Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரித்திரன் சுந்தர் அவர்களது காலத்தால் அழியாத கருத்தோவியங்கள் சில

Featured Replies

humor-1.jpg

humor-2.jpg

humor-3.jpg

humor-4.jpg

humor-5.jpg

humor-6.jpg

humor-7.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரித்திரனின் சிந்தனைச்சித்திரங்கள் என்றும் மறக்க முடியாதவை ^_^

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியசாலையில் இரைமீட்டிய நகைச்சுவை சிரிக்கவும் வைக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

m2sx7.jpg

கேள்வி - கோமாளிக்கும் ஏமாளிக்கும் என்ன வித்தியாசம் ?

மகுடி- கோமாளி கொள்கை இல்லாமல் தேர்தலில் நிற்பான், ஏமாளி அவனுக்கு ஓட்டுப் போடுவான்.

கேள்வி - மகுடியாரே குடிகாரனுக்கும், யோகிக்கும் என்ன ஒற்றுமை ?

மகுடி - இருவரும் தண்ணியில் நடப்பவர்கள்.

கேள்வி - உமக்கு எப்போது சிரிப்பு வருகிறது ?

மகுடி - தேசியப்பற்று இல்லாத மக்கள் தேசியப்பாடலுக்கு எழுந்து நிற்கும்போது சிரிப்பு வருகிறது.

கேள்வி - பெண்களை அடிமையாக வைத்திருக்க வேண்டுமென விரும்புவபன் பற்றி உங்கள் கருத்து என்ன ?

மகுடி - தன்னை ஈன்றவளும் ஒரு பெண் என்று உணராத ஈனப்பிறவி.

கேள்வி - தமிழர் நாலுபேர் கூடினால் ?

மகுடி - ஒன்று சீட்டாடுவர் அல்லது சீட்டுப்பிடிப்பர்.

கேள்வி - விவசாயிக்கும் சாப்பாட்டு ராமனுக்கும் என்ன வித்தியாசம் ?

மகுடி - விவசாயி ஆற்றங்கரையில் விழித்திருப்பான், சாப்பாட்டுராமன் அடுப்பங்கரையில் விழித்திருப்பான்.

கேள்வி - பதவி மோகம் எப்படிப்பட்டது ?

மகுடி - தாய் குறுக்கே நின்றாலும் எதிரியுடன் சேரும்.

கேள்வி - மனிதனுக்கு மனச்சாட்சி இருந்தால் ?

மகுடி - வாங்கிய சீதன வீட்டில் நித்திரை வராது.

கேள்வி - எமது அரசியல் பாதை குருடா ?

மகுடி - ஒற்றைக் கண்ணன் சோல்பரியின் து}ரதிருட்டி இல்லாத பார்வையால்தான் குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டன.

கேள்வி - குடிகாரனைப்பற்றிக் கூறும் மகுடியாரே ?

மகுடி - செண்பகக் கண், தென்னை மரம்போல ஓர் ஆட்டம், வீட்டு விலாசம் தெரியாத நிலை.

கேள்வி - சந்தோசமாக இருக்க வழி கூறும் மகுடியாரே ?

மகுடி - சோம்பலாக இருக்காதே, சுறு சுறுப்பாக இரு ! தேனீக்கு அழுவதற்கு நேரமில்லை என்று கூறுவதுண்டு, அந்த வழியைப் பின்பற்று.

கேள்வி - புத்த மதத்திற்கு முதல் இடம் வேண்டும் என்கிறாரே ஒரு பிக்கு?

மகுடி - புத்தர் உதறித்தள்ளிய சிங்காசனத்தில் ஏறிக் குந்தியிருக்கப் போகிறார் போலும்.

கேள்வி - பெண்களைக் கேலி செய்பவன் பற்றி ?

மகுடி - தன் சகோதரியை பிறர் கேலி செய்வதை மறந்த மூடன்.

கேள்வி - பணக்காரப் பெண்ணுக்கும் ஏழைப் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம் ?

மகுடி - பணக்காரப்பெண் அன்ன நடை, ஏழைப்பெண் அன்னத்திற்கு நடை.

