Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தெய்வ குத்தம்'-கிராமே காலியான விநோதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிருஷ்ணகிரி: 'தெய்வ குற்றம்' காரணமாக கிருஷ்ணகிரி அருகில் உள்ள கொண்டேப்பள்ளி கிராம மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை ஒரு நாள் காலி செய்தனர்.

கிருஷ்ணகிரியில் சுமார் 10 கி,மீ. தொலைவில் உள்ளது கொண்டேப்பள்ளி.

இந்த கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிராமத்தில் வசிக்கும் மக்களில் சிலர் கடன் பிரச்சனை, தொழில் நஷ்டம், குடும்ப பிரச்சனை, விபத்து, தற்கொலை போன்ற பல காரணங்களால் அடுத்தடுத்து 10 பேர் தொடர்ந்து இறந்து போனார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இப்படி பலரும் இறப்பதற்கு தெய்வ குத்தம் தான் காரணம். அதனால் அனைவரும் வீட்டை விட்டு அருகில் உள்ள ஒரு தோப்பில் தங்குவது என முடிவு செய்தனர்.

அதன்படி அந்த தோப்பில் கிராம மக்கள் அனைரும் தங்கினர். இப்படி செய்தால் தெய்வத்தின் உக்கிரம் குறையும் என்பது கிராம மக்களின் கருத்து.

தோப்பில் மாரியம்மனுக்கு சிறப்பு பூசைகள் செய்யப்பட்டது. பொங்கல்

வைத்து படையல் செய்து வணங்கினர். பின்பு மாலையில் வீடு திரும்பினர்.

நன்றி தற்ஸ் தமிழ்

சாமி இறங்கிடிச்சா இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது அவர்களது நம்பிக்கை அதைப்பற்றி கதைக்க எனக்கு உரிமையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இப்படியே வாழ்வது.......

இது அவர்களது நம்பிக்கை அதைப்பற்றி கதைக்க எனக்கு உரிமையில்லை.

:( தெய்வ குற்றம் என்றால் பயந்தானே சுப்பண்ணை :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:( தெய்வ குற்றம் என்றால் பயந்தானே சுப்பண்ணை :(

ஜில் ஒவ்வொருவரும் நம்பிக்கை வைப்பதும் நம்பிக்கையில்லாமல் இருப்பதும் அவர்களது சுதந்திரமும் விருப்பமும் அதில் கருத்துக்கூற எனக்கு உரிமையில்லை என்றே கூறினேன். :D

என்ர அப்பு

ஏதோ ஒரு பூசாரிக்கு அடிச்சுதுடா லக்கு... என்னும் ஏத்தனை அண்ணா வந்தாலும் திருத்தமுடியுமா இந்த திராவிட பழங்குடிகளை?

இது அவர்களது நம்பிக்கை அதைப்பற்றி கதைக்க எனக்கு உரிமையில்லை.

ஓம்...சித்தப்பு சரியா சொன்னியள்..போக...போக எங்கன்ட கோகுலத்திலையும் உது தானே நடக்க போது சித்தப்பு அப்ப உப்படி தான் கருத்து எழுதனு.. :wub: (அட நான் பகிடிக்கு)..உவை வீடுகளை காலி செய்த நேரம் நாம போய் இருந்தா அந்த பக்கம் அந்த மாதிரி இருந்திருக்கு என்ன... :wub:

அப்ப நான் வரட்டா!!

Edited by Jamuna

என்ர அப்பு

ஏதோ ஒரு பூசாரிக்கு அடிச்சுதுடா லக்கு... என்னும் ஏத்தனை அண்ணா வந்தாலும் திருத்தமுடியுமா இந்த திராவிட பழங்குடிகளை?

இங்கு வெளிநாடுகளிலேயே அம்மன் என்று சொல்லி ஆலயங்கள் அமைத்து வசூல் ராஜா வேலைகள் செய்கின்றார்கள: அதையும் புலம்பெயர்நாடுகளில் நம்புகின்றார்கள். இவர்களைவிட இந்த பழங்குடிகள் எவ்வளவோ மேல்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையில் கிராமத்தில் வசிக்கும் மக்களில் சிலர் கடன் பிரச்சனைஇ தொழில் நஷ்டம்இ குடும்ப பிரச்சனைஇ விபத்துஇ தற்கொலை போன்ற பல காரணங்களால் அடுத்தடுத்து 10 பேர் தொடர்ந்து இறந்து போனார்கள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இப்படி பலரும் இறப்பதற்கு தெய்வ குத்தம் தான் காரணம். அதனால் அனைவரும் வீட்டை விட்டு அருகில் உள்ள ஒரு தோப்பில் தங்குவது என முடிவு செய்தனர்.

