Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலங்குவானூர்தி மீது சத்தமற்ற தாக்குதலை நடத்திய புலிகள்: கேகலிய

Featured Replies

உலங்குவானூர்தி மீது சத்தமற்ற தாக்குதலை நடத்திய புலிகள்: அமைச்சர் கேகலிய

[புதன்கிழமை, 02 யூலை 2008, 07:53 பி.ப ஈழம்] [வவுனியா நிருபர்]

அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்குடாவில் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் சத்தமற்ற தாக்குதலையே நடத்தியுள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மெலாக இருந்த பகுதிகளை படையினர் கைப்பற்றியிருப்பது அரசாங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

நெல் விளையும் பாரிய நிலப்பரப்பையே படையினர் இன்று மீட்டுள்ளனர். இது ஒரு வரலாற்று வெற்றியாகவே கருதப்படுகின்றது.

இதுவொரு இராணுவ வெற்றி மட்டுமல்ல, அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

மீட்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இத்தகைய திட்டங்கள் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாண மக்கள் தீவிரவாதத்தை விரும்பவில்லை என்பது உலகிற்கு இத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் உணர்த்தப்படும். அப்படி ஒரு நிலை வருவதை விரும்பாத புலிகள் தற்போது கிழக்கு மாகாணத்தில் ஒரு பதற்றமான நிலையை தோற்றுவிப்பதற்கு முனைகின்றனர்.

அறுகம்குடா பாலத்திறப்பு விழாவுக்குச் சென்றபோது அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினைக் குறிவைத்து உலங்குவானூர்தி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். புலிகள் தன்னை இலக்கு வைத்தால் அதனைச் சவாலாக தான் ஏற்றுக்கொள்வதாக இம் மாநாட்டில் தெரிவிக்கும்படி அரச தலைவர் என்னிடம் கூறினார்.

அரச தலைவர் சென்ற உலங்குவானூர்தி மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக பொய்யான தகவல்களை சிலர் வெளியிடுகின்றனர். அதில் உண்மையில்லை.

அரச தலைவரின் பயணத்தின்போது உலங்குவானூர்திகள் செல்வது வழக்கம். அன்றைய நாளும் அரச தலைவரின் பயணத்தினை முன்னிட்டு அப்பகுதியால் சென்ற உலங்குவானூர்தியின் இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதையடுத்தே அது தரையிறக்கப்பட்டது. தரையிறக்கிய பின்னர் அதனைப் பரிசீலித்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு அது இலக்காகியிருப்பது தெரியவந்தது.

சத்தமின்றி இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெறுகின்றன. தாக்குதலுக்கு இலக்கான உலங்குவானூர்தியின் எண்ணெய்த் தாங்கி பகுதியில் துப்பாக்கிக்குண்டு ஒன்று பாய்ந்துள்ளது.

தற்போது இந்த உலங்குவானூர்தி கட்டுநாயக்காவில் உள்ள வான்படைத்தளத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

புலிகளுக்கு எதிரான போரில் தனது உயிரைப் பணயம் வைத்தேனும் வெற்றியீட்டுவதில் அரச தலைவர் உறுதியுடன் உள்ளார். போரில் வெற்றியீட்டுவதில் அவர் உறுதியுடன் இருக்கிறார். அதற்காக எந்த தியாகத்தையும் அவர் மேற்கொள்ளத் தயாராகவே இருக்கிறார் என்றார் அவர்.