கேள்வி - ஒரு துறவியின் வாழ்க்கையைப்பற்றி என்ன நினைக்கிறீர் ?

மகுடி - கனவென்னும் வாழ்வில் கனவு கண்டதுதான் மிச்சம் என்று நினைக்கின்றேன்.

கேள்வி - நண்பர்கள் உதிருவது எப்போது ?

மகுடி - உன் திறமை மலரும்போது.

கேள்வி - பெண்களுக்கு ஏன் இந்த நகைப் பைத்தியம் ?

மகுடி - கணவன் குடித்து குடலறுந்தால் அதை விற்று வைத்தியம் செய்வதற்கு.

கேள்வி - பொறாமைபற்றி உங்கள் விளக்கம் என்ன ?

மகுடி - தன்னைத்தானே சித்திரவதை செய்யும் துன்பியல் முயற்சி.

கேள்வி - குயிலின் குரல் இனிமையாக இருக்கக் காரணமென்ன ?

மகுடி - காலையில் எழுந்ததும் சாதகம் பண்ணுகிறது.

கேள்வி - நாங்கள் எதை விரும்புகிறோம் எதை வெறுக்கிறோம் ?

மகுடி - வீடியோவிற்கு முகம் கொடுக்க விரும்புகிறோம், பிரச்சனைக்கு முகம் கொடுக்க விரும்பவில்லை.

கேள்வி - நாம் விடிவிற்கு என்ன செய்கிறோம் ?

மகுடி- விடிகாலைப் பொழுதில் பத்திரிகை பார்க்கிறோம் விடிவு வருமா என்று.

கேள்வி - இன்று எமது நிலையென்ன மகுடியாரே ?

மகுடி - அன்று பாவாடை விரித்து அரசியல்வாதிகளை வரவேற்றோம், இன்று ஆடை இல்லா அகதிகள் ஆனோம்.

கேள்வி - உமக்குப் புரியாத புதிர் என்ன ?

மகுடி - விவாகரத்து பெருகும் உலகில் எப்படி சனத்தொகையும் பெருகுகிறது என்பதுதான்.

கேள்வி - உணவா உரிமையா மேலானது ?

மகுடி - உணவு ! உடல் வாழ்ந்தால்தான் உயிர் வாழும். உயிரில்லாத உடலுக்கு உரிமை எதற்கு ?

கேள்வி - கழுத்தறுப்பு எங்கே நடைபெறுகிறது ?

மகுடி - பதவி வேட்டையின் போது.

கேள்வி - சொந்த மதத்தைவிட்டு பிற மதத்திற்கு மாறுவோரைப்பற்றி என்ன நினைக்கிறீர் ?

மகுடி - உனது குருவை மாற்றுவதால் நீ ஞானியாவதில்லை.

கேள்வி - எது நாட்டிற்கு நல்லது ?

மகுடி - சாணக்கியம் இல்லாத அரசியல்வாதி வாய்மூடி இருப்பதும், தலையில் விடயம் இல்லாத எழுத்தாளன் பேனாவை மூடி வைத்துவிட்டு இருப்பதும் நாட்டுக்கு நல்லது.

கேள்வி - கிரகப் பிரவேசத்தை நாம் விழாவாகக் கொண்டாடுவதன் அர்த்தம் என்ன ?

மகுடி - மக்களுக்கு சீதனமாகக் கொடுப்பதற்கு வீடு ரெடி என்பதை உலகிற்கு பறை சாற்றுவதற்கு.

கேள்வி - எவன் நாளையைச் சிந்திக்காதவன் ?

மகுடி - பத்திரிகையில் இன்றைய பலன் பார்ப்பவன்.

கேள்வி - பதவியில் இருப்போருக்கு ஏன் மாலை போடுகிறோம் ?

மகுடி - கழுத்துக்கு மேலே இருப்பது தலை என்பதை நினைவு படுத்துவதற்கு.

கேள்வி - பெண்கள் ஏன் எழுத்தாளனை திருமணம் செய்ய அஞ்சுகிறார்கள் ?

