Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்க் மாநாடு நடைபெறும்போதும் சண்டையை நிறுத்தமாட்டோம்: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

Featured Replies

சார்க் மாநாடு நடைபெறும்போதும் சண்டையை நிறுத்தமாட்டோம்: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

[வெள்ளிக்கிழமை, 25 யூலை 2008, 01:19 பி.ப ஈழம்] [க.நித்தியா]

சிறிலங்காவில் சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில், வடபோர் முனையில் நடைபெறும் சண்டை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தலைநகர் கொழும்பின் பாதுகாப்புக்கு பெருந்தொகையான படையினர் தேவைப்படுகிறார்கள்.

அதனை வெளிநாட்டு பாதுகாப்புப் பிரிவினர் பார்த்துக்கொள்வார்கள். இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்காக கொழும்பு வரவுள்ள இந்திய பாதுகாப்பு பிரிவினர் அவரது பாதுகாப்பை உறுதி செய்துகொள்வார்கள்.

வெளிநாட்டு தலைவர்களுக்கான பாதுகாப்பை அவர்களின் மெய்ப்பாதுகாவலர்கள் வழங்குவதால், எமது படையினர் தலைநகரின் தரை பாதுகாப்பை மட்டும் உறுதிசெய்துகொள்வார்கள். அதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பாதுகாப்பு ஏற்பாட்டுக்கும் வடபகுதியில் போரில் ஈடுபட்டுள்ள படையினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் தொடரந்து புலிகளின் இலக்குகள் மீதான தாக்குதல்களை மேற்கொள்வார்கள்.

தாக்குதலில் ஈடுபட்டுள்ள எமது படையினர் கொழும்புக்கு கொண்டுவரப்படமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி நிப்பாட்ட முடியும்

செல் அடிக்கிறதையே நிற்பாட்ட முடியல..........

சண்டையை

எப்பிடி நிப்பாட்ட முடியும்..........????

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தரப்பு சண்டை பிடிக்கமாட்டோம் போர் தவிர்ப்பு செய்கிறோம் என்று அறிவிக்க மறுதரப்பு சண்டையை எந்தக் காரணத்துக்காகவேனும் நிறுத்தமாட்டோம் என்று பிடிவாதமாகவே நிற்கிறார்களே. வித்தியாசமான தேவைகள் இரு வேறு விதமான கண்ணோட்டமும் அணுகுமுறைகளும். அவனுக்கே இல்லாத கரிசனை நமக்கெதற்கு?. போர்தானே கேட்டாய் இதோ போர் என்று எதிரியை ஒரு வழிபண்ண இதுவல்லோ தருணம். சரி சார்க் மகாநாடு முடிந்தபின்னாவது அது நடக்குமா?

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

:huh: வணங்காமுடி,

இதுதான் எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி. எப்போது புலிகள் ஆரம்பிப்பார்கள் ???

ஏன் இன்னும் ஆரம்பிக்கவில்லை ???

நாங்கள் ஒரு மூலைக்குள் ஒடுக்கப்படுகிறோமே ?எப்போது விலங்குடைத்து வெளியில் வரப்போகிறோம் ???

வருவோம்....மீண்டும் எழுந்து வருவோம் !!!!!!! புலிகள் தோற்றதாக வரலாறு இல்லையே ?!பிறகு எப்படி இப்படி அங்கலாய்க்கிறோம் ??? எதற்கு இடமெல்லாம் ஓடி விளக்கம் கேட்கிறோம்???

பொறுத்திருப்போம்...! எம்மைத் தலமை தாங்கிச் செல்வது சாதாரண தளபதி அல்லவே ! தமிழ்த்தாயின் ஒப்பற்ற தவப் புதல்வன் !

வெற்றி நிச்சயம் ! ஆகவே பொறுமை காப்போம் !!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

:huh: வணங்காமுடி,

இதுதான் எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி. எப்போது புலிகள் ஆரம்பிப்பார்கள் ???

ஏன் இன்னும் ஆரம்பிக்கவில்லை ???

நாங்கள் ஒரு மூலைக்குள் ஒடுக்கப்படுகிறோமே ?எப்போது விலங்குடைத்து வெளியில் வரப்போகிறோம் ???

வருவோம்....மீண்டும் எழுந்து வருவோம் !!!!!!! புலிகள் தோற்றதாக வரலாறு இல்லையே ?!பிறகு எப்படி இப்படி அங்கலாய்க்கிறோம் ??? எதற்கு இடமெல்லாம் ஓடி விளக்கம் கேட்கிறோம்???

