Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவளின் குழந்தைக்கு என் பெயர் இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொன்னால் நம்பமாட்டியள். அவளைப் போய் பார்க்கும் வரைக்கும் அவள் தன்ரை குழந்தைக்கு என்ர பெயரைத்தான் வைச்சுக்கொண்டிருப்பாள் எண்டு நான் நம்பிக்கொண்டிருந்தன் எண்டால் நான் எவ்வளவு பெரிய லூசுப் பயல் எண்டு தெரிஞ்சு கொள்ளுங்கோ. அதை விடப் பெரிய பைத்தியக்காரனத்தனம் ஏதோ பந்தயம் கட்டிச் சொல்லுறது போல கூட வந்தவனுக்கும் அதைச் சொன்னது தான். அவன் ஏதோ அதிசயத்தை பார்ப்பது போல என்னை பார்த்தான். இதிலென்ன ஆச்சரியம் இருக்கு ? ஆட்டோ கிராப் படத்தில கூட செந்தில் என்ற சேரனது பெயரைத்தான் கமலா தன்ரை பிள்ளைக்கு வைச்சிருந்தாள் என்று நான் அவனுக்கு சொல்லுவமோ என வெளிக்கிட்டு பிறகு சொல்லாமல் விட்டிட்டன். ஏனென்றால் கமலா தன்ரை இரண்டாவது பிள்ளைக்கு இன்னுமொரு பெயரை வைத்தாள் என்பதைச் சொல்லி அவன் என்னை நக்கலடிப்பான். என்னை நக்கலடிச்சாலும் பரவாயில்லை - அவளை ? அவளை நக்கலடிச்சாலும் பரவாயில்லை. எங்கடை காதலை ..?

காதலோ .. ? இதே மாதிரித்தான் இதேயளவு ஆச்சரியத்தோடுதான் நேற்றிரவு அவனும் கேட்டான். அப்பிடிக் கேட்டதுக்கு அவன் சரியா கவலைப்பட்டிருப்பான். என்ரை கதையைக் கேட்டு இல்லை. காதலோ எண்டு கேட்ட ஒரே காரணத்திற்காக அவனைப் பிடிச்சு வைச்சு பின்னிரவு தாண்டிய பிறகும் நித்திரை கொள்ள விடாமல் அறுத்தெடுத்ததையெண்ணி சரியா கவலைப்பட்டிருப்பான். ஆனால் எனக்கு அதுக்குப் பிறகுதான் ஆறுதலாயிருந்தது. பின்னே - எட்டு ஒன்பது வருசமா மனதிற்குள்ளை வைச்சிருந்து பிசைந்து பிசைந்து - களி கிண்டி - சொறி ஏதோ நினைப்பில சொல்லிட்டன் .- அப்பிடியே பிசைந்து பிசைந்து - மாவாக்கி - அடச்சே - ஓகே முதலேயிருந்து - எட்டு ஒன்பது வருசமா மனதிற்குள்ளை வைச்சிருந்து பிசைந்து பிசைந்து அப்பிடியே ரோசாப்பூ முள்ளாலை இதயத்தை சுத்தியிருக்கிற அந்த தசையை விறாண்டி எடுக்கிற வலியை இறக்கி வைச்சால் ஆறுதலா இருக்குமா இருக்காதா ?

சரியடாப்பா உவ்வளவு டீப்பான காதல் பிறகெப்பிடி பிரிஞ்சு போனதென்று அவன் இப்ப கேட்கிறான். - அது ஏன் டீப்பான காதல் என்று முழுக் கதையையும் கேட்ட அவனுக்குத்தான் தெரியும். உங்களுக்குத் தெரியாது. -இந்தக் கேள்வியை நேற்றே கேட்டிருந்தால் விடியும் வரை சிவராத்திரிதான் என்று அவன் நினைச்சிருப்பான் போல. ஆனால் உண்மை என்னவென்றால் இந்தக் கேள்விக்கு என்னட்டைப் பதிலே இல்லை. ஏன் பிரிந்தோம் ?

