Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய்யைக் கண்டறிய சில வழிகள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யைக் கண்டறிய சில வழிகள் !

( தமிழ் ஓசை - களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை)

பொய் பேசுபவர்களோடு பழகவும், இணைந்து பணியாற்றவும், வாழவும் வேண்டிய சூழல் எல்லோருக்குமே நேரிடுகிறது.

பொய் பேசுபவர்களிடம் அகப்பட்டு பணத்தையும், பொருளையும், நிம்மதியையும் இழந்து திரியும் மக்களைக் குறித்த செய்திகள் நாளேடுகளில் தினமும் இடம் பெறுகின்றன.

பொய் மெய்யுடன் கலந்து மெய்யும் பொய்யும் செம்புலப் பெயல் நீர் போல இன்று மனித பேரணியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

பேசுவது பொய் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால் எப்படி இருக்கும் ? அதொன்றும் பெரிய வித்தையில்லை என்கிறார் பல ஆண்டுகாலம் அமெரிக்க காவல் துறையில் பணியாற்றிய நியூபெர்ரி என்பவர்.

ஒருவர் பேசுவது பொய்யா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க அவர் சில வழி முறைகளைச் சொல்கிறார்.

1. முதலில் பேசுபவர்களின் வார்த்தைகளைக் கவனியுங்கள். அதில் இருக்கும் தொடர்பற்ற, அல்லது இயற்கைக்கு முரணான செய்திகளை கவனமாய் கண்டறியுங்கள்.

முக்கியமாக மனித இயல்புகளுக்கு மீறிய வார்த்தைகளையும், நடக்க சாத்தியமற்ற கூறுகளையும் கண்டுணருங்கள்

2. உலகில் நான்கு விழுக்காடு பொய்யர்கள் மிகத் திறமை சாலிகள், மற்றவர்களைக் கண்டறிவது மிக மிகக் கடினம். மற்றவர்கள் எளிதில் மாட்டுவார்கள். பொய்யர்கள் என கருதும் நபர்களிடம், அவர்கள் எதிர்பார்க்காத ஒரு கேள்வியை எதிர்பார்க்காத நேரத்தில் கேளுங்கள். அவர்கள் பொய்யர்கள் என்றால் அந்த கேள்வியே அதைக் காட்டிக் கொடுத்து விடும்.

3. தெரிந்த நபர் எனில் அவருடைய இயல்புகளை வைத்து, அதில் தெரியும் மாற்றங்களை வைத்து அவரை கணக்கிடுங்கள். அமைதியான நபர் கலகலப்பாக இருப்பது போல் காட்டிக் கொள்வதும், கலகலப்பான நபர் சற்று அமைதியாய் இருப்பதும் நிகழ்ந்தால், ஏதோ செய்தி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

.

4. வெளிப்படுத்தும் உணர்வுகளை வைத்து எளிதில் இனம் கண்டு கொள்ளுங்கள். புன்னகையில் செயற்கை வாசமடிக்கிறதா ? நகைச்சுவை சொன்னால் உடனே சிரிக்காமல் இருக்கிறார்களா, நமது உரையாடலில் தேவையான உணர்ச்சிகள் வெளிப்படாமல் இருக்கிறதா ? இவையெல்லாம் பொய்யின் குழந்தைகள்.

.

5. திடீர் உணர்ச்சிகளை கவனியுங்கள். பெரும்பாலானவர்கள் எதையேனும் மறைக்க முயன்றால் கண நேரத்தில் அவர்களுடைய கண்களில் குற்றம் தோன்றி மறையும். பெரும்பாலும் காவல் துறையில் இருக்கும் திறமையான நபர்களால் மட்டுமே அதைக் கண்டு பிடிக்க முடியும் எனினும் கவனத்தில் கொள்வது நல்லது.

.

6. “நான் நினைக்கிறேன்”, “நான் நம்புகிறேன்” போன்ற உரையாடல்கள் பல வேளைகளில் பொய்யைச் சொல்ல பயன்படுத்தப்படும் வாக்கியங்கள். எனவே சூழலுக்கு ஏற்றபடி இந்த வார்த்தைகள் சொல்லும் பொருள் என்னவாய் இருக்கும் என கணித்துக் கொள்ளுங்கள்.

7. முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் என்னென்ன என்பதை கவனியுங்கள். சிலர் இல்லை என்று சொல்லும் போது அவர்களுடைய உடலசைவு “ஆம்” என்று சொல்லும். சிலர் ஒரே செய்தியை வேறு விதமாய் கேட்கும் போது வேறு விதமாய் பதிலளிப்பார்கள். அதை கவனியுங்கள்.

.

8. இயல்பாக இல்லாமல் இருக்கிறாரா என்பதை கவனியுங்கள். ஏதேனும் தவறு செய்துவிட்டவன் இயல்பாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாலும் இயல்பாய் இருப்பதில்லை.

.

9. பொய் சொல்பவர்கள் அல்லது உண்மையை மறைப்பவர்கள் தேவையற்ற நீண்ட விளக்கங்கள் கொடுப்பார்கள். ஆம், இல்லை என்னும் சிறு பதிலை எதிர்பார்க்கும் கேள்விக்குக் கூட அவர்கள் நினைத்திருக்கும் நீண்ட பதிலை சொல்கிறார்களா என கவனியுங்கள்.

பொய்யைக் கண்டறிய இது மிகவும் பயனளிக்கும்.

.

10. பேசும்போதெல்லாம் பொய்யே பேசுவார்கள் என்னும் எண்ணத்தோடு அணுகுதலும் தவறு. பொய் பேசுகிறார்கள் எனில் பேசுவது எல்லாமே பொய் என முடிவு செய்தலும் தவறு. ஒரு பொய் சொல்லப்பட்டால், அதை கண்டுணர்ந்தால், அதன் காரணத்தை அறிய முயலுங்கள்.

மேற்கூறிய செய்திகளெல்லாம் பொய்களைக் கண்டறியும், நிரூபிக்கப்பட்ட உண்மைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், குடும்ப உறவுகள் சார்ந்த சிக்கல்களில் சந்தேகக் கண்களை கழற்றி வைத்து விட்டு நம்பிக்கை கரம் கொண்டு அரவணைத்து நடப்பதே ஆரோக்கியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

பொய் சொல்பவர்கள் அல்லது உண்மையை மறைப்பவர்கள் தேவையற்ற நீண்ட விளக்கங்கள் கொடுப்பார்கள். ஆம், இல்லை என்னும் சிறு பதிலை எதிர்பார்க்கும் கேள்விக்குக் கூட அவர்கள் நினைத்திருக்கும் நீண்ட பதிலை சொல்கிறார்களா என கவனியுங்கள். பொய்யைக் கண்டறிய இது மிகவும் பயனளிக்கும்.

இங்கு வரையறுத்துச் சுட்டிக்காட்டப்பட்ட பலவற்றில் பொய்யை கண்டறியும் திறன் இருக்கலாம்.

ஆனால் விளங்காத ஒருவருக்கு.. அல்லது விளங்க மறுக்கும் ஒருவருக்கு நீண்ட விளக்கம் அளித்தால் தானே பொய்யா மெய்யா என்று இனங்காண முடியும்..??! இல்ல எப்படி...???! இப்படி முரண்பாடுகளும் இருக்கிறது இதில்..! :lol:

பொய் சொல்பவர்கள் அல்லது உண்மையை மறைப்பவர்கள் தேவையற்ற நீண்ட விளக்கங்கள் கொடுப்பார்கள். ஆம், இல்லை என்னும் சிறு பதிலை எதிர்பார்க்கும் கேள்விக்குக் கூட அவர்கள் நினைத்திருக்கும் நீண்ட பதிலை சொல்கிறார்களா என கவனியுங்கள். பொய்யைக் கண்டறிய இது மிகவும் பயனளிக்கும்.

உண்மைகளக் கேட்க கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கும் நெடுக்காலப்போவான்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாய் திறந்தால் சாரளமாக சரடு விடுகிறவர்களிடமிருந்து உண்மையைக் கண்டறிய ஏதாவது வழிகள் இருக்கின்றனவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவை பொதுவான சில வழிகள் தானே தவிர பொது விதிகளல்ல. LIE ditector ஐயே சிலர் ஏமாற்றியிருக்கிறார்கள்.