புதினம்

ஓ..உப்படி வேற பிரச்சினை இருக்கோ.. <_< (சத்தமா நடத்தி இருந்தா)..திருப்பி தாக்கி இருப்பியள் எண்டு சொல்லுறியளோ அப்ப எனி தாக்கும் போது தொலைபேசி எடுத்து உங்கட்ட சொல்லி போட்டு தாக்க சொன்னாலும் சொல்லுவியள் போல இருக்கு.. <_<

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

*** துடைத்தெறிந்துவிட்டோம் என்று சொன்னவையள் அல்லோ அதுதான் **இருக்கிறம் பாருங்கோ எண்டு அண்ணையவை கொடுத்த அடி!!!

ஒரு பழமொழி இருக்கு ஒரு முட்டையைப் போட்டுவிட்டு கோழி கொக்கரிச்சுக்கொண்டே திரியுமாம் ஆயிரம் முட்டையைப்போட்டாலும் ஆமை அமைதியாத்தான் இருக்குமாம்...இன்னும் ஒண்டும் சொல்லலாம் நிறை குடம் தளும்பாது. அங்க பிடிச்சிட்டம் இங்க பிடிச்சிட்டம் எண்டு சிங்களம் சொல்லிக் கொண்டு திரியேக்குள்ளேயே விளங்க வேணும் அவைக்கு பிடிச்சது பீதியெண்டு <_<

*** துடைத்தெறிந்துவிட்டோம் என்று சொன்னவையள் அல்லோ அதுதான் **இருக்கிறம் பாருங்கோ எண்டு அண்ணையவை கொடுத்த அடி!!!

ஒரு பழமொழி இருக்கு ஒரு முட்டையைப் போட்டுவிட்டு கோழி கொக்கரிச்சுக்கொண்டே திரியுமாம் ஆயிரம் முட்டையைப்போட்டாலும் ஆமை அமைதியாத்தான் இருக்குமாம்...இன்னும் ஒண்டும் சொல்லலாம் நிறை குடம் தளும்பாது. அங்க பிடிச்சிட்டம் இங்க பிடிச்சிட்டம் எண்டு சிங்களம் சொல்லிக் கொண்டு திரியேக்குள்ளேயே விளங்க வேணும் அவைக்கு பிடிச்சது பீதியெண்டு <_<

அடடா...இன்னைக்கு தான் இந்த பழமொழியை கேட்கிறன் நன்னா இருக்கு தமிழ் தங்கை அக்கா <_< ..அவைக்கு பிடித்தது பீதியோ இல்லையோ எங்கன்ட ஆட்கள் சில பேர் கொஞ்ச நாளா வாந்தி எடுத்தவை அல்லோ அவைக்கு நன்ன மருந்து அக்கா.. <_<

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
<_< சத்தம் வராமல் துவக்குக் குண்டை கற்றப் பொல்லிலை வைச்சு அடிச்சிருப்பாங்கள் எண்டு நினைக்கிறன். சில நேரம் சைக்கிள் றியுப்பிலை வைச்சு இழுத்தும் விட்டிக்கலாம். <_<

<_< சத்தம் வராமல் துவக்குக் குண்டை கற்றப் பொல்லிலை வைச்சு அடிச்சிருப்பாங்கள் எண்டு நினைக்கிறன். சில நேரம் சைக்கிள் றியுப்பிலை வைச்சு இழுத்தும் விட்டிக்கலாம். <_<

சாத்(திரி) அங்கிள் நீங்கள் வந்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரா இருந்திருக்க வேண்டியவர்..உங்க நின்று குப்பை கொட்டுறியள்.. <_<

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

இனி றம்புக்கலவுக்கு காதுக்குள்ள வெடி கொளுத்தி போட்டால் தான் காது கேட்கும் போல. <_<<_<

<_< சத்தம் வராமல் துவக்குக் குண்டை கற்றப் பொல்லிலை வைச்சு அடிச்சிருப்பாங்கள் எண்டு நினைக்கிறன். சில நேரம் சைக்கிள் றியுப்பிலை வைச்சு இழுத்தும் விட்டிக்கலாம். <_<

கேற்றபோல் போல அடிக்க சிலர் தங்கள் கோவணத்தையும் கொடுப்பினமாம் <_<

கேட்கிறவன் கேணயனாய் இருந்தால். . . . .இன்னமும் சொல்லுவாங்கள்.. . . . நல்ல காலம் பறவை மோதி ஓட்டை விழுந்திட்டுது என்டு சொல்லாமல் விட்டிட்டான் உந்த . கேகலிய. . .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.