நான் பதிலேதும் சொல்லவில்லை. சொல்லனடா ஏன் பிரிஞ்சனியள் - நீ ஏமாத்திட்டு ஓடிட்டியா ?

என்ன வார்த்தையடா சொன்னாய் நண்ப, சே, அமைதியா இருக்கிறதும் சில நேரங்களில பிழைதான் போல இருக்கு. அதனால் நான் பேச்தொடங்கினேன்.

ம்.. ஏன் பிரிஞ்சோம்.. அதுக்கு முதல் ஏன் இணைந்தோம்? காரணம் தெரியுமா ? இல்லை.. இந்த உலகத்தில எதுக்குமே காரணம் இல்லை. நாங்கள் இணைந்ததற்கே காரணம் இல்லாமல் இருக்கும் போது பிரிந்ததற்கு எப்படி காரணம் இருக்க முடியும். ? சரி பிரிந்தோம் - ஏன்

காதல் கடல் இரண்டுக்குமே கே ஏ டி ஏ ஏ எல் தான். காதல் இணைத்தது கடல் பிரித்தது. காலம் பிரித்ததென்றும் சொல்லலாம். கடைசியா சொன்ன காலம் பிரித்ததென்றும் சொல்லலாமை கமலகாசன் மாதிரி சொல்லிட்டு அவனைப்பார்த்தேன்.

அவன் குழம்பியிருப்பான் எண்டு நம்பினேன். சான்சே இல்லை . அவன் தெளிவா அடுத்த கேள்வியைக் கேட்டான். டேய் கேட்டதுக்கு மட்டும் பதிலைச் சொல்லு. ஏன் உங்கடை காதல் இல்லாமல் போனது?

இதுக்குப் பதில் சொல்ல முதல் இவனிடம் நான் சில கேள்விகளைக் கேட்க வேணும். அப்பதான் இவனுடைய மனநிலை என்ன என்பதை அறியலாம். அதில்லாமல் இவன் ஒரு காதல் புனிதப் பெருமானாக இருந்தால் நான் நடந்ததைச் சொல்ல என்னை காதலரின் வரலாற்றுக் கறை ஆக்கிப் போடுவான்.

கால இடைவெளியும் தூர இடைவெளியும் காதலைக் கரைக்குமா ? என்பது தான் என்ரை முதற்கேள்வி. ஓம்.. அப்பிடிக் கரைச்சிருக்கு. கரைக்கும் தான். உப்பிடி நிறையக் காதல் அடிபட்டுப் போயிருக்கு. அதிலயொண்டும் பிழையில்லை. இங்கை யாரும் யாரையும் ஏமாத்தேல்லை. இயல்பா நடக்குது. அதற்குரிய நேரத்தையும் கால அவகாசத்தையும் எடுத்துக்கொண்டு இயல்பா நடக்குது. உந்தப் பயத்திலதான் காதலிக்கிறவை எங்கையாவது பிரிஞ்சு வாழ நேர்ந்தால் ரகசியமா கல்யாணத்தைக் கட்டியோ அல்லது வீட்டை சொல்லி எல்லாருக்கும் அறிவிச்சுப் போட்டோ போறவை.

இதுக்குப் பிறகு அவனுக்கு நான் என்ன நடந்தது எண்டதை சொல்லலாம் பிரச்சனையில்லை- ஆனா அதுக்குடனை அவளின்ரை வீடு வந்திடும் எண்ட படியாலை உது தானடா எனக்கும் நடந்தது எண்டு சொல்லிக்கொண்டேன்.