அட...பொய்யை கண்டறிய வழிகளா..(தங் கீயூ நுணா அண்ணா :( )..அட ஜம்மு பேபி பொய் சொன்னா மம்மி அடிப்பா அல்லோ..(நெடுக்ஸ் தாத்தா மாதிரி ஒரு தாத்தா சொல்லி இருக்கிறார் பொய் சொல்ல கூடாது பேபி என்று அல்லோ)... :lol:

அதுக்காக ஜம்மு பேபி பொய் சொல்லுறது இல்ல என்று நான் பொய் சொல்ல மாட்டன்..(என்ன பார்க்கிறியள் இப்பவாது ஜம்மு பேபி பொய் சொல்லாது என்று விளங்கி இருக்குமே :) )..குழப்பிட்டனா சரி அத விடுவோம் என்ன..

ம்ம்..பொய் சொல்லுறது எவ்வளவு கஷ்டம் பாருங்கோ அது ஒரு கலை எல்லாராலையும் முடியாது..(நான் பொய் சொன்னேன் என்றா அடுத்த நிமிசம் பிடிபட்டு விடுவன் அல்லோ :( )..ஆனா சில பேர் இருக்கீனம் சும்மா அதிருமில அவையின்ட பொய் எல்லாம்...உதில என்ன ஜோக் என்றா ஒரு பொய்யை சொல்லி அதுக்கு இன்னொரு பொய்யை சொல்லி உவைபடுற பாடு பார்க்க சிரிப்பா இருக்கும்..(அத விட உண்மையை சொல்லிடலாம் :D )...

எல்லாத்தை விட ஒரு இலகுவான வழி பொய் சொல்பவர்கள் எப்பவுமே மற்றவரின்ட கண்ணை பார்த்து கதைக்க மாட்டீனம் பாருங்கோ..(அதிலையே கண்டு பிடித்திடலாம்).. :wub:

ம்ம்..யாரும் பொய் சொன்னா ஜம்மு பேபிக்கு ரொம்ப பிடிக்கும் அல்லோ...(பிகோஸ் அதால நம்மளுக்கு என்ன நட்டம் பாருங்கோ)..சொல்லுறவைக்கு தான் இருப்பு கொள்ளாது.. :wub:

ம்ம்..எல்லாம் சொன்னியள் சரி "காதலியை" பார்த்து உன்னை விட அழகி ஒருத்தரும் இல்ல என்று பொய் சொல்லீனமே அவைய பற்றி சொல்லவே இல்ல..(இப்ப சொல்லுற சொல்ல போனா காதலும் பொய் தான் கல்யாணம் தான் நிசம்)...இது எப்படி இருக்கு.. :lol:

காதலின் போது பொய் கூட அழகு கல்யாணத்தின் போது அந்த பொய்யாலையே பிரிவு...(சோ இப்ப என்ன சொல்ல வாறேன் என்றா எப்பவுமே நிஜங்கள் நம்மளிற்கு லேட்டா தான் அழகா தெரியும் பாருங்கோ).. :unsure:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா சில நேரம் உன்னை பொய் காப்பாற்றும் பல நேரம் அந்த பொய் உன்னை ஏமாற்றும்" :wub:

அப்ப நான் வரட்டா!!

கண்ணா சில நேரம் உன்னை பொய் காப்பாற்றும் பல நேரம் அந்த பொய் உன்னை ஏமாற்றும்"

பொய் சொன்ன வாய்க்கு பொரி கூட கிடைக்காதாம்.

ஜம்மு சூப்பர்ப் பஞ்ச்.

பொய் சொன்ன வாய்க்கு பொரி கூட கிடைக்காதாம்.

ஜம்மு சூப்பர்ப் பஞ்ச்.

ஓ..அப்படியோ நிலா அக்கா.. :unsure: (அட எத்தனையோ பேர் பொண்ணுகளை எல்லாம் வைத்து பொய்யா கவிதை எல்லாம் எழுதுறாங்க அவங்களுக்கு எல்லாம் :unsure: )..பொரி கிடைக்காதோ நிலா அக்கா..இப்படி எல்லாம் எழுதுற படியா தான் அவைக்கு பொரியே கிடைக்குது பாருங்கோ..(எப்படிக்கா இருக்கு).. :unsure:

அப்ப நான் வரட்டா!!

பொய்யின் இயல்புகளைத்தான் நுணா தந்திருக்கிறார். அதேபோல் உண்மையின் இயல்பையும் ஒப்பிட்டால் எப்படியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உங்க எல்லாரையும் நானொரு கேள்வி ..........

அட நான் சும்மாதான் சொன்னேன் ஓடவேணாம் இங்க வாங்கப்பா.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.