பொறுத்திருப்போம்...! எம்மைத் தலமை தாங்கிச் செல்வது சாதாரண தளபதி அல்லவே ! தமிழ்த்தாயின் ஒப்பற்ற தவப் புதல்வன் !

வெற்றி நிச்சயம் ! ஆகவே பொறுமை காப்போம் !!!!!!

இப்படி நீங்கள் எழுதியதற்காக............

உங்களை போர்விரும்பி என்று முத்திரை குத்தப்போகின்றார்கள்?????????????

இப்படி நீங்கள் எழுதியதற்காக............

உங்களை போர்விரும்பி என்று முத்திரை குத்தப்போகின்றார்கள்?????????????

இப்படி நீங்கள் எழுதியதற்காக............

உங்களை போர்விரும்பி என்று முத்திரை குத்தப்போகின்றார்கள்?????????????

அண்ணை குகதாசன் ! தமிழர்கள் எவரும் போரை விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை போர் எம் மீது திணித்து விடப்பட்டுள்ளது அதற்கெதிராக தான் தமிழர்கள் போராடுகிறார்கள் ,,,,,,

இஞ்ச முதத்திரை குத்த என்ன தபால்கந்தோட நடத்திறம்.???

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை குகதாசன் ! தமிழர்கள் எவரும் போரை விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை போர் எம் மீது திணித்து விடப்பட்டுள்ளது அதற்கெதிராக தான் தமிழர்கள் போராடுகிறார்கள் ,,,,,,

இஞ்ச முதத்திரை குத்த என்ன தபால்கந்தோட நடத்திறம்.???

ஏன் அவசரம்

இன்னும் சிலர் துயிலெழவில்லை..............??????????

பொறுங்கள்...

ஓகோ சங்கதி அது தானோ ! வரட்டும் தபால் கந்தோர் அதிபர் வந்து ஆறுதலாய் குத்தட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

:huh: குகன் ,

நாங்கள் யாரும் போரை விரும்புபவர்கள் இல்லையே ! எம்மீது திணிக்கப்பட்டிருக்கும் ஒரு இன அழிப்புப் போரைத்தானே எதிர்க்கிறோம் ?! நாம் திருப்பித் தாக்காது விட்டால் எமது இருப்பல்லவா கேள்விக்குறியாகி விடும் ?! புலிகள் போரைத் தொடங்கு முன்னரே சிங்களம் எம்மீது போர் தொடுத்தது தங்களுக்குத் தெரியாதா என்ன ?!

தன்னைப் பாதுகாக்கும் உரிமை சில நாட்களே வாழும் பூச்சி புழுக்களுக்கே இருக்கும் போது, நாங்கள் மட்டும் சும்மா இருக்க முடியுமா ? இதற்காக என்னைப் போர் விரும்பி என்று அழைத்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை !

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ பாரும் புதியவன் அவசரப்பட்டு............பதில் எழுதியது நீங்கள்தானே?????????

  • கருத்துக்கள உறவுகள்

:huh: என்ன குகன், புதியவன்,

என்னைத் தபால் கந்தோர் அதிபர் ஆக்கி விட்டீர்கள் ?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்தானே கேட்டாய் இதோ போர் என்று எதிரியை ஒரு வழிபண்ண இதுவல்லோ தருணம். சரி சார்க் மகாநாடு முடிந்தபின்னாவது அது நடக்குமா?

நடக்கும். அது எப்போது என்பதுதான் இப்போதுள்ள மில்லியன் டொலர் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

:huh: குகன் ,

நாங்கள் யாரும் போரை விரும்புபவர்கள் இல்லையே ! எம்மீது திணிக்கப்பட்டிருக்கும் ஒரு இன அழிப்புப் போரைத்தானே எதிர்க்கிறோம் ?! நாம் திருப்பித் தாக்காது விட்டால் எமது இருப்பல்லவா கேள்விக்குறியாகி விடும் ?! புலிகள் போரைத் தொடங்கு முன்னரே சிங்களம் எம்மீது போர் தொடுத்தது தங்களுக்குத் தெரியாதா என்ன ?!

தன்னைப் பாதுகாக்கும் உரிமை சில நாட்களே வாழும் பூச்சி புழுக்களுக்கே இருக்கும் போது, நாங்கள் மட்டும் சும்மா இருக்க முடியுமா ? இதற்காக என்னைப் போர் விரும்பி என்று அழைத்தாலும் நான் கவலைப்படப் போவதில்லை !

இல்லை

நான் எழுதியதன் அர்த்தம்அதுவல்ல

இங்கு எழுதும் சிலர்.........