அவள் இப்ப எப்பிடியிருப்பாள்? முந்தி.. முந்தியெண்டால் ஒரு ஒன்பது பத்து வருசத்துக்கு முதல் வகுப்பில பெட்டையளில அவள்தான் வடிவு. பெடியங்களில ….. வேண்டாம் .. அதையெதுக்கு இங்கை தேவையில்லாமல் ? வடிவெண்டு மட்டுமில்லை. நல்லா படிக்கவும் செய்வாள். பிறகு .. பிறகென்ன பிறகு.. அப்பிடியே பின்னாலை முன்னாலை திரிஞ்சு கானா பிரபா சொன்ன எல்லா வழிமுறைகளையும் கையாண்டு விழுந்து எழும்பி தட்டுத் தடுமாறி ஒரு ஆறுமாதத்துக்குப் பிறகு சிரித்துப் பதில் சொன்னாள். ம்.. இங்கை ஒரு பெரு மூச்சை நீங்களும் விட்டுக்கொள்ளுங்கோ. எல்லாம் அடுத்த ஆறுமாதம்தான். அந்த ஆறுமாசத்தில கோயிலுக்கு போறதும் ஒழுங்கை முகப்புகளில (மறைப்புகளில எண்டு வாசித்து தொலைக்காதீங்கோ) நிண்டு கதைக்கிறதுமா காலம் தன்னைத் தானே விழுங்கியது. பிறகு அதே காலம் இரு காதற் குருவிகளை கொடும்பற்கள் கொண்டு கவ்வி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போட்டது.

இதோ அந்தக் காலம் இந்தப் புள்ளியிலும் வந்து நிற்கிறது. கொஞ்ச நாளைக்கு முதலே அவள் வேலை செய்யும் இடமறிந்து அவள் திருமணம் செய்த செய்தியறிந்து அப்போ தேவையே இல்லாமல் ஏற்பட்ட சின்னதொரு ஏமாற்றத்தையும் தாங்கிகொண்டு அவளைச் சந்திக்கும் விருப்பைச் சொல்லி பெற்றதிந்த சந்தர்ப்பம்.

மச்சான் நான் சொன்னதையொன்றும் அங்கை வைச்சு கேட்டுப்போடாதே. ஒண்டாப் படிச்ச பொடியன் எண்டுதான் போறன். என்று கூட வந்தவனுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு உள்ளை போனம்.

அந்தக் கணங்களை நீங்கள் ஒவ்வொருத்தரும் அனுபவித்தே புரிந்து கொள்ளுங்கோ. ஏனென்றால் அதை என்னால் விளக்க முடியாது. அவள் அவளின் அப்பா அம்மா குழந்தை எல்லோரும் அங்கிருந்தார்கள். அவர் வேலை விசயமாய் வெளிய போயிட்டதாய்ச் சொன்னாள். படங்களில் நின்ற அவரை எனக்கு முன் தெரிந்திருக்கவில்லை. அவளிடம் கேட்கவும் முயலவில்லை. அவளின் அப்பா இயல்பாக அளவளாவிக் கொண்டிருந்தார். அவருக்குப் பயந்த காலமொன்று எனக்கு உளது. இனி கேட்டுவிட வேண்டியதுதான் என நான் நினைத்தேன். அம்மாவின் சட்டைக்குப் பின்னால் ஒளிந்திருந்த குழந்தையைத் தூக்கி பெடியனுக்கு என்ன பெயர் என்றேன்.

…….

அது என்ரை பெயர் இல்லை. கடவுளே பக்கத்தில் நிற்கிறவன் சிரித்துத் தொலைத்துவிடக்கூடாது. குழந்தையை இறக்கி விட அது திரும்பவும் அம்மாக்கு பின்னால் ஒளித்துக் கொண்டது. மதியம் சாப்பிட்ட பிறகு தொடர்ந்தும் அங்கு இருப்பதற்கு காரணமேதுமில்லை. கிளம்பும் போது அவள் மட்டும் வாசல்வரை வந்தால் நல்லாயிருக்கும் போலத் தோன்றியது. வந்தாள்.

இதை கேட்கிறது லூசுத்தனம் எண்டு தெரியும்தான். இருந்தாலும் கேட்கிறன். வேறெந்தக் காரணமும் இல்லாமல் ஒரு ஆவணப்படுத்தலுக்கு எண்டு நினைத்துக் கொள்ளு…. என முடிச்சதை கொள்ளும் என முடித்தேன். என்ன என பார்வையால் வினவினாள்.

இல்லை.. நான் முந்தி எழுதின கடிதங்கள் ஏதாவது இருந்தால் தாரும்.

