Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கக்கொடி ஏற்றப்படுவது உறுதி - பஷில் ராஜபக்ஷ

Featured Replies

வீரகேசரி நாளேடு

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கக்கொடி ஏற்றப்படுவது உறுதி. அதன் பின் சகல இன மக்களும் இன, மத, பேதமின்றி சம உரிமையுடன் வாழும் நிலை உருவாகும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி. யுமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனநாயகத்தை மதிக்கின்ற கிழக்கு மாகாண மக்களுக்காக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டியது இன்றைய தேவையாகும். மஹிந்த சிந்தனையின் கீழமைந்த பாரிய 10 திட்டங்களில் 90 வீதமானவை நிறைவடைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.

மஹிந்தவின் திட்டமான கிராம எழுச்சித் திட்டத்தின் ஒரு நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை களுத்துறை மாவட்டத்திலமைந்துள்ள மாவல மாரெக்ம பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது கிராம வீதிகள் கொங்ரீட் மூலமாக புனரமைத்தல், நீர் வழங்கல், விவசாய உற்பத்தி மற்றும் சன சமூக நிலைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு போன்ற வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

தேச நிர்மாண அமைச்சரும் களுத்துறை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான ரோஹித்த அபேகுணவர்த்தன தøலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பஷில் ராஜபக்ஷ எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து பேசிய பசில் ராஜபக்ஷ எம்.பி. மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை பாரமெடுக்கும்போது 17 மாவட்டங்களே மிஞ்சியிருந்தன. எஞ்சியிருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை உட்பட 8 மாவட்டங்களின் கட்டுப்பாடு புலிகளின் கைகளிலேயே இருந்தது. 2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் குறித்த 8 மாவட்டங்களுக்கு தென்பகுதியிலிருந்து அரச தலைவர்கள், நீதியரசர்கள் போன்ற தரப்பினர் செல்ல வேண்டுமாக இருந்தால் புலிகளின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை இருந்தது. அந்த நிலையை இந்த நாட்டுக்கு உருவாக்கி விட்டவர் ரணில் விக்கிரமசிங்கவே ஆவார். ஆனால் இன்று அந்நிலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டிலுள்ள மக்கள் சமாதானமாக வாழ வேண்டும் என்ற நோக்கில் புலிகளுடன் மூன்று தடவைகள் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின்பேரில் நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தைகளுக்கு புலித் தரப்பினர் இசைந்து கொடுக்காத அதேவேளை சமாதானப் பேச்சுவார்த்தையை தட்டிக் கழித்தனர். இதன் பின்னர் பேசிப் பயன் இல்லை என்ற காரணத்தினாலேயே இராணுவத் தீர்வுக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது. ஆனால் அந்தத் தீர்வு வியக்கத்தக்க வகையில் எமக்கு திருப்தியையும் வெற்றியையும் தந்திருக்கின்றது.

புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து கிழக்கு மாகாணத்தை எமது முப்படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட அந்த பூமியில் இன்று பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.

கடந்த 10 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை அரசாங்கம் நடத்தியது.

வாகரை போன்ற பகுதிகளில் 99.9 வீதமானவர்கள் தமிழர்களாவர். அவர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழ் பிரதேசமொன்றில் சிங்கள வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

இவற்றை வைத்துப் பார்க்கும் போது கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதன் பின்னர் அங்குள்ள மக்கள் ஜனநாயக வழிக்கு திரும்பியுள்ளமை தெளிவாகின்றது. இன்றைய கிழக்கு மக்கள் பிரிவினைவாதத்தை வெறுப்பவர்களாகவும் ஜனநாயகத்தை மதிப்பவர்களாகவும் அல்லது ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்பவர்களாகவுமே இருக்கின்றனர். இப்படியான சந்தர்ப்பத்தில் அம் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் மிகக் கவனமாக இருக்கின்றது. அதற்காக கிழக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தல் ஒன்று இன்றைய தேவையாகவும் இருக்கின்றது. கிராம எழுச்சித் திட்டத்தினூடாக கிராமங்களுக்கு மின்சார வசதி பெற்றுக் கொடுப்பதும் அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். அதற்காகவே மேல் கொத்மலை மின் திட்டம் போன்ற அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தின் 60 வீதம் எரிபொருளைக் கொண்டே உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் போது எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார பாவனைக்கான கட்டணமும் அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகும். இதனைத் தவிர்த்துக் கொள்ளும் அரசாங்கத்தின் திட்டமே மேல் கொத்மலை திட்டமாகும்.

இப்படியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ""மஹிந்த சிந்தனை'' பாரிய 10 வேலைத் திட்டங்களில் தற்போது 90 வீதமானவை பூர்த்தியடைந்துள்ளன.

நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகளுக்கு பொலிஸாரும் முப்படையினரும் தோள் கொடுத்து வரும் அதேவேளை அவரது கரங்களைப் பலப்படுத்த அனைவரது ஒத்துழைப்புகளும் மிக மிக அவசியமானதாகும்.

