Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவில் நாளை பாரிய வேலை நிறுத்தம்: தடுத்து நிறுத்துவதற்கு அரசு கங்கணம்

Featured Replies

சிறிலங்காவில் நாளை பாரிய வேலை நிறுத்தம்: தடுத்து நிறுத்துவதற்கு அரசு கங்கணம்

[புதன்கிழமை, 09 யூலை 2008, 05:27 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவில் சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது போக்குவரத்துச் சேவைகளை முடிந்தால் முடக்கிப் பார்க்கப்பட்டும் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெருமா சவால் விடுத்துள்ளார்.

போக்குவரத்துச் சேவைகளை நாளை நிறுத்திக் காட்டாவிடின் தனது தொழிற்சங்க தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தொழிற்சங்கத் தலைவருமான லால் காந்த பதிலுக்கு சவால் விடுத்துள்ளார்.

இதனையடுத்து இந்த விவகாரம் சிறிலங்காவில் பெரும் பூதாகாரமாக உருவெடுத்திருக்கிறது.

வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெருமா தெரிவித்துள்ளதாவது:

ஜே.வி.பியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ளன. தொழிற்சங்கங்களின் ஆதரவையே அதற்காக அக்கட்சிகள் கோரி நிற்கின்றன.

ஆனால் வழமை போன்று நாளைய நாள் போக்குவரத்துச் சேவைகள் நடைபெறும். சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்துகள் தமது பணியை வழமை போன்று நடத்தும். தொடருந்துகளும் வழமை போன்றே பயணிக்கும்.

முடிந்தால் சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குரிய ஒரு பேருந்தையாவது இவர்கள் நிறுத்திக் காட்டட்டும். அரசாங்க தொழிற்சங்கங்கள் எமக்குப்பின்னால் உள்ளன. வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதில்லை என அவை எமக்கு உறுதியளித்துள்ளன என்றார் அவர்.

அமைச்சர் டளஸ் அழகப்பெருமாவின் இந்த சாவல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தொழிற்சங்கத் தலைவருமான லால் காந்த தெரிவித்துள்ளதாவது:

5,000 ரூபா சம்பள அதிகரிப்பு கோரியே நாளைய நாள் வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கக்கூடாது என்று நாட்டின் பல பகுதிகளிலும் பேருந்துச் சாலைகளுக்குச் சென்ற காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் பேருந்துச் சாலைகளின் முகாமையாளர்களை சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு நாளைய நாள் வருகை தருமாறும் காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

இது அரசாங்கத்தின் மிரட்டலையே வெளிப்படுத்துகின்றது. வேலை நிறுத்தத்தை தடுப்பதற்காக அரசாங்கம் உயர்மட்ட உத்திகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த வேலை நிறுத்தத்தை போக்குவரத்துத்துறையினர் புறக்கணித்தால் உடனடியாகவே எனது தொழிற்சங்கத் தலைமைப் பதவியிலிருந்து விலகுவேன்.

அதேநேரம் நாளை நடைபெறவிருக்கும் தொழிற்சங்கப் போராட்டம் மீது அரசாங்கம் அடக்குமுறையை பிரயோகிக்க முயற்சித்தால் நாளை மறுநாள் கொழும்பில் அரசுக்கு எதிராக பாரிய நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் என்றார்.

இதேவேளை திட்டமிட்டபடி நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ரத்னபிரிய அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அரசாங்கத்திடம் சம்பள உயர்வை கோரி பல தடவைகள் பேசினோம். பலன் கிடைக்காததால் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். காவல்துறையினர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு எதிராக பல்வேறு அச்சுறுத்தல்களை விடுக்கின்றனர். இதற்கு நாம் மிரளப் போவதில்லை.

அத்தியாவசிய தேவையான மருத்துவத்திற்காக மட்டும் எமது உறுப்பினர்கள் நாளை வேலைக்குச் செல்வர். ஏனையவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் வேலை பறிபோகும் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

சுகாதாரத்துறையில் 70 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் நாளை வேலையை நிறுத்துவர். முடிந்தால் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்களின் வேலையைப் பறிக்கட்டும் பர்ர்க்கலாம்.

அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை செய்தால் மறுநாளான 11 ஆம் நாளே அரசுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கமும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் நாளைய நாள் சுகவீன விடுமுறையில் நிற்குமாறு இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக நாளை மேற்கொள்ளப்படவுள்ள இந்த வேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் நாளை பிற்பகல் 12:00 மணிக்கு சுகாதார அமைச்சுக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதுடன் அதனையடுத்து கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணியையும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

புதினம்

இண்டைக்கு வேலை நிறுத்தம் செய்வாங்கள் நாளைக்கு ஒண்டா இருந்து கைவாரும் அடிப்பாங்கள்...

பஞ்சத்தில இருந்தாலும் சிங்கள சனத்துக்கு போர் வேணுமாம்... ஆனா விலையும் ஏறக்கூடாது, ஆனா சம்பளமும் கூடவேணும்..

இதுக்கு JVP க்கும் எதிரா இல்லோ ஆர்ப்பாட்டம் செய்யவேணும்...

சிறீலங்காவின் புலனாய்வு துறையினர் எச்சரித்துள்ளனர். புலிகளின் தற்கொலைப்பிரிவினர் தெற்கில் தாக்குதல் நடாத்த உள்ளனர் என்று.

ஆகவே நாளை ஒருசில தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. பழிபோட புலிகள் உள்ளனர். நாளைக்கு பிள்ளையான் குழுவினருக்கு அதிக வேலைகள் தெற்கில் இருக்கும் போல தெரிகிறது. தாக்குதல் சம்பவம் இடம் பெற்றால் அதற்கு அரசாங்கம் பொறுப்பில்லை என்று பொறுப்பான(?) அமைச்சர் ஒருவர் வாய்திறந்துள்ளார்.

இன்னும் எவ்வளவு நேரம் பார்ப்போம்

போராட்டம் வெற்றியடைந்தாலும் எமக்கு சாதகம் இதை அரசு வன்முறைமூலம் தடுத்தால் அது பேருதவியாக அமையலாம்.

நாளைக்கு கொழுப்பில் மகிந்த ஒரு குண்டை வெடிக்கவத்து போராட்டத்தை நிறுத்துவார்

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்தியாகம் செய்யப் போகும் சிங்கள தேசபக்தர்களுக்கு முன்கூட்டிய எங்கள் அனுதாபங்கள். தமிழ் மக்கள் நாளை லீவு போட்டு விட்டு வீட்டிலிருப்பது மிகவும் விரும்பத் தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்தியாகம் செய்யப் போகும் சிங்கள தேசபக்தர்களுக்கு முன்கூட்டிய எங்கள் அனுதாபங்கள். தமிழ் மக்கள் நாளை லீவு போட்டு விட்டு வீட்டிலிருப்பது மிகவும் விரும்பத் தக்கது.

என்ன

எண்ணத்தயாராக உள்ளீர்கள்போல்?????

என்ன வலைப்பந்தோ???

கரப்பந்தோ???

உதைபந்தோ???

அல்லது

கிளிமறிப்போ???

நடக்குது இலங்கையில....

நாளைக்கு பாருங்கோ ஆப்பு அடிக்கப்போறாங்கள். . . இங்கை வாயை திறந்து பார்க்க அங்கை விழும் அடி. . .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.