Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஹிஸ்புல்லா முதலமைச்சராகாவிடின் 12 முஸ்லிம் அமைச்சர்கள் ராஜீனாமா

Featured Replies

கிழக்கில் இயங்கிவரும் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவின் பிள்ளையான், கிழக்கு மாகாண முதலமைச்சரானால் அரசில் அங்கம் வகிக்கும் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் பதவி விலகுவார்கள் என்று "த மோர்ணிங் லீடர்" வார ஏடு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகிதாசாரத்தேர்தலில் பிள்ளையானுக்கு போட்ட வாக்குகளும் முஸ்லிம் ஓட்டுப்பொறுக்கிகளுக்கு போகும் என்பதை கட்சிமாறி ஹிஸ்புல்லாவுக்கும் ஏனைய முஸ்லீம் வியாபார அமைச்சர்களுக்கும் இன்னும் புரியவில்லையா? தமிழர்கள் ஓட்டுப்போடாவிட்டால் இவர்களுக்கு இத்தனை சீட் கிடைக்குமா?

வெகுவிரைவில் கிழக்கில் ஜனநாயகம்(?) நிலைனாட்டப்பட்டுவிடும் என்பது மிகச்சரி(???)

கிழக்கின் முதலமைச்சராக ஹிஸ்புல்லாவை நியமிக்கா விட்டால் அமைச்சுப் பதிவிகளிலிருந்து இராஜினாமா செய்யப் போவதாக 12 முஸ்லிம் அமைச்சர்க்ள அரசுக்குக் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் வெற்றியிட்டிய 8 உறுப்பினர்களும் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தால் இலகுவில் முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அவர்கள் அரச உயர்தரப்புக்கு சுட்டிக்காட்டியுள்ளனர். கிழக்கு தேர்தலை விட கிழக்கின் முதலமைச்சர் யாரென்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருக்கும் நிலையில் கடந்த 72 மணித்தியாலங்களாக முதலமைச்சர் தெரிவு குறித்து இழுபறி நீடித்துள்ளது.

பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்க அரசு உயர் மட்டமும் த.தே.ஜ.கூட்டமைப்பும் சிங்கள கடும் போக்குக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

நேற்று கிழக்கின் முதலமைச்சர் தொடர்பில் முக்கிய சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. ஆனால், எத்தகைய இறுதி முடிவுகளும் மேற்கொள்ளப்படாமல் இழுபறி நிலை நீடித்துள்ளது.

பிள்ளையான் முதலமைச்சராவதையே அரசு உயர் வட்டாரங்களும் அமைச்சர்களும் விரும்புவதை அறிந்து கொண்ட முஸ்லிம் அமைச்சர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் கூடி நீண்ட நேரம் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனா,

பிள்ளையான் முதலமைச்சராவதை ஒன்று கூடி எதிர்ப்பதெனவும் ஹிஸ்புல்லாவையே முதலமைச்சராக்க வேண்டுமெனவும அவர்கள் தமக்கிடையே தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அத்துடன், பிள்ளையானை முதலமைச்சரானால் தமதமைச்சுப் பதவிகளை உடனடியாக ராஜினாமா செய்வதெனவும் கிழக்குக்குத் தெரிவு செய்யபட்ட 8 மாகாண உறுப்பினர்களும் எதிர்கட்சியலமர்ந்து ஒரு முஸ்லிமை முதலமைச்சராக்குவதெனவும் தீர்மானித்துள்ளதாக அறிய வருகின்றது.

இதே வேளை, நேற்று செவ்வாய் மாலை 12 முஸ்லிம் அமைச்சர்கள் கையெழுத்திட்டு மஹிந்தவிற்கு அவரசக் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இக்கடிதத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள,அதிகளவுக்கு தெரிவு செய்யபட்டவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவார்களேன மஹிந்தவின் வாக்குறுதியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுட

விகிதாசாரத்தேர்தலில் பிள்ளையானுக்கு போட்ட வாக்குகளும் முஸ்லிம் ஓட்டுப்பொறுக்கிகளுக்கு போகும் என்பதை கட்சிமாறி ஹிஸ்புல்லாவுக்கும் ஏனைய முஸ்லீம் வியாபார அமைச்சர்களுக்கும் இன்னும் புரியவில்லையா? தமிழர்கள் ஓட்டுப்போடாவிட்டால் இவர்களுக்கு இத்தனை சீட் கிடைக்குமா?

வெகுவிரைவில் கிழக்கில் ஜனநாயகம்(?) நிலைனாட்டப்பட்டுவிடும் என்பது மிகச்சரி(???)

வெற்றி பெற்ற பிள்ளையானும், அவன் கூட்டணியினரும் பெற்ற வாக்குகளில் பெரும்பகுதி தமிழர்கள் போட்ட வாக்குகள் அல்ல!

தமிழர்களின் வாக்குகளை திருடி வாக்குபெட்டிகளில் இவர்களே திணித்த வாக்குகள்.

இன்னும் ஒரு பகுதி வாக்குகள் துப்பாக்கி முனையில் மக்களை அச்சுறுத்தி பெற்ற வாக்குகள்

நீதியான தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் இவர்களுக்கு கட்டுப்பணம் கூட கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே!

Edited by vettri-vel

சிங்களக் குடியேற்றத்திற்கும், அபிவிருத்தி என்ற பெயரில் பொது நிலங்களை வெளிநாடுகளிற்குக் கூறுபோட்டு பணத்தைக் கொள்ளையிடுவதற்கு யார் இடையூறாக இருக்க மாட்டாரோ அவருக்கே முதல்வர் பதவி.

பிள்ளையானுக்கே எல்லாத் தகுதிகளும் உண்டு. அராஜக ஆட்சி, மனித உரிமை மீறல் என்று பிரச்சனை கிளம்பும்போது அவற்றை பிள்ளையானின் தலையில் சுமத்திவிட்டு சிங்கள அரசாங்கம் தப்பித்துக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

:D எம்மைப் பொறுத்தவரை கிஸ்புள்ளா வருவதே நல்லது. ஏனென்றால் பிரதேச வாதம் என்பது அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப்பட வேண்டும். பிரதேச வாதத்தை ஆதரித்து பிள்ளையான் எனும் கோடரிக் காம்புக்கு வக்களித்தவர்கள் தமது தவறை உணர்ந்துகொள்ள நல்ல சந்தர்ப்பம்.

கிஸ்புள்ளா முதலமைச்சரானால் என்ன, தாயக நில மீட்பென்பது தொடங்கும்போது இவர்கள் தாமாகவே ஒதுங்கிக் கொள்வார்கள். அல்லது இவர்களையும் மீறி அது நடக்கும்.

ராஜீனாமா பண்ணினா பண்ணீட்டு போங்கடா.. வெருளி ராசபக்கசவை வெருட்டுவதை என்னால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது.

12பேரும் இருந்து என்னத்ததான் புடுங்கினியல்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.