Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முந்திரிகை தோட்டம்

Featured Replies

அன்று ஒரு நாள் ஒர் முந்திரிகை தோட்டத்தில் முந்திரிகை காய்த்தி குலுங்கியது.அங்கு ஒரு செம்மறி தோல் போர்த்த நரி வந்தது.

மிகுதி நாளை எதிர்பாருங்கள்.

  • 4 years later...

அன்று ஒரு நாள் ஒர் முந்திரிகை தோட்டத்தில் முந்திரிகை காய்த்தி குலுங்கியது.அங்கு ஒரு செம்மறி தோல் போர்த்த நரி வந்தது.

மிகுதி நாளை எதிர்பாருங்கள்.

 

அண்ணை ஜில் நாட்டிலை இருக்கிறியளோ :icon_mrgreen: ??? முந்திரிகை காச்சு சக்கு கட்டிபோச்சுது . பேந்து என்ன நடந்தது எண்டு நீங்கள் ஜில் ஜில் ஆ எழுதினால் தானே எங்களுக்கு விளப்பமாய் இருக்கும் . தொடரும் எண்டு வேறை போட்டிருக்கிறியள் :lol::D:icon_idea: .

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன இப்படி செய்துபோட்டியல்?

  • 5 months later...
  • தொடங்கியவர்

பனம் தோட்டத்தில் மதம் ,மொழி என்ன என்று தெரியாத மக்கள் கூட்டம்,தங்களுக்கு புரிந்த முறையில் தொடர்பாடலை செய்துவாழ்ந்து கொண்டிருந்தனர்.மனிதன் பிறந்தால் என்ன செய்வது,இறந்தால் என்ன செய்வது என்றே தெரியாத , மனிதன் என்றாலே புரிந்து கொள்ளமுடியாத கூட்டம்...பனைமரம் முதிர்ந்து வீழ்ந்தவுடன் அதை உருட்டி விளையாடுவார்கள்.சிலசமயம் அருகில் இருக்கும் ஆற்றுநீருக்குள் பனைமரம் விழுந்துவிடும்.விழுந்த பனைமரக்குற்றிகள் மிதப்பதைகண்டு அதிர்ச்சியில் மக்கள் பார்ப்பதுமுண்டு.வடலிக்குள் மழைக்கும்,வெய்யிலுக்கும் அடைக்கலம் தேடிக்கொண்டனர்.சமைக்காத உணவுகளை உட்கொண்டனர். தொடரும்............. முடிய இரண்டு வருடங்கள் எடுக்கும்

Edited by Jil

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

மரக்குற்றிகள் மீது விளையாடும் பொழுது தண்ணீருடன் அடிபட்டு வேறு மணல்திட்டிகளுக்கும் மக்கள் போய் சேர்ந்து தனிமை பட்டதுமுண்டு.உறவுமுறைகள் தெரியாது,அடையாளங்கள் இல்லை,பெயர்கள் அற்ற மனிதர்கள்.இப்படியாக மக்கள் கூட்டம் பல்கி பெருகி கொண்டே சென்றது.நீர் வாழும் உயிர்களை பிடித்து உண்டார்கள் கிழங்குகளை உண்டார்கள்..... ஒர் நாள் ஒருவன் கூட்டத்தை விட்டு வெளியேசென்றுவிட்டான் அவனை தேடிச்சென்றனர் சிலர்.அவன் தொலைவில் நிற்பதை கண்டுவிட்டனர்.பின்னால் ஒரு உருவம் நிற்பதையும் அது அவனை தாக்குவதற்கு தயாராக இருந்தது.ஏற்கனவே ஒரு நாள் அந்த உருவம் அந்த மக்கள் கூட்டத்தினுள் புகுந்து ஒருவனை முழுமையாக விழுங்கியிருந்தது. அந்த உருவத்திற்கும் பெயர் இல்லை அவனுக்கும் பெயர் இல்லை .அன்று முதல்முதலாக ஒய் என்று கத்தினார்கள் .அவன் சத்தம் வந்த திசையை நோக்கினான் ஒர் உருவம் அருகில் நிற்பதை கண்டும் அவன் பயப்படவில்லை பயம் என்றால் என்ன என்று தெரியாது .வியப்பாக பார்த்தான்.ஆனால் அந்த உருவம் அவனது பார்வைக்கு பயப்படாமல் அப்படியே அவனை விழுங்கியது.அதை பார்த்த எனையோருக்கு பயம் என்ற ஒன்று உருவாகதொடங்கியது".ஒய்" அந்த கூட்டத்திலிருந்து அந்தநிமிடமே மறக்கப்பட்டான். தொடரும்.......

