Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பியர் இலங்கைக்கு வந்தபோது தமிழ் இராச்சியம் இங்கு இருக்கவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பியர் இலங்கைக்கு வந்தபோது தமிழ் இராச்சியம் இங்கு இருக்கவில்லை

[03 - April - 2008]

* அமைச்சர் மகிந்த விஜயசேகர

தமிழ்ச் சிறுபான்மையினருக்கு இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இன்னும் சிறிது காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் ஏற்படலாம் என்று தெரிவிக்கும் அஞ்சல் தொலைத் தொடர்புகள் அமைச்சர் மகிந்த விஜேசேகர, தமிழர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சினைகள் இருப்பதையும் ஒப்புக் கொண்டார்.

இலங்கை வங்கியின் "கிராம உதான" திட்டத்தை அக்குரஸ்ஸவில் ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர்;

"இந்த நாட்டிற்குள் முதலில் வந்தவர்கள் போர்த்துக்கேயர் . அதன் பின்னர் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் வந்தனர்.

அப்போது நாட்டின் ஒரு பகுதியை தமிழர்கள் ஆட்சி செய்து வந்ததாகச் சிலர் கூறிவருகின்றனர். ஆனால், அப்படியாக தமிழர்கள் இங்கு ஒரு பகுதியை ஆண்டதாக கூறுவதில் எதுவித உண்மையுமே இல்லை. முழு நாட்டையும் பௌத்த சிங்களவர்களே ஆண்டனர். தமிழர் இராச்சியம் என ஒன்று இருக்கவில்லை. இதுவே வரலாறு.

தற்போது நடைபெறுகின்ற உள்நாட்டுப் போரில் வெளிநாடுகளுடன் போர் புரியவில்லை. நீண்ட காலமாக அர்த்தமில்லாமல் இந்த நாட்டின் இரு பகுதி மக்களுக்கு இடையில் நடைபெறும் யுத்தமே இது.

இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் பௌத்தர்களே. பௌத்தர்களுக்கு வழங்கும் அதே அகப்பையினால் தங்களுக்கும் வழங்குமாறு சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் கேட்கின்றனர். ஆனால், சிறுபான்மையினருக்கு இரண்டாவது அகப்பையினால் பகிர்ந்து வழங்கும்போது தான் பிரச்சினைகள் எழுகின்றன.

இந்த நாட்டை ஆட்சி செய்த ஆங்கிலேயர் , ஒல்லாந்தர், போர்த்துக்கீசரும் தனி இராச்சியம் கேட்கலாமே . அவர்கள் ஏன் கேட்கவில்லை?

இன்று உலகில் 5 கோடி படித்த தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆதரித்து பல கோடி ரூபாவை அவருக்கு வழங்கி தமிழ் இராச்சியம் ஒன்றை உருவாக்க தயாராகி வருகின்றனர்.

1987 ஜூலை மாதம் அன்றைய ஜனாதிபதி ஜே ஆரும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் கைச்சாத்திட்ட இலங்கை- இந்திய சமாதான உடன்படிக்கைக்கு எதிராக நானும் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அன்று கொழும்பில் எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்தோம். ஷ்ரீமாவோ அம்மையாரின் வேண்டுகோளின்படி நாம் செய்தோம்.

இன்று அந்த இந்திய- இலங்கை சமாதான உடன்படிக்கை ஒழிக்கப்பட்டுவிட்டது. அதற்காக நாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிகூறி அவரைக் கௌரவிக்க வேண்டும்" என்றார்.

http://www.thinakkural.com/news/2008/4/3/i...s_page48585.htm

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் உவர் வரலாறும் சமூகக்கல்வியும் ஓல்ல பெயில் எண்டு..! :lol::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறேன் உவர் வரலாறும் சமூகக்கல்வியும் ஓல்ல பெயில் எண்டு..! :lol::unsure:

அதுமட்டுமல்ல சிங்களமொழியும் பெயில் என நினைக்கின்றேன் ஏனென்றால் சிங்களத்திலுள்ள சில புத்தகங்களில் கூட எள்ளாலன், சங்கிலியன் பண்டாரவன்னியன் போன்ற தமிழ் மன்னர்களின் வரலாறு உண்டு. உவ்வளவும் ஏன் கண்டியை ஆண்ட கடைசிமன்னன் கூட தமிழன் தான். உவர் யூஎன்பிக்காரன் இப்போ கட்சிமாறி மஹிந்தாவுக்கு ஜல்ரா அடிக்கின்றான்.

