Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது கருத்து எதற்காக நீக்கப்பட்டது

Featured Replies

அன்பின் இனையவன் அண்ணா

எதற்காக எனது கருத்துக்கள் நீக்கப்பட்டது சொன்னால் நல்லம் திருத்தி எழுத உதவியாஇருக்கும்....

ஹிஸ்புல்லா மிரட்டினார் என்ற தலைப்பிற்கு எழுதியது....

அன்பின் இனையவன் அண்ணா

எதற்காக எனது கருத்துக்கள் நீக்கப்பட்டது சொன்னால் நல்லம் திருத்தி எழுத உதவியாஇருக்கும்....

ஹிஸ்புல்லா மிரட்டினார் என்ற தலைப்பிற்கு எழுதியது....

வந்து கொஞ்ச நாட்களுக்குள்ளேயே ஆப்பா

ம்ம்ம் போகப்போக புரிஞ்சிக்கீப்பீங்க

கிருபா,

தமிழீழம் என்பது வடக்கு கிழக்கு பிரதேசங்கள் ஒன்றிணைத்து பல்லின மக்களை உள்ளடக்கியுள்ளதென்பதை மறுக்க முடியாதது. உங்களுக்கு தனிப்பட்ட ரீதியாக சிலர்மீது விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட தலைப்பில் அதனை பொதுப்படையாக வெளிப்படுத்துவது தமிழ்த் தேசியத்திற்கு முரண்பாடாகவே கருதப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவேண்டும் தலை, நீங்கள் சொன்னது போலவே தமிழீழத்தில நிறைய முசுலீமுவள் இருக்கினம் தான். அதை போல அவயள பிடிக்காத நிறைய பேர் இருக்கினம். பிரச்சின என்ன எண்டால் ஈழத்தில சமூக ஒற்றுமை இலங்கைய பொலவே ஒரு பகட்டு தனமான வெளிவேசம் எண்டால் இலங்கையின் கதி தான் எங்களுக்கும். இரண்டாவது ஒரு இனவாத நோக்கில ஒரு ஈழத்து அபிமானி கதைக்கிறார் எண்டால் அத நாங்கள் திருத்தவேணுமே தவிர மூடிமறைக்கிறதால எந்த பயனும் இல்லை. இன்னும் ஒண்டு மிக மிக முக்கியம் ஒரு சிறுபாண்மை சமுதாயத்தவர் நாட்டயே காட்டிகுடுக்கிறார் எண்டால் அவர் சிறுபாண்மை சமுதாயத்தவர் எண்டு நாங்கள் அத மழுப்ப கூடாது முகத்துக்கு நேரா எதிர்க்கவேணும் அத விட்டுட்டு முகத்துக்கு சிரிச்சு முதுகில குத்துறது எங்கழுக்கு நல்லதில்ல. நான் என்ன சொல்லவாறன் எண்டால், எங்கட சமுதாயம் ஒரு பொய்யா இருக்க கூடாது, நாங்கள் எதுக்காக சண்டை பிடிக்கிறமோ அத நம்பவேணும் இல்லாட்டி நாங்கள் தோத்து போய்டுவம்.

தமிழீழம் வெல்வது எதிரியின் பலவீனத்தால் இல்லை எங்கள் மேன்மையால்

தமிழீழம் தோற்பது எதிரியின் பலத்தால் இல்லை எங்கள் சிறுமையால்.

இங்கு சிறுபாண்மை சமுதாயத்தவர் என்று குறிப்பிட்டது ஈழத்து முசுலீமுகளையும் ஈழத்து சிங்களவரையும் ஈழத்து தமிழரையும் தான்.

  • தொடங்கியவர்

கிருபா,

தமிழீழம் என்பது வடக்கு கிழக்கு பிரதேசங்கள் ஒன்றிணைத்து பல்லின மக்களை உள்ளடக்கியுள்ளதென்பதை மறுக்க முடியாதது. உங்களுக்கு தனிப்பட்ட ரீதியாக சிலர்மீது விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட தலைப்பில் அதனை பொதுப்படையாக வெளிப்படுத்துவது தமிழ்த் தேசியத்திற்கு முரண்பாடாகவே கருதப்படுகிறது.