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பந்தியை யோசிக்க உங்களுக்கு நான்கு ஆண்டுகளா??? 

டூஊஊஊஊ மச்

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பந்தியை யோசிக்க உங்களுக்கு நான்கு ஆண்டுகளா??? 

டூஊஊஊஊ மச்

 

 

இத்தனை  வருடங்கள் ஆனாலும்

தன்   கொள்கையில்   உறுதியாக  நிற்கும் இவரை   பாராட்டவேண்டும் :icon_idea:

ஜில்..... என்னைவிட ஒரு படி மேல நீங்கள் நிக்கிறியள் எண்டுறதில எனக்கு சந்தோசமா இருக்கு. :lol::rolleyes:

நானும் ஒரு கதையைத் தொடங்கினன் பாருங்க..... தொடங்கின நேரம் சரியில்லையோ என்னவோ....

இப்ப மூன்றாவது நாட்டில இருந்து தொடர்ந்துகொண்டிருக்கிறன். :rolleyes:

எப்பிடியாவது உங்களுக்கு முன்னம் முடிச்சிடோணும்.... :rolleyes::lol:

இடைக்கிடை ஜில் முந்திரிகை தோட்டத்துகுள்ளை வாறது நல்லாய் தான் இருக்கு . எப்பிடியும் என்னம் ஒரு 5 வரியத்திலை முடிப்பியள் தானே :lol: :lol: :icon_idea: .

Edited by கோமகன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வருகை தந்து கருத்திட்ட சுமேரியர்,விசுகு, கவிதை,கோமகன் நன்றிகள்............................. மனித கூட்டம் பயத்தை உணரதொடங்கினார்கள் .தங்களது நிழலை கண்டும் பயந்தார்கள்."ஒய்"யை விழுங்கிய உருவம் மீண்டும் அந்த மக்கள் கூட்டத்தினருகே வந்ததை கண்ட மக்கள் பாதுகாப்பு தேடி ஒடினார்கள்.சிலர் வடலிக்குள் மறைந்து கொண்டனர் .ஒரு சிலர் பனை மரத்தில் ஏறி கொண்டனர்.ஆடைகள் இல்லாதா படியால் பனை மட்டைகள் அவர்களின் கால் ,கை,மற்றும் அந்தரங்க உறுப்புகளில் எல்லாம் கீறிகாயத்தை ஏற்படுத்தியது.உருவம் அந்த இடத்தை விட்டு அகலவில்லை இதனால் மக்கள் கீழே இறங்கவுமில்லை,வடலியை விட்டு வெளியே வரவுமில்லை.மரத்திலிருந்தவர்களுக்கு பசி எடுத்தது உண்பதற்கு உணவின்றி தவித்தார்கள்.பனைமரத்தில் உருண்டையாக இருந்த பனம்பழத்தை பசிக்கொடுமையால் கடித்தனர் . அது இனிப்பாக இருந்ததுமட்டுமல்லாமல் அவர்களின் பசியும் அடங்கியது.பனைமரத்திலிருந்தபடியே இயற்கை கடன்களை எல்லாம் கழித்தனர்.வடலியில் இருந்தவர்கள் பனங்கொட்டையினுள் இருந்த பூரானை யும்,பனங்கிழங்கையும் சாப்பிட்டார்கள் பனமரத்திலிருந்தவர்களுக்கு தாகம் ஏற்பட்டது ......................................... தொடரும் நன்றிகள்

Edited by Jil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.