்ம்..நிலா அக்கா எனக்கு எதுகப்பா நன்றிகள் :) ..(முடியல என்னால :lol: )...ம்ம் தாரளாமாக நிலா அக்கா நீங்க கேட்ட கேள்வியை அவரிடம் சமர்பிக்கிறேன் :lol: ..(பதில் சில நேரம் தாமதமாகும் பிரச்சினை இல்ல தானே :wub: )..

அப்ப நான் வரட்டா!!

ம்ம்..நிலா அக்கா எனக்கு எதுகப்பா நன்றிகள் :) ..(முடியல என்னால :D )...ம்ம் தாரளாமாக நிலா அக்கா நீங்க கேட்ட கேள்வியை அவரிடம் சமர்பிக்கிறேன் :( ..(பதில் சில நேரம் தாமதமாகும் பிரச்சினை இல்ல தானே :wub: )..

அப்ப நான் வரட்டா!!

:lol: அவர் சொன்ன கருத்துக்களை ஜம்முபேபி சிரமம் பாராமல் இங்கு பதிஞ்சமைக்குந் அன்றி சொன்னேனுங்கோ. ஏன் தாங்க முடியலை?

ஓ தாமதமாக தான் பதில் வருமா. சரி எப்படின்னாலும் பதில் வரணும். சரியோ பேபி :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.