என்ன அண்ணா நான் இன முரண்பாட்டுடன் எழுதினேனா? அதுவும் தமிழ் தேசியத்திற்கு எதிராக ..... முஸ்லீம் சகோதரர்களின் உன்மையான முகம் தெரிந்துதான் இப்படி எழுதிகிறீர்களா? :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழசுகள் புதுப்பேரிலை வரேக்கையும் ஒரு கிளுகிளுப்புத்தானப்பா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமியண்ணா, என்னுடைய சந்தேகத்தை ஒரு வசனத்தில் சொன்னீர்களே அங்கு தான் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: இக்களத்தில் எழுதப்படுபவை பல இடங்களில் பலபேரின் வசதிகளுக்காகப் பயன்படுத்தப்படும் சாத்தியங்களும் உண்டு. அவை எமக்கு ஆதரவாகவோ, எதிராக் கூடவோ இருக்கலாம்.

உண்மை எதுவாக இருந்தாலும் கூட அவை அம்மணமாக்கப்படுவதை எவரும் விரும்புவதில்லை. முகத்தில் சிரித்து முதுகில் குத்துவது என்ற உங்கள் நியாயம் புரிகிறது. என்ன செய்வது ? சில விஷயங்களை நேரடியாகச் சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

வைத்து குத்தாகலும் இருக்கலாம் அதையும் பாருங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:icon_mrgreen: இக்களத்தில் எழுதப்படுபவை பல இடங்களில் பலபேரின் வசதிகளுக்காகப் பயன்படுத்தப்படும் சாத்தியங்களும் உண்டு. அவை எமக்கு ஆதரவாகவோ, எதிராக் கூடவோ இருக்கலாம்.

உண்மை எதுவாக இருந்தாலும் கூட அவை அம்மணமாக்கப்படுவதை எவரும் விரும்புவதில்லை. முகத்தில் சிரித்து முதுகில் குத்துவது என்ற உங்கள் நியாயம் புரிகிறது. என்ன செய்வது ? சில விஷயங்களை நேரடியாகச் சொல்ல முடியாது.

ரகுநாதன் ஐயா,

என்னை பொறுத்தவரையில் உம்மை மற்றும் என்னை போன்றோருக்கு எமது போராட்டத்தினை முன்னெடுத்து செல்பவர்களிலும் பார்க்க சில பாதுகாப்புக்கள் இருகின்றன, அது தான் நாம் சொல்கின்ற கருத்துக்களுக்கு நாஙளோ எமது சமுதாயமோ பொறுப்பு நிற்க தேவையில்லை அதுவும் யாழ் போன்ற தளங்களில் வரும் கருத்துக்களுக்கு இந்த சுதந்திரம் சற்று அதிகமானதாகவே உள்ளது. அதாவது எமக்கு பிழைவிடும் சுதந்திரம் உள்ளது அதனைதிருத்தும் சுதந்திரமோ இன்னும் பலருக்கு உள்ளது.

இப்பொழுதுள்ள கேள்வி என்ன வென்றால் இந்த சுதந்திரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்தப் பொகிறோம் என்பது தான்.

நீங்கள் கூறி இருக்கின்றீர்கள் இங்கு கூறப்படும் கருத்துக்கள் எமக்கு எதிராக திரும்பலாம் என்று, இது என்னை பொறுத்தவரையில் நடக்க கூடாத ஒன்று, ஏன் என்றால் தமிழீழம் என்னும் தாய் கருத்து நீதியானதென்றால், அதற்கு எதிரான கருத்துக்களில் நியாயம் இருக்க வாய்பில்லை, அப்படி இருக்கும் போது இங்கு தமிழீழதிற்கு எதிரன கருத்துக்கள் வெற்றி பெறுகின்றன என்றால், அது எம்முடைய அறியாமையையும் முயர்ச்சியின்மையையும் தானே காட்டுகின்றது?

கருத்துச்சுதந்திரம் எங்கும் இருந்ததில்லை... இருக்கும் அளவுக்கும் முடிந்தளவும் முயல்வதே நல்லது.

இதுக்கு யாழ்களம் கூட விதிவிலக்கில்லை.. எங்களின் பொது இலக்கை நோக்கிசெல்வதே நல்லது... அதுக்கா நீங்கள் நீதிகேட்கவேண்டாம் எண்டு சொல்லவில்லை... கேட்டுகிடைக்குமாக இருந்தால்?

  • தொடங்கியவர்

உண்மைதான் ஆனால் ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.