நாடு முழுவதுமான 14,000 கிராம எழுச்சித் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் நாட்டின் 25 மாவட்டங்களிலும் சிங்கக் கொடி ஏற்றப்பட்டு சகல இன மக்களும் பேதங்களை மறந்து சம உரிமையுடன் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுவிடும். இவ்வைபவத்தில் இராணுவ சேவையின் போது கால்களை இழந்த வீரர்களுக்கு சக்கர நாற்காலிகளையும் மற்றும் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் பஷில் ராஜபக்ஷ எம்.பி. வழங்கி வைத்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரத தாக்குதலில் புலிக்கொடி பறக்கவிட்டதை பஸில் பஸிலாக (puzzle)விட்டுள்ளார்.

கனவு காண ஒவொருவருக்கும் உரிமை உள்ளது...வடக்கு-கிழக்கு முழுதையும் எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை நாம் கனவு காண்பது போல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கத்தில இந்திய கொடி தான் கொஞ்சம் மேலாக பறக்கும். சிறிது காலத்தின் பின் ஜ.நாவின் வெள்ளை கொடி சீறிலங்கா தென் பகுதி முழுவதும் பறக்கனும் :)

  • கருத்துக்கள உறவுகள்
:) பசில் சொல்வதும் சாத்தியம்தானே.இப்போதுள்ள 25 மாவட்டங்களை 30 மாவட்டங்களாகப் பிரித்து அதில் 25 இல் மட்டும் சிங்கக் கொடியேற்றட்டும். யார் வேண்டாம் என்றார் ?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:) பசில் சொல்வதும் சாத்தியம்தானே.இப்போதுள்ள 25 மாவட்டங்களை 30 மாவட்டங்களாகப் பிரித்து அதில் 25 இல் மட்டும் சிங்கக் கொடியேற்றட்டும். யார் வேண்டாம் என்றார் ?

அப்போ

1-வெள்ளவத்தை பகுதி ஒரு தமிழ் மாவட்டம்.

2-மலையகத்தில் ஒரு தமிழ் மாவட்டம்.

3-தென் பகுதியில் இராவணன் சிறிய குடா மற்றும் பெரிய குடாவையும் சேர்த்து இன்னொரு தமிழ் மாவட்டம்.

4-அனுராதபுரத்தில் எல்லாளன் நினைவாக இன்னொரு தமிழ் மாவட்டம்

5-?? யாரும் இந்த மாவட்டத்தை நிரப்புங்கோ :D

  • கருத்துக்கள உறவுகள்
:) தமிழ்,கலக்கிட்டீங்க போங்க !!! 5 ஆவது மாவட்டம் பம்பலப்பிட்டி என்று நினைக்கிறேன். என்ன, நான் சொல்வது சரிதானே ?!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:) தமிழ்,கலக்கிட்டீங்க போங்க !!! 5 ஆவது மாவட்டம் பம்பலப்பிட்டி என்று நினைக்கிறேன். என்ன, நான் சொல்வது சரிதானே ?!

சரி தான். :D

ஆனால் இந்த தலைநகர மாவட்டங்களில் நம்ம தாடி மாமா டக்கிளஸ் பங்கு கேட்டா..தானும் ஒரு தமிழன் என்று சொல்லி... என்ன பண்ணலாம் :D

Edited by tamillinux

மகிந்தவால் இப்பொழுதே 25 மாவட்டங்களிலும் சிங்கக் கொடியை ஏற்ற முடியும்.

இன்றைய நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் ஏதோ ஒரு சிறுபகுதியில் சிங்களப் படைகள் நிலைகொண்டுள்ளன. அங்கே கொடி ஏற்ற வேண்டியதுதான்.

கிளாலி, முகமாலை கிளிநொச்சி மாவட்டத்தில்அடங்குகின்றன

கொக்குளாய், கொக்குத்தொடுவாய் முல்லைத்தீவு மாவட்டத்தில் அடங்குகின்றன.

ஆகவே அனைத்து மாவட்டங்களிலும் கொடியேற்றுவதில் பிரச்சனை. அந்த மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் ஏற்ற முடியுமா என்பதுதான் கேள்வி

இல்லைங்கோ 5வது தமிழ் மாவட்டம் காலியில் இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லைங்கோ 5வது தமிழ் மாவட்டம் காலியில் இருக்கு.

3-தென் பகுதியில் இராவணன் சிறிய குடா மற்றும் பெரிய குடாவையும் சேர்த்து இன்னொரு தமிழ் மாவட்டம்.

இந்த மாவட்டம் காலி வரை வருகின்றது. ஆனால் உங்கள் விருப்பத்தின் படி வேண்டுமென்றால் யு (U) வடிவில் மேற்கு பக்கமா விஸ்தரிக்கலாம் :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

<_< டக்கிளசு பங்கு கேட்டால், ஒரு சின்னத்துண்டாப் பாத்து பிச்சுக் குடுப்பம், அவருக்கு லொறீச் ரோட்டும் அதில இருக்கிற கொட்டேலும் போதும் !

***

*** தணிக்கை செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

எனக்கு சரியா சொல்ல தெரியேல்ல... ஆனா உந்த கொடியேற்றல் விளையாட்டெல்லாம்... அவ்வளவு நல்லா இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.