Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்த ஆண்டில் 4,335 எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு – ஏ.எப்.பீ.

Featured Replies

2008ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இடம்பெற்ற மோதல்களில் 4,335 தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய பாதுபாப்பு அமைச்சை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் 399 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம்(ஜூன்19) வடக்கில் இடம்பெற்ற மோதல்களில் இரண்டு படையினரும், 26க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் பாதுகாப்பு அமைச்சு புதிய புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.

நன்றி : www.lankadissent.com

எந்த பதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு என்று எழுதுங்கள் அல்லது மகிந்த இனவாத குழு என்று எழுதுங்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாக் கணக்கு விடுகினம்.

படையினர் வெளியிட்டுள்ள எண்ணிக்கையை நான்கால் பிரித்தால் வரும் எண்ணிக்கையைவிட சற்றுக்குறைவானது இதுவரையான வீரச்சாவுகள்.

ஆனால் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வீரச்சாவு வீதம் சற்று அதிகமானது என்பது உண்மையே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மின்னல் சொல்வதைப்போல் தான் உண்மை நிலைவரமுள்ளது.

ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கைக் காலத்திற்கூட (நிறைய வலிந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்ட போதும்) இப்படியான இழப்புக்களில்லை.

ஆட்சேர்ப்புக்கான சாத்தியங்கள் பூச்சியத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தநிலை கவலைக்கிடமானதுதான்.

புலத்தில் அரசியல் எழுச்சி மிக உச்சமாக இருக்க வேண்டிய தருணமிது.

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம், துணைக்குழுக்களால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழர்கள், கொல்லப்பட்ட அப்பாவித்தமிழர்கள் எல்லாரையும் சேர்த்து புலிகளாகக் கணக்குக் காட்டினாலும் 4355 ஆக வருமா?

மின்னல் சொல்வதைப்போல் தான் உண்மை நிலைவரமுள்ளது.

ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கைக் காலத்திற்கூட (நிறைய வலிந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்ட போதும்) இப்படியான இழப்புக்களில்லை.

ஆட்சேர்ப்புக்கான சாத்தியங்கள் பூச்சியத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தநிலை கவலைக்கிடமானதுதான்.

புலத்தில் அரசியல் எழுச்சி மிக உச்சமாக இருக்க வேண்டிய தருணமிது.

நல்லவன் ஜெயசிக்குறு தொடங்கப்பட்ட 1997ம் ஆண்டு 2112 போராளிகள் வீரச்சாவடைந்திருந்தனர். ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிராக மூன்று ஊடறுப்புத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தன. அந்த மூன்று ஊடறுப்புத் தாக்குதல்களிலும் சேர்ந்து 500ற்கும் குறைவான போராளிகளே வீரச்சாவடைந்தனர். ஏனையோர் படை நடவடிக்கைகளிற்கு எதிரான சமரிலேயே வீரச்சாவடைந்தனர்.

ஜெயசிக்குறு படைநடவடிக்கை காலத்தில் பாரியளவில் படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஒரு படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அடுத்த படை நடவடிக்கை சில நாட்கள் சில வாரங்களின் பின்பே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது நாள்தோறும் மோதல்கள் ஒரே நாளில் பல முனைகளில் பல்வேறு முயற்சிகள். சிறு நகர்வு முயற்சி என்றாலும் முன்னரைவிட பல மடங்கு எறிகணைச் சூட்டாதரவு. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் ஆயிரம் வரையான போராளிகள் வீரச்சாவு. இது பாரிய இழப்புத்தான். அதற்காக புலிகளின் ஆட்பலத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படவில்லை. புலிகளின் ஆட்பலம் எப்போதும் இல்லாத உச்ச நிலையிலேயே இப்போது நிற்கிறது.

வன்னியில் வீட்டுக்கொருவர் போராளியாக இணைக்கப்பட்டிருப்பதால் அங்கு புதிதாக ஆட்சேர்ப்பு சற்று மந்தமாக இருக்கலாம். ஏனைய பகுதிகளில் ஆட்சேர்ப்பிற்கான சாத்தியங்கள் சாத்தியமாக காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: அப்படியும் வராது. அதுசரி, இந்த ஆண்டுத் தொடக்கத்தில புலிகளிட்ட வெறும் 3000 போராளிகள் தான் இருக்கிறார்கள் எண்டு ராணுவத் தளபதி அறிக்கை விட்டவரல்லோ ? ஆராவது அவரிட்டப் போய் இப்ப என்னெண்டு 4300 பேரைக் கொன்றனீங்கள் எண்டு கேட்கமட்டினமோ ?

அவர் சொன்னது அவருக்கே ஞாபகமிருக்கோ தெரியாது. பாவம் மனுசன் வயசு போன காலத்தில நாலு பகிடியச் சொல்லிக் காலத்தைக் கடத்தலாம் எண்டு பாத்தால் வருகினம் எல்லாரும் கேள்வி கேட்டுக் கொண்டு !

:icon_idea: அப்படியும் வராது. அதுசரி, இந்த ஆண்டுத் தொடக்கத்தில புலிகளிட்ட வெறும் 3000 போராளிகள் தான் இருக்கிறார்கள் எண்டு ராணுவத் தளபதி அறிக்கை விட்டவரல்லோ ?

அதை பிறகு 5000 எண்டு உயர்த்தினதாக ரொய்டரும் ஏ.எப்.பியும் அடிக்கடி தங்கட செய்தியிலை கடி கொடுக்கினம்.

இராணுவத்தின் இழப்பைப்பற்றியும் இவர்கள் கச்சிதமாய்ச் சொல்வதில்லை.

உண்மை எப்போதுமே இன்பமாக இருக்காது...

1000 மோ 5000 மோ...... எதுவக இருந்தாலும் இன்னும் எண்ணப்படப்போகிறது...

அதுதான் வலிக்கிறது...

இராணுவத்தின் இழப்பைப்பற்றியும் இவர்கள் கச்சிதமாய்ச் சொல்வதில்லை.

இப்போதைய காலத்தில் நம்மவர்களும் எண்ணிக்கை சொல்வதில்லை. ஆனால் வீரச்சாவடைந்த அனைவரின் விபரமும் வெளியிடுகிறார்கள்.

சிறீலங்கா இராணுவ இழப்பு எவ்வளவாக இருந்தாலும் எம் மக்களின் இழப்பு 10ஆக இருந்தாலும் எமக்கு எம் இனத்திற்கு கடும் இழப்பு ஏன் எனில் எம் மக்களின் எண்ணிக்கை தற்பொழுது அப்படியா இருக்கிறது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.