வெளிநாடுகளில் வாழுவோர்தான் சண்டைவரவேண்டும்...........புலிகள் சண்டையை ஆரம்பிக்கவேண்டும்......என்று விரும்புவதாக எழுதிவருகின்றார்கள்

இதை நீங்களும் கவனித்திருப்பீர்கள்..........

அதனடிப்படையில்தான் நான் உங்களை எச்சரித்தேன்...

மற்றும்படி கொள்கை அடிப்படையில் எமதிருவருக்கும் இடையில் வேறுபாடு இல்லை............

ரகுநாதன் ! என்ன செய்ய அண்ணை காலம் உங்களை அதிபராக்கிவிட்டது என்றால் பாருங்களேன்.!

குகநாதன்.

அப்ப என்ன சோதினை மாதிரி 3 மணித்தியாலம் யோசிச்சு எழுதவோ ???

என்ன குகனண்ணை இந்த பிரச்கனைக்கே விளண்டப்படுத்திறத தேவையா உங்களிற்க ஏன் எனில் 1983 ஆண்டின் வலி நீங்கள் மறந்திரக்க மாட்டீர்கள் என்றல்லோ நினைச்சன்.

  • கருத்துக்கள உறவுகள்

அது என் பரம்பரை அழிந்தாலும் மறக்கப்பட மாட்டாது

அந்தளவுக்கு உழைத்துள்ளேன்..........

ஊட்டியுள்ளேன்.............

  • கருத்துக்கள உறவுகள்

போர் விரும்பி என்ற முத்திரையா

ஆகா! அப்படி ஒன்று உளதோ இந்த யாழில்?

உன் சுதந்திர வாழ்வுக்காக போர் செய்,

உனது உரிமை கேட்டு போர் செய்,

உன் தாயகம் காக்க போர் செய்,

உன் மொழி காக்கவும் போர் செய்.

சார்க் மாநாட்டையொட்டி விடுதலைப்புலிகள் நல்லெண்ண வெளிப்பாடாக

முன்வந்து ஒருதலைப்பட்சமாக போர்நிறுத்தத்தை அறிவித்தபோது

ஒரு சிங்களக் கனவான் சொல்கிறார்:

"இது நோர்வே மூலம் அறிவிக்கப்படவில்லை இதை நம்பமுடியாது" என்று.

சிறிலங்கா எப்போதோ போர் நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்து விட்டது.

நோர்வேயும் மத்தியஸ்த்த பொறுப்பிலிருந்து விலகி எத்தனை மாதமாகிறது.

இன்னொருவர் ஒருபடி மேலே போய் "இவர்கள் போர் நிறுத்தம் செய்துவிட்டு

தங்களைப் பலப்படுத்திக்கொள்ளப் போகிறார்கள்" என்று சொல்கிறார்.

போர் நிறுத்தமென்பதற்கு - குறிப்பாக ஒருதலைப்பட்ச போர்நிறுத்தம்

என்பதை சிங்களத்தரப்பில் ஒரு கேலிக்கிடமான அர்த்தத்துடனேயே புரிந்து வைத்துள்ளார்கள்.

அப்படியிருக்க அதை தமிழ் தரப்பு மீண்டும் மீண்டும் செய்வது அவசியம் தானா என்பதே எனது கேள்வி.

கடந்த சில நாட்களாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் அவசர உதவிக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் மக்கள் ஈழமண்ணிலேயே இடம்பெயர்ந்து வன்னியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும் தகவல் வருகிறது.

போர் விரைவில் வன்னியின் மையத்துக்கு வந்துவிடும் என்று சிங்களம் கொக்கரித்து பரப்புரையும் செய்கிறது.

இப்படியான நிலையில் தமிழ்தரப்பு சரியான மதியூகமான வியூகத்தை அமைத்து செயல்படுகிறதா இல்லையா என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம்.

Edited by vanangaamudi

சரத்பொன்சேகரா இன்னும் வெளிநாட்டிலை சொத்து வாங்கி முடீயவில்லை போல இருக்கு அதுதான் போரை நிறுத்த மாட்டாராம்.

யாரப்பா உங்களை நிறுத்தச்சொன்னது. நாங்கள் அடிக்கமாட்டம் என்று புலிகள் சொல்லி இருக்கின்றார்கள். நீங்கள் அடிச்சால் தடுக்க மாட்டாம் என்று சொல்லவில்லையே. . யோசிக்கவேணும் மரை மண்டை சரத்பொன்சேகரா. .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.