நான் நினைக்கிறன், உவர் இலங்கைச் சிங்களவரே இல்லையென்றுதான் . :icon_mrgreen:

நான் நினைக்கிறன் இவருக்கு செலக்டிவ் அம்னீசியா (Selective Amnesia) என்று... :icon_mrgreen:

நான் நினைக்கிறன் உவர் மோட்டுச்சிங்களவர் எண்டு.

தமிழ் மக்களின் தாயகக்கோட்பாட்டை தகர்க்க வரலாற்றையே மோட்டுச்சிங்களவன் மாற்றுகிறன். புத்திசாலித்தமிழன் தன்ரை வரலாறு நிலைக்க என்ன செய்தான்?

இண்டைக்கும் பல சிங்களவன் மலையகத்தமிழர் தான் வடக்கிலையும் கிழக்கிலையும் இருப்பதாக நம்புகிறார்கள்...! உவர் கதைப்பது சிங்களவரை உசுப்பேத்த போதுமானது... ஆனா அதனால் பாதிக்க பட போவது சிங்களவன் தான் அதிகமாக இருக்கும்...

நான் நினைக்கிறன் உவர் பேசேல்ல.. மகிந்த குடுத்த காசு பேசுதெண்டு...(பொய்யைச் சொல்லத்தான பாருங்கோ காசு வாங்க வேண்டும்)

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் உவர் மோட்டுச்சிங்களவர் எண்டு.

உதை நீங்கள் சொல்லக் கூடாது. எங்கள் குறுகஸ் அண்ணா வந்து தான் உந்த வசனத்தைச் சொல்ல வேண்டும். :icon_mrgreen:

நான் உவரை பற்றி எதையும் நினைக்க இல்லை.. ஆனால் இதை வன்மையாக கண்டிக்கிரேன்...

நான் நினைக்கிறன் உவர் மோட்டுச்சிங்களவர் எண்டு.

தமிழ் மக்களின் தாயகக்கோட்பாட்டை தகர்க்க வரலாற்றையே மோட்டுச்சிங்களவன் மாற்றுகிறன். புத்திசாலித்தமிழன் தன்ரை வரலாறு நிலைக்க என்ன செய்தான்?

கடைசி சிங்கள மன்னன் தமிழில் தான் கையெழுத்து போட்டார் என்று கூறுகின்றார்கள். மொழியில் பின்தங்கிய சிங்கள இனம் தனக்கென ஒரு மொழியை செம்மைப்படுத்தி தனக்கென ஒரு வரலாற்றையும் உருவாக்கி அதனூடாக ஒரு பெருந்தேசிய இனமாக உருவெடுத்தனர். மொழியில் தொன்மை இருந்தும் வரலாறு இருந்தும் , பண்பட்ட வாழ்விருந்தும் தனக்கென ஒரு வரையறுக்கப்பட்ட வரலாறை எழுத முடியாதவர்களாக தமிழர்கள் இருந்துள்ளனர் என்பதே உண்மை.

ஆழக்கடலில் சோழனைப் பற்றி பாடி அங்காடிகளுக்கு சேரன் சோழன் பாண்டியன் என்று அழைத்த நாம் இப்போது தான் எல்லாளன் என்று சொல்ல ஆரம்பித்துள்ளோம். சங்கிலியனும் பண்டாரவன்னியனும் என்னும் பல மன்னர்களையும் இனிமேலாவது முன்நிறுத்த முன்வரவேண்டும்.

சங்கிலியனும் பண்டாரவன்னியனும் இப்ப இல்லை இனி இனி தான் வரும்.... பொறுமை காக்கவும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.