Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வளரி - வலைக்காட்சி

Featured Replies

ஆருக்குத் தெரியும்..!? இப்பத்தானே புறநானூறு எழுதிப் பழகிறன்..! :wub:

கிகிகிகி..உங்களுக்கு இதுவாச்சும் தெரியுது...எனக்கு அதுவும் இல்லை.. ;)

  • கருத்துக்கள உறவுகள்

வளரி தொலைக்காட்சி எப்போ தொலைக்காட்சியில் தெரியும்

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF

வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.

அமைப்பு

இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.

ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.

எறியப்படும் முறைகள்

வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.

பயன்

வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கள்ளர் நாடு, சிவகெங்கை - தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது. வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.

சங்க இலக்கியத்தில் வளரி

"வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்வர், எயினர் (மறவர்) போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல் என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது. மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது."[1]

Valari - A Unique Weapon of the Tamils - டாக்டர் எஸ். ஜெயபாரதி (மலேசியா)

அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி... எஸ். இராமச்சந்திரன்

தமிழர் தற்காப்புக் கலைகள்

  • கருத்துக்கள உறவுகள்

வளரி பற்றிய விளக்கம் அழகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வளரி இனையத்தளத்திலுள்ள எழுத்துக்கள் பெட்டி பெட்டியாக தெரியுது வடிவாத்தெரிய நான் என்ன செய்யலாம் யாராவது உதவிசெய்வீர்களா

இதே பிரச்சினைதான் எனக்கும் எழுத்தெல்லாம் பெட்டியடிக்குது. . .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ பெருமான்சித்தமாய் எல்லாம் எனக்கு ஒழுங்காய் வேலை செய்யுது k61.gif

யார் அந்த பெருமான்??

அருமையான முயற்சி..

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் அந்த பெருமான்??

இவன் தான் என் பெருமான்

0702_andavar.jpg

நட்புடன்

புதியதோர் உலகம் செய்வோம்

இளைஞன்

நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறதோ... :D:lol: இணையம் ஒன்றை நீண்டகாலமாக எதிர்பார்திருந்தோம் உங்களிடம் இருந்து... :lol:

காலத்துக்கேற்ப மாறிவிட்டீர்களோ... வாழ்துக்கள். சன்ஜீவ்காந் :lol::wub:

Edited by Netfriend

எமக்கு ஒருவரும் நன்றி சொல்லவரவில்லையே அதாவது நமது யாழுக்கும் இங்குகருத்தெழுதிய கள நண்பர்களுக்கும்.:wub::lol: நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா பண்ணுகினம் :rolleyes: எங்கட எங்கட எண்டுகினம்................. நமக்கான நலியாக் கலையெண்டுகினம்............... அறிவுமதியின்ர முகத்த காட்டுறதுக்கு பதிலா மகாகவியின்ர முகத்த முன்னுக்கு காட்டினா குறைஞ்சா போயிடுவியள்................... இருந்து பாக்கிறம் நீங்கள் எனஇனத்த கிழிக்கபோறியள் எண்டு.................... :icon_idea:

Edited by poonai_kuddy

பாராட்டுகள்! சிறுகதையெல்லாம் வாசிக்கிறதை பார்த்தா, நிகழ்சிகளின் வறுமை தெரியுது. பிரான்ஸிலுள்ள கடைத்தெரு அரசியல் அலசல் எல்லாம் தேவையா? தேர்வுகளும் தலைப்பும் தவறானது.

  • கருத்துக்கள உறவுகள்

நேயர்களுக்கு பரிச்சயமான முகங்களும் புதிய முகங்களும் நிகழ்ச்சிகளை சிறப்பாக்குகின்றனர். தொடர்ந்து வளரியின் வளர்ச்சி ஒரு சிறந்த தொலைக்காட்சியை தரும் என் நம்பிக்கையைத் தருகின்றது. வாழ்த்துக்கள் என்று ஒரு சொல்லுக்குள் வளரியின் வளர்ச்சியை முடக்காமல் இன்னும் வளர வேண்டும் என வேண்டுகிறேன்.

"பேசும் குழந்தைகள்" அருமையான.... ஒரு நிகழ்ச்சி.... :lol: இயற்கையின் யதார்த்தக்தை எண்ணி... எண்ணி .... அழுதேன்... :( ஆனால்.... நான் முதியவன் அல்ல... நான் கூட புலம் பெயர்ந்து 17 வருடம் தான்... ஆனால்... இந்த நிகழ்சியின் யாதார்தத்தை... யாம் யாவரும்.... உள்ளத்தில் எடுக்கவேண்டும் யதார்த்தமாக... :unsure: இந்த நிக்ழச்சி தயாரிப்பாளருக்கு நன்றிகள். :o

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.