மகுடி - காகிதக் கப்பல் பொன்னும் மணியும் கொண்டுவராது என்பதால்.

கேள்வி - எவன் இனத்துரோகி ?

மகுடி - தனது இனத் தொழிலாளரை விலங்குகளாகப் பாவித்துக் கொண்டு தன் இனத்தின் பெருமையைப் பேசுபவன்.

கேள்வி - எப்படிப்பட்ட நட்பு முன்னேற்றத்திற்குத் தடையானது ?

மகுடி - பாPட்சைக் காலத்தில் முட்டாளின் நட்பும், போராட்ட காலத்தில் கோழையின் நட்பும் முன்னேற்றத்திற்கு தடையானது.

கேள்வி - நாட்டை எப்போது இருள் மூடுகிறது ?

மகுடி - கசடறக் கற்காதவர்கள் குருவாகும்போது.

கேள்வி - ஒருவனை உயிருள்ளவரை து}ற்றி, அவன் இறந்தபிறகு போற்றும் பண்புள்ளவரை எவ்வாறு கூறுவீர்?

மகுடி - பட்டினியால் இறந்தவனுக்கு திவசம் கொடுக்கும் புண்ணியவான்கள்.

கேள்வி - வரலாறு என்றால் என்ன ?

மகுடி - அம்பால் எழுத ஆரம்பித்து, துப்பாக்கியால் தொடர்ந்து, அணு குண்டால் முற்றுப்பெறப்போகும் சரித்திரம்.

கேள்வி - மூன்றாம் பிறை பார்த்து நாம் கண்டது என்ன ?

மகுடி - மூன்றாம் உலக நாடாய் இருக்கிறோம்.

கேள்வி - பொடி போட்டு யோசிப்பவனுக்கும், புகை விட்டு யோசிப்பவனுக்கும் என்ன வேறுபாடு ?

மகுடி - இருவருக்கும் போதை தேவையில்லை ! இருவரும் பேதைகள்.

கேள்வி- ஏன் நம்மவர்கள் கலைஞர்களை இறந்த பின்பு பாராட்டுகிறார்கள்?

மகுடி - உயிரோடு இருக்கும்போது வாழ்த்தினால் வளர்ந்துவிடுவார்கள் என்ற பொறாமையில்.

கேள்வி - பைத்தியக்காரனுக்கும், பத்திரிகைக்காரனுக்கும் உள்ள ஒற்றுமை என்ன ?

மகுடி - இருவருடைய சட்டைப் பைகளுக்குள்ளும் காகிதம் நிறைந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிறுவயதில் வாசித்து ரசித்த மகுடியாரின் ஒரு பகிடி:

கேள்வி: மகுடியாரே! தமிழனுக்கு எப்போது விழிப்பு வரும்

பதில்: வவனியா கடந்ததும் மதவாச்சியில் ஏறுபவர் நகிட்டப்பாங் என்னும் போது. :):(:wub:

குறிப்பு: நம்மவர்கள் அந்தக்காலத்தில் யாழப்பாணம் மெயிலில் காங்கேசந்துறைக்குச் சென்று இடம்பிடித்துக்கொண்டு படுத்துக் கிடந்து வரும் பழக்கம் இருந்தது. மற்றவர்கள் வந்து ஏறினாலும் எழும்ப மாட்டார்கள். மதவாச்சியில் சிங்களவர் ஏறும்போதுதான் எழுந்து இடந்தருவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சிரித்திரன் சுந்தர் அவர்கள் இன்றும் இருந்தால் , இப்போ நடப்பவைகளை பார்த்து தனது நகைச்சுவை மூலம் ஒரு கலக்கு கலக்கியிருப்பார் என்று நினைக்கின்றேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இரசித்த சுந்தரின் பதில் இதோ

கேள்வி: தமிழர்கள் சிலர் ஒன்று சேர்ந்தால் என்ன செய்வார்கள்?

பதில்: முதலில் சங்கம் அமைப்பார்கள் பின்பு சண்டை பிடிப்பார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.