அதன்படி அந்த தோப்பில் கிராம மக்கள் அனைரும் தங்கினர். இப்படி செய்தால் தெய்வத்தின் உக்கிரம் குறையும் என்பது கிராம மக்களின் கருத்து.

பிரச்சினைக்கு முடிவுவந்திருக்கும்- ஏனெனில்

எல்லோரும் ஒன்றுகூடியிருந்து ஒவ்வொருவருடைய பிரச்சினைகளை மனம்விட்டுபேசி

நல்லமுடிவுகளை ஒன்றிணைந்து எடுத்திருப்பார்கள்

அதனால் எல்லாமே முடிவுக்கு வந்திருக்கும்

அவர்கள் கூறிய காரணம் அல்லது செய்தவழி வேறாக இருக்கலாம்

ஆனால் எல்லோரும் ஒன்றுகூடியிருந்து ஒவ்வொருவருடைய பிரச்சினைகளை மனம்விட்டுபேசி

நல்லமுடிவுகளை ஒன்றிணைந்து எடுப்பதிற்கு இந்த ஒன்றுகூடல் வழியமைத்திருக்கும்

ஏதோ எப்படியோ நல்லது நடந்தால் சரி

அது கடவுளின்பேரால் நடந்தாலென்ன???

கனவுகளின்பேரால் நடந்தாலென்ன????

குகதாசன் சொல்வதிலும் விசயம் இருக்கு தான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓம்...சித்தப்பு சரியா சொன்னியள்..போக...போக எங்கன்ட கோகுலத்திலையும் உது தானே நடக்க போது சித்தப்பு அப்ப உப்படி தான் கருத்து எழுதனு.. :lol: (அட நான் பகிடிக்கு)..உவை வீடுகளை காலி செய்த நேரம் நாம போய் இருந்தா அந்த பக்கம் அந்த மாதிரி இருந்திருக்கு என்ன... :)

அப்ப நான் வரட்டா!!

எங்கட கோகுலத்தில கடவுளும் நாங்கள்தான் எமனும் நாங்கள்தான் பேயும் நாங்கள் தான் ஆனால் ராதைகள் மட்டும் வேறு. :lol::lol: சரியா சித்தாஜம்மு? அப்புறம் ஏன் பயப்படுவான்

சார்க் மாநாடு..... கொழும்பே காலியான விநோதம் எண்டு கொஞ்ச நாளில செய்தி வரும் பாருங்கோ... :):lol:

Edited by uthayam

எங்கட கோகுலத்தில கடவுளும் நாங்கள்தான் எமனும் நாங்கள்தான் பேயும் நாங்கள் தான் ஆனால் ராதைகள் மட்டும் வேறு. சரியா சித்தாஜம்மு? அப்புறம் ஏன் பயப்படுவான்

சித்தப்பு எங்கள் தெய்வ இரகசியங்களை அம்பலபடுத்தாதீர்கள்.. :wub: (பிறகு அது நமக்கே வினையாக மாறிடும்)..உப்படியான விசயங்களிள கவனமா இருக்கனும் என்ன..ராதைகள் தான் நம் கண்கள் உது தெரியாதா என்ன..பயமா நமக்கா சா..சா அது என்ன விலை..?? :mellow:

நாங்களும் ஒரு பூஜை ஒன்னு செய்வோமா கோகுலத்தில்...எனக்கு வேற குளிருது பூசை வைத்தா குளிரும் சற்றும் அடங்கும் அல்லோ.. :wub:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

சார்க் மாநாடு..... கொழும்பே காலியான விநோதம் எண்டு கொஞ்ச நாளில செய்தி வரும் பாருங்கோ... :wub::wub:

போகிற போக்கில் அது தான் நடக்கும்போல உள்ளது. :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.