திடீரென்று அவள் அமைதியாகி பிறகு கலகலப்பானாள். பிழையா நினைக்க வேண்டாம். ஒன்பது பத்து வருசமாச்சு. இப்ப வந்து கேட்டால்… சரி என்னை விடுங்கோ.. நான் கேட்டால் தாறதுக்கு நீங்கள் வைச்சிருக்கிறியளோ என்று கேட்டவளுக்கு நான் பதில் சொல்லவில்லை. ஆனால் பர்சை எடுத்து விரித்து அதன் அடியிலெங்கோ மடித்து வைத்திருந்த ரோசா படம் ஒட்டிய பழுப்பேறிய தாளைக் காட்டினேன். இந்த இடத்தில் அவள் கண்ணீர் வடிப்பாள் அல்லது விக்கித்த நிற்பாள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. அவள் சொன்னாள்.

இதை நீங்கள் ஆம்பிளையள் வைச்சிருக்கிறதுக்கும் நாங்கள் பொம்பிளையள் வைச்சிருக்கிறதுக்கும் இந்த சமூகத்தில நிறைய வித்தியாசம் இருக்கு.

அந்தத் தாளை மடித்து மீண்டும் உள்ளே வைத்தேன். உள்ளே வேறும் சில மங்கிய தாள்களும் அம்பு கிழிக்கும் இதயத்தின் படங்களும் இருந்தன. அவை அவளுடையவை அல்ல.

அது இருக்கட்டும் சயந்தன். எண்ட கேள்வி உங்கட குழந்தைக்கு அவள் பெயர் வைப்பீங்களோ சயந்தன்.. ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே பின்னாலை முன்னாலை திரிஞ்சு கானா பிரபா சொன்ன எல்லா வழிமுறைகளையும் கையாண்டு விழுந்து எழும்பி தட்டுத் தடுமாறி ஒரு ஆறுமாதத்துக்குப் பிறகு சிரித்துப் பதில் சொன்னாள். ம்..

அது என்ன கானாபிரபா சொன்ன வழிமுறைகள்?

அந்தத் தாளை மடித்து மீண்டும் உள்ளே வைத்தேன். உள்ளே வேறும் சில மங்கிய தாள்களும் அம்பு கிழிக்கும் இதயத்தின் படங்களும் இருந்தன. அவை அவளுடையவை அல்ல

உதுக்கு பெயர் தான் ஆம்பிளைகளோ? :icon_idea::(:(

திடீரென்று அவள் அமைதியாகி பிறகு கலகலப்பானாள். பிழையா நினைக்க வேண்டாம். ஒன்பது பத்து வருசமாச்சு. இப்ப வந்து கேட்டால்… சரி என்னை விடுங்கோ.. நான் கேட்டால் தாறதுக்கு நீங்கள் வைச்சிருக்கிறியளோ என்று கேட்டவளுக்கு நான் பதில் சொல்லவில்லை

உதுக்கு பெயர் தான் பொம்பிளயளோ..... :D:):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுக்கு பெயர் தான் ஆம்பிளைகளோ? :D:D:lol:

உதுக்கு பெயர் தான் பொம்பிளயளோ..... :D:):D

உதுக்கு பெயர்தான் காதலோ....... :lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள்

இப்படிக்கு

பாண்டிய மன்னன்

பாண்டிய மன்னவனுக்கு எத்தனை பெண்டாட்டிகள் சயந்தன்?ஹிஹி.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கு பெயர்தான் காதலோ....... :):wub::wub:

இல்லை.உந்த இரன்டும் தான் யதார்த்தம் :wub::lol:

புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள்

இப்படிக்கு

பாண்டிய மன்னன்

:)ஏன் உங்கடை காதலும் பெண்களின் கூந்தலில் இயற்கையாகவே ஈர், பேன் சா..... சா.... வாசனை உண்டா என்ற பிரைச்சினையிலா முறிந்தது. :wub:

உதுக்கு பெயர் தான் ஆம்பிளைகளோ? :lol::lol::lol:

எரியும் வீட்டில் குளிர் காயும்,வெண்ணிலா, தாங்க முடியல்ல.

மெல்பனில் இருக்கும் மாகாராசட்ட சொல்லி அழுகிறதை தவிர எனக்கு என்ன வழி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.